Blog post

WHAT IS TRAUMATIC PSYCHIC ENERGY AND THOUGHT ENTITIES?

Post Views: 350               In esoteric sciences, the mental and emotional energies produced by thinking and feeling have consciousness. What you experience, think and feel produce psychic beings which are called thought forms or thought entities. In other words, your thoughts and feelings are real and can affect or influence you and other people. When a person has had a traumatic experience, the traumatic psychic energies produced are lodged in several chakras or energy centers which may in the long run manifest as stress or phobia. These traumatic energies have certain degrees of consciousness and are called traumatic thought entities. A phobia is nothing more than traumatic fear energy or “fear” thought entities that are lodged in a certain chakra or chakras of the patient. Once the phobia thought entities or the fear energy are partly or completely removed from the chakras by the pranic healer, then the patient will feel definite improvement. A traumatic experience may produce repeated thoughts of fear, poor self-esteem, insecurity, futility, and/or indifference. In the long run, these. negative thinking and feeling will produce negative thought entities with strong inhibiting effect, manifesting as severe depression. CHAKRA, PROTECTIVE WEB, NEGATIVE ELEMENTALS Located at the back of the chakra near the surface of the body is an “energy web.” It is slightly smaller than the chakra by about one inch in. diameter. This energy web is called etheric web or protective web because it acts as a filter to protect the person from negative external influences. If the psychological ailment is not very severe, then some of the protective webs are just cracked. But in more serious cases, some the protective webs are punctured and have big holes. This makes the patient susceptible to “psychic disturbances” or “intrusions” by negative psychic entities or elementals. In Christian terms, these are called bad spirits. The author prefers not to use the word demon because it is rather harsh and does not give an accurate picture of, or impression on, the nature of the problem. In the Holy Bible, there are many cases of patients with severe psychological ailments that were healed by exorcism or removing the negative elementals. These negative elementals are about one-third of an inch to several inches in size, depending upon their nature and their degree of influence over the person. They are able to influence over a person through cracks or holes on the protective web. Although these negative elementals cause a lot of problems and disturbances in the psychologically imbalanced patient, they are actually quite weak and can easily be destroyed by experienced pranic healers. These negative elementals are nothing morethan etheric cockroaches or parasites. They can easily be destroyed by an act of the will of the healer, the use of violet pranic energy, or by throwing them into a water and salt solution. The difference between a clairvoyant and a “crazy” person is that in a clairvoyant, the etheric or protective web is quite thin and can easily be opened when the clairvoyant faculty is being used, and closed when it is not being used. In other words, the etheric web is just like a shutter that can be opened or closed at will by the clairvoyant. He has substantial mastery over his emotions, especially fear, and can see angels, fairies, and negative elementals without becoming psychologically imbalanced. A crazy person, on the other hand, has punctured protective webs and cannot close the holes. He is constantly influenced, bothered or tormented by negative thought entities, negative elementals, and negative disincarnate persons. He sees ugly things or hears ugly voices. Protective Web with Holes, Cracks, Negative Thought Entities and Negative Elementals Although the thought entities lodged within the chakra and the protective web look like very small gray or dark colored clouds, they contain a lot of negative psychic energies. These negative psychic energies may be in the form of phobias, obsession, traumas, depression, vio lence, fear, compulsions and the like.When a psychic or a clairvoyant focuses his attention on the negative entities, he will intensely experience, emotionally and mentally, the contents of these nega. tive thought forms. Negative thought forms or entities are nothing else but repressed traumas or accumulated negative thoughts and feelings. Negative elementals are negative psychic entities which influence a person to behave abnormally. These cracks or holes are caused by negative thinking, feeling, and habits. Hallucinogenic chemicals burn up part of the protective web. When a person with no spiritual training uses hallucinogenic substance or chemical, he is likely to have quite an unpleasant experience. When a person is intensely angry, the protective webs of the solar plexus chakra, the ajna chakra and sometimes also the crown chakra are ruptured. Intense anger attracts negative elementals of a very violent nature. They attach themselves to the angry person through the ruptured protective webs. The angry person then becomes temporarily “possessed” or “insane” and does terrible things that he normally will not do. How long these negative elementals will remain attached to a person depends on his character. If he is the type that gets intensely angry quite often, then the “insanity” is relatively permanent. These negative elemen tals feed on anger or need angry energy to survive and, therefore, will re gully incite or stimulate the person to anger Vinodhan, 7010054619

WHAT IS TRAUMATIC PSYCHIC ENERGY AND THOUGHT ENTITIES? Read More »

மனித மூளையில் சுரக்கும் போதை மருந்து..

Post Views: 434 மனித மூளை மிக அற்புதமானது. அதன் பணிகள், நினைவுத்திறன்கள், புத்திசாலித்தனம் ஆகியவை பிரமிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. மூளை தொடர்பாக ஆய்வு நடத்தி வரும் விஞ்ஞானிகளுக்கு ஒவ்வொரு நாளும் புதிய புதிய ஆச்சரியங்களை ஆய்வு முடிவுகள் தருகின்றன. சமீபத்தில் விஞ்ஞானிகளை ஆச்சரியப் படுத்திய கண்டு பிடிப்பு ‘மூளையில் போதை தரும் சத்துக்கள் சுரக்கின்றன’ என்பதுதான்.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மவுண்ட் சியானி மருத்துவப் பள்ளியில் இது குறித்து ஆய்வுகள் நடந்து வருகிறது. டாக்டர் லட்சுமி தேவி தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய்வில் மூளையில் போதை தரும் புரோட்டின் சுரப்பது கண்டு பிடிக்கப்பட்டது இது குறித்த தகவல்கள் வருமாறு: மனித உடலில் தோல் பகுதியில் வலியை மறக்கச் செய்யும் புரோட்டின்களை உற்பத்தி செய்யும் செல்கள் இருப்பது ஏற்கனவே கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த செல்கள் காரணமாகத்தான் அடிப்பட்ட உடன் வலியை சிறிது நேரத்துக்குள் மறக்க முடிகிறது. இது வலியின் அளவு குறைந்த பட்சம் இருக்கும் வரை செயல் படுகிறது. இதை அடிப்படையாக வைத்து மூளையின் செயல்பாடுகள் குறித்தும் வலியின் போது அதை மூளை எப்படி எதிர்கொள்கிறது என்பது குறித்தும் ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்த ஆய்வின் போது எலியின் மூளையை பரிசோதனைக்கு எடுத்துக்கொண்டனர். அப்போது மூளையில் வலியை மறக்கச் செய்யும் புரோட்டீன் சுரப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இது ‘மரிஜுனா’ போன்ற போதை பொருள் போன்ற ரசாயனக் கலவை கொண்டதாக இருப்பதும் ஆய்வில் தெரியவந்தது. இந்த புரோட்டீனில் உள்ள ராசாயன கலவைகளை பிரித்தறியும் ஆய்வுகள் நடந்து வருகிறது. இதன் அடிப்படையில் வலி நிவாரண மருந்துகளை தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த மருந்துகள் மூலம் அறுவை சிகிச்சை மற்றும் விபத்துக்களின் போது நோயாளிகளுக்கு வலியை மறக்கச் செய்ய முடியும் என்பது மருத்துவர்களின் கருத்தாகும். தற்போது ஆய்வு நிலையில் உள்ள இந்த கண்டு பிடிப்பு விரைவில் மனித இனத்துக்கு பயனுள்ள வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. vinodhan,

மனித மூளையில் சுரக்கும் போதை மருந்து.. Read More »

கருவூரார் சித்த அருளிய மந்திரம்

Post Views: 2,761 கருவூராரின் அற்புத மந்திரங்கள் இந்த மந்திரங்களை நாம் வாழ்க்கையில் பயன்படுத்தும் பொழுது அதி அற்புத விசேஷங்கள் நடக்கும் என்று உறுதியாக சொல்கிறார் கருவூரார் இவர் ஒரு அற்புதமான சித்தர் இவரைப் போன்ற ஒரு அற்புதமான சித்தரை காண முடியாது காரணம் எல்லாவற்றையும் வெளிப்படையாக சொன்னவர் இந்த அற்புதமான மந்திரங்களை பலமுறை உருவேற்றி கொள்ளுங்கள் நிச்சயமாக எல்லா விசேஷங்களும் சித்திக்கும்கருவூரார் சித்த அருளிய மந்திரங்கள் சிவாலயங்களில் சிவலிங்கத்தை தங்கத்தால் உருவாக்கு வதும் பாசுரம் பாடி பக்தி நெறி வளர்ப்பதுமாக ஊரெங்கும் அலைந்த சித்தர் கருவூரார் ஆவார். தேவதச்சன் விஸ்வகர்மா வின் மகனான மயன் குலத்தில் பிறந்தவர் கருவூரார். எண்ணற்ற மந்திரங்களை இவ்வுலக நன்மைக்காக உரைத்தவர் கருவூரார்.கருவூரார் உபதேசித்த மந்திரங்களில் குறிப்பிடத்தக்கது தற்புருஷ மந்திரங்களாகும். தற்புருஷம் என்பது சிவனின் ஐந்து முகங்களில் ஒன்றாகும். ‘ஓங் அங்கிஷ சிவாய நம’ என ஓதினால் பூமியில் சஞ்சாரம்செய்யலாம். ‘லங்கிரியும் நமசிவாய’ என்று உச்சரித்தால் தானியங்கள் பெருகி வரும். ‘ஊங்கிறியும் நமசிவாய நமா’ என்ற மந்திரத்தை செபித்தால் மோட்சம் கிடைக்கும். ‘ஓம் நமசிவாய’ என்று உச்சரித்தால் காலனை வெல்லலாம். ‘சவ்வும் நமசிவாய நமா’ எனும் மந்திரத்தை உச்சரித்தால் ராஜபோகம் சித்திக்கும். ஓங் ஊங் சிவாயநம உங் நமா’ என்ற மந்திரத்தை செபித்தால் குட்டம் பதினெட்டும் தீரும். ‘வநமசிவாய’ என்று உச்சரித்தால் தேக சித்தியாகும். ‘நமசிவாய ஊம் நமசிவாய’ என்று செபித்தால் பதினெட்டுவகைச் சுரமும் தீரும். ‘நமசிவாயம் லங்க நமசிவாய’ எனும் மந்திரம் செபிக்க மழை பொழியும். ‘நமசிவயங்செலகை நமசிவாய’ என மந்திரம் உச்சரித்தால் அறுபத்து நான்கு பாஷாணங்களினால் ஏற்படும் விஷம் நீங்கும் இந்த எட்டு வித மந்திரங்களை பயன்படுத்துங்கள் ரகசியமாக வைத்து பயன்படுத்தினால் அற்புத விளைவை சித்திக்க முடியும் vinodhan 7010054619

கருவூரார் சித்த அருளிய மந்திரம் Read More »

தங்கம் செய்யும் இரசமணி வித்தை

Post Views: 550  செம்பைத் தங்கமாக்க கொங்கண சித்தர் நான்கு இரசமணிகளை கண்டறிந்தார். அவை சித்த இரசமணி, நவநீத இரசமணி, தொடுப்பு இரச மணி, சிராவண இரசமணி ஆகும்.இந்த நான்கு இரசமணிகளில் ஏதாவது ஒன்றை செந்தூர மாக்கி செம்பில் தடவி புடமிட்டு எடுக்கப் பதினெட்டு மாற்றுப் பொன்னாகும். இரசமணியுடன் லிங்கம், கந்தகம் ஒவ்வொரு பங்கும் தாளகம் ஆறு பங்கும் கூட்டி குமரி சாற்றில் ஒரு சாமம் அரைத்து வில்லை யாக தட்டி காயவைத்து காய்ந்த வில்லையை அகலிலிட்டு மூடி ஏழு சீலை மண்செய்து ஏழு எருக்கொண்டு புடமிட்டால் செந்தூரம் ஆகும். சாதிலிங்கம் இரண்டு பங்கும் வெடியுப்பு, நவச்சாரம் ஒரு பங்கும் தூள் செய்து துளசிச் சாறெடுத்து சேர்த்து இரும்புக் கரண்டியில் விட்டு அனலில் வைக்க உருகி வரும். அதனைத் தென்னை ஓலையில் விட லிங்கக் கட்டியாகும். பின்பு ஒரு மண் சட்டியில் வெள்ளியை உருக்கி அதில் லிங்கக் கட்டை சுருக்குக் கொடுக்க பத்தரை மாற்றுத் தங்கமாகும். சிவப்பு சித்திர மூலம் இலைகளைப் பிடுங்கி வந்து சாறெடுத்து செம்புத்தகட்டில் விட்டு கவசம் செய்து சீலை மண் செய்து புடமிட்டு எடுக்க செம்பு தங்கமாகும். தரா எனும் சஞ்சீவி மூலிகையின் சமூலத்தின் சாறெடுத்து செம்பில் சேர்த்து புடமிட செம்பு தங்கமாகும். கற்பூர வில்வ மர இலைகளைப் பிடுங்கி வந்து இடித்துப் பிழிந்து சாறெடுத்து இரும்புக் கம்பியை பழுக்கக் காய்ச்சி இச் சாற்றில் விட ஏழரை மாற்றுத் தங்கமாகும்.விளாரி இலைச் சாறெடுத்து மட்டமான உலோகத்துடன் அடுப்பிலிட்டுக் காய்ச்சி உருக்கின குழம்பை வார்ப்பில் ஊற்ற தங்கமாகும்.பாஷாணக் கட்டு மூலமும் செம்பை பொன்னாக்கலாம். பிறவிப் பாஷாணத்தைச் சேர்ந்த வெள்ளைப் பாஷாணம் கொஞ்சம் எடுத்து அதைச் சில்லில் வைத்து எடுத்துக் கொண்டு தொட்டாற் கருங்கி இலைச்சாறு நத்தைசூரி இலைச்சாறு எடுத்து வெள்ளைப் பாஷாணத்துடன் சேர்த்து வெள்ளைப் பாஷாணம் பாஷாணக் கட்டு ஆகும் வரை சுருக்குக் கொடுத்து பாஷாணக் கட்டை எடுத்துக் கொண்டு செம்புத் தகட்டில் சுருக்குக் கொடுக்க தகடு தங்கமாகும். Vinodhan, 7010054619

தங்கம் செய்யும் இரசமணி வித்தை Read More »

திருமூலரின் பரியங்க யோகம் முறை

Post Views: 1,427 திருமூலரின் ஒரு அற்புதமான படைப்பு இதுதான் பரியங்க யோகத்தின் ஞானநிலை இந்த ஞான நிலையை நம்மால் அடைய முடியுமா இந்த கேள்விக்கு இப்போ இருக்கிற காலத்தில் பதில் இல்லை ஆனால் திருமூலரின் வாக்கு முடியும் என்ற வார்த்தை மட்டுமே காரணம் பலவிதங்களில் நாம் அதை உணரலாம் கூட ஓஷோ கூட திருமூலரின் ஒரு பிரதி தான் காரணம் இதுவரை உலகத்தில் சொல்லாத ஒரு விஷயத்தை வெளிப்படையாக உண்மையைக் கூறினார் அதுதான்’காமத்திலிருந்து கடவுளுக்கு என்ற கான்செப்டை 20-நூற்றாண்டில் அதிரடியாக ஒரு குண்டைபோட்டு உலகை அதிரச் செய்தவர்தான் ரஜினிஷ் எனும் ஓஷோ. காமம் வாயிலாகத்தான் மேலான தெய்வீக அனுபவத்தைப் பெறமுடியும் என்றார் ஓஷோ.ஆனால் கி.பி. 3-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்தர் திருமூலர் 1,600 ஆண்டுகளுக்கு முன்பே “காமத்திலிருந்து கடவுளுக்கு’ என்ற கான்செப்டை சொல்லிவிட்டார்.போகமும், யோகமும் சித்தர்களுக்கு ஒன்றென்றார் திருமூலர். காமம் கடந்தால் ஞானம் பெறலாம்! புலன்களைக் கடந்தால் மெய்யுணர்வு பெறலாம்! யோகம் கடந்தால் யோகம் ஞானம்! சின்றின்பம் விட்டால் பேரின்பம்! சதையின்பம் விட்டால் சிவானந்தப் பேரின்பம் என்கிறார் திருமூலர்.”புணர்ச்சியுள் ஆயிழை மேல் அன்புபோல உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்க வல்லார்க்கே” – (திருமந்.283) திருமந்திரத்தில் “பரியங்க யோகம்” எனும் தாந்திரிக யோகத்தை முதன்முதலில் தமிழில் அறிமுகப்படுத்தியவர் திருமூலர் ஆவார். ஓஷோவும் சித்தர் திருமூலரும் காலத்தால் வேறுபட்டவர்கள். இவர்கள் இருவருக்கும் 1600 ஆண்டுகாலம் இடைவெளி உண்டு. ஆனாலும் தமிழில் திருமந்திரம் தந்த திருமூலர் பரியங்க யோகம் என்ற பெயரால் அன்றே தாந்திரிக யோகத்தை உலகிற்கு அளித்தார். அதன் ஆங்கில மொழியாக்கம் கண்டிப்பாக வெளிவந்திருக்கக் கூடும். அதனை ஓஷோ கற்று அறிந்ததால் அவரது ஆன்மீக பேச்சில் திருமூலரின் பரியங்க யோகம் தாந்திரிக யோகமாக பரிணாமம் அடைந்திருக்கக்கூடும். திருமந்திரத்தில் வாழ்வு முறை, கடவுள், அன்பு, மரணம், தியானம், யோகம், போகம் அத்தனையும்திருமூலரால் கற்பிக்கப்பட்டிருக்கின்றன. புது மொந்தையில் பழைய கல் போல் திருமூலரின் அத்தனை கருத்துக்களையும் ஓஷோ தனது சொற்பொழிவுகளில் புதிய பார்வையாக எளிமையான விளக்கங் களாகச் சொல்லியிருக்கிறார். மரணத்தைப்பற்றி ஓஷோவின் பார்வையிலிருந்து அப்படியே ஒத்துப்போகிறார் திருமூலர். மரணமில்லாப் பெருவாழ்வை திருமந்திரத்தில் காணமுடிகிறது.திருமூலர் வடமொழியில் ஒன்பது ஆகமங்களையே தமிழில் கூறவே என்னை இறைவன் படைத்தான். ஒன்பது தந்திரங்களாகத் திருமந்திரத்தைப் பாடவைத்தான் என உணர்ந்தார் திருமூலர். ஆக, இறைவன் என்கிற இந்த பிரபஞ்சம் வடமொழி அறிஞர்கள் மூலம் வேத ஆகமங்களை 5000 ஆண்டுகளுக்குமுன் அருளினான். அதன்பின், அந்த இறைவன் என்கிற பிரபஞ்சம் காலத்திற்கேற்ப வியாசர் என்ற அறிஞனால் “பகவத்கீதை யை யோக நூலாக, வாழ்வின் சாத்திர நூலாக, தோத்திர நூலாக அருளினான். இது 2500 ஆண்டுகளுக்குமுன் நடந்தது. அதே இறைவன் என்கிற பிரபஞ்சம் பதஞ்சலி என்கிற அறிஞன் மூலம் “குண்டலினி யோகத்தை யோக சூத்திரமாக அருளினான். இது 2300 ஆண்டுகளுக்குமுன் நடந்தது. அதே இறைவன் என்கிற பிரபஞ்சம் 1600 ஆண்டுகளுக்குமுன் திருமூலர் மூலம் குண்டலினி யோகமாகவும். பரியங்க யோகமாகவும் மனித குலத்துக்கு அருளினான் திருமந்திரம் என்கிற நூலை, அதனை இன்றைய கால கட்டத்திற்கேற்ப பாமரனும் அறிந்து கொள்ளவே இறைவன் என்கிற இப்பிரபஞ்சம் ஓஷோவின் மூலம் திருமந்திரத் தகவல்களை அருளினான் என்பதே இந்நூலின் வாதம்! திருமந்திரத்தில் சொன்ன அத்தனைக் கருத்துக்களை ஓஷோவின் வாயிலாக அறியலாம். அட்டாங்க யோகம் என்ற குண்டலினி யோகம் பரியங்க யோகம் என்கிற தாந்திரிக யோகம்இரண்டையும் ஒருங்கே அளித்த பெருமை திருமூலருக்கேஉரியதாகும். ஓஷோவுக்கு அட்டாங்க யோகத்தில் அனுபவமற்றவர் என்று அவரது வாழ்வு முறையே நமக்கு வெளிப்படுத்தி விட்டது.குண்டலினியோகத்தில் தேர்ச்சி பெற்ற ஒருவனால் மட்டுமே பரியங்க யோகம் என்கிற தாந்திரிக யோகாவில் வெற்றிபெற முடியும் என்பது திருமந்திரத்தின் கூற்று. அதனால் குண்டலினியோகாவில் தேர்ச்சி பெறாத ஓஷோ தாந்திரிக யோகாவில் வெற்றிபெற சாத்தியக்கூறு இல்லை என்றே சொல்லலாம். ஆனாலும் திருமூலரின் யோக முறைகளை மிக எளிமையான சொற்பொழிவுகளால் உலகிற்கு தந்த ஓஷோவிற்கு ஒரு சல்யூட் இது மட்டுமல்ல இவருக்கு பல விஷயங்களை நாம் செய்யலாம் காரணம் ஒவ்வொரு ஞானி அல்ல மகான் அல்ல ஆனால் அவர் ஒரு மனிதனாக வாழ வேண்டும் என்று நினைத்தால் மனிதனின் ஒரு புனிதன் ஆனால் இவர் மட்டும்தான் ஓஷோ போன்ற ஒருவர் மறுபடியும் பிறப்பது இல்லை இனி பிறக்கப் போவதும் இல்லை திருமூலரும் இதைவிட ஒரு ஆயிரம் மடங்கு அற்புதமானது திருமூலரின் ஒரு பிரதிநிதிதான் ஓஷோ ! vinodhan, 7010054619  

திருமூலரின் பரியங்க யோகம் முறை Read More »

உணவைப் பற்றிய சில தவறான எண்ணங்கள்

Post Views: 409 இந்த உலகத்தில் எல்லோரும் உணவிற்காக ஒரு சில விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார்கள் அது பலருக்கு தெரியும் ஆனால் உணவைப் பொறுத்து பலருக்கு தவறான எண்ணம் இருக்கிறது இந்த எண்ணத்தை மற்றும் மாற்றிவிட்டால் உணவு பரிசுத்தமாக்கும் உணவு தான் மனிதனுக்கு மிக முக்கியமான ஒரு ஆதாரமாக இருக்கிறது அதற்காக தான் அவன் இவ்வுலகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறான் அந்த உணவை குறித்து ஒரு விழிப்புணர்வு பதிவு இது நம்முடையபெரும்பாலான மக்கள், உயர்ந்த விலை உடைய உணவு களில் அதிக சத்துக்கள் இருக்கும். எனவே சிறந்தது என நினைக் கின்றனர். அதேபோல் குறைந்த விலை உணவுப் பொருள்களில் (இயற்கையில் கிடக்கும் உணவுப் பொருள்களைப் பற்றித்தான் கூறுகிறேன்) சத்துக்கள் குறைவாக இருக்கும் என்றும், அவைகள் தரத்தில் தாழ்ந்தன என்றும் நினைக்கின்றனர். இரண்டுமே தவறு. உதாரணத்திற்குப் பழ வகைகளில் நான் குறிப்பிட்டுள்ளது போல விலை குறைந்த பப்பாளி, கொய்யா போன்றவைகள், விலை உயர்ந்த ஆப்பிளை விட உயர்ந்தது என்பது அறிஞர்களின் முடிவு. எளிதில் கிடைக்கும் உணவுகள் எளிதில் கிடைக்கும் சில இயற்கை உணவுப் பொருள்களை மட்டமாக பலர் நினைப்பது உண்டு. இதனால்தான் ‘தோட்டத்து பச்சிலைக்கு வீரியம் குறைவு’ என்ற பழமொழியே உருவானது. வெகுதூரத்திலிருந்தோ வெளிநாட்டிலிருந்தோ கஷ்டப்பட்டுப் பெறும் உணவுகளை உயர்ந்ததாக நினைப்பதும் உண்டு. இந்த இரண்டு எண்ணங்களுமே தவறு. சீசன் உணவுகள் சில உணவுப் பொருள்கள் உண்மையில் உயர்ந்த சத்துக்கள் உள்ளதாய் இருக்கும். அதனால் அதைத் தொடர்ந்து உண்ண விருப்பப்படும் சிலர், அவை அதிகம் விளையாத காலங்களில் கூட அவற்றை அதிகம் விலை கொடுத்து வாங்கி உண்பதை பெருமையாக நினைக்கிறார்கள். இதுவும் தவறு. ஒரு பொருளின் சத்துகளும், அதன் மருத்துவ குணங்களும் அது அதிகம் விளை யும் காலத்தில்தான் அதில் அதிகம் இருக்கும், மற்ற காலங்களில் அவை குறைவாக இருக்கும். பெரிய கம்பளிகள் சிலர் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் விற்பனை செய்யும் பொருள்கள் என்றால் அவை உயர்ந்த தரமாயும், மிகுந்த சத்துகள் உடையதாயும், உடலுக்கு அவை கெடுதியை உண் டாக்காது என்றும் கண்மூடித்தனமாக நம்புகின்றனர். இதுவும் தவறு. அந்நிறுவனங்களுக்குப் பணம் மட்டுமே குறி. உங்கள் ஆரோக்கியம் இல்லை. அறிவியல் முறைப்படி நிரூபித்தது (Scientifically Proved) ஒருசில உணவுகளை அறிவியல் முறைப்படி நிரூபித்தது என்று கூறி விளம்பரப்படுத்துவர். பல சமயங்களில் அது உண்மை யாகயும் இருக்கலாம். காலம் மாறும்போது, அதுவே தவறு என வேறு ஒரு சமயத்தில் நிரூபிப்பதும் இயல்பாக நடக்கிறது. இதுதவிர, அப்பொருள்களில் உள்ள வேறு விஷயங்கள் நம் உடலைக் கெடுக்கக் கூடியனவாக இருக்கும். இதுபற்றி அவர் களுக்கு தெரிந்த போதும், அவர்கள் அதுபற்றி வாயைத் திறப்ப தில்லை. ஒரு உதாரணம்: கடலை எண்ணெய் கெடுதலை செய்யும் என்றனர். இன்றோ அது உடலுக்கு நல்லது என்கின்றனர். அதே போல் தேங்காய் எண்ணெயும் சிறந்ததுதான் என சில ஆராய்ச்சி களின் முடிவுகள் உள்ளன. எனவே அனுபவத்தில் எது சிறந்த பலனைக் கொடுக்கிறதோ அல்லது நாம் மதிக்கும் நம் முன்னோர் கூறிய நல்ல விஷயங் களை பின்பற்றுவதே என்றும் சிறந்தது அல்லது கூறப்படும் விஷயம் பற்றி பல நூல்களில் நன்கு ஆராய்ந்து பின் நம்ப வேண்டும்.இன்றைய நாளில் சிலருக்கு கடை உணவுகளை வேறு வழியின்றி சாப்பிடுகின்றனர். இன்னும் பலருக்கு வாரம் ஓரிரு முறை விருப்பத்துடன் குடும்பத்துடன் ஹோட்டலுக்குச் சென்று உண்பதும் வாடிக்கையாகி விட்டது.கடை உணவு என நான் குறிப்பிடுவது நட்சத்திர ஹோட் டல்கள் முதல் சிறிய ஹோட்டல்கள், பீச் கடைகள், கையேந்தி பவன், இனிப்புக் கடைகள், போளி கடைகள் என அனைத்து வகை, அனைத்து தர கடை உணவுகளையும் சேர்த்துதான்.இவை அனைத்திலும் மேற்கூறிய உணவுப் பொருள்களில் சேர்க்கக்கூடாத பொருள்களான நிறம், மணம், சுவை ஊட்டக் கூடிய பொருள்கள் நிச்சயம் கலந்தே இருக்கும்.வாடிக்கையாளர்களைக் கவர ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தில்லுமுல்லு செய்பவர்கள்தான். இவை தவிர, சில சிறிய கடைகளில் ஏற்கனவே பயன் படுத்திய சுட்ட எண்ணெயைத்தான் பலமுறை சுடவைத்துப்பயன்படுத்துவர். இதைவிடக் கொடிய விஷம் ஏதுமில்லை நாகரீகம் என நினைத்து கடைப்பொருள்களை தின்பவர் களால், கடைக்காரர்களுக்கும், மருத்துவமனைகளுக்கு நிச்சயம் லாபம் உண்டு என்பது, தற்காலத்தில் இவைகள் வளர்கிற வேகத்தைப் பார்த்தால் தானே புரியும்.சுவைகள் என்னும் தலைப்பில், மருத்துவ குணம் அதிகம் உள்ள சுவைகளாக துவர்ப்பு, கசப்பு, சுவைகள்தான் உள்ளன என்பது தெரியும். நீங்கள் இதை நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் பெரும்பாலான ஆங்கில மருந்துகளை சிரப் தவிர சுவைத்துப் பாருங்கள். அதன் சுவை உங்களுக்குப் புரிய வைக்கும். அப்படிப்பட்ட சுவையை மக்கள் சுவைத்து சாப்பிடுவ தில்லை. மக்களுக்கு பிடிக்காத இந்த சுவையை எந்தக் கடை யிலும், ஹோட்டல்களிலும் விற்பதில்லை. அப்பொழுது எப்படி அந்தஉணவுகள் உடல்நலத்தை கொடுக்கும். அதாவது மிகுந்த சுவையுடைய பொருள்களில் குறிப்பாக எண்ணெயில் வறுத்தஅல்லது தீயில் நேரிடையாக சுட்ட பொருள்களில் நல்ல சத்துக்கள் இருப்பதில்லை. நல்ல சத்துக்கள் உடைய உணவுகளில் குறிப் பாக வேகவைத்த அல்லது பச்சைக் காய்கறிகளில் சிறந்த சுவை இருப்பதில்லை.எனவே, சத்து உடைய உணவும், சுவையுடைய உணவும் பல சமயங்களில் எதிர் எதிர் தன்மை உடையன. எனவே, நாம் நம் உணவில் சுவைக்காக சிலவற்றையும் அதன் சத்திற்காக பலவற்றையும் உண்ண பழகிக் கொள்ள வேண்டும். vinodhan 7010054619

உணவைப் பற்றிய சில தவறான எண்ணங்கள் Read More »

சித்தர்கள் சொன்ன உயிரை வளர்க்கும் உபாயம் முறை

Post Views: 807 மனிதன் உடலை வளர்க்கத் தெரிந்துள்ளான். அறிவை வளர்க்கவும் தெரிந்துள்ளான். ஆனால் உயிரை வளர்க்கத் தெரியவில்லை. உடம்பினைப் பெற்ற பயன் உயிரை வளர்ப்பதுதான் என்பது சித்தர்கள் அனுபவம். சித்தர்கள் பல்லாண்டு வாழ விரும்புவது உயிரை வளர்ப்பதற்கே என்பது புரிய வரும். முதலில் உயிர் என்பது என்ன என்பதை அறிவோம். அதற்கு முன்பாக இப் பகுதியில் வரும் செய்திகள் முழுவதும் எமது யோக அனுபவத்திலிருந்து தெளிந்ததே தவிர, மற்றபடி ஆகம நூல்களிலிருந்து பெறப்பட்டது அன்று. எனவே ஒத்துக் கொள்ள முடிந்ததை மட்டும் ஏற்றுக் கொண்டு மற்றவற்றை விட்டு விடவும் என்பது எமது அன்பான வேண்டுகோள் ஆகும். உயிர் என்பது ஒருவித வெப்பம். ஆன்மா ஒருஉடலில் தங்குவதற்கு உயிர் வெப்பம் என்பது பாதுகாப்புஉறையாகவும், உறைவிடமாகவும் செயல்படுகிறது. உயிர் வெப்பத்தை மையப்படுத்தியே ஆன்மா பிறப்பு எடுக்கிறது.உயிர் வெப்பத்தின் அடிப்படையில் அறிவும் மேம்பாடுஅடைகிறது. ஓரறிவு உயிரினத்திற்கு உயிர் வெப்பம் மிகவும் குறைவாகும். உருவத்தில் யானை பெரியதாக இருந்தாலும்மனிதனை விட உயிர் வெப்பம் யானைக்கு குறைவாகும். காரணம் இல்லாமல் இந்த ஆன்மா பிறப்பு எடுக்கவில்லை. ஆன்மாவிற்கு அறிவு உள்ளது. உடம்புக்கு அறிவு இல்லை என்ற போதிலும்; அறிவு உள்ள ஆன்மா அறிவற்ற உடலை விரும்பி அணைந்ததன் நோக்கு, இந்த அறிவற்ற உடலின் மூலமாக உயிர்வெப்பத்தை மேலும் அதிகமாக்கி, பஞ்சபூத உடலை விட்டு தூய ஒளி உடலைப் பெற்று ஆன்மா அமரத்துவம் அடைய போராடுகிறது இதற்கிடையில் மனம் புகுந்து ஆன்மாவின் நோக்கத்தை முறியடித்தும், உயிர் வெப்பத்தை உயர விடாமல் தடுத்தும், மாற்றிப் பிறக்க வகையறிய விடாமல் தடுக்கிறது. சிலர் நினைக்கலாம், புலன்கள் இறைவன் கொடுத்தவை, பொருள்கள் இறைவன் கொடுத்தவை என்ற போது புலன்கள் பொருளோடு சேர்ந்து இன்பம் துய்ப்பது இயற்கை எனக் கருதலாம். புலனின்பம் வேண்டாம் என்று ஆன்மீகம் போதிக்கவில்லை. அதிலேயே மூழ்கி மீண்டும் பிறப்பு எடுப்பது போல பந்தத்தில் சிக்க வேண்டாம் என்றே போதிக்கிறது. திருமூலர் கூறுவார், “நெறியைப் படைத்தான், நெருஞ்சிலைப் படைத்தான்” என்பார். பல தடவை நெருஞ்சில்முள் குத்திக் காயமான பிறகும் அதே காரியத்தைத் தொடர்ந்து செய்யக்கூடாது என்பதே ஞானிகள் போதனையாகும்.புலன்கள் உலக சுகத்தில் பொருந்த உயிர் வெப்பம் குறையத் தொடங்குகிறது. உயிர் வெப்பத்தைப் பாதிக்காத உலக சுகம் எதுவுமே இல்லை என்று கூறி விடலாம். உலக சுகத்தின் மூலம் உயிர் குளிர்கிறது. இந்தப் பிரபஞ்சத்தில் வெப்பமான பொருள் மட்டுமே நிலைத்திருக்கும். இந்தப் பூமியின் மையம் குளிர்ந்து விட்டால் பூமியும் வெடித்துதூசுகளாகி விடும். மனித உடலும் குளிர்வதால் மட்டுமே பிணமாக முடியும். சிவம் என்பது நெருப்பு. இதையே சிவ வாக்கியர் “நெருப்பறை திறந்த பின்பு நீயும் நானும் ஈசனே” என்றார். இந்த உயிர் உலகியலைச்சாராது சிவத்தோடு சாரும் போது சிவக்கனலால் உயிர்வளர்கிறது. ஆன்மா ஒளிர்கிறது. பல கோடி சித்தர்கள் ஒளியுடலை எடுத்து உலகில் வாழ்வதற்குக் காரணம், சிவக்கனலை உயிர் தொடர்ந்து சார்ந்திருந்து பயிலும் குருவின் பதிபுக்கும் போதே “கயிலை இறைவன் கதிர் வடிவாமே” என்று திருமூலர் கூறுவது போல, நமது உயிர் சிவமாம் தன்மை பெற்று ஒளிர்கிறது. தவம் என்றால் நெருப்பைச் சார்தல் என்பதாகும். பிராணாயாமம் என்றால் பிராண சக்தியை நெருப்போடு இணைத்தல் என்பதாகும். யோகிகளின் தவம் என்பது சிவக்கனலைச் சார்ந்து வெப்பத்தை உயர்த்தி உயிரை வளர்ப்பதேயாகும்.குழந்தைக்கு மிட்டாய் வாங்கிக் கொடுத்து ஏமாற்றி போதனை அளித்து சான்றோன் ஆக்க முனைவது போல, இறைவனிடம் “தனம் தரும் கல்வி தரும், ஒருநாளும் தளர்வறியா மனம் தரும்” என்கிற தருவிக்கிற பட்டியலை அளித்து பாமரனை ஞானிகள் இறை நெறிப் பக்கம் ஈர்த்துக் கொண்டார்கள். இறைவனும் சீக்கிரமே உலகியலில் சலிப்பு வர எல்லா சுகத்தையும் கொடுத்து உயிரை வளர்க்கும் உபாயத்தையும் கொடுக்கிறான். இதில் உயிர் வளர வாழ்பவர்கள் உலக என்று பொருள். இன்பத்தில் நிறைவு கண்டு விட்டார்கள் இன்னும் உடம்பை வளர்க்கும் உபாயத்தில் மட்டுமே உலக இன்பத்தில் நிறைவு காணாதவர்கள் காரியப்ட்டு நிற்கிறார்கள். எதிலும் முழுமை பெற்றால் மட்டுமே சலிப்பு என்பது வரும்.றைவன் இரண்டு பேரிடம் மட்டுமே முழுமையான செல்வத்தைக் கொடுப்பார். ஒருவன் யோகி. மற்றவன் போகி. யோகி பெற்ற செல்வத்தால் சீக்கிரம் சலிப்பு வந்து உயிர் லாபம் பெறச் சாதனை செய்பவர். இவர்கள் பட்டினத்தார், பத்ரகிரியார் போன்றவர்கள். அடுத்த ரகம், உலகை அலங்காரம் செய்து செப்பனிட்டு விட்டுப் போக போகியின் கையில் செல்வத்தைக் கொடுத்து காடுகளைத் திருத்தி நாடாக்குவதும், தொழிற்சாலை அமைப்பதும், இப்படி உழைப்பதற்கோ செனனம் எடுப்பது போலச் செல்வம் கொடுக்கப்படும். இடைப்பட்டவர்கள் செல்வத்திலும் நிறைவு இல்லாமல், இறை பக்தியிலும் நிறைவு இல்லாமல் புலம்புவார்கள். சிந்தையில் நிறைவு என்பது தான் செல்வம். உலக சுகமும் விட்டுப் போகக் கூடாது, உயிரும் வளர வேண்டும் என்பதுதான் பேராசை ஆகும். இது நடைபெற வாய்ப்பே இல்லை. அடியார்கள் வாழ்வை ஆய்வு செய்தால், சுந்தரமூர்த்தி நாயனார் இன்பத்துறையில் எளியராகி இன்பம் துய்த்தவர். அவருக்கு சீக்கிரமே உயிர் மீது சலிப்பு வந்து இறைவா எம்மை ஏற்றுக் கொள்’ என்று விண்ணப்பம் வைத்துவிட்டார். ஆனால் சித்தர்கள் ஆயிரம் ஆண்டுகள் உடலில் வாழந்த போதிலும் சலிப்பு வரவில்லை. காரணம், மனதையும் புலன்களையும் வென்றவர்களுக்கு உடலின் மீதும் உயிரின் மீதும் சலிப்பு வராது. வாழ்க்கை வேண்டாம் என்று மனம் மட்டுமே சொல்லும்; ஆன்மா சொல்லாது. ஆன்மா விரும்பி அணைந்த இந்த உடலில் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாலும் சலிப்பது இல்லை.இறை நெறியாளர்களில் இரண்டு வகை உண்டு. முதல் வகையினர், மனதில் இறைவனை வைத்துத் வகையைச் சார்ந்தவர்கள். இவர்கள் இறைவன் வாழும் கயிலை வெளியே இருப்பதாகச் சாதித்தவர்கள். அடுத்து சித்தர்கள் என்போர், தனது உடலையே சிவாலயமாகவும், அதில் சிதாகாசப் பெருவெளியே கயிலையாகவும், அங்கேயே சிவத்தை நிறுத்திச் சாதித்தார்கள். இவர்கள் உடம்பை உகுத்து விட நினைப்பதில்லை. மாறாக, இந்த சிவாலயம் பல்லாண்டு நிலைத்திருக்க முயன்று வெற்றியும் கண்டார்கள். உடல் என்கிற சிவாலயம் நெடுநாள் நிலைத்திருக்க உயிர் வெப்பம் உயர்வதுதான் முக்கியமானது. எந்த ஆலயம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சிதிலமடையாது நிலைத்திருக்கிறதோ அதுவே சக்தி வாய்ந்ததாகப் போற்றப்படும். இதுவே சித்தர்கள் கொள்கை. சில ஆலயம் பதினாறு ஆண்டுகளில் காணாமல் போயின. சில ஆலயம் முப்பத்தெட்டு ஆண்டுகளில் காணாமல் போயின. சிலது மட்டும் எண்பது ஆண்டுகள் இருந்தன. இவைகள் இருக்கிற காலத்தில் ஏற்றம் பெற்றது என்னவோ உண்மைதான் என்றாலும், சிவம் கூத்தாடல் நடத்திய இந்த உடல் நெடுநாள் நிலைத்திருப்பதுதான் அவசியமானதாகும். ஒரு சிவாலயம் கட்டுகிறோம். அது ஆயிரம் வேண்டும் என்று ஒரு பாமரன் கூடக் கருதுவான். அதுபோல ஆ ண்டுகளாவது இடிபாடு இல்லாது இருக்க சிவத்தின் திருவடி பதித்து திருத்தாண்டவம் புரிந்த உடல் பல்லாயிரம் வருடம் நிலைத்து நிற்க வேண்டும். சிலர் மனிதர் கண்களிலிருந்து மறைத்து வாழலாம். அது தவறில்லை! பலகோடி சித்தர்கள் அப்படியேவாழ்கிறார்கள். வள்ளலார் கூட தனது உடலை மறைத்து வாழஇடமிருக்கிறது. இறைவன் மனிதர்களுக்குக் காட்சி கொடுப்பது, தனது பிரம்மாண்டத்தைக் காட்டுவதற்காக அல்ல. ஒவ்வொரு காட்சி மூலமாக அந்த ஒளி வெள்ளத்தின் மூலம் உயிர் வளர்கிறது. ஒவ்வொரு காட்சியின் மூலம் மனம் பாதிப்பு அடைகிறது. இதில் பலரும் உன்மத்த நிலை அடைந்து பைத்தியமாகி விடுவார்கள். இதில் நாமும் முதல் காட்சியில் பைத்தியமாகி சில நாள் மருத்துவத்திற்குப் பிறகு சரியானோம். காரணம், மனதிற்குப் புலப்படாத ஒளி வெள்ளத்தைக் கண்டதும், மனம் அதிர்ச்சிக்கு உள்ளாகும். உ தகுந்த ஒருநிலைப்பாடு உள்ளவர்கள் மட்டுமே தப்பிக்க முடியும். ஆசைகளின் எச்சம் அதிகம் உள்ள மனம் இறைக்காட்சியில் பெரிதும் பாதிக்கப்படும். இதில் உன்மத்த நிலை அடைந்தவர்கள் உலகத்தின் பார்வையில் பைத்தியமாகத் தெரிந்தாலும் உயர்நிலை அடைந்தவர்களாகும். அப்புறம் வினைகள் சாம்பலாகி விடும். உடல் மட்டும் நெடுநாள் தங்காது என்பது மட்டும் உண்மையே தவிர திருவருள் காரியப்படும். இப்படி உயிர் பல இறைதரிசனத்தின் மூலம் பஞ்சபூதக் கலப்புப் பொருந்திய உடலை விடுத்து ஒளியுடலைப் பெற்று இறைவனைப் போன்ற தன் வயத்தனாதல் இயல்பை யோகிகள் பெறுகிறார்கள். ஒளியுடலைப் பெறுகிற தகுதி தேவலோகத்தில் தேவர்களுக்கும் கிட்டாத சலுகையாகும். சித்தர்கள் வேற்றுலகில் வாழ விரும்பாது இப்புவியில் பல்லாண்டுகள் தவம் செய்ய விரும்புவதற்குக் காரணம், இங்கு தான் அருள் வல்லபம் எளிதாகக் கிடைக்கும்.பொதுவாகத் தேவலோகத்தில் சுகங்கள் அதிகமாக மண்டிக் கிடக்கும் என்பார்கள். எந்த இடத்தில் சுகங்கள் அதிகமாக இருக்கிறதோ அங்கு ஞானமும் அருளும் குறைவாகவே இருக்கும். உதாரணமாக, மேலை நாடுகளில் அனுபோகசுகம் அதிகமாக உள்ளது. ஆனால் யோக ஞானம் குறைவாகவே உள்ளது. இதுபோல தேவலோகத்திலும் ஞானம் இருக்காது. மனதிற்கு அறிவு உள்ளது போலவே உயிருக்கும் அறிவு உள்ளது. உடம்பில் கனல் குறையும் போது உயிரும் சலிப்பு அடைகிறது. எனவே கனல் குறையாது பாதுகாக்க வேண்டும். கனல் குறையாமல் பாதுகாக்க ஐந்தாண்டு களுக்கு ஒரு முறையாவது உடம்பின் மொத்த எடையில் பத்தில் ஒன்றைக் குறைத்து கனலைச் சரிசெய்ய வேண்டும். “பிண்டம் சுருங்கில் பிராணன் நிலை பெறும்” என்பார் திருமூலர். பிராணன் அதிகமாக உடம்பில் தங்கினால் கனல் அதிகமாகி விடும். பிராண சக்திதான் உயிருக்கு ஆதாரமானதாகும். பிராணனைக் கூட்டுவதற்கு உடம்பு இளைத்தால் ஆகாயப் பெருவெளி அதிகமாகும். அந்த இடத்தில் பிராணன் தங்கும். இதுவே உயிர் வளரும் உபாயமாக மாறும். எனவே உயிரை வளர்க்கிற பிராண சக்தியைக் கூட்டி உய்தி பெற வேண்டும். இதுவே சித்தர்களின் சாதனையாக அமைவதால் கடைசியாக ஒளியுடலை எடுத்து வாழ பிராண சக்தி பெரிதும் துணை நிற்கிறது vinodhan 7010054619

சித்தர்கள் சொன்ன உயிரை வளர்க்கும் உபாயம் முறை Read More »

இரசமணி வித்தைகள்

Post Views: 479           சிவபெருமானின் நவந்தி என சிறப்பித்துச் சொல்லப்படும் பூமியிலுள்ள சக்தி வாய்ந்த பொருளான தொட்டால் ஓடக்கூடியதுமான பாதரசத்தை புகையாது செய்தும் மணியாகக் கட்டி நிறுத்தி இரசமணியாக்கி அநேக சித்திகள் செய்துள்ளனர் சித்தர்கள். இரசமணி எண்ணற்ற மகத்துவம் சிறப்பும் உடையது ஆகும். இரசமணி வைத்திருப்போர்களுக்கு அட்டமா சித்திகளம் கைகூடும் இரசமணியை விபூதியுடன் கலந்து அவ்விபூதியை மந்திரித்துக் கொடுக்க சகல நோய்களும் குணமாகும். இரசமணி அணிந்திருப்போரை இடி, மின்னல், எரிமலை. பூகம்பம், நிலநடுக்கம், புயல், கடல் கொந்தளிப்பு போன்ற இயற்கை அழிவுகளில் இருந்து பாதுகாக்கும் சக்தி கொண்டது. இரசமணி கட்டியிருப்பவர்களைக் காட்டு மிருகங்களின்கொடிய தாக்குதலோ, விஷ ஜந்துக்களின் கொல்லக்கூடிய ஆலகால விஷமோ ஒன்றும் செய்யாது  இரசமணியை வாயில் போட்டுக்கொண்டால் பசி தாகம் இருக்காது. இரசமணியை வாயில் அடக்க வீர்யசக்தி அதிகரித்து போக சக்தி பெருகும். இரசமணியை பசுபால் கறக்கும் சமயம் அதன் நடுமுதுகில் வைத்தால் பால் கறக்காது? இரசமணியை இரும்பு பூட்டின் மீது வைக்க பூட்டுபிளந்து விடும். இரசமணி சரீரத்தில் இருந்தால் மற்றொருவர் சரீரத்தில் புகலாம். சரீரத்தை மறைத்துக் கொண்டு நடமாடலாம். இரசமணி செம்பை தங்கமாக்கும். இரசமணி இரசத்தை குடிக்கும் இயல்புடையது. இரசமணியை வாயிலிட்டு உமிழ்நீரை விழுங்குவோரின் சரீரமும் கற்ப தேகமாகும். நரை, திரை, மூப்பு, சாக்காடு அணுகாது. இரசமணியை நெல்குதிரில் போட்டு வைத்தால் இரண்டு மூன்று தினங்களில் குதிரில் உமி மட்டுமே மிஞ்சும். இரசமணியை புருவ மத்தியில் இருக்கும்படி கட்டியிருப்போர் தியானத்தின்போது மேலெழும்புவர். ஆகாய வெளியில் பறவை யைப் போல் பறப்பர். இதைப்போன்ற அதிசக்திவாய்ந்த ரசமணிகள் உள்ளன ஆனால் போலி மனிதர்கள் வெறும் பணத்திற்காக இந்த ரசமணியை செய்து கொடுக்கிறேன் என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள் ஆனால் உண்மையாக ரசமணி அதிசக்திவாய்ந்த சக்திகள் உள்ளன அந்த சக்தி ரசமணியை நாம் உண்மையான ஒருவரிடம் வாங்கும் பொழுது அது நல்ல பலனைத் தருகிறது என்னுடைய அனுபவம் பலபேர் இடம் சென்று நான் பல ரசமணியை வாங்கியுள்ளேன் அதில் எல்லாம் வெறும் வெற்று பாதரசம் மட்டுமே உள்ளது சக்தி அல்ல காரணம் அவர்களுக்கு ஒருவருக்கும் செய்யத் தெரியாது நல்ல ஒரு குருவிடம் சென்று இந்த ரசமணி கலை வாங்கிக் கொள்ளுங்கள் vinodhan 7010054619

இரசமணி வித்தைகள் Read More »

மனதின் உயிர் ஏங்கே இருக்கிறது சித்தர்கள் கூறிய ரகசியம்?

Post Views: 764 துரியோதனின் உயிர் உல தொடையில் இருந்தது என்று கண்டுபிடித்து அவனை வீழ்த்தியது போல மனதின் உயிர் நிலையை அறிந்து சித்தர்கள் வீழ்த்தினார்கள். அது பற்றி விரிவாகக்   காண்போம். நமது மனம் நமது நாசித் துவாரத்தில் இயங்கும் டே சுவாசத்தோடு இணைந்து காரியப்படுகிறது. சுவாசத்தின் என அசைவு எந்த நிலையில் உள்ளதோ அது போலவே அ மனிதனின் இயக்கமும் உள்ளது. மனம் இயங்கத் லி | தொடங்கிவிட்டால் அணுச்சிதைவு ஏற்பட்டால் எப்படி ஒன்று இரண்டாகி, இரண்டு நான்காகி, நான்கு பதினாறாக காரியப்படுவது போலவே மனமும் காரியப்படும். எனவே சுவாசத்தைப் பிடித்து மனதின் இயக்கத்தை முதலில் கட்டுப்படுத்தினார்கள். பிறகு மனதின் வலிமை இழந்த பிறகு அதைக் கொன்றார்கள். மனதின் வலிமை குறையாத வரை அதை எதிர்த்துப் போராடி வெல்ல முடியாது. சித்தர்கள் மனதைக் கொன்ற விதத்தை அறிவோம். ஒரு மயில் சீற்றம் அடைந்த பாம்பைக் கொல்வதற்கு முதலில் பாம்பின் கொடூரத்தைக் குறைக்கும். நெடுநேரம் போராடிய பாம்பு களைப்படைந்து ஒடுங்கும்போது மயில் அதைக் கொன்று விடும். இதே முறையில் தான் மனதையும் கொல்ல வேண்டும். ஆரம்பத்தில் தவத்தில் கண்களை மூடியதுமே நமது மனம் படம் எடுத்து ஆடத் தொடங்கும். அதனுடைய ஆட்டம் குறைந்தது இரண்டு நேரமாவது நீடிக்கும். அதுவரை நாம் அதனிடம்நெருங்கவே கூடாது. பிறகு பாம்பின் சீறலைப் போன்று மனதின் சீறல் குறையும். அதாவது நமது மூக்கில் சுவாசம் உள்ளே போன பிறகு வெளியேறும் போது ஒரு சீறல் உண்டாகும். இது பனிரெண்டு அங்குலத்திற்கு மேலே போகும் போது சீறல் சத்தம் நன்றாகவே தெரியும். உதாரணமாக ஓடியாடி உடற்பயிற்சி செய்தவன் சீறல் போன்று இருக்கும். ஆடாமல் அசையாமல் மூச்சின் சிறலைக் கவனித்தால் பனிரெண்டு அங்குலமாகக் குறையும் போது சீறல் அறவே இருக்காது. பனிரெண்டு அங்குலம் என்பது புருவ மத்தியில் இருந்து ஒரு சாண் நீளமாகும். அடுத்து யோக சாதனை மூலமாக பனிரெண்டு அங்குலத்தி லிருந்து ஒரு அங்குலமாகக் குறைக்க கடினப் பயிற்சி செய்ய வேண்டும். நமது சுவாசம் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்கிற பஞ்ச பூத தொடர்பில் இயங்கும். இதனாலேயே மண்ணாசை, பொன்னாசை, பொருளாசை எல்லா ஆசைகளும் உதயமாகும். இதில் ஆகாய பூதத்தில் சுவாசம் நடக்கும் போது முற்றிலும் மாறுபட்ட அனுபவம் உருவாகும். மனதின் சுழற்சி வேகம் குறையத் தொடங்கும். இதை அறிந்த சித்தர்கள் ஐந்து பூதங்களில் ஆகாய பூதம் நடைபெறுகிற நேரத்தில் விழிப்பாக இருந்து மனதையும், சுவாசத்தையும் ஒடுக்குகிறார்கள். ஆகாயபூதம் நடைபெறாத படி மனம் கடுமையாகப் போராடும். அமைதியாக அமர்ந்தவர்கள் பெருமூச்சு விடுகிறார்களே அந்த நேரமே ஆகாய பூதம் சுவாசத்தில் நடக்கிறது என்பதாகும். அந்த நேரத்தில் [பனிரெண்டு அங்குல சுவாசத்தை நெருக்கி குறைத்து பதினொன்றாகக் குறைத்து விட்டால் மனதின் ஆற்றலும் பனிரெண்டில் இருந்து பதினொன்றாகக்குறைந்து விடும்] இதனால் யோகியின் குணாதிசயத்தில் மாறுபாடு உண்டாகும். அதாவது உலக ஆசைகளில் இருந்து விடுபட்டு நிற்கிற ஆற்றல் உண்டாகி விடும். எப்படியெனில் சாப்பிட ஆசை தோன்றும் போது சாப்பிடாமல் நிறுத்தி விடலாம். ஆனால் சாப்பிடும் இச்சை இருந்து கொண்டே இருக்கும். மாறாக பதினொன்று அங்குலமாகக் குறைந்த சுவாசம் மூலம்] சாப்பிடும் இச்சை இல்லாமல் போகும். அடுத்து இன்னும் போராடி இரண்டு அங்குலம் குறைத்து சுவாசத்தை பத்து அங்குலமாக குறைத்து விட்டால் மனதின் வேகம் குறைந்து மனம் அமைதியை விரும்பும். தவம் செய்வதை விரும்பும். தனிமையை விரும்பத் தொடங்கி விடுவார்கள். ஞானத்தின் சாயல் வெளிப்படத் தொடங்கி விடும் மேலும் போராடி ஆகாய பூதம் நடக்கிற நேரத்தில் மூன்று அங்குலம் குறைத்து விட்டால், அடுத்தவர் போதித்து உணராமலேயே தனக்குள்ளேயே ஞானம் உதயமாகி விவேகியாகி விடுவார்கள் இன்னும் பல ஆண்டுகள் தவம் இருந்து போராடி நான்கு அங்குலம் குறைத்து சுவாசத்தை எட்டு அங்குலமாகக் குறைத்து விட்டால் மனதிற்கு நாம் அடிமையாக இருந்தது மாறி நாம் இட்ட பணியைச் செய்து முடிக்கும் ஏவலாளி போலத் தூரத்தில் நடக்கும் சம்பவங்களைத் தெரிந்து வந்து மனம் உணர்த்தும். தனது சக்தியைப் பயன்படுத்தி மேலும் முயலாத வண்ணம் மனம் போராடும். அடுத்து ஐந்து அங்குலம் குறைத்து சுவாசத்தை ஏழு அங்குலமாக ஆக்கி விட்டால், மனம் தனது செயல்பாட்டை இழந்து விடும். இந்த நேரத்தில் சித்தர்கள் தரிசனம் உண்டாகும். நல்லாசிகளைத்தருவார்கள். அடுத்து சுவாசம் ஆறு அங்குலமாக வரும் போது ஆகாயத்தில் உள்ள பிரபஞ்ச இரகசியங்கள் தெரிய வரும். பிறப்பின் இரகசியமும் தெரிய வரும். வான் பற்றி நின்ற இறை தரிசனமும் உண்டாகும். அடுத்து சுவாசத்தை ஐந்து அங்குலமாகக் குறைக்கும் போது உடம்பு காய சித்தி பெற்று விடும். அதாவது உச்சந்தலை அமிர்தம் உடலில் ‘ புகுந்து கற்பதேகமாக மாற்றி விடும். பிரளய காலத்திலும் அழியாத சித்தி வல்லபம் உண்டாகும். இன்னும் போராடி சுவாசத்தை நான்கு அங்குலமாகக் குறைக்கும் போது, இது மிக மிகச் சிரமம்; என்றாலும் வெற்றி பெறும் போது மூக்கு நுனியை விட்டு சுவாசம் வெளியேறாது. மூக்கு என்பதே நான்கு அங்குல நீளம் மட்டுமே உடையது. அப்போது அணிமாதி சித்திகள் அனைத்தும் கைவரப்படும். இந்த நிலையில் அடுத்த மனிதர்கள் கண்களில் அகப்படாமல் மறைந்து வாழ தீர்மானிப்பார்கள். இன்னும் சுவாசம் மூன்று அங்குலமாகக் குறைக்கும் போது மூக்கில் நெருப்பு எறும்பு பயணிப்பது போல உணர முடியும். அப்போது இந்த சூரிய குடும்பத்தை விட்டு அடுத்தடுத்து உள்ள நவ கண்டங்களில் சஞ்சரித்து விட்டுத் திரும்பி வரும் வல்லபம் உருவாகி விடும். இதுவே ஆன்ம ஒளிப் பயண மாகும். அடுத்து சுவாசம் இரண்டு அங்குலமாகக் குறைக்கும் போது, நமது ஆன்மாவை நமது மனமே கண்டு வழிபாடு செய்யும். சிவதரிசனமும் ‘உண்டாகி இறைவனோடு நமது ஆன்மா உரையாடுவதை மூன்றாவது நபராக மனம் கண்டு களிக்கும். அடுத்து நமது சுவாசத்தை ஒரு அங்குலமாக குறைக்கும் போது புறப்பட்ட இடத்திலேயே சுழன்று வருவதால் தேகம் அழியாது. பல்லாண்டுகள் புதைந்துகிடந்தாலும், உணவு, உறக்கம், சுவாசம் இல்லாமல் வாழ முடியும். பஞ்ச பூதங்களின் தயவு இல்லாமலேயே நமது உடம்பு கல்தூண் போல ஆகி விடும். உணர்வு மட்டும் சிவ நடனத்தை கண்டு களிக்கும். அந்த உடம்பை விட்டு இறைவன் நீங்குவதே இல்லை. இப்படிப்பட்ட உடல்களை மனிதர்கள் கண்களுக்குத் தெரியாத வண்ணம் மறைத்து விடுவார்கள். நமது மனமும் விரும்பிய பறவையாகவோ, பாம்பாகவோ உடல் எடுத்து உலகைக் காண முடியும். ஆன்மா இறைவனை தொழுது நிற்கும். நமது மனம் விரும்பிய உடல் எடுத்து உலகில் மகிழும். பெரும்பாலான யோகிகள் கிளி, புறா,காகம்,பருந்து, நல்ல பாம்பு உருவத்தில் வாழவே விரும்புகிறார்கள். ஆரம்ப நிலை சாதகர்களுக்கு அறிவுரை வழங்கவும் உலகில் பஞ்சம் பட்டினி வராதபடி கோள்களை மாற்றி மழை வர வைப்பதும், உலக நடப்புகளில் கவனம் வைத்துக் கடவுள் போல தொண்டு செய்வார்கள். எனவே மனதைக் கொன்று அதைச் சீர்திருத்தி உலகில் நிரந்தர கர்மயோகியாக இருப்பதே சித்தர்களின் இலட்சியமாகும். வெல்லப்படாத மனதோடு செய்கிற கர்மயோகம் மிகவும் ஆபத்தானது. சித்தி பெற்ற பிறகு செய்வதே நிலையான விளைச்சல் ஆகும் இப்படி மனதைக் கொல்ல இரவும் பகலும் அயராது உழைக்கிறார்கள் யோகிகள். நுஞ்சபூதமாகிய ஆகாய பூதத்தைப் பயன்படுத்த தேர்ந்த பிராணாயாமம் கற்று பகற் பொழுதில் நமது சுவாசத்தை இடகலையிலும், இரவு தவம் செய்யும் போது சுவாசத்தை பிங்கலையிலும் மாற்றி சாதனை செய்யும் போது மிக விரைவில் சுவாச பந்தனம்உண்டாகிறது. இதன் மூலம் மனம் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடுகிறது. மனம் ஒடுங்கும்போது தனித்திருந்து பசித்திருந்து விழித்திருந்து தவம் செய்கிற சுவையுணர்வு வந்து விடும். அப்புறம் உலக வாழ்வு அனைத்துமே ஒரு நாடக சாலை நடிப்பாகவே தெரியத் தொடங்கி விடும். இந்த முறையில் பயின்று சித்தியானவர்கள் மட்டுமே தவ சீலராகும். மற்றபடி செத்துப் போனவர்கள் தவமுறை அனைத்தும் காசாளர் ஆக்குமே தவிர கடைத்தேற்றம் என்பது வராது. இதுபற்றி விரிவாகவே அடுத்து பதிவில் காண்போம்! vinodhan 7010054619

மனதின் உயிர் ஏங்கே இருக்கிறது சித்தர்கள் கூறிய ரகசியம்? Read More »

பிரச்சினைகள் எங்கிருந்து துவங்குவது ?

Post Views: 457                   பிரச்சினைகளை இனங்காணும்போது பலவித குழப்பங்கள் வரலாம். தனிப்பட்ட் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளானாலும் சரி அல்லது நிறுவனங்கள், சமுதாயம் என்று ஒட்டுமொத்தமாகப் பலரைப் பாதிக்கும் பிரச்சினை யானாலும் சரி, நாம் முதலில் செய்ய வேண்டியது இதுதான்: பிரச்சினையை வகைப்படுத்துவது. அன்றாடம் சந்திக்கக்கூடிய பல பிரச்சினைகள் சுலபத் தில் வகைப்படுத்தக் கூடியவை. அவற்றுக்கான தீர்வுகளும் அப்படியே. உதாரணமாக அலுவலகத்துக்குச் செல்லும் ஒருவர் தினமும் எப்படியோ தாமதமாகத்தான் போக முடிகிறது என்று வைத்துக் கொள்வோம். அதை ஒட்டி அவருக்கு மன உளைச்சல், பதற்றம், அலுவலகத்தில் எதிர் கொள்ளும் கேள்விகள் என்று பல விளைவுகள் ஏற்படும். ஆனால் அவரது பிரச்சினை இவை அல்ல. தாமதம்தான் அவர் பிரச்சினை. இதைத் தீர்மானிப்பதும் இதற்குத் தீர்வு காண முயல்வதும் சுலபம்தான். ஆனால் அதே நபருக்கு, சக மனிதர்கள், உறவினர்கள் ஆகியோரிடத்தில் பழகுவதிலோ ஏற்றுக்கொள்ளப்படுவதிலோ பிரச்சினை என்றால் அதனை எளிதில் வரையறுக்கவோ, வகைப்படுத்தவோ முடியாது. ஏனென்றால் இப்படிப்பட்ட பிரச்சினைகள் பல பரிமாணங் களும், காரணங்களும் கொண்டவை. அவர் பழகும் விதம்,தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் விதம், மற்றவர்களை அணுகும் முறை, குறைநிறைகளை சுட்டிக்காட்டும் அல்லது ஏற்றுக்கொள்ளும் முறை, தன்னைப் பற்றிய அபிப்பிராயம் மற்றவர்களைப் பற்றிய அபிப்பிராயம், அவற்றை வெளிப் படுத்தும் விதம் போன்ற பல காரணங்களால் அவருக்கு மேற்குறிப்பிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கலாம்.அதாவது இதுபோன்ற பிரச்சினைகள் பன்முகம் கொண்டவை. எனவே அதைத் தீர்ப்பதற்கான அணுகு முறையும் பன்முகத் தன்மை வாய்ந்ததாகத்தான் இருக்க வேண்டும். உணர்வுகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தனித் தன்மை வாய்ந்தவை. அதற்கான தீர்வும் அப்படித்தான் இருக்கும். அதாவது ஒருவருக்குப் பொருந்துவது இன்னொரு வருக்குப் பொருந்தாது. குறிப்பிட்ட நபர், அவரது தன்மை, சிந்தனை முறை ஆகியவற்றைச் சார்ந்துதான் அவற்றை தீர்க்க முடியும். ஆக, பிரச்சினைகளின் தன்மை வரையறைக்கு உட்பட்டதா, இல்லையா என்பதை முதலில் தெரிந்து கொள்வது, அவற்றைத் தீர்ப்பதற்கான முதல்படி என்று சொல்லலாம். எவ்வகையான பிரச்சினையாக இருந்தாலும், அதைத் தீர்ப்பதற்கு வழி தேடும் முன்னர், பொதுவாக, பிரச்சினைகளிலிருந்து விடுபட சரியான முயற்சிகள் மேற் கொள்வதற்குத் தடையாக இருக்கும் விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம். ஆரம்ப கட்டம் ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு, “When in Contradiction, go to the basic”, முரண்பட்ட சூழ்நிலையில்சிக்கும்போது துவக்கப் புள்ளிக்குச் சென்று, அங்கிருந்து வேண்டும். எந்தப் பிரச்சினையும் தீர, அதனுடைய ஆரம்பம் அல்லது தோற்றுவாய்க்குச் செல்வது முக்கியம். அதாவது அதன் வேரைத் தேட வேண்டும். இதற்கு, பின்னோக்கிச் சென்று ஆற, அமர சிந்திக்கப் பழகுதல் மிகவும் முக்கியம். பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அதை முழுவதும் புரிந்துக் கொள்ளுதல் அவசியம். நோயின் அறிகுறிகளைப் பார்த்து அவற்றுக்கு சிகிச்சை செய்யும் மருத்துவர் சிறந்த மருத்துவராகக் கருதப்பட மாட்டார். நோயின் காரணத்தை அறிந்து அதைப் போக்க சிகிச்சை அளிப்பதுதான் சிறந்த மருத்துவம். அதுபோலத்தான், வரையறுக்க முடியாத எந்த பிரச்சினையையும் அணுகும்போது முதலில் அதன் அடிப் படைக் காணரங்களைக் கண்டறிய வேண்டும். அதன்பின் தான் அதற்கான தீர்வு பற்றி சிந்திக்கத் துவங்க வேண்டும். விரிவான அணுகுமுறை பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான இரண்டாவது தடை, அதன் பரிமாணத்தையும், தாக்கத்தையும் புரிந்து கொள்ள முயற்சி செய்யாததுதான். உதாரணமாக ஒரு எழுத்தாளன் அல்லது கவிஞன் தான் படைத்தவற்றை எப்படிப் பிரசுரத் திற்குக் கொண்டு வருவது என்பது பற்றி சிந்திக்கிறான் என்று வைத்துக் கொள்வேர்ம். அவன் எதைப் பற்றி அல்லது யாரைப் பற்றியெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் ? முதலில் அவனது தேவைகளைப் பற்றி அல்லது விருப்பத்தைப் பற்றி கணக்கில் எடுக்க வேண்டும். அதன் மூலமாக எதை சாதிக்க விரும்புகிறான் ? அது எதன் மூலம் பூர்த்தி அடையும் ? அதற்கு என்ன செய்ய வேண்டும்? சமுதாயத்தில் இந்த நூலுக்கான தேவை இருக்கிறதா போன்றவற்றை சிந்திப்பது முதல்படி இரண்டாவதாக, பதிப்பாளர் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். யார் இதைப் பிரசுரிப்பார் ? யாரிடம் போனால் இதற்கான மரியாதையும், நியாயமான சன்மானமும் கிடைக்கும் ? அவரது செல்வாக்கு அல்லது நிலை என்ன ? அவர் இந்தக் கையெழுத்துப் பிரதியை மேம்படுத்த, யோசனைகள் சொல்லக் கூடியவரா ? சிறந்த முறையில் வெளியிடவும் விற்பனை செய்யவும் கூடியவரா ? இதை யெல்லாம் பார்க்க வேண்டும். மூன்றாவதாக, வாசகர்கள். எந்த மாதிரியான வாசகனுக்காக எழுதியிருக்கிறோம் ? அவர்களை அது சென்றடையுமா? அவ்வாறு அடைவதற்கு என்ன செய்யலாம் ? ஆகியவற்றை யெல்லாம் அந்த எழுத்தாளன் சிந்தித்தாக வேண்டும்.இந்த மூன்று விதமான கேள்விகளுக்கும் திருப்தி கரமான பதில் கிடைக்கும் என்றால், பிறகு அடுத்த கட்டத்திற்குச் செல்லலாம். அதாவது, திட்டத்தை செயல் படுத்துதல். இவ்வாறு செய்யத் தவறுவதுதான் இரண்டாவது முக்கியத் தடையாகும்.வழிமுறைகள், செயல்பாடுகள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சரியான வழிமுறை களும், செயல்பாடுகளும் இல்லாமல் இருப்பதுதான் மூன்றாவது முக்கியத் தடை. அது குறித்து சரியான விதத்தில் சிந்திக்காமல் அவசரமாக செயல்படுதல், நடைமுறைப் படுத்தும்போது நேரக்கூடிய மாற்றங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருத்தல் ஆகியவை பிரச்சினை களைத் தீர்க்க உதவாது. இதற்கான காரணங்கள் என்ன ? பிரச்சினையின் வீரியத்தையும், பரிமாணத்தையும், புரிந்து கொள்ளாமல்,‘வரும் போது பார்த்துக்கொள்ளலாம்’ என்று அவசரப்பட்டு செயலில் இறங்குதல்; சரியான சிந்தனைக் குவிப்பு இல்லாதது ஆகியவைதான் இதற்கான காரணங்கள். இந்த அம்சங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ள ஒரு சம்பவத்தைப் பார்ப்போம். சில வருடங்களுக்கு முன்பு பெங்களூரில், உலக அழகிப் போட்டியை பெரிய இந்திய நிறுவனங்கள் சில, நடத்த உத்தேசித்தன. அதற்கான ஏற்பாடுகளை உலகமே வியக்கும் வண்ணம் செய்தன. மிகவும் பிரம்மாண்டமானதாக அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தன. பல விளம்பர நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு களத்தில் இறங்கின. அதே சமயத்தில், உலக அழகிப்போட்டியை அங்கே நடத்தக் கூடாது என்று சில அமைப்புகள் போராட்டம் நடத்த ஆரம்பித்தன. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் இதை ஒரு பிரச்சினையாகவே மதிக்கவில்லை. எனவே இது பற்றி அவர்கள் யோசிக்கவே இல்லை. போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கங்கள், அவர்களுடைய பலம். அவர்களுக்கிருந்த செல்வாக்கு, மக்களின் அதரவு எதையும் பெரிதாக கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. பத்திரிகை நிருபர்கள் இந்தப் பிரச்சினையைக் குறித்து கேட்டபோதெல்லாம், அதைப் பொருட்படுத்தி பதில் சொல்லவில்லை. இந்த அழகிப் போட்டியை நடத்த வேண்டுமென்று விரும்பி, எழுத்தாளர்கள் மற்றும் இதன் ஆதரவாளர்கள் தங்கள் கருத்துக்களைப் பொது ஜன ஊடகங்கள் (பத்திரிகை, டி.வி.) மூலமாகப் பிரச்சார பணியில் வெளிப்படுத்தி வந்தனர். இதுபோன்ற செய்தி களுக்கும் கருத்துக்களுக்கும் ஊடகங்கள் பெருமளவில் முக்கியத்துவம் கொடுத்தன. நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த நிறுவனங்கள் இவற்றின் மூலம் பெரும் திருப்தி அடைந்தனர்.அதனால் இத்தகையோரை உற்சாகப்படுத்தியும் நிகழ்ச்சி தயாரிப்பிலும் பெரும் கவனத்தை அளித்து வந்தனர். ஆனால் அதே சமயத்தில் எதிர்ப்பாளர்கள் எப்படிப்பட்ட தயாரிப்புகளை மேற்கொண்டார்கள்? மக்கள் ஆதரவைத் திரட்ட என்ன செய்தார்கள்? ஆகியவற்றை ஊன்றி கவனிக்கத் தவறினர். உலக அழகிப் போட்டி நடந்த நாளன்று, ளர்ச்சி களும், ஆர்ப்பாட்டங்களும், அவற்றை சமாளிப்பதற்கான அரசின் நடவடிக்கைகளும் பெருமளவு நடைபெற்றன. இந்த நிகழ்வுகள் பத்திரிகைகளையும், தொலைக்காட்சிகளையும் அடைத்துக் கொண்டு மக்களின் கவனத்தை ஈர்த்தன. இதனால் உலக அழகிப் போட்டி என்ற மாபெரும் நிகழ்வு, அதன் பிரம்மாண்டம், அதன் சிறப்பு போன்றவை எதிர் பார்த்த அளவிற்குப் பேசப்படவில்லை. பார்வையாளர்களும் குறைவாகத்தான் வந்தார்கள். அதை ஏற்பாடு செய்த அத்தனை நிறுவனங்களும் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தன. பிரச்சினைகளின் முழுப் பரிமாணத்தை தெரிந்து, அதற்கு தகுந்தாற்போல தீர்வுகள், வழிமுறைகள், செயல் பாடுகள் ஆகியவற்றைத் தீர்மானித்து செயல்படுத்தும் அணுகுமுறை இல்லாது போனால் என்ன ஆகும் என்பதற் கான உதாரணம் இது. vinodhan, 7010054619

பிரச்சினைகள் எங்கிருந்து துவங்குவது ? Read More »

Shopping Cart