A Yogi Science of Breath!

Life is absolutely dependent upon the act of breathing. “Breath is Life.” Differ as they may upon details of theory and terminology, the Oriental and the Occidental agree upon these fundamental principles. To breathe is to live, and without breath, there is no life. Not only are the higher animals dependent upon breath for life and health, but even the lower forms of animal life must breathe to live, and plant life is likewise dependent upon the air for continued existence. The infant draws in a long, deep breath, retains it for a moment to extract from it its life-giving properties, and then exhales it in a long wail, and lo! its life upon earth has begun. The old man gives a faint gasp, ceases to breathe, and life is over. From the first faint breath of the infant to the last gasp of the dying man, it is one long story of continued breathing. Life is but a series of breaths. Breathing may be considered the most important of all of the functions of the body, for, indeed, all the other functions depend upon it. A man may exist some time without eating; a shorter time without drinking; but without breathing his existence may be measured by a few minutes. And not only is Man dependent upon Breath for life, but he is largely dependent upon correct habits of breathing for continued vitality and freedom from disease. Intelligent control of our breathing power will lengthen our days upon the earth by giving us increased vitality and powers of resistance, and, on the other hand, unintelligent and careless breathing will tend to shorten our days, by decreasing our vitality and laying us open to disease. Man in his normal state had no need of instruction in breathing. Like the lower animal and the child, he breathed naturally and properly, as nature intended him to do, but civilization has changed him in this and other respects. He has contracted improper methods and attitudes of walking, standing, and sitting, which have robbed him of his birthright of natural and correct breathing. He has paid a high price for civilization. The savage, today, breathes naturally unless he has been contaminated by the habits of civilized man. The percentage of civilized men who breathe correctly is quite small, and the result is shown in contracted chests and stooping shoulders, and the terrible increase in diseases of the respiratory organs, including that dread monster, Consumption, “the white scourge.” Eminent authorities have stated that one generation of correct breathers would regenerate the race, and disease would be so rare as to be looked upon as a curiosity. Whether looked at from the standpoint of the Oriental or Occidental, the connection between correct breathing and health is readily seen and explained. The Occidental teachings show that physical health depends very materially upon correct breathing. The Oriental teachers not only admit that their Occidental brothers are right, but say that in addition to the physical benefit derived from correct habits of breathing, Man’s mental power, happiness, self-control, clear-sightedness, morals, and even his spiritual growth may be increased by an understanding of the “Science of Breath.” Whole schools of Oriental Philosophy have been founded upon this science, and this knowledge when grasped by the Western races, and by them put to the practical use which is their strong point, will work wonders among them. The theory of the East wedded to the practice of the West, will produce worthy offspring. This work will take up the Yogi “Science of Breath,” which includes not only all that is known to the Western physiologist and hygienist but the occult side of the subject as well. It not only points out the way to physical health along the lines of what Western scientists have termed “deep breathing, etc., but also goes into the less known phases of the subject, and shows how the Hindu Yogi controls his body, increasing his mental capacity, and develops the spiritual side of his nature by the “Science of Breath.” The Yogi practices exercises by which he attains control of his body, and is enabled to send to any organ or part an increased flow of vital force or “prana,” thereby strengthening and invigorating the part or organ. He knows all that his Western scientific brother knows about the physiological effect of correct breathing, but he also knows s that the air contains more than oxygen and hydrogen and nitrogen and that something more is accomplished than the mere oxygenating of the blood. He knows something about “prana,” of which his Western brother is ignorant, and he is fully aware of the nature and manner of handling that great principle of energy and is fully informed as to its effect upon the human body and mind. He knows that by rhythmical breathing one may bring himself into harmonious vibration with nature, and aid in the unfoldment of his latent powers. He knows that by controlled breathing he may not only cure disease in himself and others but also practically do away with fear and worry and the baser emotions. To teach these things is the object of this work. We will give in a few chapters concise explanations and instructions, which might be extended into volumes. We hope to awaken the minds of the Western world to the value of the Yogi “Science of Breath. Vinodhan, Courtecy  Yogi Science

மூன்றாவது விழியின் ரகசிய விஞ்ஞானம்

        நெற்றியில் சந்தனத் திலகமோ, குங்குமத் திலகமோ வைப்பது பற்றி உங்களிடம் பேசுவதற்கு முன்னால், இரண்டு நிகழ்ச்சிகளைச் சொல்லப் போகிறேன். புரிதலுக்கு இவை உதவும். இரண்டுமே வரலாற்று உண்மைகள்,1888ல் தென்னிந்தியாவில், ஓர் ஏழை பிராமணக் குடும்பத்தில் ராமானுஜம் என்பவர் பிறந்தார். பிற்காலத்தில் புகழ்பெற்ற கணிதமேதையாகத் திகழ்ந்தார். அவர் அதிகம் படிக்கவில்லை. என்றாலும் அவரது கணித மேதமை வித்தியாசமானதாக இருந்தது.நன்கு கணிதம் கற்ற அறிஞர் பலர் புகழ் பெற்று விளங்கியதற்குக் காரணம். அவர்களுடைய பயிற்சியும் நீண்டகாலம் அவர்களுக்குக் கிடைத்த நிபுணர்களின் வழிகாட்டலும்தான். ஆனால், ராமானுஜம் பள்ளி இறுதி வகுப்பு கூட முடிக்காதவர்! அவர் யாரிடம் பயிற்சியும் பெறவில்லை. எவருடைய வழிகாட்டலும் அவருக்குக் கிடைக்கவும் இல்லை. அப்படியிருந்தும் அவரைப்போல ஒரு கணித மேதை இருந்ததே இல்லையென்று கணித நிபுணர்கள் கூறுகிறார்கள்!         ஒரு எழுத்தர் வேலை வாங்குவதற்குக் கூட அவர் படாத பாடுபட வேண்டிஇருந்தது. ஆனால், அவரிடம் அபூர்வமான கணிதத்திறன் இருக்கும் செய்தி. விரைவில் பரவிவிட்டது. கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் புகழ்பெற்ற கணிதப்பேராசிரியர் ஹார்டிக்குக் கடிதம் எழுதச் சொல்லி யாரோ ஆலோசனை கூறினார்கள். அந்தக் காலத்தில் அவர் பிரபலமானவராகத் திகழ்ந்தவர். ராமானுஜம் கடிதம் எழுதுவதற்குப் பதிலாக இரண்டு தேற்றங்களுக்கு விடை கண்டு அவருக்கு அனுப்பி வைத்தார். அவை வடிவியல் தேற்றங்கள். அவற்றைப் பார்த்து வியந்த பேராசிரியர், ராமானுஜத்தை உடனே இங்கிலாந்திற்கு வருமாறு கடிதம் எழுதினார்! அவ்வளவு சிறிய வயதுக்காரரால் எப்படி அவற்றிற்கு விடை காண முடிந்தது என்று பேராசிரியர் திகைத்துப் போனார்.ஹார்டி ராமானுஜத்தை சந்தித்தபோது, ராமானுஜருக்கு முன், கணிதத் துறையில் தான் ஒரு குழந்தை என்று உணர்ந்தார். ராமானுஜத்தின் திறமை மனதின் ஆற்றலால் விளைந்ததன்று. அறிவாளிகள் மனதில் நிதானமாகவே யோசிக்கிறார்கள். ராமானுஜரோ சட்டெனச் சொல்லி விடுகிறார் கணக்கைக் கரும்பலகையில் எழுதியவுடனே அல்லது சொன்னவுடனே, சிந்திக்க இடைவெளி எடுத்துக் கொள்ளாமல் உடனே பதில் சொல்லிவிட அவரால் முடிந்தது!அது எப்படி என்பதை, எந்தக் கணித மேதையாலும் கணித்துச் சொல்லமுடியவில்லை. ராமானுஜம் போட்ட கணக்கைப் போட ஒரு பிரபல கணித மேதைக்கு ஆறுமணி நேரம் பிடித்தது அப்போதும் கூட தம் விடை சரியானதுதானா என்பதை அவரால் அறுதியிட்டுச் சொல்லமுடியவில்லை. ராமானுஜம் சட்டெனச் சொன்னார்; சரியாகச் சொன்னார். அவர் மனதின் மூலமாக விடை கண்டதாகத் தெரியவில்லை. அவர் படித்தவரும்அல்ல மெட்ரிக் வகுப்பில் தோற்றுப் போனவர்!அவரது மேதமைக்கு வேறு புறக்காரணங்கள் எதுவும் இருக்கவில்லை. என்றாலும் அவர் கணிதத்தில் அதிமனிதனாக விளங்கினார். அவரது மனதைக் கடந்து, அதற்கு அப்பால், அவருக்குள் ஏதோ நிகழ்வதாகத் தோன்றியது. எலும்புருக்கி நோயால் இறந்தபோது அவருக்கு வயது முப்பத்தி ஆறு. உடல் நலம் மிகவும் கெட்டு, அவர் மருத்துவமனையில் படுத்திருந்தபோது, ஹார்டி தனது நண்பர்களான சில கணித மேதைகளுடன் அவரைப் பார்க்கச் சென்றார்.அவர் தம் காரை வெளியில் நிறுத்துவதை, ராமானுஜம் தம் அறையிலிருந்தபடி பார்த்துக் கொண்டிருந்தார். ஹார்டி அறைக்குள் வந்ததும், அவருடைய காரின் எண் மிகவும் வித்தியாசமானது என்று ராமானுஜம் சொன்னார். அந்த எண்ணில் நான்கு சிறப்பு அம்சங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார். ராமானுஜம் காலமான பிறகு, அவர் சொன்னதைப் புரிந்து கொள்ள, பேராசிரியருக்கு நான்கு மாத காலம் பிடித்தது! அதுவும் மூன்றுஅம்சங்களைத்தான் அவரால் புரிந்து கொள்ள முடிந்தது! ராமானுஜம், தமது உயிலில், அந்த எண்களைப் பற்றி ஆராயுமாறு குறிப்பிட்டிருந்தார். ஹார்டி இறந்து இருபத்தியிரண்டு ஆண்டுகள் கழிந்த பின்பே, கணித மேதைகளுக்கு அந்த நான்காவது சிறப்பு அம்சம் விளங்கியது! ராமானுஜம் ஒரு கணிதச் சிக்கலைத் தீர்க்க முயலும் போதெல்லாம். அவரது கருவிழிகள் இரண்டும் மேலேறி புருவ நடுவை நோக்கி உயர்ந்தன! யோகத்தில் அந்த இடத்தை மூன்றாவது கண்ணின் இருப்பிடம் என்று குறிப்பிடுவார்கள். அந்த நெற்றிக்கண் தூண்டுதல் பெறுமானால், சில அபூர்வமான மண்டலங்கள் முழுவதுமாய் தெரிய ஆரம்பித்து விடும்.நாம் நமது வீட்டிற்குள்ளிருந்து. கதவின் சிறிய துளை வழியே வெளியே பார்த்துக் கொண்டிருக்கும்போது, திடீரெனக் கதவே திறந்து விட்டால். எவ்வாறு முழு வானமும் புலப்படுமோ அதுபோலத்தான் அது!         இரு புருவங்களுக்கும் நடுவில் ஒரு சிறு துளை இருக்கின்றது. அது எப்போதாவது திறக்கும், ராமானுஜத்திற்கு அப்படித்தான் திறந்தது. விழிகள் மேலேறும்போது அது நிகழ்ந்தது. அப்போது விடை கிடைத்தது, அது ஹார்டிக்கும் தெரியவில்லை; மற்ற மேலை நாட்டுக் கணித மேதைகளுக்கும் இதுவரை தெரியவில்லை. மூன்றாவது கண்ணுக்கும் குங்குமத் திலகம் இடுதலுக்கும் உள்ள தொடர்பை விளக்க, நான் இன்னொரு நிகழ்ச்சியைச் சொல்கிறேன். எட்கர் கேய்ஸ் என்பவர் 1945ல் இறந்தார். நாற்பது ஆண்டுகளுக்கு முன், அதாவது 1905ல் அவர் கடும் நோய்வாய்ப்பட்டார். நினைவிழந்து மூன்று நாட்கள் ‘கோமா’நிலையில் கிடந்தார்.அவரை நினைவிற்குத் திரும்பவும் கொண்டுவர எவ்வளவோ முயற்சிகள் செய்தும் முடியவில்லை. அவரது ஆழ்மனம் மீண்டும் மேல் தளத்திற்கு வராது என்று மருத்துவர்கள் முடிவு கட்டினார்கள். நம்பிக்கையிழந்த மருத்துவர்கள், மூன்றாம் நாள் மாலை, மரணம் நிச்சயம் என்று சொல்லி விட்டார்கள். நான்கு மணி நேரத்திலிருந்து ஆறு மணி நேரத்திற்குள் உயிர் போய்விடும் என்று சொன்னார்கள். ஒரு வேளை அவர் சாகாமல் போனால், அது மரணத்தைவிட மோசம், மூளைஅழிந்து போகும். மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களும் செல்களும்தொடர்பறுத்துக் கொண்டு சிதைந்துவிடும் என்றார்கள். ஆனால், கேய்ஸ் ‘கோமா’நிலையில் இருந்தபடியே பேசத் துவங்கினார்! மருத்துவர்களால் நம்பமுடியவில்லை! உடல் பிரக்ஞையற்றுக் கிடக்கிறது. ஆனால், அவர் பேசுகிறார்!தாம் மரத்தின் மேலிருந்து கீழே விழுந்து விட்டதாகவும் முதுகெலும்பு முறிந்துவிட்டதாகவும் அதனால்தான் நினைவு தப்பிவிட்டதாகவும் அவர் கூறினார்!ஆறு மணி நேரத்தில் தமக்குச் சரியான சிகிச்சை அளிக்காவிட்டால் தாம் இறக்க நேரிடும் என்றும் கூறி, சில பச்சிலைகளின் பேரைச் சொல்லி, அதைச் சாறு பிழிந்து கொடுத்தால் பன்னிரண்டு மணி நேரத்தில் தாம் பிழைத்துக் கொள்ள முடியும் என்றும் கூறினார்!         அவர் சொன்ன மூலிகைகளின் பெயர்கள் அவருக்குத் தெரிந்திருக்க நியாயமே இல்லை. அவரது மூளை கெட ஆரம்பித்து விட்டது. அதனால் உளற ஆரம்பித்து விட்டார் என்றே மருத்துவர்கள் முதலில் நினைத்தார்கள். ஏனென்றால், அவர் குறிப்பிட்ட மூலிகைகள் அதுவரை அவரது நோய்க்கு மருந்தாக அறியப்படவே இல்லை.சிரமப்பட்டு தேடிக் கொண்டு வந்ததில் அவர் பிழைத்து விட்டார்! அவர் சொன்னபடியே பன்னிரண்டு மணி நேரத்தில்! அப்புறம் அவரிடம் அதைத் தெரிவித்தபோது, அப்படிச் சொன்ன நினைவே அவருக்கு இல்லை! அந்த மூலிகைகள் பெயர்கள் அவருக்குத் தெரிந்ததாகவே இல்லை. ஆனால், அன்று முதல் அவர் வாழ்வில் ஒரு பெரிய திருப்புமுனை ஏற்பட்டு விட்டது.பிற்காலத்தில், குணப்படுத்த முடியாத பல நோய்களுக்கு அவர் இயற்கை வைத்தியம் சொல்ல ஆரம்பித்தார். அவருடைய வாழ்நாளில், அவ்வாறு முப்பதாயிரம் பேரை அவர் குணப்படுத்தினார்! அவர் சொன்னதெல்லாம் சரியான மருந்தாகவே இருந்தது! விதிவிலக்கேஇல்லாமல் அவர் அனைவரையும் குணப்படுத்தினார்! ஆனால், அது எப்படி என்றுஅவரால் விளக்க முடியவில்லை!நோயாளி வந்து தம் நோயைத் தெரிவித்தால், அவர் கண்களை மூடிக் கொள்வார். அவரது கருவிழிகள் புருவ நடுவிடம் நோக்கிப் போகும். அவை அவ்வாறு அங்கே நிலைத்திருக்கும்போது, அவர் எல்லாவற்றையும் மறந்து விடுவார். ஒரு கட்டத்திற்குப் பிறகுதான் அவர் நினைவு திரும்பும். அந்த நினைவு மறந்த நிலை வராமல், அவரால் மருந்தைக் குறிப்பிட முடியாது. அவரது வாழ்வில் இரண்டு முறை குறிப்பிட்ட சிகிச்சை, மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அதை நாம் நினைவில் கொள்வது நல்லது.அமெரிக்க நாட்டின் மிகப் பெரிய செல்வர்களில் ஒருவர் ரோத்சைல்ட்ஸ் அவருடைய குடும்பத்தில் ஒரு பெண் நீண்டகாலமாக நோய்வாய்ப் பட்டிருந்தாள். எந்த சிகிச்சையும் பலனளிக்கவில்லை. அவளை எட்கர் கேய்சிடம் அழைத்து வந்து காட்டினார்கள், தமது ஆழ்மன நிலையில் அவர் ஒரு மருந்தைக் குறிப்பிட்டார்.அவரது ஆழ்மன நிலையில் அவர் நினைவிழந்து காணப்பட்டாலும் அவர் முழுப்பிரக்ஞை நிலையில்தான் இருந்திருப்பார் என்றே விவரம் அறிந்தவர்கள்சொல்வார்கள். உண்மையில், அந்த ஆழ்மன நிலை, மூன்றாவது விழியைஅடைகிற வரைக்கும்தான் நிலைத்திருக்கும்.ரோத்சைல்ட்ஸ், கோடீஸ்வரர் என்பதால், எந்த மருந்து எங்கிருந்தாலும் அவரால் தருவித்துவிட முடியும். ஆனால், அவரால் அப்போது முடியவில்லை. அது எங்கு கிடைக்கும் என்பதை யாராலும் சொல்ல முடியவில்லை. அப்படியொரு மருந்துஉண்மையில் இருக்கிறதா என்பதே சந்தேகமாக இருந்தது.         உள்நாட்டு, வெளிநாட்டுப் பத்திரிகைகளில் எல்லாம் விளம்பரம் செய்தார்கள். மூன்று வாரங்களுக்குப் பிறகு ஸ்வீடனிலிருந்து ஒருவர் கடிதம் எழுதியிருந்தார். தற்போது அப்படியொரு மருந்தே இல்லையென்றும். இருபது ஆண்டுகளுக்கு முன் தன் தந்தை அப்படியொரு மருந்தைக் கண்டுபிடித்தார் என்றும், ஆனால், அதை தயாரிக்கவே இல்லையென்றும், ஆனால், அதே பெயரில் அதை அரசாங்கத்தில் பதிவு செய்திருந்தார் என்றும் குறிப்பிட்டிருந்தார்!தந்தையார் இறந்து விட்டதால், அவர் எழுதி வைத்திருந்த செய்முறையை அனுப்பி வைத்திருந்தார். அதன்படி மருந்து தயாரிக்கப்பட்டது. அந்தப் பெண்மணி பூரணகுணம் அடைந்தாள்!கண்டுபிடித்ததோடு நின்றுபோன, கடைக்கு வராத அந்த வெளிநாட்டு மருந்து பற்றி கேய்சுக்கு எப்படித் தெரிந்தது? இன்னொரு சமயம், அவர் ஒருவருக்கு இன்னொரு மருந்தைச் சொன்னார். ஆனால், அந்த மருந்து கிடைக்கவே இல்லை. ஓராண்டு கழிந்த பின்பு, அந்த மருந்து கிடைக்கும் என்று ஒரு விளம்பரம் வெளிவந்தது. அதற்கு முன்னால் அது ஆய்வுச் சாலைகளில் சோதனை நிலையில் இருந்திருக்கிறது. அதற்குப் பெயர்கூட வைக்கப்படவில்லை!         அதற்கு முன்னால், பிற்காலத்தில் வைக்கப்போகும் பெயரை கேய்ஸ் எவ்வாறு கூறினார்? எப்படியோ, அந்த மருந்து கொடுக்கப்பட்டு நோயாளியும் குணமானார்!சில சமயங்களில் அவர் குறிப்பிடும் மருந்து கிடைக்காமல் நோயாளிகள் இறந்திருக்கிறார்கள், ஏன் அப்படி என்று அவரைக் கேட்டபோது, “நான் என்ன செய்யட்டும்? நான் ஒன்றும் செய்வதற்கில்லை” என்று சொன்னார்.“நான் நினைவிழந்த நிலையில் இருக்கும்போது, அந்த மருந்துகளின் பெயர்களைப் பார்ப்பது யார். அவற்றைச் சொன்னது யார் என்றே எனக்குத் தெரியாது. எனக்குள் அப்படிச் சொல்லும் ஆளுக்கும் எனக்கும் தொடர்பே இல்லை” என்று அவர் கூறினார்.ஒன்று மட்டும் உறுதி. அவர் அந்த நிலையில் இருந்து பேசும்போது அவரது கருவிழிகள் மேலே ஏறி நின்றன. நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது, நமது கருவிழிகள் மேலேதான் போய் விடுகின்றன. உறக்கம் எவ்வளவு ஆழமோ அந்த அளவு கருமணிகள் மேலே போகும். உளவியல் அறிஞர்கள், உறக்கம் பற்றி

ஏலியன் மர்மங்கள்!

                ஏலியன் ஆய்வாளர்கள் பலர், அவைகள் நம்மை உயர் தொழில் நுட்பம் வாயிலாகவும் தொடர்ந்து தொடர்பு கொள்கிறார்கள் என்கிறார்கள்.ஆண்டு தோறும் பல காஸ்மிக் சிக்னல்களை நாம் பெற்று கொண்டு இருக்கின்றோம். பிக்பாங் நேரத்தில் உண்டான சிக்னல்கள் கூட இன்றைய சாதாரண தொலைகாட்சி மூலம் இதற்கு கிரகிக்கப்படுகிறது. டி.வியில் திடீரென தோன்றும் சில புள்ளிகள் ஹிஸ் சப்தம் அதுதான். ஆனால் இப்படிப்பட்ட பல காஸ்மிக் சிக்னல்களில் பல அடையாளம் தெரியாத இனம் காண முடியாதவை. சாதாரணமாக நட்சத்திரங்களிலோ, கருந்துளையிலோ உண்டாகாத அந்த மர்ம சிக்னல்கள் எங்கிருந்து எப்படி வருகிறது என்பதை அறிய முடியாதவை. சிலர் அதை இணை பிரபஞ்சத்தில் இருந்து வருகின்றன என்கிறார்கள். சிலர் அதை வேற்று கிரகவாசிகளின் சிக்னல் என்கிறார்கள்.அப்படிப்பட்ட சந்தேக சிக்னல்களில், சங்கேத சிக்னல் ஒன்றை பற்றி நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதுதான் 1977-இல் பதிவு செய்யப்பட்ட WOW சிக்னல். நாள் முழுவதும் பல வகையான கண்ணுக்கு தெரியாத கதிர்களை ரேடியோ சிக்னல்களை பூமி உள்வாங்கி கொண்டு இருக்கிறது. அப்படிபட்டதில் ஏதாவது பூமி சாராத அல்லது விசித்திரமான வேற்றுகிரக சிக்னல்கள் வந்தால் அதை பதிவு செய்ய அமைக்கப்பட்டதுதான் ஓஹியோ மாநில பல்கலை கழகத்தின் Big ear radio telescope. அது குறிப்பாக 1420 Mega hertz அதிர்வெண்ணில் வரும் சிக்னல்களை உள்வாங்கும்படி தயார் செய்யப்பட்ட ரேடியோ டெலஸ்கோப் ஆகும். (1420 Mhz என்பது ஹைட்ரஜன் வெளியிடும் அதிர்வெண் ஆகும். மேலும் நமக்கு தெரியும் பிரபஞ்சம் எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பது ஹைட்ரஜன் தான் என்று.) 1977-ஆம்வருடம், ஆகஸ்ட், 15-இல் ஜெர்ரி இஹாமன் என்பவர் அங்கே ஒரு ரேடியோ சிக்னலை பதிவு செய்தார். அது மிக வலிமையான சிக்னலாக 72 வினாடிகள் நீடித்தது. அதை டீகோட் செய்து சாதாரண எழுத்தாக மாற்றி பார்த்த போது அது “wow” என ஆங்கிலத்தில் கிடைத்தது. மேலே இருந்து நமக்கு யாருப்பா ‘வாவ்’ன்னு சிக்னல் அனுப்பறது என்று விஞ்ஞானிகள் சுறுசுறுப்பானார்கள். இது ஏதோ எலியன் அனுப்பிய சிக்னல்தான் என்றார்கள். 40 ஆண்டுகள் கழித்து அதை ஆராய்ந்த குழு ஒன்று அதற்கான விடையை கண்டுபிடித்து விட்டதாக சொன்னார்கள். அந்த அலைவரிசையில் அந்த சிக்னலை வெளியிட்டது ஒரு வால் நட்சத்திரம் என்றார்கள். அதை இரண்டு மூன்று முறை மறுபதிவு செய்து உறுதி செய்தார்கள். ஆனால் மிக சரியாக அந்த வால் நட்சத்திரம் wow என்று ஏன் சிக்னல் கொடுத்தது. மேலும் அன்றைய தினம் அது அதற்கு மேல் ஏன் மீண்டும் சிக்னலை கொடுக்கவில்லை போன்ற கேள்விக்கு அவர்களிடம் சரியான விடை இல்லை. ஏலியன் நமக்கு சிக்னல் கொடுப்பது இருக்கட்டும். நாம்ஒரு பக்கம் ஏலியனுக்கு சிக்னல் கொடுத்து கொண்டிருக்கிறோம் தெரியுமா? பூமியில் இருந்து இது வரை மிக அதிக தொலைவு சென்ற மனிதனால் படைக்கப்பட்ட பொருள் என்ற பெருமை கொண்ட வாயெஜெர் என்ற விண்கலத்தில் நாம் ஒரு காரியத்தை செய்து வைத்து இருக்கின்றோம். அதில் உள்ள தங்க டிஸ்கில் 24 மணி நேரமும் ஒலிபரப்பாகும்படி சிக்னலை வைத்து இருக்கிறோம். மேலும் அதில் பூமியில் உள்ள பல வகை ஒலிகள் உதாரணமாக கடல் அலை சப்தம், பறவை சப்தம், குழந்தை அழும் குரல் அமெரிக்க ப்ரெஸிடெண்ட் பேச்சு இப்படி பலதையும் பதிவு செய்து ‘கேட்க காது உடையவன் கேட்கட்டும்’ என்ற பைபிள் வசனம் போல இருக்கின்றோம். இருட்டில் கல்லெறியும் முயற்சி தான் இது அநாமத்தாக என்றாலும் நம்மை போல ஏலியனை தேடும் ஏலியன் யாராவது அதை பார்க்கும் பட்சத்தில், கேட்கும் பட்சத்தில் நம்மை தொடர்பு கொள்வான் என்றுதான் இந்த ஏற்பாடு.                 ஏலியன் பற்றி பேசும் போது வான் டேனிகன் என்ற ஆய்வாளரை பற்றி வெகு நிச்சயமாக நாம் குறிப்பிட்டாக வேண்டும். ஆதி காலத்தில் பூமியில் ஏலியன்கள் நடமாட்டமும், ஆதிக்கமும் இருந்தது என்று நம்பிய அவர் அது சார்ந்த ஆய்வுகளில் இறங்கிய போது பல அதிசயதக்க உண்மைகளை கண்டு கொண்டார். குறிப்பாக ஏலியன்கள் பூமிக்கு வந்ததை பின் வாய் அடைத்து போனார்கள்.                நம் நாட்டில் நாம் பண்டைய வரலாறை செப்பேடுகளில் கல்வெட்டில் தேடுவது போல் அவர் ஏலியன் வருகையை பண்டைய காலத்து கட்டிடங்கள், கோவில்கள், சிற்பங்கள், ஓவியங்கள் புராணங்களில் தேடினார். அதுவும் உலகம் முழுவதும் அதில் அவர் கண்டு கொண்ட ஒரு விஷயம் மத வாதிகளிடையே பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியது. மத நூல்களில் சொல்லப்பட்ட தேவதூதர்கள் எல்லாம் ஏலியன் களாக இருக்கலாம் என்றார். காரணம் அவர் உலகம் எங்கும் உள்ள பண்டைய மத நூல்கள், புராணங்களில் ஒரு ஒற்றுமையை கவனித்தார்.அவை எல்லாவற்றிலும் ஒரே மாதிரியாக ஏலியன் வருகையை பற்றிய தகவல் இருப்பதை கண்டு ஆச்சரியம் அடைந்தார். அவைகள் வெவ்வேறு பெயர்களில் குறிப்பிடப் பட்டு இருந்தன. சிலதில் தேவர்கள் என்று, சிலதில் கந்தர்வர்கள் என்று, சிலதில் தேவதைகள் என்று இருந்தன.அவை அனைத்திலும் நிறைய ஒற்றுமை இருப்பதைக் கண்டார். அவர்கள் மந்திரம் போட்டது போல சூப்பர்மேன் போல பறப்பது இல்லை. அவர்கள் வந்து செல்ல நெருப்பு கக்கும் வாகனம் தேவைப்பட்டது. அவைகள் வானத்தில் இருந்து வரும் போது மக்கள் பார்த்த வர்ணனைகள் நெருப்பு கக்கி செல்லும் விதம் இன்ஜின் போல நெருப்பு உமிழும் காட்சி இவைகளை பார்த்து அவருக்கு ஒன்று தோன்றியது. பறந்து வந்து செல்ல இவைகள் எல்லாம் கடவுளுக்கு அவசியமே இல்லையே. பிறகு ஆச்சர்யமாக தான் கண்டு கொண்டதை உலகிற்கு உரக்கச் சொன்னார்.”அட வந்தது கடவுள் எல்லாம் இல்லை. அதுங்க எல்லாம் வேற்றுகிரகவாசிகள்.” அவர் பல மதவாதிகளின் சாபத்திற்கு ஆளானாலும் அவர் ஒரு நாத்திகர் அல்ல. மிகவும் கடவுள் நம்பிக்கைகொண்ட தவறாமல் பூஜை செய்யும் ஒரு ஆள் அவர்.அவர் சொன்னது எல்லாம் கடவுளை பற்றி அல்ல. கடவுள் தூதர்கள் என்று நாம் அழைப்பது வேற்றுகிரக வாசிகளை என்பதைதான் அவர் சொன்னார். இதைக் குறித்து ஆராய்ந்து பல ஆதாரங்களை கொண்டு 1968-இல் அவர் எழுதிய கடவுளின் ரதம் (Chariots of the God) புத்தகம் பல நபர்களை இந்த துறையில் ஆர்வம் கொள்ள செய்தது.அதன் பிறகு பல வருடம் இந்த துறையில் கொஞ்சம் ஆழமாக அவர் இறங்கி தேடிய தேடல் அதிர்ச்சிகரமான பல உண்மைகளை கொண்டு வந்தது. அவர் பல இடங்களில் இக்காலத்தாலும் கட்டமுடியாத தொழில் நுட்பத்தை பயன் படுத்தி கட்டப்பட்ட பல கட்டிட அமைப்பை கண்டார். அதில் சில ராட்சச எடை கொண்ட பாறைகள் சில வெட்ட முடியாத லேசர் வெட்டுகள், பண்டைய காலத்தில் இங்கிருந்த தொழில் நுட்பத்திற்கு சம்பந்தப்படாமல் இருப்பதைக் கண்டார். உதாரணமாக ஒரு இடத்தில் ஏதோ பிளாஸ்டிக்கை உருக்கி வைத்து ஒட்டியதை போல பாறைகளை சூடாக்கி ஒட்டி ஒரு சுவர் செய்யப்பட்டிருப்பதை பார்த்தார். அவ்வளவு டிகிரி சூட்டை உண்டாக்கும் கருவி அன்றைய காலத்தில் எப்படி வந்தது? மாயன் கல்லறை ஒன்றில் ஒருவரின் கல்லறையில் செதுக்கி வரையப்பட்டிருந்த சித்திரம் ஒன்று அவரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அதில் அங்கே பண்டைய காலத்தில் வருகை புரிந்த அவர், ராக்கெட் மாதிரி இயந்திரத்தை ஓட்டி வானத்திற்கு செல்வது செதுக்கப்பட்டிருந்தது.(மூக்கில் ஆக்ஸிஜன் கொடுப்பது கூட) இதுவரை சொன்னவை வெறும் மாதிரிகள் தான். இப்படிப்பட்ட பல ஆதாரங்கள் அவரிடம் எக்கச்சக்கமாக உண்டு. கட்டிடத்தை மனிதன் கட்டினான் என்பதை அவர்மறுக்கவில்லை. ஆனால், ஏலியன் தனது அறிவை அவர்களுக்கு கொடுத்து கட்ட வைத்தது என்றார். பலகோடி ஆண்டுகள் பரிணாம வளர்ச்சியில் மந்தமான வளர்ச்சி கொண்ட உயிரினம் சில ஆயிரம் ஆண்டுகளில் இவ்வளவு அறிவுத்திறனுடன் வானில் பயணம் செல்லும் அளவு வளர்ந்தது தற்செயலானது அல்ல என்கிறார் அவர். அவர் பார்வையில் ஏலியன்கள், வில்லன்கள் அல்ல நமக்கு அறிவை பரிசளித்த தேவதூதர்கள்.இந்த ஏலியன்கள் உண்மையில் பார்க்க எப்ப இருக்கும் என்று என்றாவது யோசித்தது உண்டா. ஹாலிவுட் புண்ணியத்தில் பலவகை ஏலியன்களை நாம் கற்பனை செய்ய மூடிகிறது. ‘பிரடேட்டர்’ படத்தின் ஏலியன் ஒருவகை என்றால், ஏலியன் படத்தின் ஏலியன் ஒரு வகை. அவதார், எட்ஜ் ஆப் டுமாரோ, ஜான்கார்டர், டிரான்ஸ்பார்மர், சூப்பர்மேன், அண்டர் தி ஸ்கின், இன்டிபெண்டஸ்டே. மென் ஸ்வார் வார். ப்ரோமித்தியஸ், ஸ்பெசியஸ், தி அரைவல், ரிட்டிக், இப்படி பல கணக்கற்ற படங்களில் தங்கள் கற்பனைக்கேற்ற ஏலியன்கள் பல வடிவங்களில் காட்டப் பட்டுள்ளன.ஆனால் உண்மையில் அவைகள் படத்தில் காட்டப் படுவதை போல மனிதனை ஒத்த சாயலில் தான் இருக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. அது நம் வசதிக்காக உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்கள். பொதுவாக ஏலியன் என்று சொன்னால் நமது கற்பனைக்கு வருவது சாம்பல் நிற அந்த குள்ளர்கள் தான். அதற்கு காரணம் உலகமெங்கும் இப்படிப்பட்டவர்களை பார்த்ததாக மக்கள் சொல்வதுதான்.தான் வணங்கும் கடவுளை மனிதன் தனது சாயலில் செய்து கொண்டது போல ஏலியனையும் அவன் தனது சாயலிலேயே கற்பனை செய்து கொண்டான் (அல்லது நம்மை தொடர்பு கொள்ள வசதியாக அவர்கள் நம்மை போல தற்காலிக உருமாற்றத்துடன் வந்து போகிறார்களா?) ஏலியன் தோற்றம் குறித்து பெரும் ஆய்வாளர்கள் கருத்து என்ன தெரியுமா? ஒரு வேற்று கிரகவாசி எப்படி வேண்டுமானாலும் இருப்பான். மனித வடிவத்தில் அல்லது வடிவமே இல்லாமல் அல்லது அவ்வப்போது வடிவம் மாறக்கூடிய அல்லது பாக்டீரியாவை விட சின்னதாக அல்லது நாம் நேரடியாக உணரமுடியாத ரேடியோ அலைகள் போல அலை வடிவத்தில். யோசித்து பாருங்கள் நம்மை சுற்றி உள்ள பல்வேறு வகை அலைகளை நாம் தகுந்த கருவிகள் இல்லாமல் உணர முடிவது இல்லை. அதே போல நம்மால் உணர முடியாத ஏன் இன்னும் அவனை உணரும் கருவிகள் கண்டு பிடிக்கபடாதபடி ஒரு பரிமாணத்தில் கூட வேற்று கிரகத்தினர் இருக்கலாம்.பொதுவாக விஞ்ஞானிகள் அதிகம் பரிந்துரைப்பது பாக்டிரியா போன்ற நுண்ணுயிர் ஏலியன்களின் இருப்பை தான். அதுவும் அவைகளை தேடி அதிக தூரம் செல்ல

மர்மங்கள் நிறைந்த ஏரியா 51 வேற்றுகிரகவாசிகள் வசிக்கிறார்களா?

              உலகின் மிகவும் மர்மம் நிறைந்த பகுதியாக அறியப்படும் ஏரியா 51. சமூக வலைத்தளங்களில் அடிக்கடி டிரெண்ட் ஆவது வழக்கமான டிரெண்ட் ஆகி விட்டது. அங்கு என்னதான் நடக்கிறது. என் டிரெண்ட் ஆனது போன்ற பல கேள்விகளுக்கு கூகுள் தேடுதளத்தில் கிடைத்த சில பகுதிகள் இங்கு.  ஏரியா 51′ பகுதியின் உண்மை பெயர். ‘நெவேடா டெஸ்ட் அண்டு டிரெய்னிங்ரேன்ஜ்’ இது அமெரிக்காவின் நெவேடா பகுதியில் அமைந்துள்ளது. இரண்டாம் உலக போரின் போது இங்கு அணு ஆயுத சோதனை நடத்தப் பட்டதாம்.அமெரிக்காவின் ஆயுத சோதனைகள், உளவு விமானங்களின் சோதனை ஓட்டம், புதுமையான ஆயுத தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சி பணிகள் போன்றவை இங்கு தான் நடைபெறுகிறது. அதற்காகவே இந்த பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து பலத்த பாதுகாப்பு கொடுத்திருக்கிறார்கள். பாலைவன பகுதி போல நீளும் நிலப்பகுதியை வளைத்து அதில் பலதரப்பட்ட ஆராய்ச்சிகள் இங்கு நடத்தப் படுகின்றன. அதனால் ஆராய்ச்சிக் கூடங்களையும், நில அமைப்பையும் குறிப்பிட இங்கு 1 முதல் 30 வரையிலான பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு ‘ஏரியா 1’ பகுதியில் புதுரக போர் விமான தயாரிப்பு நடக்கிறது.                         ஏரியா 51 எங்கே இருக்கிறது? லாஸ் வேகாஸில் இருந்து வடமேற்கே 80 மைல்கள் தொலைவில் நிவேடாவில் உள்ள ராணுவப் பயிற்சி முகாம் தான் ஏரியா 51 எனப்படுகிறது. நிவேடா பரிசோதனை மற்றும் பயிற்சி வளாகம் என்று அதை அமெரிக்க அரசு குறிப்பிடுகிறது. அது பரவலான எட்வர்ட்ஸ் விமானப் படை தளத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. அமெரிக்காவில் உள்ள பல ராணுவ முகாம்களைப் போல, இதன் முதன்மையான பயன்பாடு பற்றிய தகவல்கள் மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. Facebook  Comment  உள்ளதைப் போல அந்த இடத்தில் அத்துமீறி நுழைவது சிரமமான காரியம் – அது மக்களுக்குத் தடை செய்யப்பட்ட பகுதி. வெளி வளாகத்தில் ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுத் துறை அனுமதி இல்லாமல், அந்தப் பகுதிக்கு மேலே உள்ள வான்வெளியில், நுழைவதும் கஷ்டமான காரியம். அதற்கு அனுமதி தரப்படுவது கிடையாது.   ஏரியா 2′ பகுதியில் ஆயுத தயாரிப்பு நடக்கிறது என பெயர் பலகைகளை கொண்டு ஆராய்ச்சிக் கூடங்களையும் ஆராய்ச்சிகளையும் குறிப்பிட்டு பேசுவார்கள். அந்த வரிசையில் ‘ஏரியா 15’ பகுதியில் தான் மர்மமான விஷயங்களை ஆராய்வதற்கான கூடங்கள் அமைக்கப் பட்டுள்ளன. அங்குதான் மர்ம முடிச்சுகளில் மிக முக்கியமான தான ஏலியன் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளும் நடக்கிறது. அதனால் தான் ‘ஏரியா 15’ பகுதி பிரபலமானது. ‘ஏரியா 15’ என்று அழைக்கப்பட்ட பகுதி பின்னாளில் ஏரியா 51 என மாறியது. ஏரியா 51’ பகுதியில் கண்ணுக்கு தெரியும். ஆய்வுக் கூடங்களை விட மண்ணுக்குள் மறைந்திருக்கும் ஆய்வுக் கூடங்களே அதிகம். அதனால்தான் ‘ஏரியா 51’ வைரல் விஷயத்தில் பட்டையை கிளப்புகிறது. ‘ஏரியா 51’ பற்றிய பரபரப்பு அடிக்கடி காட்டுத் தீ போல பரவுவதற்கு பாப்லஸார் என்ற ஆராய்ச்சியாளர் ஒரு காரணம். ஏனெனில் பாப்லஸார் 1989-ஆம் ஆண்டு முதல் ‘ஏரியா 51’ பகுதியின் எஸ்-4 சோதனை பிரிவில் பணியாற்றி வருவதாக வும் இவரே ‘ஏரியா 51’ பகுதியில் நடக்கும் ஏலியன் ஆராய்ச்சிகளுக்கு வகிக்கிறார். என்றும்கூறப்படுகிறது. இவர் வெளியிடும் ஆய்வு முடிவுகள் தான் ஏரியா 51′-யை பரபரப்பாக்குகிறது. பாப்லஸார் ‘ஏரியா 51’ பகுதியில் சில ஏலியன்களை பிடித்து வைத்து ஆய்வுகளை மேற்கொள்வதாக வெகு காலமாக நம்பப்படுகிறது. அதற்கு சான்றாக ஏலியன் தொடர்பான பல உண்மை தகவல்களை பாப்லஸார் வெளியிட்டுள்ளார். யூ.எப்.ஓ. எனப்படும் பறக்கும் தட்டு தொழில்நுட்பம், பறக்கும் தட்டிற்கான எரிபொருள் தொழில் நுட்பம்,ஏலியன்களின் கிரகம் பற்றிய தகவல் என பலவற்றை ஆய்வு முடிவுகளாக வெளியிட்டுள்ளார். குறிப்பாக 2003-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட உன்னுன்பென்டியம் தனிமத்தை 1989-ஆம் ஆண்டே கணித்து கூறிவிட்டார். உன்னுன்பென்டியம் தான் ஏலியன் தொழில்நுட்பத்தின் பலம் என்றும் கூறியிருந்தார். ‘ஏரியா 51’ பகுதியில் ஏராளமான ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றுகிறார்கள். ஆனால் அவர்களது விவரங்களை வெளியிட அமெரிக்கா அரசாங்கம் தயங்குகிறது. அங்கு பணியாற்றுபவர்களுக்கென லாஸ்வேகாஸில் இருந்து தினமும் 20 சில விமானங்கள் ‘ஏரியா 51’ பகுதிக்கு சென்று வருவதாகவும் அவைகளில் 1000 ஊழியர்கள் அங்கு சென்று வருவதாகவும் கூறப்படுகின்றது. வெள்ளை நிற விமானத்தின் நடுவே சிவப்பு கோடு இருக்கும். ‘ஜேனெட்’ என அழைக்கப்படும். இந்த விமானம் மட்டும்தான் ‘ஏரியா 51’ பகுதியின் வானில் பறக்க அனுமதிக்கப் படுகின்றது. ராணுவ விமானங்களுக்கு கூட இங்கு பறக்க குறிப்பிடத்தக்கது. என்பதும் அனுமதி கிடையாது ஏரியா 51 எப்படி இருக்கும்?         விமானப்படை தளத்திற்குச் செல்லவில்லை. ஆனால், பாலைவனத்தில் எவ்வளவு தொலைவுக்குச் செல்ல முடியுமோ அவ்வளவு தொலைவு செல்வோம், நம் அதிர்ஷ்டம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் என நினைத்துப் பயணித்தோம் – விலகி இருக்குமாறு அமெரிக்க ராணுவத்தின் மிரட்டும் வகையிலான எச்சரிக்கைகளை மட்டுமே நாங்கள் பார்க்க முடிந்தது” என்று சினியட் கர்வன் தெரிவித்தார்.அவர் முன்பு ரேடியோ 1 நியூஸ்பீட் -ல் பொழுதுபோக்குப் பிரிவு செய்தியாளராக இருந்தார். இந்தக் கட்டுரை தொடர்பான விஷயங்களைக் கையாண்டதை அடுத்து, எங்களுடைய முதன்மையான வேற்றுகிரகவாசி செய்தியாளராகிவிட்டார். 2014ல் சாலைப் பயணமாக அவர் ஏரியா 51-க்குச் சென்றார் உயர் ரகசியத்தன்மை உள்ள அந்த ராணுவ முகாமை சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளுமே வேற்றுகிரகம் என்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தன.” அங்கு `பூமிவாசிகளை வரவேற்கிறோம்’ என்ற அறிவிப்புப் பலகை, நெடுஞ்சாலையில் இருந்தது பெட்ரோல் நிலையமும் வேற்றுகிரகத்தைப் போலவே அமைக்கப்பட்டிருந்தது. அலுவலர்களும் அதுபோலவே இருந்தனர். கவுண்டரில் இருந்த பெண்மணியும் போரடித்து இருப்பவரைப் போல இருந்தார்.” அங்கு சுற்றியிருந்த சில கட்டடங்களின் சுவர்களில் கார்ட்டூன் வேறுகிரகவாசிகள், அடையாளம் தெரியாத பறக்கும் வாகனங்களின் படங்கள் இருந்தன. அவற்றில் பிரபலமான லிட்டில் ஏரியன் மோட்டலும் ஒன்று.”புகைப்படம் எடுத்துக் கொள்ளத் தூண்டும் நிறைய அம்சங்கள் இருந்தன; ஆனால் ஏரியா 51 ன் பாதுகாப்பான வாயிலில் இருந்து நாங்கள் கண்காணிக்கப்படுகிறோமா என்று எங்களுக்கு சிறிது அச்சம் இருந்தது மர்மமான ஒன்று இருக்கும்போது அதைச் சுற்றி பல கற்பனைகளும் கதைகளும் கட்டி விடப்படும். அமெரிக்க ராணுவம் இந்த இடத்தில் ரகசிய ஆயுத ஆராய்ச்சிகளை மேற்கொள்வதாகவும், அமெரிக்கா அரசு வேற்றுகிரகவாசிகள் குறித்த சோதனைகளை ரகசியமாக செய்து வருவதாகவும், வேற்றுகிரக UFO-க்கள் வந்து இறங்குவதாகவும் பல மர்மக் கதைகள் இதைச் சுற்றி உள்ளன.24 ஜூலை 1952-ம் ஆண்டு இரண்டு விமானப்படை அதிகாரிகள் நெவாடாவில் கார்சன் சிங்க் என்னும் பகுதியில் மூன்று டெல்ட்டா விங் எனும் அசாதாரண விமானம் V வடிவத்தில் வானில் பறப்பதைப் பார்த்தாகச் சொல்லி பரபரப்பை பற்றவைத்தார்கள். அமெரிக்க கடற்படை வீடியோ ஒன்றில் வானில் சுழலும் ஒரு வட்டவடிவ UFO ஒன்றும் பதிவாகியுள்ளது. இது மட்டுமல்லாது ஏரியா 51-க்கு அருகில் பொதுமக்கள் பார்த்த பல UFOக்கள் பற்றிய தகவல்கள் கூட பதிவாகி உள்ளன. எது எவ்வாறாயினும் இதுவரை இந்த இடம் பற்றிய எந்த ஓர் அதிகாரப்பூர்வமான தகவல்களும் அமெரிக்க அரசால் வெளியிடப்படவில்லை.                                                                                                                                                                                                              ஏரியா 51’யை எங்கிருந்து பார்க்க முடியும் தெரியுமா? பாதுகாக்கப்பட்ட பகுதியான ‘ஏரியா 51’யை பொது மக்கள் பார்க்க முடியும். எங்கிருந்து தெரியுமா? வெகு தூரத்தில் நின்று ‘ஏரியா 51’ பகுதியில் இருந்து 42 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ‘டிகாபூ பீக்’ பகுதியில் நின்று தொலை நோக்கி வழியே பார்க்கலாம். இதற்கு முன்பாக ‘வைட்ட சைட்ஸ்’ மற்றும் ‘ப்ரீடம் ரிட்ஜ்’ என இரு இடங்களில் இருந்து’ஏரியா 51′ பகுதியை பார்க்க முடிந்தது. பின்னாளில் இவை இரண்டும் அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் இன்றைய இளைஞர்கள் ‘ஏரியா 51’ பகுதியின் மீது தீராத ஆர்வம் கொண்டுள்ளனர். அங்கு என்ன உள்ளது. அப்படி அங்கு என்னதான் ஆராய்ச்சி நடத்தப்படுகிறது என்பதை தெளிவுப்பகுத்தி கொள்ள பல வழிகளில் எண்ணத்தோடு ‘ஏரியா 51’ பகுதியை நெருங்குவது அவ்வளவு சுலபம் இல்லை. அங்கு அமெரிக்கா வெள்ளை மாளிகையை விடவும் இரு மடங்கு பாதுகாப்பு போடப் பட்டிருக்கிறது ஒரு ஈ எறும்புக்கு கூட உள்ளே போக அனுமதி கிடையாது. அத்துமீறி உள்ளே நுழைவோர் கேள்விகள் இன்றி கைது செய்யப்படுவர். மேலும் இவ்விடத்தை பாதுகாக்கும் காவலர்கள் ‘Cammo Dudes’ என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் ராணுவத்தையோ, காவல்துறையையோ சேர்ந்தவர்கள் அல்ல. ரகசியப் பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்கள். இவர்களைப்பற்றி இன்றளவும் தகவல்கள் தர அமெரிக்கா அரசு மறுத்து வருகிறது. வேற்றுகிரகவாசிகளோ, அணு ஆயுத பரிசோதனையோ, விமானப்படை தளமோ, இல்லை இது அனைத்தையும் தாண்டிய வேறு ஏதோவொன்றோ, எதுவாயினும் அங்கு இருப்பது உண்மையில் என்னவென்பது அமெரிக்கா அரசுக்கு மட்டுமே தெரிந்த பரம ரகசியம். Vinodhan,

மர்மங்கள் நிறைந்த அஸ்வினி நட்சத்திரம்!

                                                                                                                                                                                                    மர்மங்கள் நிறைந்த அஸ்வினி நட்சத்திரம் இருபத்தியேழு நட்சத்திரங்களுள் முதல் இடத்தைப் பிடித்திருக்கும் அஸ்வினி நட்சத்திரத்தின் பெருமைகளும் மர்மங்களும் அதிசயங்களும், ரகசியங்களும் ஏராளம் ஏராளம். மேஷ ராசியில் அமைந்துள்ள அஸ்வினி நட்சத்திரன் அதிதேவதை அஸ்வினி தேவதைகள். மேலை நாட்டினரால் ஆல்பா, பீடா, ஏரியஸ் என இது அழைக்கப்படுகிறது. பிறருக்கு உதவி செய்வதற்கென்றே ஒரு தேவதை இருக்கு மானால் அது அஸ்வினிதான். அஸ்வினி இரட்டையரைப் பற்றிய ஏராளமான கதைகள். ரிக் வேதத்தில் உள்ளது. இது மட்டுமல்லாமல் மஹாபாரதம் மற்றும் 16 புராணங்கள் நம் மனதைக் குளிர வைக்கும் பல ரகசியங்களை அஸ்வினி பற்றிக் கூறுகின்றன. அயோதெளம்யரின் கட்டளை: அஸ்வினி பற்றிய முக்கியமான ஒரு சரித்திரத்தை இங்கு பார்ப்போம். இந்தச் சம்பவம் நிகழ்ந்த காலம் த்வாபர யுகத்தின் இறுதிக்காலம். அயோதெளம்யர் என்ற மகரிஷிக்கு உபமன்யு, ஆருணிவேதர் மற்றும் பல சிஷ்யர்கள் இருந்தனர். தௌம்யருக்கு குருகுல வழக்கப்படி உபமன்யு உள்ளிட்ட வர்கள் உரிய முறையில் சேவை செய்து கொண்டிருந்தனர். ஒருநாள், தௌம்யர் உபமன்யுவை அழைத்து, “நீ என் பசுக் கூட்டத்தை ரக்ஷித்துக் கொண்டு வா” எனக் கட்டளை யிட்டார். அவ்வாறே உபமன்யு பசுக்கூட்டங்களை மேய்த்துக் கொண்டு போய் மாலையில் குருவிடம் வந்து சேர்ந்தார். குரு உபமன்யுவின் தேகம் வாடாமல் இருந்ததைக் கண்டு அவரை நோக்கி, “உபமன்யு உன் தேகம் வாடாமல் பொலிவுடன் இருக்கிறதே நீ என்ன ஆகாரம் உண்டாய்?” என்று கேட்டார். உபமன்யு, “குருவே, நான் யாசகம் செய்து அதனால் ஆகாரம் உண்டேன்” என்றார். அதற்கு குரு, “யாசகத்தினால் உனக்குக் கிடைப்பதை என்னிடம் இனி கொண்டு வந்து கொடுத்து விடு. அதை எனக்குச் சேர்ப்பிக்காமல் நீ உண்பது முறையன்று” என்றார். உபமன்யு அந்தக் கட்டளையை சிரமேற் கொண்டார். மறுநாள் பிட்சையில் தமக்குக் கிடைத்த அனைத்தையும் குரூவிடம் உபமன்யு சமர்ப்பித்தார். அதில் ஒரு கவளம் கூட உபமன்யுவுக்குத் தராமல் தௌம்யரே அனைத்தையும் எடுத்துக் கொண்டார். பிறகு மாடுகளை மேய்க்கச் சென்ற உபமன்யு மாலையில் வீடு வந்து சேர்ந்தார். அவர் உடல் வாடாமல் இருந்ததைக் கண்ட குரு, “உனக்கு நான் கவளம் கொடுக்கவில்லையே, என்றாலும் கூட நீ உடல்வாடாமல் கூடக் வந்திருக்கிறாயே! எதை ஆகாரமாக உண்டாய்?” என்று கேட்டார். அதற்கு உபமன்யு, ”குருவே! முதலில் யாசகம் எடுத்ததைத் தங்களிடம் கொடுத்து விட்டேன். இன்னொரு முறை யாசகம் எடுத்ததைத் தங்களிடம் கொடுத்து விட்டேன். இன்னொரு முறை யாசகம் எடுத்து அதை நான் சாப்பிட்டேன்” என்றார். தெளம்யர், “உபமன்யு நீ செய்தது சரியல்ல. உன்னுடைய இந்த செய்கையினால் பிக்ஷ ஜீவனம் செய்யும் மற்றவர்களுக்கு நீ இடைஞ்சல் செய்கிறாய். இப்படி நீ ஜீவிப்பதால் நீ துர்ஆசை உள்ளவன் என்பது நிச்சயமாகிறது” என்றார்.குரு கூறிய அனைத்தையும் மனதில் வாங்கிக் கொண்டு உபமன்யு மாடுகளை மேய்க்கச் சென்றார். அன்று மாலை வழக்கம் போல அவர் வந்ததும் அவரை நோக்கிய குரு, “என்ன உபமன்யு நீ வாடாமல் கொழுத்துத்தான் இருக்கிறாய்? என்ன உணவை உண்டாய்?” என்று கேட்டார். அதற்கு உபமன்யு, ”குருவே நான் இந்தப் பசுக்களின் பாலை அருந்தி ஜீவிக்கிறேன்” என்றார். உடனே தெளம்யர், “அடடா, என்னுடைய அனுமதியைப் பெறாமல் பாலை அருந்தலாமா? இனி அருந்தாதே” என்றார். குருவின் வார்த்தைகளுக்குச் சரி என்று சொல்லி விட்டு உபமன்யு திரும்பினார். மறுநாள் மாலை ஆயிற்று, உபமன்யு வந்தார். குரு, அவர் சற்றும் சோர்வடையாமல் இருப்பதைக் கண்டு. ‘உபமன்யு, இன்று எதையாவது அருந்தினாயா என்ன? பாலை அருந்தவில்லையே” என்று கேட்டார். “ஐயனே பாலை அருந்தவில்லை. ஆனால் பாலைக் கன்றுகள் குடித்த பின்னர் கீழே விழும் நுரைத்துளிகளை அருந்தினேன்” என்றார். உடனே தெளம்யர், ”இந்த கன்றுக்குட்டிகள் போதிய அளவு பாலை அருந்தாமல் விட்டு விடுகின்றன என்று எனக்குத் தோன்றுகிறது. ஆகவே இனி நீ நுரைத் துளிகளையும் அருந்தாதே” என்று கட்டளையிட்டார். கட்டளையை உபமன்யு சிரமேற் கொண்டார். நுரைத் குருவின் துளிகளை இனி அருந்த மாட்டேன் என்று குருவிடம் உறுதி கூறினார். கன்றுகள் அருந்திய பின்னர் வந்த பாலின் மாடுகளை நுரைத்துளிகளையும் அருந்தாமல் காட்டில் மேய்த்தவாறு அலைந்த அவர் இறுதியில் பசி தாங்காமல், எருக்க இலைச் சாற்றை அருந்தினார். காரம் நிறைந்த எடுக்கஇலைச் சாறின் விஷத்தினால், அவர் கண்கள் உடனே குருடாயின. அஸ்வினி தேவர்களை நோக்கி துதி கண் தெரியாததால், காலால் நடக்க முடியாமல் உபமன்யு ஊர்ந்து செல்லத் தொடங்கினார். அப்போது வழியில் இருந்த ஆழமான கிணற்றுக் குழி ஒன்றில் விழுந்தார். மாலை நேரமாயிற்று. உபமன்யு வராததைக் கண்ட தௌம்யருக்குக் கவலை வந்தது. தனது இதர சீடர்களை அழைத்து, எங்கே?” என்றார். அவர்களுக்குப் பதில் தெரியவில்லை. “வாருங்கள். அவனைச் சென்று தேடுவோம்” என்று கூறிய தெளம்யர் காட்டை நோக்கிக் சென்றார். ”உபமன்யு நீ எங்கே இருக்கிறாய்?” என்று கூவியவாறே காட்டில் ஒவ்வொரு பகுதியாக தேட ஆரம்பித்தார். தன் குருவின் சப்தத்தைக் கேட்ட உபமன்யு, ”குருவே! நான் இதோ இந்தக் கிணற்றுக் குழியில் விழுந்து கிடக்கிறேன்” என்று பரிதாபமான குரலில் உரக்கக் கத்தினார்.”இதில் நீ எப்படி விழுந்தாய்?” என்று தௌம்யர் கேட்க, உபமன்யு தான் எருக்கஞ்சாறு அருந்தியதையும் கண்கள் குருடான விஷயத்தையும் கூறினார். உடனே தெளம்யர், “உபமன்யு, தேவர்களுக்கு வைத்தியர்களான அஸ்வினி தேவர்களை,நீ ஸ்தோத்திரம் செய். அவர்கள் உனக்கு கண் பார்வை அளிப்பார்கள்” என்று கூறி அருளினார். குருவால் கட்டளையிடப்பட்ட உபமன்யு மனமுருக அஸ்வினி தேவர் களைப் பிரார்த்திக்க ஆரம்பித்தார். ரிக் வேதத்தில் உள்ள மிக நீண்ட உபமன்யுவின் துதி மிக மிகச் சிறப்பானது அதன் இறுதி வாக்கியங்களில் அவர்.”ஓ அஸ்வீனி தேவர்களே. நான் உங்களை வணங்குகிறேன். உங்களால் நியமிக்கப்பட்டிருக்கும் இந்த ஆகாயத்தையும் வளங்குகிறேன். தேவர்களும் கூட தப்ப முடியாத எல்லாக் காமங்களுக்கும் பலன்களை நீங்களே விதிக்கின்றவர்களாய் இருக்கிறீர்கள். ஆனால் உங்களின் செய்கைகளால் ஏற்படும் பலன்கள் உங்களைச் சார்வதில்லை. நீங்களே எல்லோருக்கும் பெற்றோர்களாய் இருக்கின்றீர்கள். நீங்களே ஆணும் பெண்ணுமாக இருந்து பின்னால் ரத்தமாகவும், ஜீவாதாரமான நிரவியமாயும் ஆகிற அன்னத்தைப் புசிக்கிறீர்கள். புதிதாய் பிறந்த குழந்தை தாயின் பாலை உண்ணுகிறது. உண்மையில் குழந்தை ரூபமாக இருப்பவர்கள் நீங்களே! ஹே! அஸ்வினி தேவர்களே என்னுடைய ஜீவனை ரட்சிப்பதற்கு ஆதாரமாக உள்ள கண்பார்வையை எனக்கு அனுக்ரஹம் செய்யுங்கள்” என்று கூறி அஸ்வினி தேவர்களை மனமுருக பிரார்த்தனை மீண்டும் கண்பார்வை கிடைத்தது எல்லோருக்கும் உடனே உதவத் துடிக்கும் அஸ்வினி தேவர்கள் தன்னை அண்டி வணங்கிய உபமன்யுவின் துதியால் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். உபமன்யுவின் மூன் தோன்றி, அவர்கள் “நாங்கள் திருப்தி அடைந்தோம். இதோ இந்தத் தின்பண்டத்தை உடனே உட்கொள்” என்று கூறி அவர் உண்ண தின்பண்டம் ஒன்றைத் தந்தனர். உபமன்யு, “நீங்கள் கொடுப்பதை என் குருவுக்கு முதலில் கொடுக்காமல் நான் சாப்பிடத் துணியேன்” என்றார். உடனே அஸ்வினி தேவர்கள் பழைய சம்பவம் ஒன்றை உபமன்யுவிடம் கூற ஆரம்பித்தனர். “முன்னொரு காலத்தில் உன்னுடைய குருவானவர் எங்களைப் பிரார்த்தித்தார். நாங்கள் அப்போது அவருக்கு இதே மாதிரி தின்பண்டம் ஒன்றை உண்ணுவதற்காகத் கொடுக்காமலேயே தந்தோம். அதை அவர் தன் குருவுக்குக்“யா. ஆகவே, உன குரு முன் செய்த பிரகாரமே நயும் அவருக்குக் கொடுக்காமல் உடனே இதைச் சாப்பிடலாம் என்று கூறினர். உபமன்யு, “ஓ! அஸ்வினி தேவர்களே என்னை மன்னிப்பீர்களாக இதை என் குருவுக்குக் கொடுக்காமலேயே நான் சாப்பிட மாட்டேன்” என்று உறுதியாகக் கூறினார். உடனே அஸ்வினி தேவர்கள், “உன் குருவின் மீது உனக்கு இருக்கும் பக்தியை மெச்சினோம். உன் குருவினுடைய பற்கள் காரிருப்பினால் ஆக்கப்பட்டுள்ளன. உன்னுடைய பற்கள் தங்கப் பற்களாகக் கடவது” என்று கூறி ஆசீர்வதித்தனர். ‘இனி நீ உன் பார்வையை அடைவாய். உனக்கு சர்வ மங்களமும் உண்டாகட்டும்” என்று கூறி அஸ்வினி தேவர்கள் மறைந்தனர். குருவிடம் உபமன்யு நடந்த அனைத்தையும் கூறி வணங்கினார். தௌம்யர் மிகவும் சந்தோஷம் அடைந்தார். உபமன்யுவை நோக்கி அவர், “நீ இனி அஸ்வினி தேவர்கள் கூறியபடியே சகல க்ஷேமத்தையும் அடைவாய். எல்லா வேதங்களும் எல்லா தர்ம சாஸ்திரங்களும் உன்னிடத்தில் விளங்கும்” என்று கூறி ஆசிர்வதித்தார். அதன்படியே உபமன்யு வேத சாஸ்திரங் களில் தேர்ந்து பெரும் தவம் புரிந்து பெரிய மஹரிஷியாக ஆனார். அஸ்வினி தேவர்கள் அனைவருக்கும் உதவி செய்த ஏராளமான சம்பவங்களுக்கு உபமன்யுவின் கதை ஒரு சிறந்த சான்று.                                                                                                                                                    

தனிமை என்பது சுகமா அல்லது வேதனையா…..

            தனிமை என்பது என்ன என்று என்னைக் கேட்டால் உண்மையிலேயே சுகம் என்றுதான் நான் கூறுவேன். ஏனென்றால் மனதிற்கு சிறந்த மருந்து தனிமை தான். ஏனென்றால் தனிமையில்தான் ஒருவன் சிறந்த அறிவாளியாகவும் புதுமையான படைப்புகளை உருவாக்குகின்றவனாகவும் மாறுகிறான். எப்படி என்றால் தனிமையில் இருக்கும்போது நம் மனமானது மிகவும் அமைதியாக இருப்பதே நீங்கள் உணரலாம். ஆனால் இந்த அமைதி தனிமையில் கிடைக்க வேண்டுமென்றால் நாம் முதலில் மனம் என்கிறவனை கவனிக்க வேண்டும். ஆம் அப்போதுதான் மனதில் இருக்கும் கழிவுகள் அனைத்தும் நம்மிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறும். அந்த நேரத்தில் நாம் அமைதியாக அமர்ந்து அதை கவனித்தால் போதும் ஏனென்றால் அப்போதுதான் நம் மனதில் இருக்கும் கவலை வேதனை கஷ்டம் கோபம் என அனைத்தும் வெளியேறும் போது நமக்கு எவ்வித reactionனும் இருக்கக்கூடாது.அப்போது மன அமைதி கிடைக்கும். ஆனால் பலபேர் தனிமையில் இருந்தால் அதிகம் கவலை கொள்கிறார்கள் அப்போது இவை வேதனையாக மாறத் தொடங்குகிறது. ஏன் கவலை கொள்கிறார்கள் என்றால் மனிதர்கள் எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் நம்மை சுற்றி பல பேர் இருந்தால் தான் சந்தோஷம் என்றும் நினைக்கின்றனர்.        அவை எல்லாம் நிரந்தரமில்லை தனிமை என்பது தான் நமக்கு நிரந்தரம் நாம் சாகும் வரை தனிமை தான் நிரந்தரம் எப்படி என்றால் நாம் பிறக்கும் போதும் தனியாகத்தான் பிறக்கிறோம் இறக்கும்போதும் தனியாகத்தான் இருக்கிறோம். அதுவே பூமியின் இயற்கை என் தனிமை என்பது சுகம் என்கிறேன் என்றால் நீங்கள் தனியாக இருக்கும் போது மனதை புரிந்து கொள்ள முடியும். மனம் என்பது சாதாரண ஒன்றாக நீங்கள் நினைக்கிறீர்கள் ஆனால் மனதை பற்றி அறிய தனி கலயை உருவாக்கி அதை மனிதர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். ஒரு மனிதன் உலக சாதனை படைக்க செய்வதும் மனமே அதே மனம் மனிதனை அழிக்ககூடிய அளவிற்கு அதிக ஆற்றல் கொண்டது. மனிதர்கள் யாரையோ தேடி எதையோ நம்பிக்கொண்டு மனிதர்களின் பின்னால் சுற்றிக் கொண்டு அவர்களிடத்தில் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் வளர்த்துக்கொண்டு கடைசியில் ஏமாற்றப்படுகிறார்கள். பிறகு மனம் வருத்தப்படுகிறார்கள் விரக்தி அடைகிறார்கள். அதன்பின்பு எனக்கு யாருமே இல்லை என்று புலம்புகிறார்கள். அப்போது தனிமை என்கிற ஒன்று தேவைப்படுகிறது.அந்த தனிமையில் மனிதர்கள் செய்த சில தீய வினைகளை நினைத்து மனம் வாடுகிறார்கள். அதனால் இங்கு தனிமை வேதனையாக மாறுகிறது. பிறகு தற்கொலை செய்துகொள்கிறார்கள் அதற்குத் தான் கூறுவார்கள் தனிமை தான் ஒரு மனிதனை தவறு செய்யத் தூண்டும் என்று சரி தனி வழி எப்போதும் சந்தோஷமாக மாறும் அது மனிதர்களாகிய நாம் கையில் தான் உள்ளது எப்படி என்றால் வேதனை கஷ்டங்களில் சிக்கிய நீங்கள் உங்கள் கஷ்டத்தை யாரிடமும் கூறாமல் நீங்கள் தனிமையை விரும்பவேண்டும்.           அப்போது என்ன நடக்கும் என்றால் மனதில் புதைந்துள்ள நச்சுக்கள் முதலில் வெளியேறத் தொடங்கும் அதாவது கவலை கோபம் அழுகை வேதனை வெறுப்பு இப்படி மனதை துன்புறுத்த செய்யும் நச்சுக்கள் வெளியேறும். அப்போது மனதின் செயல்களை நீங்கள் கவனிக்க வேண்டும்.அப்போ நீங்கள் தெரிந்து கொள்ளலாம் மனதின் பித்தலாட்டங்களை உங்களுக்கு நடந்த துன்பங்கள் ஒன்றுமே இருக்காது. ஆனால் மனம் அதை எவ்வளவு பெரியதாக உருவகப்படுத்தி உங்களை நிலைகுலைய வைக்கும். அதை நீங்கள் கவனிக்க கவனிக்க அது உங்களை விட்டு மறைய ஆரம்பிக்கும்.சில காலம் சென்ற பிறகு தனிமையாக நீங்கள் இருப்பீர்கள் உங்களது மனம் ஒருவித பக்குவமடைந்த தெளிவாக இருப்பதை நீங்கள் உணர முடியும். தனிமையை நீங்கள் விரும்ப ஆரம்பித்து விடுவீர்கள். இந்த மனிதர்களுடன் பழகுவதை விட தனிமையில் இருப்பதை எவ்வளவு சிறந்தது. ஏனென்றால் மனிதர்களுடன் பழகி அதன் மூலம் வரும் துன்பங்களை விட தனிமையில் வரும் துன்பம் எவ்வளவு சிறந்தது தனிமையில் துன்பமே கிடையாது மனம் அமைதியாக நிம்மதியாக இருக்கும். ஏனென்றால் சூழ்நிலைக்கேற்ப மனிதர்கள் அவர்களை மாற்றிக்கொள்கிறார்கள்.அந்த சில சூழ்நிலை நமக்கு பாதகமாக மாறிவிடுகிறது ஏன் நாம் மனிதர்களை வெறுகிறோம் என்றால் எதிர்பார்ப்பு தேவை அன்பு இதையெல்லாம் அளவுக்கு அதிகமாக அவர்களிடம் நாம் வைப்பதால் ஒரு கட்டத்திற்கு மேல் அவையே கத்தியாக மாறுவதால் நாம் மனவேதனை கொள்கிறோம். நோயினை நாமே உருவாக்குகின்றோம். ஆகவே தனிமை என்பது மனதிற்கு சிறந்த மருந்து 70 80 வயதிற்கு மேல் எப்படியோ நீங்கள் தனிமையில் தான் இருக்கப் போகிறீர்கள் அப்போது யாருமே உங்கள் கூட இருக்கமாட்டார்கள். இருப்பார்கள் ஆனால் இருக்க மாட்டார்கள். அப்போ இருக்கவேண்டிய தனிமை நமக்கு அதிக கஷ்டத்தை ஏற்படுத்தும் அப்போது நம்மால் தாங்க முடியாது.          நீங்கள் சிறுவயதிலேயே தனிமையில் இருக்க பழகிக் கொண்டால் உங்களுக்கு இந்த தனிமை வயதான காலத்தில் இனிமையாக இருக்கும். இப்படி இருந்து பழகினால் ஒரு கட்டத்திற்கு மேல் உங்களுக்கு மனிதர்கள் கூட இருக்கப் பிடிக்காது மனிதர்களை கேட்க மாட்டீர்கள் மனித தொடர்பு குறைய ஆரம்பித்துவிடும் தனிமை என்கிற ஒன்றினை சரியாக புரிந்து கொண்டு வாழ்ந்தால் நமக்கு மனிதர்களுக்காக ஏங்க வேண்டிய அவசியமில்லை. எப்போதும் மன அமைதி மற்றும் சந்தோஷம் கிடைக்கும். ஏன் வயதான காலத்தில் இனிமையாக இருக்கும் என்கிறேன் என்றால் மனதை நீங்கள் கவனித்த பிறகு அதில் தோன்றும் மாயை விலகும் பிறகு மனம் அமைதியாக இருக்கும் போது உங்களுக்குள் ஓர் சந்தோஷம் கிடைக்கும் அந்த சந்தோஷம் எவ்வளவு பணம் எவ்வளவு மனிதர்கள் கூட இருந்தாலும் அதற்கு நிகராக எதுவுமே கிடையாது. அதனால்தான் முதுமை காலத்தில் எவ்வித மனிதர்களையும் நினைத்து ஏங்க மாட்டீர்கள் அப்போது உங்களுக்குள்ளேயே சந்தோஷம் இருக்கும் அந்த சந்தோஷம் உங்கள் உள்ளுணர்வு என்று சொல்லக்கூடிய super conscious உங்களுக்கு கொடுக்கும். இதுவே கடவுள் என்கின்றனர். கடவுள் என்றால் நம் உள்ளே கிடப்பவர் அதாவது (உள் கட )அதனால்தான் கடவுள் என்கிறார்கள். ஆகவே தனிமையில் தான் நீங்கள் மனதை கடந்து உங்களுக்குள் இருக்கும் கடவுளை உணர முடியும்.நான் தனிமையை நேசிப்பவன். நன்றி.. மகிழ்ச்சி….😇 HIPNOTIST SIVAGANESH,

The Secret Life of a Satanist!

         The gods of the right-hand path have bickered and quarreled for an entire age of the earth. Each of these deities and their respective priests and ministers have attempted to find wisdom in their own lies. The ice age of religious thought can last but a limited time in this great scheme of human existence. The gods of wisdom-defiled have had their saga, and their millennium hath become as reality. Each, with his own “divine” path to paradise, hath accused the other of heresies and spiritual indiscretions. The Ring of the Nibelungen doth carry aneverlasting curse, but only because those who seek it think in terms of “Good” and “Evil” – themselves being at all times “Good”. The gods of the past havebecome like their own devils in order to live. Feebly, their ministers play the devil’s game to fill their tabernacles and pay the mortgages on their temples. Alas, too long have they studied “righteousness”, and poor and incompetent devils they make. So they all join hands in “brotherly” unity, and in their desperation go to Valhalla for their last great ecumenical council. “Draweth near in the gloom the twilight of the gods.” The ravens of the night have flown forth to summon Loki, who hath set Valhalla aflame with the searing trident of the Inferno. The twilight is done. A glow of new light is borne out of the night and Lucifer is risen, once more to proclaim: “This is the age of Satan! Satan Rules the Earth!” The gods of the unjust are dead. This is the morning of magic and undefiled wisdom. The FLESH prevaileth and a great Church shall be built, consecrated in its name. No longer shall man’s salvation be dependent on his self-denial. And it will be known that the world of the flesh and the living shall be the greatest preparation for any and all eternal delights!                                                                                                                                              THE NINE SATANIC STATEMENTS     1. Satan represents indulgence, instead of abstinence!2. Satan represents vital existence, instead of spiritual pipe dreams! 3. Satan represents undefiled wisdom, instead of hypocritical self-deceit!4. Satan represents kindness to those who deserve it, instead of love wasted on ingrates!5. Satan represents vengeance, instead of turning the other cheek!6. Satan represents responsibility to the responsible, instead of concern for psychic vampires!7. Satan represents man as just another animal, sometimes better, more often worse than those that walk on all-fours, who, because of his “divine spiritual and intellectual development”, has become the most vicious animal of all!8. Satan represents all of the so-called sins, as they all lead to physical, mental,  or emotional gratification!9. Satan has been the best friend the church has ever had, as he has kept it in business all these years! Vinodhan, Courtecy  The Satanic Bible,

சித்தர்கள் கூறிய சக்தி வாய்ந்த தெய்வீக மோதிரம் தயாரிப்பது எப்படி?

                                                                        நினைத்தது நடக்க தெய்வீக மோதிரம் தயாரிப்பது எப்படி?ஒரு வருடத்தில் சில தடவைகள் மட்டும் சூரியன்,சந்திரன்,சுக்கிரன் இம்மூன்று கிரகங்களும் ஒன்று சேரும்.அப்படி ஒன்று சேரும் கால அளவு சிலமணி நேரங்களாக இருக்கும்.அல்லது 2 1/4 நாளாக இருக்கும்.(அதாவது 54 மணிநேரம்).இந்த சேர்க்கை நேரத்தை அனுபவம் மிக்க ஜோதிடரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.அல்லது இந்த வலைப்பூவில் தொடர்பு கொள்ளுங்கள்.மின் மடலில் உரிய நேரத்தை அனுப்புகிறோம். அந்த நேரத்தில் 1:1 என்ற அளவிற்கு சுத்த வெள்ளியையும் சுத்த தங்கத்தையும் சேர்த்து உருக்கி,திறப்பு உள்ள மோதிரம் செய்து முடிக்க வேண்டும்.(நல்ல அனுபவமுள்ள நகை ஆசாரியால் மட்டுமே இதைச் செய்ய முடியும்.அனுபவம் இல்லாதவர்களால் தங்கத்தையும் வெள்ளியையும் சேர்த்து உருக்கத் தெரியாது என்பது அனுபவ உண்மை).அப்படி செய்து முடித்த மோதிரத்தில் ஒரு காரட்டுக்குக் குறையாத பவளக்கல்லை அந்த திறப்பில் பதித்துவிட வேண்டும்.அப்படி பதிப்பதையும் மேலே குறிப்பிட்டுள்ள நேரத்திற்குள் பதித்துவிட வேண்டும். தங்கம் பொன் என்ற தங்கத்தை தங்களது எண்ண அலைகளை பிரபஞ்சத்தில் உள்ள குறிப்பிட்ட இடத்திற்கு அனுப்ப இயலும் என்று சொல்லப்படுகிறது. பழைய காலங்களில் மக்கள் தங்கம் அணிந்து கொண்டு கோவிலுக்கு சென்று தனது பிரார்த்தனைகளை கடவுளிடம் தெரிவிப்பதோடு, கடவுள் சிலைகளுக்கும் தங்க நகைகளை அணிவிப்பது வழக்கம். விஞ்ஞான முறையிலான தந்திர யோக தத்துவத்தில், கடவுள் சிலைகள் பிரபஞ்சத்தின் நுழைவு வாயிலாக கருதப்படுகிறது. நம்முடைய பிரார்த்தனைகள் அங்கு வைக்கப்படும்போது, அவை பிரபஞ்சத்தின் மூலசக்தியிடம் சேர்வதாக ஐதீகம் வெள்ளி ரஜதம் என்று சொல்லப்படும் வெள்ளியை பயன்படுத்தியும் எண்ண அலைகளை குறிப்பிட்ட இடத்திற்கு அனுப்ப இயலும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் நடைமுறையில் இந்த முறையானது அவ்வளவாக கடைப்பிடிக்கப்படுவதில்லை. காரணம், வெள்ளியின் அலைவீச்சு தங்கத்தை விட குறைந்த அளவில் இருக்கிறது. ஆனால், வெள்ளியானது சுக்ர சம்பந்தம் கொண்டதாக இருப்பதால் உள்ளத்தில் பெருகும் உணர்வு அலைகளை கட்டுப்படுத்துகிறது இந்த மோதிரத்தை அணிந்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் மோதிரம் செய்தவுடன் உங்கள் இஷ்ட தெய்வத்தின் பாதத்தில்(வீட்டிலும்)வைத்து அர்ச்சனை செய்து கையில் அணியவும்.(அணியும் நேரம் எதுவாகவும் இருக்கலாம்).அணிந்த பின் நீங்கள் எந்த தெய்வத்தை அழைத்தாலும் வரும்.சைவ உணவு உண்பவர்களுக்கு விரைவில் பலன் கிடைக்கும். இம்மோதிரம் அணிந்தால் ஜனவசியம், சொல் பலிதம்,நியாயமான கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும்  உடலில் உள்ள குறிப்பிட்ட நரம்பு முடிச்சுகளை தொட்டவாறு இருக்கும் உலோக வடிவங்கள் வாயிலாக ‘எலக்ட்ரிக் ஸ்டிமுலேஷன்’ என்ற மின் தூண்டுதல்கள் ஏற்படுகின்றன. அதன் வாயிலாக பிரபஞ்ச ஆற்றலை ஆகர்ஷணம் செய்து ஆத்ம சக்தி, மனோ சக்தி, ஞான சக்தி ஆகியவற்றை பெறக்கூடிய அனுபவம் ஏற்பட்டது. மோதிர விரலில் உள்ள முக்கியமான நரம்பு மண்டல புள்ளி, நமது நுண்ணிய உணர்வுகளை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டுள்ளது. மேலும் நம் முடைய மணிக்கட்டு பகுதியில் 5 முக்கியமான நரம்பு புள்ளிகள் உள்ளது. இது சக்தி ஓட்டத்தை விரல் நுனியில் இருந்து, உடலின் முக்கியமான உறுப்புகளுக்கு கடத்திச் செல்கிறது.இந்த முக்கிய நரப்பு புள்ளிகள் வழியாக அனுப்பி நம்முடைய ராஜ உறுப்புகளை செழுமையாக இயங்க செய்யும் .இராஜ உறுப்புகளான இதயம் ,மூளை ,நுரையீரல்,சிறுநீரகம்,கல்லீரல் இவற்றின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தும்.இரத்தத்தை சுத்தப்படுத்தும்,தோல் சம்பந்தமான நோய்களை தடுக்கும். இரத்த கொதிப்பை சீராக்கும்.கைவலி மற்றும் உடல் உஷ்ணத்தை குறைக்கும்.நரம்பு சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.இப்படி முன்னோர்கள் கடைபிடித்த எளிய முறை அணிந்து உடலை காக்கலாம்.கண் திருஷ்டியை போக்கும். மற்றும் தீய சக்திகள் (ஆவிகள்,ஏவல் சக்திகள்,மந்திரம்,எந்திரம்),செய்வினை செய்தாலும். உடலுக்கு எந்த தாக்கமும் ஏற்படாது.பிரபஞ்சத்தில் உள்ள சக்தியை எடுத்து ஒரு வேதியியல் மாற்றத்தை உண்டு பண்ணி இந்த முக்கிய நரம்பு புள்ளிகள் வழியாக அனுப்பி, நம்முடைய உடலின் உறுப்புகளை நல்ல விதமாக இயங்கச் செய்யும் இந்த மோதிரத்தை நீங்கள் செய்து கையில் போட்டுக் கொள்ளும் பொழுது ஒரு சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை நீங்கள் ஒரு முப்பத்தி ஏழு தடவை ஒரு செலுத்த வேண்டும் அதை ஒரு செலுத்தும் பொழுது சகல தேவதைகளும் பேரரசர்களும் சத்துக்களும் மிருகங்களும் கிரகங்களும் பிசாசுகளும் உங்களுக்கு வசியமாகும் இதை அனுபவமுள்ள  அனேக பண்டிதர்களும் அனேக சித்த முறையில் இருக்கும் அனுபவஸ்தர்கள் இந்த  மோதிரம் அணிவதால் பிரபஞ்சத்தில் உள்ள சக்தியை எடுத்து ஒரு வேதியல் மாற்றத்தை உண்டு பண்ணி.                                                                  சக்தி வாய்ந்த மந்திரம் – (உறம்பந்தே ஐம்பதே வைகுண்டபந்தே நாம ஹம்மது) என்று மந்திரம் உருவு-37) இந்த மந்திரத்தை எப்போதெல்லாம் நாம் பயன்படுத்த வேண்டுமோ அப்போதெல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம் நீங்கள் புதிதாக ஒரு இடத்திற்கு செல்லும் பொழுது உங்களுக்கு தேவையானதை சாதித்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் பொழுது உங்களை நீங்கள் ஒருவரை ஒருவரின் மனதை மாற்ற நினைக்கும் பொழுது உங்களுடைய இஷ்டம் இந்த நேரத்தில் இதைப் பயன்படுத்த வேண்டும் என்று உங்கள் மனம் நினைக்கிறதோ அப்போதெல்லாம் பயன்படுத்துங்கள் மந்திரத்தை கூறும் பொழுது உங்களின் விரல்களில் உள்ள அந்த மோதிரத்தை தடவிக்கொண்டே சொல்லுங்கள் முக்கிய குறிப்பு – இந்த பவளத்தை சரியான முறையில் பார்த்து வாங்க வேண்டும் சாதாரண சில கடைகளில் விற்கும் ஆனால் எல்லா இடத்திலும் டுப்ளிகேட் மட்டுமே விற்கிறார்கள் இதன் விலை அதிகமாக இருக்கும் டுப்ளிகேட் மட்டுமே குறைவாக இருக்கும் சரியான இடத்தில் பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள் vinodhan,7010054619

திருப்பதி கோயில் தேவஸ்தானம் தொலைபேசி எண்

திருமலையில் தங்குவதற்கு ஒரு அறை கண்டுபிடிக்க கடினமாக இருந்தால், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் பயன்படுத்தி கொள்ளுங்கள் நண்பர்களே. கோவிலுக்கு மிக அருகிலேயே கீழ் கண்ட மடங்கள் உள்ளன. அவற்றில் தங்கலாம். ஹோட்டலுக்குரிய ரூம் வசதிகளோடு உள்ளன. மூல் மட் மின்: +918772277499 0877-2277499. புஷ்பா மாண்டபம் ப: 0877-2277301. ஸ்ரீ வல்லபச்சரிய ஜீ மட் பி: 0877-2277317. உத்ததி மட் (திருப்பதி) பி 0877-2225187. ஸ்ரீ திருமல காஷி மட் Ph-0877-2277316. ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மட் Ph-0877-2277302. ஸ்ரீ வைகனச திவ்யா சித்தன்டா விவேர்டினினி சபை Ph: 0877-2277282. ஸ்ரீ காஞ்சி காமகோடி மட் மின் : 0877-2277370. ஸ்ரீ புஷ்பகிரி மட் Ph-0877-2277419. ஸ்ரீ உட்டாரடி மட் Ph-0877-2277397. உடுப்பி மட் Ph-0877-2277305. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீமத் ஆத்வான் ஆசிரமம் ப: 0877-2277826. ஸ்ரீ பரகலா ஸ்மிமி மட் பி: 0877-2270597,2277383. ஸ்ரீ திருப்பதி ஸ்ரீமன்னாரயன ராமானுஜா ஜீயர் மட் பி: 0877-2277301. ஸ்ரீ சிருங்கரி சாரதா மடம் Ph: 0877-2277269,2279435. ஸ்ரீ அஹோபீதா மட் ப. 0877-2279440. ஸ்ரீ திருமல காஷி மத் தொலைபேசி: 222 77316 உடுபி மட் பி: 0877 222 77305 ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீதந்தி ராமனுஜீயர் மட் பீ: 0877 222 77301) ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட்டம் மட் / சர்வா மங்கலா கல்யாண மண்டபம் ப., 0877 222 77370) ஸ்ரீ வல்லபச்சரிய மடம் தொலைபேசி: 222 77317 மந்திராலயா ராகவேந்திர சுவாமி மட் / பிருன்தாவனம் ப: 0877 222 77302 ஆர்யா வைசியா சமாஜம் எஸ்.வி.ஆர். ஏ.வி.டி.எஸ்.எஸ்.டி: 0877 222 77436 ஸ்ரீரங்கம் ஸ்ரீமதி ஆதித்யான் ஆஷ்ரம் ப. 0877 222 77826 ஸ்ரீ வைகநாத ஆசிரமம்: 0877 222 77282 ஸ்ரீ அஹோபில மட் பட்: 0877-2279440 ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடம் / சாரதா கல்யாண மண்டபம் பி: 0877 222 77269 ஸ்ரீ வைசராஜர் மடம் மோதிலால் பன்சிலால் தர்மசாலா ஃபீ: 0877 222 77445 ஹோட்டல் நரிலமா சௌல்ரி பி: 0877 222 77784 ஸ்ரீ சீனிவாச சொல்ரி டி: 0877 222 77883 ஸ்ரீ ஹதிராம்ஜி மட் மின்: 0877 222 77240 கர்நாடகா விருந்தினர் மாளிகை பி : 0877 222 77238 தக்ஷிணா இந்தியா ஆர்யா வியா கபு முனிரட்ணம் அறநெறிகள் பி: 0877 222 77245 ஸ்ரீ சிருங்கேரி சங்கர நீலம் ப: 0877 222 79435 ஸ்ரீ ஸ்வாமி ஹதிராஜ் முட்டம் ப: 0877-2220015 வயதில் மூத்த குடிமக்களும் ஜருகண்டி சொல்லித் தள்ளிடும் திருப்பதிகோவில் பாதுகாவலர்கள் இனி யாரைத் தள்ளும் என்று முழிக்கும் காலம் வந்துவிட்டது. 65 வயது கடந்த மூத்த குடிமக்கள் நாள் ஒன்றுக்கு 700 பேர் இலவசமாக தரிசனம் செய்யலாம் என்பது எப்படி? நிபந்தனைகள் : 1) ஆதார் அட்டை அவசியம். 2) 65 வயது முடிந்திருக்க வேண்டும் 3) காலை எட்டு மணிக்கு குறிப்பிட்ட இடத்தில் அறிக்கை செய்ய வேண்டும். 4) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை தரிசனம் நேரம். 5) தினம் 700 பேருக்கும் அனுமதி உண்டு. 6.) உதவி செய்வதெற்கென உடனொருவர் செல்ல அனுமதி உண்டு அவளுக்கும் ஆதார் அவசியம். 7) காலை உணவு பால் இலவசம். 8.) அவர்களுக்கு 70 ரூபாய்க்கு 4 லட்டுகள் வழங்கப்படும். 9) ஒருமுறை சென்றவர் 3 மாத காலத்திற்கு பின்னரே மீண்டும் அனுமதிக்கப்படுவர். 10) இவை அனைத்தும் இலவச சேவையாகும். பயனுள்ள தகவலை பகிரலாமே. இந்த தகவல்கள்அனைத்தும் திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை ! 🙏 ௐ நமோ நாராயணா….! 🤲 திருப்பதி சென்று வந்தால் நிச்சயம் திருப்பம் கிடைக்குமா கிடைக்காதா? விஞ்ஞான பூர்வமான ஆதாரத்துடனான பதிவு! 🤲 யாரெல்லாம் திருப்பதி சென்றால் அதிக பலன்கள் பெற முடியும் எந்த ராசி காரர்களுக்கு நன்மை செய்யும் என்பதை இந்தப்பதிவில் தெளிவாக பார்க்கலாம் வாருங்கள்… 🤲 இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும். 🤲 சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது. 🤲 திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவமாகும் .. 🤲 ஸ்ரீராமானுஜர் யந்திரசக்ரங்கள் பதித்துள்ளதால் அவற்றின் சக்தி கடல் அளவு என்பர் . 🤲 கந்த புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும்போது பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும், செய்வினை தோஷம், வறுமை போக்கும் மற்றும் சந்ததி விருத்தி உண்டாகும். 🤲 பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமமாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுகிறது, இதனால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது. 🤲 வாஸ்துப்படி வட கிழக்கில் அருவி அமைந்து பள்ளமாக உள்ளது. தெற்கே உயரமான மலைகள் உள்ளன. 🤲 வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தால் அந்த இடம் மிகவும் பிரபலம் அடையும் மக்கள் கூட்டம் அலைமோதும்.. 🤲 செல்வம் மலை போல குவியும். 🤲 உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள்தான் சந்திரன் கதிர்கள் அதிகளவில் ஈர்த்து கொள்வதால்தான் அவர்கள் அறிவாற்றல், நுண்ணறிவு, பொருளாதார வளர்ச்யுடன் உள்ளார்கள். 🤲 அதுபோல இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும். 🤲 சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது. 🤲 மூலிகைகள் அதிகம் இருப்பதால் ஆரோக்கியம் உண்டாகிறது. மகான்கள் நிறைந்த பூமி என்பதால் அருளாசியும் நிறைந்து காணப்படுகிறது. 🤲 வாஸ்துப்படி மிக பலமாக இருப்பதால் இத்திருக்கோயில் மிக அதிக சக்தியுடன் உள்ளது. 🤲 இந்தியாவின் அதிக செல்வம் உள்ள கோயில் இதுதான். 🤲 கலி காலத்திலும் பெருமாள் பக்தர்களுக்கு உதவி செய்வதை பலர் பக்தியுடன் சொல்கின்றனர். 🤲 குல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள். 🤲 நடந்து நாம் மலை ஏறினால் அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோக்யத்திற்கு உதவுகிறது. 🤲 நிமிர்ந்து மலை ஏறுவதால் நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு சுழலும். 🤲 சந்திர தசை மற்றும் சந்திர புக்தியால் நடப்பவர்கள், 🤲 தோல் நோய் உள்ளவர்கள், மன அழுத்தம் மற்றும் மன நிலை பாதிக்கபட்டவர்களுக்கு இத்திருக்கோயில் சிறந்த பரிகாரத் தலமாகும். 🤲 திங்கள் கிழமை அங்கு சென்று தங்குவது மிகவும் சிறப்பு. 🤲 திருப்பதி மலை மீது எவ்வளவு நேரம் இருக்கிறார்களோ அவ்வளவு நன்மையை தரும். 🤲 அட போங்கய்யா திருப்பதி போனாலே அனைவரையும் போட்டு பூட்டி வைப்பார்கள் நான் வரவே மாட்டேன் என சொல்லும் அன்பர்கள் தான் அதிகம் காரணம் என்ன தெரியுமா உங்களுக்கு… 🤲 அதே போல அங்கு சென்றவுடன் ஜெயிலில் போடுவது போல அனைவரையும் ஒரு அறையில் போட்டு பூட்டி வைப்பதின் நோக்கம் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் பதினோரு மணி நேரம் மலை மேல் இருக்க வேண்டும் என்பது ஐதீகம். 🤲 அதை யாரிடமும் சொல்லி புரிய வைக்க முடியாது ஆகையால் தான் அனைவரையும் போட்டு ஒரு அறையில் பூட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். 🤲 அந்த அறையில் மவுனமாக இருந்து உங்கள் வேண்டுதலை செய்யலாம் ஆனால் அங்கு யாரும் அதை செய்வதே கிடையாது . 🤲 மாறாக அங்கு கூச்சலும் குழப்பமாக தான் இருக்கும். இனிமேல் நீங்கள் திருப்பதி சென்று வந்தால் அங்கு நீங்களாவது அமைதியாக இருங்கள். 🤲 அதிகம் திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாளை பிடித்து கொள்ளும் லக்னக்காரர்கள் தெரியுமா.? 🤲 மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், மீனம் லக்னம் உடையவர்கள் அனைவரும் அதிகமாக பிடித்து கொள்ள வேண்டும். 🤲 வருடம் ஒரு முறை மட்டும் செல்லும் லக்னம் காரர்கள் சிம்மம், தனுசு, கும்பம். 🤲 ஓம் நமோ வேங்கடேசாயா நமஹ சகல ஐஸ்வர்யங்களும் கிட்ட பலன் தரும் ஏழுமலையான் ஸ்லோகம் “ ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம் ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்” ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித, வக்ஷஸம் ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே … !!! vinodhan,

சிவபெருமானை நேரில் கண்ட ஆங்கிலேயர்

யோக யாத்ரா என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதி அற்புத நிகழ்வு இது. 1879- ஆம் ஆண்டு பிரிட்டனின் ஆட்சியின் கீழ் இந்தியா இருந்தது.ஆங்கிலேய அதிகாரியான லெப்டினென்ட் கர்னல் மார்ட்டின் அகர் மால்வா ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு எதிரான போரில் படையை தலைமை ஏற்று வழி நடத்திக் கொண்டிருந்தார்.கர்னல் மால்வா தன் மனைவிக்கு தன் நலன் குறித்து கடிதங்கள் அனுப்புவது வழக்கம். ஆனால் இந்த போர் நீண்டு கொண்டு சென்றது. மேலும் கர்னிலிடமிருந்து எந்தக் கடிதமும் அவரது மனைவிக்கு வரவில்லை.கர்னலின் மனைவி கடிதம் வராதது கண்டு துயருற்றார்,ஒரு நாள் குதிரை சவாரி சென்றவரின் கண்களில் பைஜிநாத் கோவில் தென்பட்டது. அந்த கோவிலின் உள்ளிருந்து ஒலித்து கொண்டிருந்த சங்கொலியும் மந்திர ஒலிகளும் அவரை ஈர்க்க,உள்ளே சென்று அங்கே பிரார்த்தனை புரிந்து கொண்டிருந்த வேதியர்களைக் கண்டார். துயருற்ற முகத்தைக் கண்ட வேதியர்கள் காரணத்தைக் கேட்ட பிறகு வேதியர்கள் சிவபெருமான் பக்தர்களின் பிரார்த்தனைகளுக்கு செவிமடுத்து அருள் புரிபவர் எனவும் தன்னை அண்டியவர்களின் துயரங்களில் இருந்து மீட்பவர் என்றும் கூறி கர்னலின் மனைவிக்கு ஓம் நமசிவாய எனும் லாகுருத்ரி அனுஷ்டான மந்திரத்தைத் தொடர்ந்து 11 நாட்கள் உச்சரித்து பிரார்த்தனை புரியுமாறு கூறுகின்றனர்.கர்னலின் மனைவியும் தனது கணவன் எந்த துயருமின்றி வீடு திரும்பினால் பைஜிநாத் ஆலயத்தைப் புதுப்பித்துத் தருவதாக வேண்டிக் கொண்டு வீடு திரும்புகிறார். லகுருத்ரி அனுஷ்டான மந்திரத்தை உச்சரிக்கத் தொடங்கி சரியாகப் பதினோராம் நாள் செய்தி கொண்டு வருபவர்,கர்னலிடமிருந்து செய்தியைக் கொண்டு வருகிறார். அதில் எழுதி இருந்தது”போர்க்களத்தில் இருந்து தொடர்ச்சியாக உனக்கு நான் கடிதங்களை அனுப்பிக் கொண்டிருந்தேன், ஆனால் சட்டென ஒரு நாள் அனைத்துப் புறங்களில் இருந்தும் எதிரிகள் எங்களை சூழ்ந்து விட்டனர்,நாங்கள் தப்பிச்செல்ல இயலாதவாறு சிக்கிக் கொண்டோம்.நம்பிக்கையற்ற சூழலில் அங்கே சற்று நேரத்தில் ஒரு நீண்ட கேசமுடைய இந்திய துறவியைக் கண்டேன்..அவரது கரங்களில் மூன்று முனைகளையுடைய கூறிய ஆயுதம் கொண்டிருந்தார் மேலும், *அவரது தோற்றம் மெய்சிலிர்க்கும் வண்ணமும்,அவர் தனது கையில் இருந்த அந்த ஆயுதத்தைக் கையாண்ட விதமும் மகத்தான விதமாக இருந்தது.இந்த சிறந்த மனிதனைக் கண்ட எதிரிகள் பின்வாங்கி ஓடிவிட்டனர், அந்தத் துறவியின் கருணையினால் தோல்வியைத் தழுவ வேண்டிய தருணம் நேரெதிராக மாறி வெற்றியைப் பெற்றோம்* இவைகள் எல்லாம் சாத்தியமானதன் காரணம் அவர் அணிந்திருந்த புலித்தோலும் கைகொண்டிருந்த மூன்று முனை உடைய கூறிய ஆயுதமே,அந்த உன்னதத் துறவி என்னிடம் கவலை கொள்ள வேண்டாம் என்றும் என் மனைவி பிரார்த்தனை மூலம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க,காக்க வந்ததாகவும் கூறினார் இந்த கடிதத்தை வாசிக்கும் கணமே கர்னலின் மனைவியின் கண்கள் ஆனந்தக் கண்ணீரைச் சொரிந்தன, அவரது இதயம் ஆனந்தத்தில் மூழ்கி இருந்தது,அவர் சிவபெருமானின் பாதங்களில் சரணடைந்தார்.சில வாரங்களுக்குப் பின் கர்னல் மார்ட்டின்சில வாரங்களுக்கு பின் கர்னல் மார்ட்டின் திரும்பிய பின் அவரது நடந்தவற்றை விவரித்தார், கர்னல் மற்றும் அவர் மனைவியும் அது முதல் சிவ பக்தர்களாக விளங்கினர்.1883 ஆம் ஆண்டு கர்னல் மற்றும் அவர் மனைவி 16000 ரூபாய் ஆலயத்தை புதுப்பிக்க நன்கொடை கொடுத்தனர்,திரும்பிய பின் அவர் நடந்தவற்றை விவரித்தார்,”சிவபெருமானை நேரில் கண்ட ஆங்கிலேயர்”யோக யாத்ரா என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதி அற்புத நிகழ்வு இது.கர்னல் மற்றும் அவர் மனைவியும் அது முதல் சிவ பக்தர்களாக விளங்கினர்,1883 .ஆம் ஆண்டு கர்னல் மற்றும் அவர் மனைவி பல ஆயிரம் ரூபாயை ஆலயத்தை புதுப்பிக்க நன்கொடையாக கொடுத்தனர், இந்த செய்திகள் இன்றும் பைஜிநாத்தின் கோவில் கல்வெட்டுக்களில் உள்ளது, பிரிட்டிஷாரால் கட்டப்பட்ட ஒரே ஆலயமாகும்.பைஜிநாத் மஹாதேவ் கோயில் கட்டிய ஆங்கிலேயரின் சிவ பக்தி கதையை இங்கு பார்ப்போம். சிவன் எல்லோருக்காமான இறைவன் என்பதை இந்த ஆங்கிய தம்பதியர் மூலம் நாம் உணர முடியும். ஆங்கிலேய படை தளபதியை காக்க நேரில் தோன்றிய சிவ பெருமானை அவரே வர்ணித்து அனுப்பிய கடிதம், தற்போது பைஜிநாத் மஹாதேவ் கோயிலில் கல்வெட்டாக உள்ளது. அவர் ஈசனை வர்ணித்தைதையும், கோயில் உருவான விதமும் இங்கு பார்போம்இறைவன் எல்லைகளைக் கடந்தவன் என்பதை உணர்த்தும் வகையில், சரணடைந்தவருக்கு தன் காத்தருளுவான் என்பதை இந்த உண்மை சம்பவம் விவரிப்பதாக உள்ளது. யோக யாத்ரா என்ற புத்தகத்தில் இந்த அற்புத நிகழ்வு குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த குறிப்பு இன்றும் பைஜிநாத் ஆலயத்தில் கல்வெட்டுகளாக உள்ளன. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட ஒரே கோயில் இதுவாகும் vinodhan,

குழந்தைப்பேறு வேண்டி!

பெண்களாகிய நீங்கள் முதலில் உங்களது மாதவிடாய் சூழ்நிலையை சீர்செய்து கொள்ள வேண்டும் மாதவிடாய் சம்பந்தப்பட்ட ஏற்கனவே நான் எழுதியுள்ளேன் அது அதனுடைய லின்க் https://vinodhan.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4/ இணைக்கப்படுகிறது. முதலில் மாதவிடாய் சுழற்சியை நன்கு புரிந்துகொள்ளுங்கள்.அந்த காலகட்டத்தில் உங்களது மனம் அலைபாயும் மனதை நிலை நிறுத்த முடியாது முயற்சி செய்யுங்கள் ஆறு மாத கால அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள்.இந்த ஆறு மாத காலத்தில் உங்களது மாதவிடாய் சுழற்சி சீராகி விடும் இந்த 6 மாத காலத்தில் மாதவிடாய் நேரத்தில் ஐந்து நாட்கள் குறிப்பாக மூன்று நாட்களில் நீங்கள் பூரண ஓய்வு எடுக்க வேண்டும்.இந்த ஓய்வு நாள் உங்களது உடலும் மனமும் முன்னேறி விடும். உங்களது மாதவிடாய் காலத்தில் எப்பொழுதுமே இரவில் நீராகாரம் எந்த வகையான கஞ்சியாகவும் இருக்கலாம். உங்களது மனமும் உடலும் முன்னேறி விடும் இந்த முன்னேற்றம் உங்களுக்கு உத்வேகத்தைக் கொடுக்கும். **கருப்பை கட்டி சினைப்பை கட்டியின் எதுவாக இருந்தாலும் நமக்கு ஒன்றுதான்.பின்வரும் குறிப்புகளை நீங்கள் எடுத்துக்கொள்ளும் போது உங்களது உடலுக்குத் தேவையான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக சுரக்கும். அப்பொழுது கருப்பை கட்டி சினைப்பைக் கட்டி சீராகிவிடும். * என்னவென்று பார்ப்போமா.எள்ளுப் பொடி,மாதுளை பழம் ஜூஸ் மாதவிடாய் காலம் ஏழு நாட்கள் தொடர்ச்சியாக தினமும் உண்ண வேண்டும் அருந்த வேண்டும் இதை தொடர்ச்சியாக செய்யும் போது, உங்களது உடலுக்குத் தேவையான ஈஸ்ட்ரஜன் ஹார்மோன் போதிய அளவுக்கு சுரக்க ஆரம்பித்துவிடும். ஆண் பெண் இருவரும் தினமும் ஒரு செவ்வாழை உண்ண வேண்டும் செவ்வாழையின் சிறப்பு ஆண்களின் விந்தை உறுதியாகவும் பெண்களின் கருப்பை சினைப்பை கட்டிகளை கரைக்கும் பேருதவி செய்கிறது. **”இந்த கிழங்கு விசேஷமானது பெயரிலேயே சதா உள்ளது. இந்த கிழங்கு கிடைக்கும் இடம் மலை சார்ந்த இடங்களில் மட்டும் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே கிடைக்கும்.சதாவரி கிழங்கு இந்த கிழங்கை தோல் சீவி துண்டுகளாக நறுக்கி நாட்டுச்சக்கரை கலந்து அரைத்து ஜூஸாக குடிக்கவேண்டும். பெண்களுக்கு இருக்கக்கூடிய கருப்பை சினைப்பை கட்டிகள் கரைக்கும். அவர்களுக்கு தேவையான குளிர்ச்சியை அளித்து பெரும் உதவி செய்கிறது. பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது. ஆண் குளிர்ச்சியாகவும் பெண் சூடாகவும் இருத்தல் அவசியம். உங்களது பிரைவேட் பார்ட், ஆண் ரூமுக்கு செல்லும்போது நன்கு வாஷ் செய்து கொள்ளவும்,பெண் ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி வாஷ் செய்து கொள்ளவும். தாம்பத்தியத்தை செயலாக இல்லாமல், ஆரோக்கியம் சார்ந்த விஷயமாகவும் உடல் சார்ந்த விஷயமாகவும் மனம் சார்ந்த விஷயமாகவும் வெளிப்படுத்தும்போது நம் உடல் தன்னைத்தானே குணப்படுத்திக் பேராற்றல் உடையதாக மாறுகிறது. *                             செய்யக்கூடாதவை……………………………………………..நீங்கள் முயற்சி செய்யும் மைதா உணவு,எண்ணெயில் பொரித்த உணவு,ஜங்கிள் ஃபுட்ஸ் தவிர்த்தல் மிக சிறந்தத, பிறகு ஃப்ரிட்ஜில் வைத்த எந்த உணவையும் தண்ணீரையும் அருந்தக்கூடாது. * இதன்பிறகு நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் நம் முன்னோர்கள் பயன்படுத்திய முறை தான் மாவிளக்கு வாரத்தில் ஒருநாள் கோவில் சென்று செய்ய வேண்டும் என்று அவசியமில்லை வீட்டினிலே வாரத்தில் ஒரு நாள் உங்கள் தொப்பில் மா விளக்கு ஏற்றுங்கள் நமது உடலின் மத்திய பகுதியில் முடிச்சு , தலையின் உச்சிப்பகுதியில் மா விளக்கு ஏற்ற வேண்டும்.இந்த செயலால் இரு வர்மப் புள்ளிகளும் அந்த தீபத்தின் வெப்பத்தால் இரு புள்ளிகளும் தூண்டி நமது ஆற்றலைப் பெருக்கி கர்ப்பப்பையை சீராக்கி மனதையும் சீராக்கி பெரிதும் இந்த மாவிளக்கு நமக்கு நிறைவேற்றித் தரும். Fertility time தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் உங்களது மாதவிடாய் காலத்தில் முடியும் தருவாயில் இருந்து 5வது நாள் முதல் 12 நாட்களுக்குள் fertility timeஇந்த நாட்களை குறித்து வைத்துக்கொள்ளுங்கள் அனைவருக்கும் பொருந்தக்கூடிய நாட்களே. நம்பிக்கையுடன் செய்யுங்கள் வெற்றி உங்களுக்கே.இந்த வாய்ப்பை அளித்த வினோதன் மாஸ்டர் அவர்களுக்கு நன்றி Hipnotist Karthik,  

Do Not Block Your Thoughts!

        Let it come and go! Zen Gurumars insist on ‘ – again and again. There is a philosophy in this. Leaving life on its way; the philosophy of being normal. Nevertheless, ‘ don’t allow things we don’t need into our life! ‘ also says Zen. Saint Wu Li once went up and said, ′′ Did you cut a tree and water a plant before you gained wisdom? Ok… What wisdom have you gained now? Cut a tree; water a plant! ‘ Says. That means whatever it gets, ‘ Be yourself! ‘ This is what it means. He’s a worker; breaking stones is a business. More than twenty-five years of the same job; unreal salary; housewife, children, old parents, pickle, pluck, poverty..! he was exhausted in one stage. He hate himself and the life he lives. Will the emptiness of life pass like this shook him. One day he was going to work as usual. The weapons that break the stone in the bag that was carrying on the shoulder were heavy… Just like his heart! Street vendors who were selling fish and eggs… The sun that rises in the sky and drowning warmly in the sun… Monkeys that were branching… The boys that played across the road… Nothing was freezing for him. Kept on walking. That’s usually his path. At one point, his sight turned without knowing him.     That’s a businessman’s house. He was looking at the house that day. The businessman, who goes to many foreign countries and does business. Wealth has kept its prosperity from the exposure of the house to the roof of the house. A grand palace that is amazing to see. Crews rushing to the Eval. Great people and rich people in the town who are waiting to see him. Still a crowd waited to see him today. He took a sigh. ‘ Chee! I wish I was a businessman like him! ‘ He thought it was.That’s it. That magic happened. He has become a great businessman. Wealth, prosperity, workers are not short of anything. But he doesn’t have something important now. That, is a relief. He should have earned the jealousy and enmity of people less comfortable than him. One day he was looking at the street from the palace. Awe on the road. Sneak peek of what this guy is. A procession for the bells and the whole world to shout. Staff in front and back, security guards, a high government officer was on the way sitting in a pallak in the middle. People on the road with respect to the rally and stepped out of the way. Everyone bowed down to that officer… Poor, rich, businessman, everyone. He sighed watching this. ‘ How good it would be if I was a high officer like him! ‘  He thought it was That’s it. That miracle just happened. He has become a superior officer. He got respect everywhere he goes. The man force to the security. But he’s still not satisfied. One day he was returning from another town in Pallak. It was summer season. The fire was burnt. The wind is different for the addiction. He couldn’t sit inside, even though the toothpaste was carrying his tooth fast. He stretched his head out and saw the heat. The sun in the sky was laughing at him. ‘ How good it would be if I were the sun! ‘ He thought it was.That’s it. Still the miracle happened. He has turned into a sun. He roamed freely in the sky. It was a pleasure to see the world from high till the east rise and disappear west. But..? Those who were caught in his heat scolded him as they saw him. Farmers have cursed. Workers who worked during the day were cut off. Sometimes black clouds gathered between him and the earth. They stopped his heat from sending him to earth. ‘       Oh… Do these black clouds have this much power? I wish I could become a black cloud too! ‘ He thought it was. Now he was transformed into a black cloud. He will shower soft rain if he wills. A little irritated he will shower the rain and turn villages and fields into flood forests. His favorite hobby was that people were scared of him. However, he has a feeling inside. Feeling like someone is getting caught and pushed. He also knows who it is. That is, the wind! ‘ Is this wind strong enough to hold me down? I wish I could become a wind! ‘ Just thought of it. He turned into the wind.  Is he the wind? He will blow as a breeze; if thought, he will become a hurricane. He just liked being a hurricane. Throwing down roofs; making trees, sheep and cows… and why humans tremble has become his daily hobby. He thought himself to be a great powerful man.        He was wandering in the wind and found it somewhere. Mountain, just a high mountain. Turned into a big hurricane and headed towards it. He couldn’t do anything about it. Even after fighting with all the strength… mhmm… couldn’t move it even a bit. ‘ Is this mountain stronger than me? How I wish I could become such a mountain! ‘ He thought it was. Turned into a mountain. He liked the stand up. It was happy to think that there is nothing stronger than self in the world. Then some umbrella under his feet. The sound of ‘dock… dock… talk…’ Somebody is piercing his toe; piercing… In a short while he can cut off one of his finger. He bent down to see who he is with fear. A stone breaking worker’s hand put a chisel at the bottom of the mountain and cut it with a hammer.vinodhan,

Shopping Cart