Blog post

குரு இல்லாதவர்களுக்கு யோக வாழ்க்கையில் பயணிப்பவர்களுக்கு முருகனை குருவாக தேர்ந்தெடுத்துக் கொள்ளலாமா இவர் உண்மையாக குருவா அல்லது யார்? PART 7

Post Views: 53 முருகன் எல்லோருக்கும் குருவானவர் அதனால் அவர் பெயர் காரணகு உருவாக இருக்கிறார் காரிய குரு அல்ல முருகன் யார் என்பதை வருகிற பாடல் விவரிக்கிறது “தானவனாய்த் தானாக நிலைத்து வாழந்து காயக்குமே கருவிகளைக் கழற்றிப் போட்டு காரண சற்குருவைநீ கண்டுகொள்ளே’ “காட்டினேன் கருநெல்லி உண்டதாலே சுப்பிரமணியர் ஞானம் 200 பாடல் 57 காரண சறகுருவென்று கருதலாசசே சுப்பிரமணியா ஞானம் 200 பாடல 61 தான் அவன் ஆவதற்கு அடிப்படை நீ நீயாக இரு அதற்கு காரண சற்குரு என்ற சிவயோக குருவைக் கண்டறியவேண்டும் அதன்பின் அகக்கருவி, புறக்கருவிகளாகிய தொண்ணூற்றாறு தத்துவங்களைச் சுட்டெரித்துக் கடக்கவேண்டும். அந்த குருவின்மூலம் மௌனயோகம் செய்து தான் அவனாக இயலும் பின் காரண சற்குரு யாரெனக் கண்டறியவேண்டும் கருநெல்லி முதலாகிய மும்மூலங்களைத் தானும் உடகொண்டு உலகிற்கும் வெளிப்படுத்தியதால் முருகனே காரணகுரு ஆவார் சகஸ்ராரமாகிய விந்தைக் கட்டிய முன்னோடியான முருகனே யோகநெறியில் செல்பவர் அனைவருக்கும் காரணகுருவாக இருந்து அருள்புரிகிறார் “கொல்லவே கருவிகளைக் கொன்றுபோட்டேன் கோளற வாசியைத்தான் கூர்ந்துபார்த்தேன் அல்லவே அறுமனையை அறிந்துகொண்டேன் அப்புறம் பனிரெண்டு தலமும்கண்டேன் வல்லவே பனிரெண்டை அடக்கிச்சென்றேன். வாய்வான சுழற்காற்றில் மருவிச்சென்றேன் மெல்லவே பூமலர்கள் வாசங்கண்டேன மேதினியைத் தான்படைத்தேன் விரித்துக்கொள்ளே” சுப்பிரமணியா ஞானம் 200. பாடல் 58 முருகன சிவயோகத்தில் நிலைத்து மும்மூலங்களை உட்கொண்டு அகக்கருவி, புறக்கருவிகளாகிய தொண்ணூற்றாறு தத்துவங்களைச் சுட்டெரித்துக் கடந்தார் எனினும் வாசியோகம் செய்வதை நிறுத்தவில்லை வாசியோகத்தைத் தொடர்ந்து புரிந்து ஆதாரத்தலங்களைக் கூர்ந்துப் பார்த்தார் அறுமனைகளாகிய சட ஆதாரங்கள் ஆறையும் கூர்ந்து நோக்கினார் பின் ஆறு சடாதாரங்கள். ஆறு நிராதாரங்கள் எனப் பன்னிரண்டு தலங்களையும் கூர்ந்துநோக்கிச் சமாதிநிலை நின்றார் அந்தத் தவ வலிமையால் பன்னிரண்டு ஆதாரத்தலங்களும் கைவரப்பெற்று, அவற்றைச் சித்தி செய்தார் மனமடங்கி வாயுவடங்கி பரவெளியில் ஒன்றித் தான் அவன் ஆனார் தாமே இறைநிலை பெற்றமையால், இப்பிரபஞ்சமாகவே மாறினார்   முருகனை குருவாக ஏற்றுக் கொள்வதற்கு 100 சதவீதம் அதற்கு தகுதியானவர் என்று இப்பொழுது நாம் அறிந்து கொண்டிருப்போம் காரணம் அவர் சாதாரணமாகமான ஒரு இறைநிலை தத்துவத்தோடு இல்லை அவர் பிரபஞ்சமாகவே இருக்கிறார் இப்பொழுதும் அவர் பிரபஞ்சமாகவே மாறி இருக்கிறார் அதனால் ஒரு முறை முருகா என்று கூப்பிட்ட உடன் பரமகுருவன் நம்மிடம் வந்து நம் வாழ்க்கைக்கு தேவையானதையும் அனைத்தையும் நம் வாழ்க்கையும் நோக்கத்தையும் நமக்கு செய்து முடிப்பார் காரணம் அவர் மும்மூலங்களையும் எடுத்து சமாதி நிலையில் நின்றவர் தன்னுடைய தவ வலிமையில் சித்தி அடைந்தவர் பிரபஞ்சமாகவே என்றும் இருந்து கொண்டிருக்கிறார் குரு இல்லாதவர்களுக்கு இன்று முருகனை குருவாக ஏற்றுக் கொள்ளுங்கள் அவர் உங்களுக்கு பாதை இல்லாத இடத்தில் பாதையை கொண்டு வருவார் வாழ்க்கைக்கு தேவையான பாதையை காண்பிப்பார் முருகன் என்றென்றும் உங்களோடு கூட இருப்பார் இது ஒரு அற்புதமான பதிவு முருகன் என்பவர் சாதாரணமானவர் அல்ல என்று புரிந்து இருக்கும் காரணம் நான் கொடுத்திருக்கிற அத்தனை பதிவும் புராண ரீதியா இதிகாசங்கள் ரீதியாக இல்லாமல் சித்தர்கள் என்று நினைக்கிறார்கள் தன்னுடைய பாடல் மூலமாக என்கிற பதிவை மட்டும் தான் உங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறேன் அடுத்த பதிவில்http://VINODHAN வடிவேல் என்றால் என்ன அப்படி என்ற ஒரு கேள்வி இருக்கு வடிவேல் என்று கூப்பிடுகிறோமே அப்படின்னா என்ன அவரை சுவாமிநாதன் என்று நம்முடைய புராணங்கள் அளிக்கிறது அப்படின்னா என்ன இது சித்தர்கள் பார்வையில் என்ன இருக்கிறது என்ற தகவலை உங்களோடு கூட பகிர்ந்துக்க போகிறேன் அதனால மறக்காம இந்த பதிவை SUBCRIBE செய்யுங்கள் அப்பொழுதுதான் உங்களுக்கு அடுத்த பதிவு வரும் தொடர்ந்து இணைந்திருங்கள் உங்கள் வினோதனுடன்

குரு இல்லாதவர்களுக்கு யோக வாழ்க்கையில் பயணிப்பவர்களுக்கு முருகனை குருவாக தேர்ந்தெடுத்துக் கொள்ளலாமா இவர் உண்மையாக குருவா அல்லது யார்? PART 7 Read More »

முருகனின் அவதார நோக்கத்தின் சூரசம்காரம் என்பது என்ன அதனுடைய சித்தர்கள் நினைத்து இருப்பது என்ன PART 6

Post Views: 49 சூரன் யார்? சூரசம்காரம்  என்பது என்ன?        சூரன் என்பது பதமாகரன் சிங்கமுகாகரன் கஜமுகாசுரன் முதலான அசுரர்களைக் குறிப்பதாக புராணங்கள் கூறுகின்றன ஆனால் சூரன் என்று முருகன் யாரைக் குறிப்பிடுகிறார் என்பதைப் பின்வரும் பாடல்வழியாக விளங்கிக்கொளவோம் நில்லடா மும்மூலம் கொண்டுதானும் நிலையான வாசியைத்தான் நினைத்துப்போற்று அல்லடா கற்பமுந்தான் கொள்ளாமற்றான் அறிவான வாசியைத்தான் ஏற்றினாக்கால மெல்லடா தேகமுந்தான் ஒத்துப்போகும் மேன்மையுள்ள வாசியுந்தான் குத்துவோடும் வல்லடா வல்லவனாயக் கற்பங்கொண்டு வாய்வான வாசியைத்தான் வாங்குவாயே” சுப்பிரமணியர் ஞானம் 200. பாடல் 55 வாங்கியிட ரவிகுளிகை மதியில் கட்டும் வாரிவிடும் பிரமத்தில் வளர்ந்தே நிற்கும் ஏங்கியிட மனக்கண்ணும் தீர்ந்துபோகும் எல்லையில்லாப் பேரொளியும் ஒன்றும்வாய்க்கும் தாங்கியிட தமந்திரஙகும் அமிர்தம்பாயும் சண்டனென்ற சூரனையும் சண்ணிக்கொள்ளும் மூங்கியிட மும்மூல மற்றுப்போகும் முக்கியமாய சிவயோகம் வாய்க்குந்தானே” சுப்பிரமணியர் ஞான்ம 200 பாடல் 56     சிவயோகம் செய்யும்போது மும்மூலத்தையும் தவறாமல் உடகொண்டு நித்தமும வாசியோகம் செய்துவர வேண்டும் மும்மூலம் கற்பங்களை உடகொள்ளாமல் வாசியை மட்டும் செய்தால் தேகம் முதுமையில் அழிந்துவிடும் தேகம் அழிந்தால் யோகமும் அழிந்துபடும் எனவே மும்மூலத்தைத் தெளிவாக அறிந்துகொண்டு தவறாமல் வாசியோகத்தை அப்பியாசம் செய்துவரவேண்டும் இவ்வாறாக மும்மூல கற்பங்களை உடகொண்டு வாசியோகம் செய்வதனால் கிடைக்கும் பயனகள் அடுத்து விவரிக்கப்படுகிறது இவ்வாறு மும்மூலக கற்பங்களை உடகொண்டு.   வாசியோகம் புரியும்போது, ரவியும் மதியும் சுழுமுனையில் ஒன்றும் மனக்கிலேசம் தீர்ந்து பிரம்மத்தில் ஒன்றலாம் தன்னுள் இருக்கும் வாலை ஒளியையும், காயத்திரி என்ற பரவெளியில் உள்ள பரவாலையாகிய ஒளியையும் தெளிவாயக காணும் பேறு வாய்க்கும் தமா என்ற பத்தாம் வாசல் திறந்து அமிர்தம் இறங்கும் அதன்பின் சூரனாகிய சண்டனை அதாவது மரணத்தினை வெல்ல்லாம்     இங்கு சூரன் என்று குறிப்பிடுவது யாரென்றால் சண்டனாகிய மரணத்தைத்தான் என்று தெளிவுபடுத்துகிறார் பன்னிரண்டு வருடங்கள் வாசியோகம் செய்து மும்மூலங்களை உடகொண்டு 96 தத்துவங்களைச் சுட்டெரிக்க வேண்டும் 96 தத்துவங்களைச் சுடுதல என்பது சாதாரண செயலன்று ஒவ்வொரு தத்துவத்தினையும் கடக்கும்போதும் அது மரணத்திறகுச் சமமான துன்பத்தைத் தரும் ஆக 96 முறை மரணத்திற்கீடான துன்பத்தை அனுபவித்து, 96 தத்துவங்களைக் கடக்கவேண்டும் இதுவே சூரனாகிய மரணத்தை வெல்லுதலாகும் வாசியோகம் புரிந்து, மும்மூலங்களை உட்கொண்டு 96 தத்துவங்களைச் சுட்டெரித்து, சூரனாகிய மரணத்தை வெல்லுதலே சூரசமகாரமாகும் ஆனால் இந்த சூரசமகாரம், புராணங்களில் கதையாகப் புனையப்பட்டுள்ளது.   எளிய மக்களுக்கு விளங்கும் வகையில் தத்துவங்களை அசுரர்களாகவும். மரணத்தை சூரனாகவும் வாசியை மயிலாகவும் வடிவேலாகவும் உருவகப்படுத்திப் புராணக் கதையாகிவிட்டது அரிய கருத்துகள் அனைத்து மக்களையும் சென்றடையவேண்டும் என்ற நோக்கில் வேதவியாசா வேதங்களையும் புராணங்களையும் உருவகங்களுடன் புனைந்து அளித்துச் சென்றார் மும்மூலங்களை உடகொண்டு 96 தத்துவங்களைச் சுட்டெரித்து, பன்னிரண்டு வருடங்கள் அப்பியாசம் செய்து, சிவயோகம் சித்தியானபின் மௌனயோகம் புரியத் தொடங்கலாம்.       சூக்குமமாகப் பாடலில் பொதிந்துள்ள கருத்துகள் தேவையான அளவு இங்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளன. சிவயோகம் செய்யுமளவு உடலாலும் மனதாலும் உணாவாலும் பக்குவப்பட்டவர்களுக்கு இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள மும்மூலம் என்ற வார்த்தையின் செயல் சக்தி என்னவென்று புரியும் இல்லாதவர்களுக்கு புரியாது  இப்பொழுது புரிகிறதா சூரசம்காரம் என்பது என்னவென்று நாம் நினைத்துக் கொண்டது வேறு சித்தர்கள் சூரசம்காரம் என்பது சொல்லப்பட்டது வேறு என்று இப்பொழுது உங்களுக்கு தெளிவாக புரியும் சூரன் என்றால் யார் என்று தெரியும் அது எங்கிருந்து தொடர்பு உள்ளது என்று தெரியும் புராண இதிகாசங்கள் நமக்கு எதையெல்லாம் புதைக்கப்பட்டது என்று நமக்கு புரிந்து இருக்கும் என்று நான் நம்புகிறேன் இப்பொழுது அடுத்த பதிவில் நாம் என்ன பார்க்க போறேன்னா இந்த முருகன் என்பவர் யார்? முருகன் என்பவர் ஒரு குரு வா அல்லது வேறயாரா இவர் எப்படி இப்படி இருக்கிறார் அதை குறித்த அடுத்த பதிவில் நாம் பார்க்க போகிறோம் தொடர்ந்து இணைந்திருங்கள் உங்கள் வினோத் வினோதனுடன் மறக்காமல் இந்த பதிவை subscribe செய்யுங்கள் என்னுடைய blog உங்களுக்கு அடுத்த பதிவு உங்களுக்கு வரும்

முருகனின் அவதார நோக்கத்தின் சூரசம்காரம் என்பது என்ன அதனுடைய சித்தர்கள் நினைத்து இருப்பது என்ன PART 6 Read More »

முருகனுடைய மாணவர் யார் என்று கேட்டால் அதிர்ந்து போய்விடுவீர்கள் நாம் இதுவரை கேட்டதை விட ஆழமானது யார் அவர் என்ன செய்தார்? PART 5

Post Views: 51 முருகன் தன்னுடைய சுப்பிரமண்ய ஞானக்கோவை என்ற சுத்த ஞானத்தில் விவரிக்கிறார் எதை விவரிக்கிறார் என்றால் தம்மிடம் யார் வந்தது எதற்காக வந்தார் என்ற ஒரு விஷயத்தையும் ரகசியத்தையும் மும்மூல ரகசியத்தையும் விவரிக்கிறார் “காட்டுகிறேன் அகத்திய மாமுனியேகேளு கருத்தொன்றாய் தானிறுத்திக் கபடமற்று நாட்டுகிறேன மௌனத்தால் தினமுமாக நந்திகொலு சிஙகார நடனமகண்டு வீரேழு மனிதனையும் அறுவதாக்கி விட்டகுறை தொட்டகுறை விதியைப் பார்தது சூரேநீ அசுரர்தமை வதைத்தாலே சுப்பிரமணியா என்றெமக்குப் பெயரிட்டாரேப் பேரிட்டே எனைஅணைத்தாள் எந்தனாத்தாள் பிரணவத்தோடு ஆதாரம் தன்னைக்காட்டி சீறிட்டே எனைஅணைத்து முத்தமிட்டாள தித்திக்கும் பாலமுதம் செலுத்திவைத்தாள் விறிட்டே ஆங்காரம் போகச்செய்தாள விந்தினிலே விற்றிருந்து வாழ்ச்செய்தாளந்த பாரிட்டே நாலவேத மார்க்கம் சொன்னாள பஞ்சவாண பதிதனிலே பாயந்தேன் பாரே” சுப்பிரமணியா ஞானக்கோவை சுத்தஞானம் பாடல் 3 இந்தப் பாடல் உடைய அர்த்தம் என்ன சொல்லுகிறது என்றால்மாணவராகிய அகத்திய மாமுனியை நோக்கிச் சுபபிரமணியா தனது குரு தனக்கு அருளியவற்றை விவரிப்பதாக இப்பாடல் அமைந்துள்ளது முருகன மௌனயோகம் புரிந்தபோது பிரபஞ்சத்தில் திகழும் பரவாலையாகிய காயத்திரியைக் கண்டார் பராபரனாகிய அப்பனையும் பராபரியாகிய ஆத்தாளையும் தரிசித்தார் யோகசித்தி பெற்ற முருகன சூரன் முதலாகிய அசுரர்களை அழித்தார் அதனால் சுப்பிரமணியர் என்ற பெயரும் முருகனுக்கு சூட்டப்பட்டது சூரன் என்பதை முருகன் தெளிவுபடுத்துவதைப் பின்பு காண்போம் பராபரனும் பராபரியும் ஒருங்கிணைந்த நிலையே பரம ஆகும் ஆத்தாளாகிய பராபரியும் அப்பனாகிய பராபரனும் சேர்ந்தே முருகனுக்கு யோகத்தினைப் போதித்தனர் ஓம் எனும் பிரணவத்தின் பொருள் விளக்கி, அகாரம், உகாரம் மகாரம், நாதம் விந்து ஆகிய பஞ்சவித்துக்களின் தன்மைகளைச் சொல்லி பன்னிரண்டு ஆதாரங்களையும் ஆத்தாள் காட்டுவித்தாள் பராபரியான ஒளியோடு முருகன் ஒன்றியமையை அணைத்து முத்தமிட்டாள் எனும் அடி குறிக்கிறது தித்திக்கும் பாலமுதமாகிய அமிர்தத்தை முருகனுக்குக் சுரக்கச் செய்தாள் அகங்காரம் கோபம், மகிழ்ச்சி, ஆணவம் போன்ற உணர்வுகள் அற்றவனே யோகியாக முடியும், ஞானியாக முடியும் நிக்கவேண்டிய இந்த உணர்வுகளை ஆத்தாள் போக்கினாள் ஏழாவது தலமாகிய விந்து எனும் சகஸ்ராரத்தலத்தின் மாமத்தை ஆத்தாள் விளக்கி அருளினார் அந்தகம் முருகனை சகஸ்ராரத்தலத்திலேயே விற்றிருக்கவும் அருள் புரிந்தாள் நால் வேத மார்க்கம் என்பது ரிக், யஜூர், சாம், அதாவணமாகிய நான்கு வேதங்களைக் குறிப்பதன்று நான்குவித மார்க்கங்களான சரியை, கிரியை, யோக, ஞானத்தை விளக்கியுரைத்தாள் இவற்றின் பயனாக முருகன் பஞ்சவாண பதியாகிய பரவெளியில வியாபித்தார் மேற்கண்ட முருகனின் தன்னிலை விளக்கங்கள் மூலமாக, பராபரனும் பராபரியும் இணைந்த பரமாகிய இறைவனே முருகனுக்குக் குருவாக அமைந்து, அனைத்தையும் போதித்தமை தெளிவாகிறது. முருகனின் மும்மூலம் அதாவது முருகன் அறிந்த காயகல்பங்கள் என்னென்ன தெரியுமா? இதை சாப்பிட்டதால் தான் அவர் ஒளி உடலாக மாறினார் எப்படி இந்த பாடல் அதை விவரிக்கிறது மும்மூலம் என்பது சித்தர்களின் இரகசிய பரிபாசை ஆகும் மும்மூலத்தை விஞ்சை மூன்றெழுத்து என்பர் முப்பு என்றும் சொல்லுவர் அகார உகார மகாரமாகிய மூன்று எனவும் அழைக்கப்படும் விஞ்சை என்பது மரணத்தை வெல்லும் இரகசியமான சக்தி மிக்க சூத்திரம் ஆகும். இத்தகைய மும்மூலத்தை வெளிப்படையாகக் கூறக்கூடாது என்பது சித்தர்களின் கட்டளை எனினும் மும்மூலம் குறித்த இப்பாடலின் பொருளை மட்டும் அறிந்துகொள்வோம் “பாரடா வெண்சாரை யுண்ணும்போதும் பாலகனே கருநெல்லி அருந்தும்போதும் ஆரடா நாகமதை மைந்தா நீயும் அப்பனே பணவிடைதா னரையே கொள்ளு ஏரடா பதின்மூன்று வருடம் மைந்தர் இடைவிடா திம்மூன்றை உண்டாயானால் வேரடா வினையகலும் பாவம் போகும் விஞ்சையெனு மூன்றெழுத்தை விரும்பிப்பாரே” சுப்பிரமணியா ஞானம் 500 பாடல் 115 இப்பாடலில் வெண்சாரை கருநெல்லி, நாகம் என்று குறிப்பிடப்படுபவைதான் மும்மூலம் ஆகும் இவை பரிபாசையாகக் கூறப்பட்டுள்ளன வெண்சாரை கருநெல்லி, நாகத்தைத் தேடி காடு மலையெல்லாம் அலையவேண்டாம் என்றும், இவை வாழும் பகுதியிலேயே கிடைக்கும் என்றும் சித்தர்கள் அறிவுறுத்துவா இந்த மும்மூலங்கள் கொடிய நச்சு என்பதால் நாகம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளன. இத்தகைய சக்தி மிக்க சிவ கல்பங்களாகிய மும்மூலத்தினைத் தான் உண்டதாக முருகன் கூறுகிறார் முமமூலங்கள் பற்றி முழுமையாக, சிவயோகம் செய்யத் தகுதி படைத்தோர் மட்டுமே அறிந்து கொள்ளலாம் இப்பொழுது புரிந்திருக்கும் எல்லோருக்கும் இந்த கல்பத்தை உண்ணாமல் சிவயோகம் செய்ய தகுதி இல்லவே இல்லை ஆனால் பல பேர் இன்று வரை வாசியோகத்தில் மையத்திலேயே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் அதுவும் இந்த வாசி யோகம் அந்த வாசியோகம் அந்த வாசியோகம் என்று ஆனால் நம்முடைய முப்பாட்டன் முருகன் அனைத்தையும் உணர்ந்தவன் அனைத்தையது ரகசியத்தையும் அறிந்தவன் இதுதான் மிகச்சிறந்த தகுதி என்று நான் சொல்லவில்லை முருகனே தன்னுடைய பாடலில் சுப்பிரமணிய ஞானத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார் அடுத்த பதிவில் முருகனுக்கு பல பெயர்கள் உண்டு அதில் ஒன்றுதான் சூரசம்காரம் என்று சொல்வார்கள் சூரியன் என்றால் என்ன எதற்கு இந்த சூரசம்காரம் நடந்தது இதை சித்தர்கள் என்ன சொல்கிறார்கள் இதனுடைய ஆழம் என்ன இதனுடைய புராணங்கள் இதிகாசங்கள் இதைதான் சொல்கிறதா இல்ல வேறு ஏதாவது இருக்கிறதா என்ற பல ஆராய்ச்சிகளுக்கு உட்பட்ட ஒரு விஷயத்தை குறித்து நாம் பார்க்க போகிறோம் தொடர்ந்து இணைந்திருங்கள் உங்கள் வினோதனுடன் மறக்காமல் இந்த பதிவை SUBCRIBE   செய்து கொள்ளுங்கள்

முருகனுடைய மாணவர் யார் என்று கேட்டால் அதிர்ந்து போய்விடுவீர்கள் நாம் இதுவரை கேட்டதை விட ஆழமானது யார் அவர் என்ன செய்தார்? PART 5 Read More »

முருகன் சித்தராய் மாறுவதற்காக செய்த மெளன யோகமும் அவனுடைய சித்தியும் PART 4

Post Views: 51 சித்தராய் இருந்த முருகருக்கு மௌன யோகத்தை எப்படி கற்றார் மௌனயோகமும் முருகனும்    பாரப்பா வெங்கெங்கு மோடினாலும் பலபலவாய மந்திரங்கள் படித்திட்டாலும் ஆரப்பர் மௌனமென்ற ஆதிபீடம் அதினாலே சகலசித்து மாட்டிவைக்கும் நேரப்பா மற்றதினா லாவதென்ன நிலைகண்ட பெரியோர்கள் நீஞ்சுவார்கள் ஊரப்பா கோடியிலே யொருவனுண்டு உற்றுணர்ந்த பெரியோர்க ளுணமைதானே சுப்பிரமணியா ஞானம் 500, பாடல்371 எங்கெங்குச் சென்றுத் திரிந்தாலும் பலவகையான மந்திரங்கள் ஓதினாலும் அதனால் எந்தவிதப பயனும் கிட்டாது மௌன யோகம் செய்தால் மட்டுமே சகலவிதச் சித்தாடல்கள் செய்ய இயலும் வாத சித்தி காயசித்தி, ஞானசித்தி வேதைசித்தி, அஷ்டகர்மம் போன்ற 64 சித்திகளும் மௌன யோகத்தினால் எளிதில் கிடைத்திடும் உலகில வாழும் மனிதருள் கோடியில ஒருவர்தான சிவயோகம் சித்தியடைந்து, மௌன யோகம் செய்யும் தகுதியைப் பெறுவார் சிவயோகம் சித்தியடைந்த பெரியோர்கள், மௌன யோகம் புரிந்து இறைநிலை அடைவார்கள் முருகப்பெருமானின் குரு யார் என்று இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது ஆனால் அதை அவரே தன் வாயில் வார்த்தையாக சொல்கிறார் சுப்பிரமணிய ஞானத்தை பார்ப்போம் வாருங்கள்  பகாந்திட்டார் பராபரமான சோதி பதிவான மெய்ஞ்ஞானம் பகர்ந்தே செய்தார் அகாந்திட்டார் மும்மூலம் உபதேசித்தார் ஆறுவரை யூடுருவி அறியச் சொன்னார் இகாந்திட்டார் ஈராறுதலமும் சொன்னார் இரவிமதி சோலையிலே இருக்கச் சொன்னார் தகாந்திட்ட விந்துவையும் கூட்டச் சொன்னார்சணமுகந்தானென்று சொல்லிச் சாற்றினாரே”  சுப்பிரமணியர் ஞானம் 500, பாடல் 19   முருகனுக்குப் பராபரமான இறைவனே சோதிவடிவில மௌன யோகத்தைக் கற்றுக் கொடுத்தார். இயேசு கிறிஸ்துவுக்கு இறைவன் எப்படி விவிலியத்தை புதிய விவிலியத்தை அருளினார் அதைப்போல இவ்வாறாக முகம்மது நபிகளுக்கு (ஸல) இறைவன் குரானை அருளினார் எனினும் முருகனுக்கு அருளியது பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பாகும் மும்மூலம் என்னவென்று சோதிவடிவிலான குருவான இறைவன் விளக்கி அருளினார் இதனையே முருகன் உலகோர்க்கு உபதேசித்தார். ஆறுவரையாகிய ஆறு ஆதாரங்களை ஊடுருவிக் கடக்கும்படியும் இறைவன் அறிவுறுத்தினார் அடுத்து ஈரறுதலங்கள் என்பது உடலில் உள்ள ஆறு சட ஆதாரங்கள் மற்றும் உடலுக்கு வெளியிலுள்ள ஆறு நிராதாரங்கள் ஆகிய பன்னிரண்டு தலங்களையும் விவரித்தார் இரவியாகிய பிங்கலையும் மதியாகிய இடகலையும் கூடும் சோலையாகிய ஆகஞாவில் ஊன்றி இருக்கும்படி கூறினார் அடுத்து விந்து என அழைக்கப்படும் சகஸ்ராரத்தைக் கட்டும்படிப் பராபரமாகிய சோதிச் சொன்னார் அத்துடன் சண்முகம் என்ற பெயரும் அளித்தார் சண்முகம் என்பது சரவணபவ மந்திரம் (ஷ்டாட்சர மந்திரம்) என்னும் மௌன யோகத்திற்கான மந்திரம் இவை அனைத்தையும் சோதிவடிவிலாகிய இறைவன் குருவாக அமைந்து முருகனுக்கு அருளினார்  நாம் இதுவரையில் பார்த்தது முருகனைக் குறித்த மவுன யோகத்தையும் அவருடைய குருவையும் குறித்த ரகசியத்தை குறித்து நாம் பார்த்தோம் இப்பொழுது இன்னும் ஆழமாக குரு உடைய மாணவர் யார்? அதாவது முருகனுடைய மாணவர் ஒன்று யாருக்காக யாராவது இருக்க வேண்டும் அல்லவா அது யார் என்று நமக்கு தெரியாது இதுவரை நாம் வேறு விதமாக நினைத்துக் கொண்டிருந்தோம் ஆனால் அது அல்ல அது எப்படி என்று அடுத்த பதிவில் நாம் பார்ப்போம் தொடர்ந்து இணைந்திருங்கள் உங்கள் வினோதனுடன்

முருகன் சித்தராய் மாறுவதற்காக செய்த மெளன யோகமும் அவனுடைய சித்தியும் PART 4 Read More »

முருகனைக் குறித்து சித்தர்களின் என்ன நினைக்கிறார்கள் அதை நோக்கிய பயணம் PART 3

Post Views: 53 முருகனைப் பற்றி சித்தர்களின் கருத்து முருகன் கடவுளா? அல்லது மனிதனா? போகர் 7000 என்ற பெருநூலில் முருகனைப் பற்றிய பதிவுகளைப் பார்ப்போம் செப்பலாம் சுப்ரமணியன் என்பார் பாரு சிறப்பான மனிதனல்லால் வேறொன்றில்லை ஒப்பமுடன் நீநினைத்த சுப்பிரமணியன்  ஓகோகோ நாதாந்தக் கடவுளாசசு போகா போகர் 7000 பாடல் 5622 “புல்லவே கவிவாணர் கட்டுவாக்கியம் புகழாகப் பலப்பலவாம் நாம்மதன்னை சொல்லவே நற்கடவுள் என்றுகூறி செம்மலுடன் மதிகெட்டும் துதிப்பார்பாரே” போகர் 7000 பாடல் 5623 தென்திசையில் அகத்தியாக்கு உபதேசங்கள் செய்த்தொரு வடிவேலா சித்துதாமும் பன்றிபெருச் சாளியின்மேல் சவாரியேகும் பண்பான விநாயகருக்குத தமபியாமே தம்பியே எந்தனுக்குக் குருவும் ஆகும் தாக்கான வடிவேலா தன்மைபாரே” போகா போகா 7000 பாடல் 5942  5943 கடவுள் என்று நீ நினைத்த சுப்பிரமணியன மனிதனாகப் பிறந்து, வாசியோகத்தில் நாதாந்தம் என்ற இறைநிலை அடைந்து கடவுளநிலை ஆனவர் வடதிசையில் குரு முனிவர் அகத்தியாக்கு வடமொழி கிரந்தத்தில் அஷ்வினி தேவர்கள் குரு அது முழுமையுடையதாக இல்லை என்பதால் தெனதிசையில் ஞானம் பெற முருகனைத் தேடிவந்தவர் அகத்தியா (அகத்தியர் முருகனைச் சந்தித்த நிகழவைப பிறகு பார்ப்போம்) தென்திசையில் தமிழ மொழியில் அகத்தியாக்கு ஞானகுரு முருகன் ஆவார் வடிவேலா என்ற முருகன் ஒரு சித்தா ஆவார் ஆனால், முருகனைப் பன்றி போன்ற பெருச்சாளிமீது சவாரி செய்யும் விநாயகக் கடவுளின் தம்பி என்று புராணங்களும் சாத்திரங்களும் தவறாகச் சொல்கின்றன விநாயகக கடவுளுக்குத் தம்பி என்று சொல்லப்பட்ட முருகன் எனக்கு குரு இத்தகைய மகாசித்தரைப் பலபல பெயர்கள் சொல்லி இறைவன என்று கவிவாணர்கள் சொல்லியதை நம்பி மதிகெட்டுத் துதிக்கிறார்கள் போகா தனது குருவான முருகனுக்குப் பழநியில் நவபாசாணச் சிலை வைத்து அபிசேகம் செய்து, அபிசேகப் பிரசாதத்தால் தீராத நோய்களைத் தீர்த்தார் சில ஆண்டுகளுக்கு முன்புவரை இது நடந்தது தற்போது இச்சிலை அகற்றப்பட்டது முருகன் உண்மையாகவே மனிதனா அல்லது கடவுளா? முருகன் வாசியோகம் செய்து. அதில் நாதத்தின் முடிவு கண்டு நாதாநிலை பெற்ற சித்தராகி, கடவுளநிலை அடைந்தவர் புராணங்களில் முருகனைப் பரமசிவனின் மகன் என்றும் விநாயகருக்குத் தம்பி என்றும் கட்டுக்கதை மற்றும் புராணங்களைப் புனைந்தனர் முருகன் போகருக்குக் குரு ஆவார் மூன்று யுகங்களிலும் முருகன் இருந்தாரா அதிர்ச்சி தகவல் முருகன மனிதன் என்றால் அவர் தோன்றிய காலம் மனிதநிலையில் வாழ்ந்த காலம் எது? என்பது பற்றி போக சொலவதைப் பார்ப்போம் “துன்னவே மூன்றுயுகம் கடந்த வேலா துப்புறவாய்ப் பிறந்ததொரு நேர்மையப்பா சொன்னபடி ஆவணியாம திங்களப்பர் சொல்லுகிறேன் முதற்பூசங் காலதானொன்றே” போகர்  7000. பாடல் 594! மூன்று யுகங்களுக்கு முன்பு, ஆவணி மாதம் பூச நட்சத்திரம் முதல் காலில் பிறந்தவர் வயது மற்றும் காலத்தினை நிர்ணயம் செய்யமுடியாது முருகன வாழ்ந்த காலம் பற்றி காகபுசுண்டர் சொல்வதைப் பார்ப்போம் பேச்சப்பா வேலவரும் தொக்கித்தக்கி பிரளயங்கள் முடிந்தவுடன் இவ்விடம் வந்தார் மூச்சப்பா யென்னவென்று வினவிக்கேட்டேன் மூதறிவினோடு எனக்கு முறையைச் சொன்னார் வாச்சப்பா யிருவென்று யுகங்கள்தோறும் மறைந்துநான் வெளியேறும் வகையுஞ் சொன்னேன் காச்சப்பா யிருவென்று யிருத்தியென்னைக் கருதிவந்த விபரமெல்லாம் கேட்டிடடாரே” காகபுசுண்டர் பெருநூல் காவியம் 1000 பாடல் 923   வாட்டமிலாதே கேட்டுக் குமரனுந்தான் மலைமேலே சென்றுவிட்டான் மார்க்கத்தோடே” காகபுசுண்டா. பெருநூல் காவியம் 1000 பாடல 92   முதன்முதலாக ஏற்பட்ட குமரிக்கண்டத்தில் லெமோரியா கண்டம் முதல் சுனாமி குமரிக்கண்டம் இருந்தபோது முதல் தமிழ்ச்சங்கம் இருந்தது குமரிக்கண்டத்தில் முருகன் அரசனாகவும், தமிழ்ச்சங்கத் தலைவனாகவும் கடம்ப மாலையைத் தரித்து வாழ்ந்தார் இவர் கந்தமுருகன் என்றும் குறிப்பிடப்படுகிறார் இது பல சஙக நூல்களின் மூலம் அறியப்பட்டது இதை உறுதி செய்யும் வகையில் காகபுசுண்டர் பாடல் உள்ளது பல பிரளயங்கள் ஏற்பட்டுக் குமரிக்கண்டம் அழிந்தது பிரளயங்கள் முடிந்தபின்பு, பிரளயங்களில் இருந்து பெரும் முயற்சியால் தப்பிப் பிழைத்து, காகபுசுண்டர் வாழ்ந்த இடத்திற்கு வந்தார் வேலன் என்ற முருகன காகபுசுண்டர் முருகனிடம் “என்னைத் தேடி வந்த காரணம் என்ன?” என்று கேட்டார் அதற்கு முருகன் மூதறிவுடன் மிகுந்த ஞானத்துடன், தான் பிரளயத்தில் இருந்து தப்பிவந்தத் தொழிலநுட்ப முறையைச் சொன்னார் மேலும் நான் பிரளயத்தில் இருந்து தப்பியதைக் கேட்டார் நான் எப்படி ஒவ்வொரு பிரளயத்தின்போதும் மறைந்து, மீண்டும் பிரளயம் முடிந்தபின் வருகிறேன் என்ற தொழில்நுட்ப வகையைச் சொன்னேன் மேலும் அவர் அறிய விரும்பிய பல தொழில்நுடப் விபரங்களையும் கேட்டு அறிந்தார் அதன்பின் என்னை நான் இருந்த இடத்திலேயே இருக்கச் சொல்லி, அவர் மலைமேல் சென்று அமர்ந்தார் முருகன், இராமாயணக காலத்திற்கும் முற்பட்டவன் என்பதை, வசிஷ்டா இராமனுக்கு உபதேசம் செய்த ஞானோதயம் என்ற நூலிலிருந்து அறிகிறோம் மேலும் முருகனைப் பார்த்து, ஞானம் பெறுவதையும் சொலகிறார்  வசிஷ்டருக்கும் முருகனுக்கும் எப்படி தொடர்பு? என்ற கேள்வி எழுகிறது காகபுசுண்டர் வசிஷ்டருக்குக் குருவாக இருந்து உபதேசம் செய்தநூல் காகபுசுண்டர் பெருநூல் காவியம் 1000 சென்ற பாடலில் முருகனும் காகபுகண்டரும் தங்களது தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து பெற்ற யோக ஞானத்தை வசிஷ்டருக்குக் கற்பித்துள்ளார் இந்த யோக ஞானத்தை முருகனிடம் இராமன் பெறுவதைக் கீழ்க்கண்ட பாடல் சொல்கிறது யோகமதில ரேசக பூரசும் பண்ணி உண்மையுடன் கும்பகத்தில் நின்றுகொண்டு ஏகமென்ற மனதுரமாய் செபித்தாயானால் என்மகனே வடிவேலன் பிரகாசிப்பான தாகமாய் அவர்பதமே பணிந்து போற்றி தண்மையுள்ள சிவாயகுரு சிவமே என்று வேகமுடன் பூட்டுமுனை திறகக வென்று வேண்டினால் திறவுகோல் தருவார்தானே” வசிஷ்டர் ஞானோதயம் 15 பாடல் 10 வாசியோகத்தில் ரேசக பூரகம் செய்து, கும்பக நிலையில் மனதை ஒருமுகப்படுத்தி முருகனைத் துதி அப்போது முருகன பிரகாசிப்பான சுழிமுனை திறக்கும் சூட்சமத்தை வேண்டிக்கேள அப்போது பத்தாம் வாசலாகிய சுழிமுனை திறக்கும் வழியை முருகன் சொல்வார் இப்பாடலில் அறிவது முருகன் இராமாயண காலத்திற்கும் முந்தையவன் இராமாயண காலத்தில் வேண்டியவாக்கு ஞானம் வழங்கியவன் இராமனும் முருகனின் வாசியோகத்தைக் கற்றவன் நாமும் வாசியோகம் கற்று ஞானம் பெறுவோம் முருகன் செய்தது. உபதேசித்தது, முருகனின் தற்போதைய ரூபம் மற்றும் உண்மைகளை அடுத்துக் காண் செய்த்து முருகனைப் பற்றி பிற சித்தர்கள் கூறியவற்றைக் கண்டோம் முருகனைப் பற்றி அவரே கூறிய வருந்தியெனைப் பணிந்தவர்கள் குருவென்றார்கள் செல்லடா செல்லனென்றுஞ் சிவனானென்றுஞ் செப்பினா ரோமென்று மாமென்றேனே? சுப்பிரமணியா ஞானம் 500 பாடல் 362 செய்திகளை இங்கு காண்போம் ஆமென்ற சொற்கேட்டுச் சித்தாகூடி யாதிகுரு நீயென்று அருளைப்போற்றி ஓமென்று குண்டலியைப் பார்த்தேயோடி யுனைபோலே சித்தாகடா னிலலையென்றார் நாமென்று அவர்களுக்குச் சொன்னபேச்சு நாதாந்த மௌனமதை யவாக்கேயீந்தேன் ஓமென்று மாமென்று மெழுத்தைக்காட்டி உயர்வான வடகிரியி லிருமென்றேனே” சுப்பிரமணியர் ஞானம் 500 பாடல் 363 இருமென்ற பேச்சாலே ஆ-ஊ-என்று ஏகினார் குறுஞ்சித்த ரனேகங்கோடி திருமந்திர மூலமெல்லாம் வெளியாயகாட்டிச் செகத்திலுள்ள மனிதர்களைச் சித்தராக்கி குருமந்தர மறியாமற சாவாரென்று குணம்வந்து மனமிரங்கிக குருபோற சொன்னேன மருமந்தர மேதுக்கு மக்காள்மக்காள் மகாரமல்லோ தீபவொளி மார்க்கம் பாரே” -சுப்பிரமணியா ஞானம் 500 பாடல் 364 பிற சித்தர்கள் எல்லாம் கூடி முருகனை குருவாக இருந்து யோகம், ஞானம் போன்றவற்றை அருளும்படி வேண்டினர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி முருகனும் ஒத்துக்கொண்டார்? அனைத்துச் சித்தர்களும் முருகனை ஆதிகுரு எனப் போற்றி வணங்கினா. முருகனின் யோக மார்க்கத்தைக் கற்ற சித்தாகள் குண்டலினியை எழுப்பி முகதிநிலையை அடைந்தனா சிவன் அருளிய ஆறாதாரங்களைத் தாண்டி ஏழாவது நிலையான சகஸ்ராரம் என்ற விந்துநிலையினைக் கண்டறிந்து உலகிறகு அளித்தார் முருகன் எனவேதான் முருகன பரமகுரு என்றும் போற்றப்படுகிறார் அதாவது பரமனுக்கே, குருவாக விளங்கியவர் முருகன நமது உடலின் உள்ளிருக்கும் ஆதாரங்கள் சட ஆதாரங்கள் எனப்படும் உடலுக்கு வெளியே பரவெளியில் ஆறு ஆதாரங்கள் உள்ளன அவை நிராதாரங்கள் எனப்படும் சட ஆதாரங்களைக் கடந்து நிராதாரங்களில் யோகம் புரிவதே மௌனயோகம் எனப்படும் நாதாந்தம் என்பது மௌனயோகத்தைக் குறிக்கும் அதற்கான மந்திரமே ‘ம’ ஆகும் இத்தகைய மௌனயோகத்தையும் அதற்கான மந்திரத்தையும் அருளியதால் முருகன் ஆதிகுருவாகத் துதிக்கப்படுகிறார் இந்த அ உ ம மந்திரத்தைப் பலகோடி குறுஞ்சித்தர்கள் ஓதினார்கள் முருகன் சாதாரண மனிதர்கள் அனைவரையும் சித்தராகக விழைந்தார் ஆயினும் தன்னைக் குரு என்று கூறிப் பெருமிதப்படவில்லை குருபோல சொன்னேன் என்றுத் தன்னடக்கமாக உரைக்கிறார். குருமந்திரமாகிய அ உம எனும் மந்திரம் அறியாமல் உலக உயிர்கள் மாளும் என மனமிரங்கி உலக மக்களுக்கு உரைத்தார் இந்த மௌன யோக மார்க்கமான தீபவொளி மார்க்கம் அல்லது வாலை மார்க்கத்தைச் செய்து பார்த்து முகதியடைய வேண்டுகிறார் இப்போது கொஞ்சமாக நாம் புரிந்திருப்போம் முருகன் யார் என்று ஆனால் இது பத்தாது இன்னும் பல விஷயங்களை முருகனைக் குறித்த பல தகவல்கள் உள்ளன அது இன்னும் அடுத்தடுத்த பதிவில் நம்ம பார்த்துக்கிட்டே இருக்க போறோம் தொடர்ந்து இணைந்திருங்கள் உங்கள் வினோதனுடன்

முருகனைக் குறித்து சித்தர்களின் என்ன நினைக்கிறார்கள் அதை நோக்கிய பயணம் PART 3 Read More »

முருகனைக் குறித்து அடுத்த தேடலின் பயணம் அய்யாவை வைகுண்டரின் தெளிவுPART 2

Post Views: 42       ஐயா வைகுண்டர் இயற்றிய அகிலத்திரட்டு அம்மானை ஆகம நூலில் முருகன மனிதனாகப் பிறந்து வாசிதவம் செய்து, சாகாநிலை பெற்று அதன்பின் சாயுச்சிய முகதி பெற்று இறைவனின் நிலை அடைந்தவர்கள் அரூபநிலைச் சித்தாகள் இத்தகைய அரூப நிலைச் சித்தாகள் இன்றும் நமக்கு அருள புரிகிறார்கள் வாசிதவம் செய்து, அரூபநிலையில் இன்றும் அருள்புரிபவர் ஐயா வைகுண்டா இதைக் குறிக்கும் வகையில், இன்றும் ஐயாவழி மக்கள் ‘ஐயா உண்டு என்ற சொல்லினை உச்சரிப்பா அதன்பின் சிவ விஷணு மந்திரமாக “ஐயா சிவ சிவ சிவ சிவ அரகரா அரகரா என்று ஓதுகிறார்கள் (அகிலத்திரட்டு முதல் பாடல்)      ஐயா வைகுண்டர் அவதாரம் சைவ வைஷ்ணவ மோதல் சாதீயக கொடுமைகள் உசசத்தில இருந்தநிலையில், இறைவன் உயா சாதியிலதான அவதரிப்பார் என்ற தீர்மானத்தில் இருந்த காலகட்டமான கி பி ஆயிரத்தில் கன்னியாகுமரி நாடு தாமரைகுளம் சுவாமிதோப்பு பதியில் முத்துகுட்டி என்று மனிதனாக ஐயா பிறந்தார் 1008 ஆம் ஆண்டுவரை சாதாரண மனிதனாக இருந்தார் வாசிதவம் செய்து சாகாநிலை பெற்று திருச்செந்தூர் கடலில் சலசமாதியில் மூன்று நாட்கள் இருந்து, விஞ்சை பெற்று 1016ஆம் ஆண்டு மாசிமாதம், 27ஆம் நாள் வெள்ளிக்கிழமை வைகுண்டராகக கலியை வெல்ல ஐயா அவதாரம் செய்தார் நாளே சிவன் விஷணு, பிரம்மா என்றார் சாதிகளில்லை அனைவரும் தவம் செய்து உயர்நிலை பெறமுடியும் என்றார் அன்றைய ஆட்சியாளாகள் இவரைப் பெரும் சிதரவதைகள் செய்து கொல்லப்பார்த்தனர் தனது தவவலிமையால் அவற்றை வென்றார் பல அரிய அற்புதங்களைச் செய்தார் மண்ணும் தண்ணீரும் கொடுத்து கொடிய நோயகளைப் போக்கினார் வாலையைக குருவாகக் கொண்டார் ஆட்சியாளர்கள் அவரிடம் பணிந்தனர் இன்றும் சுவாமி தோப்பு பதியில் பதம் என்ற நீரும். பூமியில் விளைந்த நாமமும் அடியவாக்குக் கொடுக்கப்படுகின்றன கொடியநோய் உள்ளவர்கள் பதியில் தங்கி மண்ணும், நீரும் ஒரு நேரம் உப்பில்லா உணவும் அருந்தி நோயைப் போக்கிக்கொள்கிறார்கள் பலரும் தவம் செய்து சித்தி பெறுகிறார்கள்   ஆதாரங்கள் அகிலத்திரட்டு முக உரை மற்றும் கீழக்கண்ட அகிலத்திரட்டு பாடல வரிகள் “வணங்கும் தவத்தால் வந்தார் தாமரைப் பதியில  போர் மேனிமாயன் பிறந்து தவமிருந்து ஓர்மேனிச் சாதி ஒகக வரவழைத்து  சாணாரினத்தில் சுவாமி வந்தாரென்றவரை வீணாட்டமாக விறுசெய்த ஞாயமதும் மனிதனே சுவாமி வமபென்று தானடித்து தனுவறியாப்பாவி தடிஇரும்பிலிட்டதுவும் மனுக்கண காணாமல் மறைந்தொரு மூன்று நாளாய தானும் தவமதுவாய சாயுச்சியமே புரிந்து’  “வாலை குருவே வாராமலே காரும் வாசியது பூவாய் வழங்க வரவழையும் தோசிமறலியையும் சொல்லி விலக்கிடு நீ-  சான்றோர் முதலாய் சக்கிலியன் வரையும் உண்டானசாதி ஒக்க வொக்கவொரு யினம்போல  “மருந்தாகத் தண்ணிர் மணவைத்தியங்கள் செய்ததுவும்” ‘மும்மூர்த்தி எல்லாம் ஒரு மூாத்தியாயிருக்கும் வைகுண்ட பெம்மான் வாய்த்தச் செந்தூர் கடலில”  “தனுவை அடக்கித் தவமிருந்தார் அமமானை சாகா விஞ்சை தலைவனாய் சமயவென்று நீதிய ரோமம வீசி நினைவொன்றை கருணை வாசி சாதிகக” அகிலத்திரட்டில் முருகன விஷணு ஏழுஅவதாரங்களை எடுத்தார் என்கிறது அகிலத்திரட்டு அதில் மூன்றாம் அவதாரமதான் முருகன் ஏழாம் அவதாரமாகக் கலியை அழிக்க ஐயா வைகுண்டர் அவதரித்தார் முருகனாக விஷணு அவதாரம் செய்த்தைப் பார்ப்போம் ஆதியில் சிவன ஒரு யாகம் செய்தார் அதில் ஒரு தீயசகதி மாபெரும் உருவத்துடன் ‘குரோணி’ என்ற அசுரனாகப் பிறந்தது அது கைலாயத்தை விழுங்க முயற்சித்தது அங்கு இருந்த விஷணு. அவனிடம் இருந்து தப்பித்து வந்தார் குரோணியை அழிகக அழிக்கும் கடவுளாகிய சிவனை நோக்கித தவம் செய்தார் குரோணியை ஆறு துண்டமாக வெட்டி அழிகக, விஷணுவிற்கு சிவன் வரம் தந்தார் ஆயினும் சிவன ஒவ்வொரு துண்டையும் ஒவ்வொரு யுகத்திலும் அசுரனாகப் படைப்பார் விஷணு ஒவ்வொரு யுகத்திலும் அவதாரம் செய்து, இந்த அரக்கர்களை அழித்தாலதான் குரோணி என்ற தீயசகதி முழுமையாக அழியும் என்றும் தெரிவித்தார் இதில் ஆறாவது துண்டம் பெரும் புத்தியும் சகதியும கொண்ட கலியாக உருவெடுக்கும் அதை அழிக்கச் சிவன் விஷ்ணு பிரமமா ஆகிய மூவரும் ஒருவராகக் கலியை அழிக்க வைகுண்டராக விஷணு அவதாரம் செய்தார் முருகன் அவதாரம் குரோணியை ஆறு துண்டாக வெட்டி விழத்தினார் விஷணு அடுத்தயுகத்தில் குரோணியின் முதல் துண்டம் குண்டோமசாலி என்ற அரக்கனாக பெரிய உருவுடன் பிறந்து, உலகை அழிக்கத் தொடங்கியது. விஷணு அவதரித்து குண்டோமசாலியை அழித்தார் அந்த யுகம் முடிந்தது. அதன் பின் இரண்டாம் துண்டம் இரண்டு சூரர்களாக உருவெடுத்தது. அவர்களைச் சுருதி முனிவராக அழித்தார் அந்த யுகம் முடிந்தது. ஈசன் மூன்றாம் துண்டத்தை இரண்டாகப் பிளந்து, சிங்கமுகாசுரன் சூர்பதமன என்ற இரு அசுரர்களாகத் திரேதாயுகத்தில் பிறப்பித்தார் இவர்கள் இருவரும் தவம் செய்து, ஐந்துமுகக் கடவுளாலும் (சிவனாலும்) கொல்லமுடியாது என்ற வரத்தைச் சிவனிடம் பெற்றனர் சூர்பதமன மூவுலகங்களையும் வென்று தேவர்களைச் சிறை பிடித்து அடிமை ஆக்கினான தேவ லோகப் பெண்களையும் சிறைபிடித்து வந்தான் மிகவும் துன்பப்பட்ட தேவாகள் சிவனிடம் முறையிட்டனர் சிவன் விஷ்ணுவை அழைத்து. அவதாரம் செய்து சூரனை அழிக்கச் சொன்னார் விஷ்ணு ஆறுதலை கொண்ட முருகனாக அவதாரம் செய்து, சக்தியிடம் சூரனை அழிக்க வேலாயுதம் பெற்றார். தேவர்களைப் படைவீரர்களாக ஆக்கிக் கொண்டு ஒரு சன்னியாசி போல் வேடம்கொண்டு திருச்செந்தூர் வந்து பாசறை அமைத்தார் தேவர்களை விடுவிக்கத் தூதனுப்பினார் சூரன் ஏற்காமல் போர்புரியத் தொடங்கினான முருகன் சூரபத்மனின் படைகளை அழித்தார் சிங்கமுகச் சூரன் இறந்தான் சூரபத்மன நேராகப் போரிட வந்தான் சூரபதமன்மீது வேலாயுதத்தை எறிந்தார் முருகள். சூரன் துடிதுடித்து மடிந்தாகுரோணியை ஆறு துண்டாக வெட்டி விழத்தினார் விஷணு அடுத்தயுகத்தில் குரோணியின் முதல் துண்டம் குண்டோமசாலி என்ற அரக்கனாக பெரிய உருவுடன் பிறந்து, உலகை அழிக்கத் தொடங்கியது. விஷணு அவதரித்து குண்டோமசாலியை அழித்தார் அந்த யுகம் முடிந்தது. அதன் பின் இரண்டாம் துண்டம் இரண்டு சூரர்களாக உருவெடுத்தது. அவர்களைச் சுருதி முனிவராக அழித்தார் அந்த யுகம் முடிந்தது. ஈசன் மூன்றாம் துண்டத்தை இரண்டாகப் பிளந்து, சிங்கமுகாசுரன் சூர்பதமன என்ற இரு அசுரர்களாகத் திரேதாயுகத்தில் பிறப்பித்தார் இவர்கள் இருவரும் தவம் செய்து, ஐந்துமுகக் கடவுளாலும் (சிவனாலும்) கொல்லமுடியாது என்ற வரத்தைச் சிவனிடம் பெற்றனர் சூர்பதமன மூவுலகங்களையும் வென்று தேவர்களைச் சிறை பிடித்து அடிமை ஆக்கினான தேவ லோகப் பெண்களையும் சிறைபிடித்து வந்தான் மிகவும் துன்பப்பட்ட தேவாகள் சிவனிடம் முறையிட்டனர் சிவன் விஷ்ணுவை அழைத்து. அவதாரம் செய்து சூரனை அழிக்கச் சொன்னார் விஷ்ணு ஆறுதலை கொண்ட முருகனாக அவதாரம் செய்து, சக்தியிடம் சூரனை அழிக்க வேலாயுதம் பெற்றார். தேவர்களைப் படைவீரர்களாக ஆக்கிக் கொண்டு ஒரு சன்னியாசி போல் வேடம்கொண்டு திருச்செந்தூர் வந்து பாசறை அமைத்தார் தேவர்களை விடுவிக்கத் தூதனுப்பினார் சூரன் ஏற்காமல் போர்புரியத் தொடங்கினான முருகன் சூரபத்மனின் படைகளை அழித்தார் சிங்கமுகச் சூரன் இறந்தான் சூரபத்மன நேராகப் போரிட வந்தான் சூரபதமன்மீது வேலாயுதத்தை எறிந்தார் முருகள். சூரன் துடிதுடித்து மடிந்தான் அகிலத்திரட்டு சொல்வது விஷணுவின் மூன்றாம் அவதாரம் முருகன் அவதாரம் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் இணைந்த ஏழாம் அவதாரம் ஐயா வைகுண்டா மனிதனாகப் பிறந்து தெய்வநிலை பெற்றவா வாசியோகம் செய்து சாகாநிலை பெற்றவர் அரூபநிலை பெற்று இன்றும் அருள் பாலிப்பவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடி மரண தண்டனைகளை வென்று, அவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தவர் இல்லற வாழ்க்கையினை வாழ்ந்து அரசு ஆண்டவர் இப்போது ஓரளவு புரிந்து இருக்கும் நம்முடைய முருகனுடைய வரலாறு எங்கெங்கெல்லாம் இருக்கிறது அதைக் குறித்து அகிலத்திரட்டில் முருகனைக் குறித்து நம்முடைய வைகுண்டர் அவர்கள் தெளிவாக எழுதி இருக்கிறார் விஷ்ணு உடைய மூன்றாம் அவதாரம் தான் முருகன் அப்படின்னு சொல்லி எழுதி இருக்காங்க இந்த மாதிரி அற்புதமான விஷயங்கள் எல்லாம் இதுவரைக்கும் தெரியாத ஒரு தகவலாக இருக்கிறது எனக்கும் ஒரு புதிதான தகவலா இருந்தது இன்னும் அடுத்த பயணம் என்னவென்றால் நம்முடைய முருகனை நோக்கிய பயணம் நம்முடைய முருகன் குறித்து சித்தர்கள் சொல்லும் உண்மையான தெளிவான வாழ்வு அது என்ன தொடர்ந்து இணைந்திருங்கள் உங்கள் வினோதனுடன் அடுத்த பதிவில் சந்திப்போம்

முருகனைக் குறித்து அடுத்த தேடலின் பயணம் அய்யாவை வைகுண்டரின் தெளிவுPART 2 Read More »

முருகனைக் குறித்த ரகசியம் அவரை இதுவரை அறியாத சித்தரகசியம் PART 1

Post Views: 147 முருகனைக் குறித்த ரகசியம் அவரை இதுவரை அறியாத சித்தரகசியம் முருகன் ஒரு அற்புதமான சக்திவாய்ந்த ஒரு மாமனிதன் இந்த உலகுக்கு முதல் சித்தனாக அவதரித்தவர் என்று பலர் அறிந்த ஒரு உண்மை ஆனால் என் வாழ்க்கையில் நான் அவரை என் குருவாக ஏற்றுக் கொண்டு அவரைக் குறித்து நான் அறிந்த பல புத்தகங்களை சித்தர்கள் உடைய பாடல்களை அறிந்த விஷயங்களை உங்களோடு கூட நான் இப்பொழுது பகிர்ந்து கொள்ள போகிறேன் என்னை மாற்றின என் முருகன் உங்களையும் அற்புதமான பயணத்திற்கு என்னுடன் கொண்டு வருவார் என்று நான் நம்புகிறேன் இதில் பல சந்தேகங்கள் வரும் பல கேள்விகள் எழும் நம்பிக்கைக்கு ஆதாரம் என்ன? முருகன கடவுளா? சிவனின் மகனா? மனிதனா? முப்பாட்டனா? முருகன் இன்றும் வருவான் என்றால் அவன் எப்படி இருக்கிறான்? எப்படி வருவான? இவை அனைத்திற்கும் விடை காண்போம் முருகனைப் பற்றி நாமறிந்த விதங்கள் ஆன்மீகவாதிகளும் பக்தர்களும் முருகனைக் கடவுளாகக் காண்கிறார்கள் சிலர் அவதாரமாகப் பார்க்கிறார்கள். செயற்கரிய செயல்களைச் செய்தவர்களை நமது கலாச்சாரம் கடவுளாகவும் அவதாரமாகவும் சித்தரிக்கிறது இவை புராணங்களாகவும் ஆகம் நூல்களாகவும் இயற்றப்பட்டுள்ளன இதன்படி கந்தபுராணம் இயற்றப்பட்டு அது பதினெட்டு புராணங்களில் ஒன்றாக உள்ளது முருகனை அவதாரமாகச் சொல்கிறது ஐயா வைகுண்டர் செய்த அகிலத்திரட்டு ஆகம நூல பல முருக பக்தர்கள் இந்த நூல்களை ஆதாரமாகக் கொண்டு பல நூறு பக்தி இலக்கியங்களைத் தமிழில் இயற்றியுள்ளனா சித்தர்கள முருகனை முதல் தமிழ்ச் சித்தனாகக் காணகிறார்கள் தமிழ் இலக்கணமான தொலகாப்பியத்திற்கு முந்தையத் தமிழ் இலக்கணநூல் அகத்தியம் அதற்குமுன்பு அகத்தியா செய்த சித்தா இலக்கிய நூல்களில் முருகனிடம் தமிழும் சித்தாகல்வியும் கற்றதாகப் பல நூல்களிலும் சொல்லியுள்ளார் அகத்தியா முருகனைக் குருவாகக் கொண்டவா அகத்தியரும் பல சித்தர்களும் முருகனைக் குருவாகக்கொண்டு பல்லாயிரம் நூல்களை இயற்றியுள்ளனர் அதற்குமுன் முருகனும் பல சித்தர் இலக்கியங்களை இயற்றியுள்ளார் முருகன இயற்றிய பல நூலகளில் இயற்றிய பல இலட்சம் பாடல்களில் வெகு சில பாடலகளே நமக்குக் கிடைத்துள்ளன முருகனைப் பற்றி பிற சித்தர்களும குறிப்பாகச் சிவனுக்கும் முந்தைய தமிழச் சித்தனான காகபுசுண்டர் கூறிய நூல்களிலும் பல செய்திகள் இருக்கிறது எனக்குத் தெரிந்தவரை முருகனின் முதல் அவதாரம் ஒரு சக்தி வாய்ந்த ஒரு அவதாரமாக இருந்தது. அந்த அவதாரம் என்னவென்றால்  இந்த ஆதாரங்களைக் கொண்டு நாம் முருகனை கந்தபுராணத்தில் புரிந்து கொள்ள முயற்சி செய்வோம் 1 முருகனின் அவதாரம் சூரபத்மன் என்ற அசுரன் சிவதவம் செய்து பலவரங்களைப் பெற்றான ஐந்து தலை கடவுள்களால் மரணம் நேரக்கூடாது என்றும் பெண்ணிடம் பிறந்தவர்களால் மரணம் நேரக்கூடாது என்றும் வரம் பெற்றான அதன்பின் இந்திர லோகத்தை வென்றான தேவர்களைச் சிறைபிடித்து அடிமை ஆக்கினான் அப்பொழுது, இந்திரன் தப்பிச்சென்று சூரபத்மனை அழிக்கச் சிவதவம் செய்தான் சிவன இந்திரனுடைய தவத்திற்கு இறங்கி ஆறு தலைகளுடன் தோன்றினார் அவரின் ஒவ்வொரு தலையில் இருந்தும் ஒரு சுடர் தோன்றியது இந்த சுடர்களின் வீரியத்தால் சக்தியின் பாதங்களிலிருந்து வீரபாகு உட்பட ஒன்பது வீரர்கள் தோன்றினர் சக்தியால் சுடர்களின் வெப்பத்தையும் விரியத்தையும் தாங்கமுடியவில்லை எனவே, சிவன் ஆறுசுடர்களையும் வாயு பகவானிடம் ஒப்படைத்தார் வெப்பம் தாங்காத வாயு அக்கினி பகவானிடம் ஒப்படைத்தார் அக்கினி பகவானும் வெப்பம் தாங்காமல் கங்கையிடம் ஒப்படைத்தார் கங்கையும் வெப்பம் தாங்காமல் சரவணப் பொய்கையில் கொண்டுசோத்தார் சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகள் தோன்றின விஷ்ணு ஆறு குழந்தைகளையும் கார்த்திகைப் பெண்களிடம் கொடுத்து வளர்க்கச் சொன்னார் குழந்தைகள் சிறுவர்களாயினா வளாந்த சிறுவர்களைக் கண்ட சகதி அறுவரையும் ஒன்றாக அணைத்தார் இதனால் ஓர் உடலும் ஆறுதலைகளும் பன்னிரண்டு கைகளையும் கொண்ட முருகன் அவதாரம் செய்தார் சரவணப் பொய்கையில் பிறந்ததால் சரவணன என்றும், கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் என்றும், கங்கை கொண்டு சென்றதால் காங்கேயன் என்றும் பெயர் பெற்றார் பெண்ணிடம் தோன்றாமல் ஆறுதலைகளைக் கொண்ட அவதாரமாக முருகன் உருவானார் இந்த கதையை உலகமா அனைத்தும் புராணங்களில் இதிகாசங்களில் அறிந்த ஒரு ஒரு கதை தான் ஆனால் இந்த கதையை நிஜம் என்று ஏற்றுக்கொள்வது சாத்தியமா என்று தெரியவில்லை ஆனால் நிஜம் எது என்று அதைக் குறித்த பயணத்தில் செல்வோம் அடுத்தபடியில் இந்தக் கதை முருகனின் 2வது கதை சுவாமிநாதன் சுவாமி மலையின் அற்புத கதை  முருகன் சிறுவனாக இருந்தபோது, பார்வதியிடம் பரமசிவன் ‘ஓம்’ என்ற பிரணவத்திற்குப் பொருள் சொன்னார் இதைச் சிறுவன் முருகன் கேட்டுக்கொண்டு இருந்தார் ஒருநாள் பிரமமா சிவனைக் காணவந்தார் முருகன் அவரிடம் “நீங்கள் யார்? என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டார் “நான் பிரமமா படைத்தல் தொழிலைச் செய்கிறேன்” என்றார் முருகன் “அப்படி என்றால் ஓம் என்ற மந்திரத்திற்குப் பொருள் சொல்லுங்கள்” என்றார் பிரமமா பொருள் தெரியாமல் விழித்தார் முருகன் பிரம்மாவைச சிறையில் அடைத்துவிட்டு தானே படைத்தலைச் செய்தார் இதை அறிந்த சிவன் முருகனிடம், “உனக்கு ஓம் என்பதன் பொருள் தெரியுமா?” என்றார் முருகன சிவனுக்கு ஓம் என்பதன பொருளைச் சொன்னார் எனவே, முருகன் சிவனுக்குக் குரு ஆனார் ஆகையால சிவகுரு, பரமகுரு என்ற பெயா பெற்றார் மரபுப்படி குரு தகப்பனாவார் சீடன் மகனாவார் எனவே.  தகப்பன்சாமி’ என்ற பெயரும் கிடைத்தது அதனால் சுவாமிநாதன் என்று அழைக்கப்பட்டார் அதன் நினைவாகச் சுவாமிமலை என்ற படைவீடு அமைந்தது பாலனாக பிரணவப்பொருள் சொன்னதால் பாலசுபரமணியன் என்பார்கள் பாலமுருகன் என்றும் அழைப்பர்   2 சூரசமகாரம் திருச்செந்தூர் தேவர்கள் சிவனிடம் சென்று சூரபதமனிடம் இருந்து விடுதலை பெற்றுத்தருமாறு கதறினார்கள் முருகனைக் கொண்டு சூரனைக் கொல்லக கெஞ்சினார்கள் முருகன் குமரப்பருவத்தினை போரிட்டு அறியாதவன ஆகையால் சிவன் தயங்கினார் முருகன் சூரபதமனிடம் போரிடத் தான் தயார் என்று கூறினார் போர்செய்ய சிவன் அனுமதித்தார் இதை அறிந்த சகதி, தனது அனைத்து சக்திகளையும் திரட்டி அதை வேலாக்கி முருகனிடம் சகதிவேலைக் கொடுத்தார் மேலும் விரபாகு முதலான ஒன்பது வீர சகோதரர்களையும் முருகனுக்குத் துணையாகப் போருக்கு அனுப்பினார் அதனால் முருகனைச் சக்திவேல் என்றும் அழைத்தனர் தேவர்களின் படை திரட்டப்பட்டது படைத் தளபதியாக முருகன பொறுப்பு ஏற்று போருக்குப் புறப்பட்டு திருச்செந்தூர் வந்துசேர்ந்தார் மரபுப்படி தேவர்களை விடுவிக்கக் கோரி விரபாகுவைத் தூதனாக சூரபதமனிடம் தூது அனுப்பினார் சூரபதமன அதற்கு மறுத்ததுடன் போரிட்டு தேவர்களை மீட்டுக்கொள்ளுமாறு அறைகூவல் விடுத்தான் போர் தொடங்கியது. முதலில் கிரவுஞ்சமலை என்ற அரணைத் தூளாக்கினார் முருகன பதமாசுரன தம்பி சுஜமுகனையும் அவனது படைகளையும் அழித்தார் தொடர்ந்து போரிடவந்த சிங்கமுக அசுரனையும் கொன்றார் பதமாசுரன் பெரும்படையுடன் போருக்கு வந்தான் சூரன்மீது சக்திவேலைச் செலுத்தினார் சக்திவேல் தூனை இரண்டாகப் பிளந்தது சூரன் விழந்தான் ஆனால் முருகன் அவனைக் கொல்லவில்லை இரண்டு துண்டுகளில் ஒன்றை மயிலாக மாற்றித் தனது வாகனமாக்கினார் அதனால், ‘மயில் வாகனன் என்ற பெயர்பெற்றார் மற்றொரு துண்டைச் சேவலாக்கி தனது கொடியாக்கினார் இதனால் சேவல கொடியோன் என்றும் அழைப்பார்கள் பகைவருக்கும் இறங்கும் கருணை மிக்கோன் முருகன் சூரனை வென்றதால் வெற்றிவேல்’ என்றும், ‘ஜெயந்தி நாதர் என்றும் போற்றப்படுகிறார் தேவர்களின் படைக்குப் பொறுப்பேற்றதால் தேவசேனாதிபதி என்றும் பெயர் பெற்றார் குமரனாக இருந்து போர்செய்ததால் குமரவேல’ ஆனார் திருச்செந்தூரில் படைவீடு அமைத்து சூரசம்காரம் செய்ததால் ‘செந்தில்வேல் செந்தூரான எனவும் அழைக்கப்பட்டார் தற்காலத்தில் நடந்த நிகழ்வு சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்செந்தூர் முருகனுக்குக் காணிக்கையாகச் சமாப்பித்த வைரவேல் மற்றும் பல செல்வங்களைக் கோவில் அறங்காவலா திருடிவிட்டார் இதைக் கண்டுபிடித்த கோவில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி, அவர் மீது புகார் செய்தார் இதனால் ஆத்திரம் அடைந்த அறங்காவலர் நிர்வாக அதிகாரியைக் கொலை செய்தார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதைப் பத்திரிகைகள் பரபரப்புச் செய்தியாக வெளியிட்டன் அறங்காவலர் தனது காரில் நீதிமன்றத்தில் இருந்து வந்துகொண்டிருந்தார் அச்சமயம் மயில்வாகனன என்ற பெயர்கொண்ட லாரி, காரில் மோதியது விபத்தில் அறங்காவலர் இறந்து போனார் இச்சம்பவம் அறங்காவலரை முருகனே தண்டித்தார் என அதிசயமாகப் பேசப்பட்டது. திருப்பரங்குன்றம் -தெய்வயானை திருமணம் சூரபதமனால் சிறைவைக்கப்பட்ட தேவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள் இந்திரன் மீண்டும் பதவிபெற்றார் அதன் நன்றிக்கடனாக சக்தி ஆட்சிபுரியும் சிவனின் வீடான மதுரையில் உள்ள திருப்பரங்குன்றத்தில் இந்திரன, தனது மகளாகிய தெய்வயானையை முருகனுக்குத் திருமணம் செய்துகொடுத்தார் எனவே தெய்வயானை மணாளன் பரங்குன்றன என்ற பெயர்கள் கிடைத்தன ஆறுபடை வீடுகளில் ஒன்றாகத் திருப்பரங்குன்றம் விளங்குகிறது.  ஞானப்பழமும், பழநியும்கைலாயத்தில் சிவன், பார்வதி கணபதி மற்றும் முருகன் ஆகியோர் அமர்ந்து இருந்தனா அப்போது நாரத முனிவர் அங்கு வந்தார் நாரதா ஒரு பழத்தைக் கொடுத்து. இது ஞானப்பழம் இதை ஒருவருக்குக் கொடுக்க வேண்டுகிறேன் என்றார் யார் உலகை முதலில் சுற்றி வருகிறார்களோ அவருக்கு இப்பழம் பரிசாகக் கிடைக்கும் என போட்டியும் அறிவித்தார் முருகனும் கணபதியும் போட்டியை ஏற்றனர் முருகன மயில் மீதேறி உலகைச் சுற்றத் தொடங்கினார் கணபதி, சிவனையும் பார்வதியையும் சுற்றிவந்து “அம்மை அப்பனே உலகம் ஆகையால், நான முதலில் உலகைச் சுற்றி வந்துவிட்டேன பழத்தைத் தாருங்கள்” என்றார் எனவே சிவனும் பழத்தைக் கணபதிக்குக் கொடுத்துவிட்டார் உலகைச் சுற்றிவந்த முருகன. கணபதியின் கையில் பழம் இருப்பதைப் பார்த்தார் உலகைச் சுற்றாதவருக்குப் பழத்தை எப்படி கொடுக்கலாம்?” என வாதிட்டார் உடனே. சிவபெருமான் “ஞானம் இல்லாதவருக்கு ஞானப்பழம் வேண்டும் ஆனால், நீ ஞானம் பெற்று ஞானப்பழமாக இருக்கிறாய் உனக்கு எதற்கு ஞானப்பழம்?” எனச் சமாதானம் செய்தார் இதை ஏற்காத முருகன் “எனக்கு என்று தனி உலகு படைத்து நானே படைத்தல், காத்தல் அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில் செயவேன என்று கூறி கைலையை விட்டு வந்து பழநியில் அமாந்தார் இதனால் பழநி ஒரு படைவீடு ஆனது சித்தா போகா முருகனுக்கு நவ பாசாணத்தால சிலை செய்து பழநி மலையில நிறுவி, ஆராதனை செய்து பழநியில சமாதி ஆனார் இந்த நவபாசாணச் சிலையைப் பற்றி பல கருத்துகள் தேடல்கள் இன்றும் உண்டு  திருத்தணியும் வள்ளி திருமணமும் முன்னொரு காலத்தில், இரண்டு சகோதரிகள், தங்கள் இருவருக்கும் முருகனே கணவனாக அமையவேண்டும் என்று வேண்டித் தவம் செய்தனா அதில்

முருகனைக் குறித்த ரகசியம் அவரை இதுவரை அறியாத சித்தரகசியம் PART 1 Read More »

What is true Vasi Yoga? What are the benefits of Vasi Yoga?

Post Views: 906 Hello everyone I am giving here many methods taught by my Gurunathar Samikannu What is Vasi Yoga what are its basics how can we do it what Siddhas say is this true a whole post on this this is a wonderful thing my Gurunathar taught me in my life not only that Siddhas this method .They taught me its name is saga education keep watching this vasiyaoga post if you like it keep practicing this yoga people who want to live a wonderful life there are man yogas in this world, but we don’t know that those yogas are true but we don’t know what those yogas ,are going to do for us Which yoga did the Siddhas and what is the real Vasi Yoga is the complete information about it in all the posts to come, don’t forget to read it and let’s see the stages of Vasi Yoga. Part 1 Siddhargal Sagakaalvi is divided into four stages   1 Vasi Yoga Basic Level With a lifespan of about 100 years Acquiring high knowledge, attaining exalted position, living a pleasant life, attaining the Mukti of Saloka, seeing the Lord in the form of light, attaining the highest of worldly pleasures, attaining certain siddhis are basic Vasiyogam which have no side effects 2 Vasi Yoga Superior Level  There is a possibility that male and female characteristics may be affected by extending the life span of man for a short time (about 120 years), seeing God in his imagined form, talking to him and getting what he needs for himself and others, and obtaining many siddhis. Disregarding this and attaining nearness to the Lord, attaining bliss is called superior reading. 3. Shiva Yogam Gaining one more lifespan beyond the extended human lifespan of 120 years. In this case, after doing Shiva Yoga for 13 years, it is possible to give birth to a child within oneself. In this, masculinity and femininity will disappear completely. It involves attaining rare great siddhis by seeing the Lord within himself in the form of light and becoming one with him. It is a symbolic pearl. It is the attainment of bliss, du, non-duality. 4 Inner Silent yogam After attaining Siva Yoga siddhi, 5 years of Maunayoga, dividing the body atom by atom and attaining the formless state. The light-shaped Lord within himself, together with the light-shaped Lord universe in the space, becomes a light body and becomes God himself, that is, ‘Than Awan Atal’ can do all the work of the Lord in this. 64 Siddhis and Ashtamasidhis join hands.In these four readings, only the basic readings without side effects for attaining maximum worldly pleasures and living youthfully for 100 years have been described in detail in this book. Only those who have mastered this basic reading are qualified to perform other higher readings. You don’t need to be taught by the Guru to learn basic Vasiyoga, but to do other levels of Vasiyoga, you need to be taught by the Guru. Benefits of Vasi Yoga benefits People who do not do Vasiyoga can get 33.3% less cosmic energy than they need. This is the cause of disease, old age and death. But cosmic power is absorbed to the utmost by those who do Vasiyogam. Vasyogis get the energy they need to keep their body fully developed and youthful.People who do not do Vasiyoga cannot get full power from the food they eat because they get less cosmic power. A lot of waste will be generated. Waste does not come out easily. It is impossible to distribute the available cosmic energy to all parts of the body. Therefore, they get old age, disease and death soon. Basic dieters get maximum energy from the food they eat and less waste is excreted from the food Waste generated are easily expelled Enhanced energy levels are achieved through streamlined metabolism 1 The efficiency of the mind increases 2 Decision-making is quick and clear 3 Able to work long hours without fatigue 4 Increases efficiency. 5  Stress is reduced and the mind is refreshed. 7 Memory increases and memory is strengthened 8 Understands and solves problems clearly. 9 Prevents from disease attack 10 Some pimples physical diseases disappear. 11Some inflammatory and causal physical diseases are easily cured with other medicines. 12 Domestic happiness increases, family ties are strengthened, good offspring are produced 13 An even-minded, imbalance-free state of mind is established and the mind merges into a blissful state He rejoices in seeing his Lord in the form of light 14 Able to communicate with God and help himself and others 15  Can remain youthful forever  and active throughout life  16  There will be no poverty and the economy will be strengthened and the basic needs will be fulfilled 17 There will be career development and promotion. 18 Things that are going to happen to oneself and others already 19 Know and act accordingly 20 Can attain the highest intelligence 9 21 sweet life endings (about 100years) can be obtained by completing 11 Higher readings for those who wish to extend life to 100 years ETC………………………………………………………………….. One should do Shiva Yoga 12 to help oneself and others and get some rare blessings சார்ந்து கொண்டால் பிறவியெனும் துன்பமில்லைசாதிகுல முறையில்லை சங்கையில்லை நேர்ந்துகொண்டால அஞ்ஞானம் விலகிப்போகும் நேர்மை என்றும் மாயகையெல்லாம் மாண்டுபோகும் தேர்ந்துகொண்டால் நீயவனே யாவாயப்பா திறமுடனே சொல்லுகிறேன் வாசிநேர்மை கூர்ந்துகொண்டு கேசரியில் அடங்கிப்போனால் குறையாத ஞானமதைக் கொள்ளையிட்டாய்” சுப்ரமணயர் ஞான சைதன்யம். பாடல் 55 I CANT TRANSLATE IN ENGLISH SORRY BUT I CAN GIVE EXPLANTION  sanga-fear, maiga-disappearing death)For those who follow Vasiyoga, there is no suffering, there is no death, so there is no birth.There are no methods. They will obey Humanity to perfection Read love and charity If one is determined to do Vasiyogam, ignorance will be removed and there will be no fear (sangai) in any condition. The truth will be revealed without all the veils of illusion. Death does not occur. If one acquires Vasiyogam siddhi, one can get the power of God and attain divine status. If you do Vasiyogam and stay in the Kesari

What is true Vasi Yoga? What are the benefits of Vasi Yoga? Read More »

குருதேவரை சந்தித்த முதல் நொடி………….

Post Views: 440 குருதேவரை சந்தித்த முதல் நொடி………….  part1 இது என் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்கள் மட்டுமே நான் என்னுடைய முதல் கட்டுரை இது இந்த கட்டுரையில் என் வாழ்க்கையில் ஏற்பட்ட மகத்தான ஒரு அனுபவம் அந்த அனுபவத்தை குறித்த ஒரு வாழ்க்கை முறை தகவல் கூட அது என்னவென்றால்  என் குரு தேவரை பற்றிய கட்டுரை வாழ்க்கையில் பல பேர் பல குருவை தேடி அலைந்திருக்கிறோம் ஆனால் குரு கிடைப்பது நமக்கு கோடி புண்ணியம் என்று தெரியும் ஆனால் அவரை பார்க்க முடியுமா பார்க்க சென்றாள் உண்மையற்றவர்களை மட்டுமே பார்க்க முடிகிறது குரு என்று சொல்கிறார்கள் ஆனால் வெளியில் ருகு வாக இருக்கிறார்கள் குரு என்றால் இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வருபவர்கள் ருகு என்றால் இருட்டிலேயே வைத்துக் கொள்பவர்கள் இந்த உலகத்தில் எங்கு சென்றாலும் ஒரு 90% குரு என்று சொல்பவர்கள் எல்லாம் ருகு தான் ஆனால் என் வாழ்க்கையில் உண்மையான அந்த குருவை நேரில் பார்த்தேன் பார்த்த அவரோடு பல வருடங்கள் குருகுல வாசம்  செய்தேன் அவரோடு பலமுறை உரையாடினேன் அவர் பாதங்களால் என் முகத்தை தொட்டுக் கொண்டேன் அவர் இல்லாவிடில் நான் இல்லை என்ற உணர்வுக்கு வந்தேன் இந்த உண்மையை இப்பொழுது நான் உங்களுக்கு சொல்ல போகிறேன் அவருடைய பெயர் சமணன் குரு அவரை எல்லோரும் அன்பாக சாமி கண்ணு என்று அழைப்பார்கள் கன்னியாகுமரி மாவட்டம் Thuckalay மற்றும் கேரளாவில் உள்ள ஆலப்புழா அங்கும் இருப்பார் இது அவருடைய குருகுலம் இவர் 1921ல் இந்த உலகத்தில் பிறந்தார் அவர் கடைசி காலம் எங்கே சென்றார் அவருக்கு என்ன ஆனது என்று அவர்களுக்கு சீடருக்கும் தெரியாது எனக்கும் தெரியாது ஆனால் அவர்கள் சீடர்கள் சொல்லும் ஒரு வார்த்தை அவர் ஆலப்புழா வில் சமாதியானார் என்று சொல்வார்கள் அது எந்த விதத்தில் உண்மை என்று தெரியவில்லை காரணம் அவர்களுக்கு அது தெரியாது பலர் அதிகமாக விசாரிப்பதால் இதை சொல்லி முடித்து விடுவார்கள்  குருதேவர் எங்கே சென்றார் என்று யாருக்கும் தெரியாது அவர் ஒளிக்குள் சமாதியாகிவிட்டார் காலத்தில் மறைந்து விட்டார் குருவை சந்தித்த அனுபவம் என் வாழ்க்கையில் இப்படிப்பட்ட ஒரு மனிதனை நான் சந்தித்ததில்லை என் வாழ்க்கையில் நான் 2000th year பிப்ரவரி மாதம் 29ஆம் தேதி முதல் முதலில் நான் அவரை சந்தித்தேன் நான் என்னுடைய பள்ளி பருவத்தில் பள்ளிக்கூடத்திற்கு சென்று கொண்டிருக்கும் பொழுது ஒரு பஸ்ஸில் ஏறினேன் அந்த பஸ் என்னுடைய பள்ளிக்கூடத்திற்கு போகிறது அந்த பஸ்ஸில் நான் உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது என் முன்பு இருந்த ஒருவரை பார்த்தேன் ஆனால் அவரை என்னால் பார்க்க முடியவில்லை ஆனால் என் மனம் துடித்தது அவரை பார்க்க வேண்டும் முடிந்தவரை முயற்சி செய்து ஆனால் அவரை பார்க்க முடியவில்லை பஸ்ஸில் இருப்பவர்கள் எல்லோரும் என்னுடைய தோழர்கள் இறங்கி விட்டார்கள் ஆனால் நான் பஸ்ஸில் இருந்து இறங்கவில்லை அவரின் பார்க்க காத்துக் கொண்டிருந்தேன் ஆனால் நான் பார்த்தது அவருடைய பின் தலையை தான் ஆனால் அவரைப் பார்த்துக் கொண்டே இருக்கும் பொழுது நேரம் போவது எனக்கு தெரியவில்லை அவரை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று காத்துக் கொண்டே இருந்தேன் ஆனால் திடீரென்று பஸ் நின்றுவிட்டது அவர் இறங்குவதை கண்டேன் அவர் பஸ்ஸிலிருந்து இறங்கி போய்க்கொண்டு இருந்தால் எந்த இடம் என்றால் சென்னையில் உள்ள மூலக்கடை என்ற ஒரு இடத்தில் ஒரு வீடு உள்ளது அந்த வீட்டிற்கு சென்று கொண்டே இருந்தாள்.  நான் அவர் பின்னே சென்று விட்டேன் கடைசியாக தான் எனக்கு தெரிந்தது நான் இருக்கும் இடத்தை விட ஒரு 25 கிலோ மீட்டர் தூரம் வந்து விட்டேன் என்று புரிந்தது நான் பயந்துவிட்டேன் நான் அப்பொழுது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன் அந்த சிறு வயதில் அந்த இடம் எனக்கு தெரியவில்லை. ஆனால் அவரை பார்க்க வேண்டிய ஒரு ஆவல் வந்து விட்டேன் என்னை அவர் திரும்பி பார்த்தார் யார் வேண்டும் உனக்கு என்று சொன்னார் நான் சொன்னேன் தெரியாது எனக்கு எதுவும் தெரியாது.  உங்களை பார்த்தேன் உங்கள் பின்னே ஒரு நாய் போல் வந்து விட்டேன் என்று சொன்னார் அவர் சொன்னார் போ எங்கிருந்து எங்கு வந்தாயோ அங்கே செல் என்று சொன்னார் காத்துக் கொண்டிருந்தேன் அவர் மறுபடியும் என்னிடம் பேசுவார் என்று இதெல்லாம் என்னுடைய உணர்வு என்னை வழிநடத்தி சென்றது வெளியே ஒரு மீன்தொட்டி இருந்தது அந்த தொட்டியில் பார்த்துக் கொண்டு நீங்களே தொட்டுக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தேன் வீட்டுக்குள் இருந்து ஒருவர் வந்தார் அவர்தான் சாமி கண்ணின் ஐயா உடைய முதல் தலைமையான சீடன் என்னை பார்த்து கேட்டார் ஏன் வந்தாய் என்றார் நான் அவரிடம் சொன்னேன் எனக்கு தெரியாது என்று ஏன் எது கேட்டாலும் தெரியாத தெரியாது என்று சொல்கிறாய் என்று கேட்டார் அப்போதும் சொன்னேன் தெரியாது என்பது பதில் உலகத்தில் மிக உயர்ந்த பதிலென்று அப்பொழுதுதான் நான் உணர்ந்து கொண்டேன் வாழ்க்கையில் நான் பார்க்கும் பொழுது பல பேர் எனக்கு தெரியும் தெரியும் என்று உலகத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் ஒரு முறை உண்மையை சொல்லிவிட்டால் பிறகு குருவிடம் சென்று விடலாம் இது என் அனுபவம் எனக்கு எதுவும் தெரியாது இது தான் அந்த பதில் பிறகு அந்த சீடன் என்னை குருவிடம் இருந்து என்னை பிரித்து நான் எங்கே வந்தேனோ அங்கே என்னை அழைத்துக் கொண்டு போய் விட்டு விட்டார் என் மனம் துடித்தது துடித்துக் கொண்டே இருந்தது காரணம் மறுநாள் பள்ளிக்கூடம் சென்றேன் அவர் ஞாபகமாகவே இருந்தது அந்த ஞாபகம் எப்படி சொல்வது வார்த்தையே இல்லை ஒரு பெண்ணை இந்த உலகில் காதலித்தால் எப்படிப்பட்ட சுகம் தருவோம் அதைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக இருந்தது பள்ளிக்கூடம் முதல் திங்கள் ஆரம்பித்து வெள்ளிக்கிழமை வரும் வரை காத்திருந்தேன் வெள்ளிக்கிழமை வந்து விட்டது சனிக்கிழமை காலையில் எழுந்து நான் எப்படி அந்த இடத்திற்கு வந்தேனோ அதேபோல் எங்கிருந்து பஸ்ஸில் ஏறி இது ஞாபகம் வைத்துக் கொண்டு மறுபடியும் அங்கே சென்று தனி ஆளாக நான் போய் பார்த்தேன் அவரை மறுபடியும் வந்து விட்டாயா என்று சீடன் சொன்னார் ஆமாம் நான் சொன்னேன் எனக்கு எதுவும் தெரியாது ஆனால் நான் அவரை பார்க்க வேண்டும் யார் அவரை என்று கேட்டார் அவர்தான் வயதானவராய் இருந்தாரு அவர்தான் திடீரென்று அந்த இடத்தில் இருந்து ஒரு அமைதியான தேஜஸ் நிறைந்த ஒரு அற்புத தேவதை தேவ தூதன் போல் ஒருவர் வந்தார் அவரை பார்த்தேன் முகத்தை இரண்டாவது முறையாக பார்த்தேன் வியந்தேன் ரசித்தேன் உணர்ந்தேன் செத்தே போனேன். ஏன் இந்த உணர்வு ஏற்பட்டது அதற்கும் பதில் தெரியாது பதில் எதுவும் தெரியாது என்றுதான் அவர் என்னை பார்த்து உள்ளே வா நீ வந்து விட்டாய் என்று சொன்னார் அதுவும் கடந்த காலத்தில் சொன்னார் எனக்கு அது புரியவில்லை ஆனாலும் நான் உள்ளே சென்றேன் அவர் அவருடைய சுண்டி  விரலை பிடிக்க ஆசைப்பட்டேன் அந்த ஆசை எனக்கு அந்த நிறைவேறவில்லை அவர் என்னிடம் பேசவே இல்லை நான் ஓரமாக உட்கார்ந்திருந்து அனைத்தையும் கவனித்தேன் முதல் முறையாக என் குருவின் சன்னிதானத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன் இதற்கு பிறகு தான் என் வாழ்க்கையில் நான் பேரானந்தம் கொண்டேன் இவரை போன்ற ஒரு குருவை பார்த்ததில்லை நாடும் இன்று வரை பல புத்தகத்தில் படித்திருக்கிறேன் பார்த்ததில்லை இவரை போல் பார்க்கவும் முடியாது நீ தயாராக இருந்தால் குரு உன்னை தேடி வருவார் என்று முதல் ஆனமீக அனுபவம் என் வாழ்க்கையில் முதல் 2000 ஆம் ஆண்டில் தொடங்கினது என் முதல் ஆன்மீகம் பயணம் தொடரும் சமணருடன்                                                     அடுத்த பகுதி  [அவருக்கு ஏன் சாமி கண்ணு என்று பெயர் வந்தது?]…….. #guru #vinodhan #samykannu #samanan

குருதேவரை சந்தித்த முதல் நொடி…………. Read More »

சாமிக்கண்ணு ஐயா நோக்குவர்மதால் செய்த ரயில் பயண அற்புதம்

Post Views: 421 சாமிக்கண்ணு ஐயா நோக்குவர்மதால் செய்த ரயில் பயண அற்புதம் 16 சீடர்களின் மனதில் இடம் பிடித்தேன்           part 3          என் குரு தேவரின் பயணம் 2002 வருடம் குரு தேவர் என்னை அவருடைய நெருங்கிய சீடனாக என்னை மனதார ஏற்றுக்கொண்டார் ஆனால் அதை அவர் என்னிடம் சொல்லவில்லை நானும் அவரிடம் எதையும் கேட்கவும் இல்லை காத்திருந்தேன் அவருடைய அன்புக்காக மட்டும் அவர் பல கலையை கலைகள் கற்று தேர்ந்த வித்தகர் என்று எனக்கு தெரியும் ஆனால் என்னென்ன கலைகள் என்று எனக்கு தெரியாது அவரோடு இருந்த அந்த பதினாறு சீடர்களும் மிகவும் அற்புதமாக பல விசேஷமான திறமை படைத்தவர்களாக இருந்தன நானும் அவர்களிடம் பல கேள்விகள் கேட்டேன் குருவை குறித்த கேள்விகள் ஏனென்றால் பல வருட காலம் அவர்கள் தான் அவரோடு இருக்கின்றனர் அதனால் அவர்களிடம் கேட்டால் பல விஷயங்கள் தெரியவரும் என்று நான் சிறுவயதிலேயே யோசித்து அந்த யோசனை நாள் அவர்களிடம் நன்மதிப்பையும் பெற்றுக் கொண்டேன் அவர்கள் எனக்கு சாமி கண்ண ஐயாவை குறித்த பலரும் தகவல்களை என்னிடம் சொன்னார்கள் சொன்ன  தகவல்களை கேட்டால் உண்மையாகவே சொல்கிறேன் அதிர்ந்து போய் விடுவீர்கள் நானும் அதே போல் அதிர்ந்து போனேன் இப்படிப்பட்டவராக இவர் என்று பல அனுபவங்களை நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள போகிறேன்           இந்த ஒவ்வொரு பதிவும் என்னுடைய குருநாதரை குறித்த பல தகவல்கள் இருக்கும் காரணம் இந்த உலகத்தால் மறைக்கப்பட்ட மிகப் பெரிய குரு இவர் ஆனால் இவரை யாருக்கும் தெரியவில்லை என்ற வேதனை எனக்கு இருந்தது மனதில் இவரை எப்படியாவது எல்லோரிடமும் சொல்ல வேண்டும் என்று ஆவல் எனக்கு அதிகமாக இருந்தது ஆனால் என் குருநாதர் சொன்னார் யாரிடமும் சொல்லாதே அதனால் என்னுடைய ஆர்வத்தை அனைத்தையும் மூட்டை கட்டி வைத்து மூடிக்கொண்டேன்                  என் குருநாதர் ஒவ்வொரு சீடர்களையும் கண்டுபிடித்தார் அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முத்துக்கள் என்று சொல்லலாம் சாமிக்கண்ணு ஐயா சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் வேத வார்த்தையாக வைத்துக் கொள்பவர்கள் அவர் என்ன சொல்கிறாரோ அதை மட்டுமே கீழ்ப்படிய கூடியவர்கள் தான் அந்த பதினாறு சீடர்கள் என் குரு சொன்ன பல கட்டளைகளை கீழ்ப்படிந்து நடப்பவர்கள் அந்த சீடர்களின் ஒருவன் நான் என்று நினைக்கும் போது எனக்கு மிகப் பெரும் பெருமையாக இருந்தது ஆனால் ஒன்று எனக்கு எதுவும் தெரியாது ஒன்றுதான் ஆனால் அவரிடம் அன்பை பெற முயற்சி செய்தேன் அவர் என்னிடம் காட்டின ஒன்றே ஒன்று அவர் சுண்டி விரலை பிடித்துக் கொள்வது மட்டும்தான் காரணம் என் வயது அது அந்த வயது இருப்பதால் நான் அதைத்தான் செய்ய வேண்டும் ஆனால் எல்லாவற்றையும் கவனித்தேன் ஆழமாக கவனித்து அந்த கவனத்தில் தெரிந்தது இவர் ஒரு சர்வ ஞானி என்று புரிந்தது இவர் ஒரு ஞானம் அடைந்த ஜீவன் என்று உணர்ந்தேன் இவர் முக்தி அடைந்தவர் என்று உணர்ந்தேன் அவருடைய குரூக்குல வாசத்தில் பல பேர் வருவார்கள் போவார்கள் அந்த குரூக்குல  வாசம் கேரளாவில் இருந்தது அந்த இடம்தான் ஆழப்புழா ஆனால் நான் ஆலப்புழாக்கு சென்றதில்லை அந்த வயதில்.என் குரு தேவர் அடிக்கடி சொல்லுவார் இன்னொரு குரூக்குலவாசம் கன்னியாகுமரியில் இருந்தது நான் அங்கு மட்டுமே சென்றிருக்கிறேன் என் குரு தேவர் அடிக்கடி சென்னைக்கு வருவார் அவர் வரும்போது எல்லாம் ஆவலாக ஒரு நாயைப் போல ஓடுவேன் அவரை பார்க்க தவித்து தவித்து ஓடுவேன்                                                 குரு தேவரை குறித்த முதல் அற்புதம் இவர் சாகாக்கலை கற்றவர் அதில் உயர் நிலையில் அடைந்தவர் கல்பம் உண்டவர் சிவயோகம் செய்தவர் மௌன யோகத்தை நோக்கி சென்றவர் . பதனாறு சீடர்களிடம் மனதில் இடம் பிடித்ததால் அவர்கள் சொன்ன ஒரு அற்புத தகவல்கள் என்னுடைய குருநாதரை குறித்த தகவல்                                 ராஜாங்கி குரு சொன்ன வட மாநில பயணம்                திருடர்களிடமிருந்து மக்களை காப்பாற்றின சாமிக்கண்ணு ஒரு முறை சாமி கண்ணு ஜயா வின் குருநாதர் ராஜாங்கி சித்தர் சொன்ன வார்த்தையின் படி வேறு ஒரு மாநிலத்துக்கு சென்றார் கன்னியாகுமரியில் இருந்து வட மாநிலம் சென்று கொண்டிருக்கும் பொழுது அப்பொழுது ஒரு ரயில் பயணத்தில் இவர் போய்க் கொண்டிருந்தார் அப்பொழுது ரயிலில் பல பேர் இருந்தார்கள் திடீரென்று ஒரு கும்பல் அங்கிருந்த ரயிலில் உள்ள பயணிகளில் இடமிருந்து பல நகைகள் பொருட்கள் எல்லாவற்றையும் திருட முயற்சித்தனர் ஆனால் அந்த திருட்டு நேரத்தில் சாமிக்கண்ணு நம் குரு தேவர் அங்கே இருந்தார் அவரிடம் எதுவும் இல்லை ஆனால் அவர்கள் அவரிடம் இருந்தும் சில பொருட்களை எடுத்துக் கொண்டனர் அவரும் அமைதியாக இருந்தார் அவர்களிடம் ஒரு கேள்வியை கேட்டார் நீங்கள் திருடுவது நல்லது தானே இதுவே உங்கள் வாழ்க்கையின் கடைசி திருட்டு திருடர்கள் என்ன சொல்வது என்று தெரியவில்லை நாங்கள் திருடுவது நல்லதா இதுவரை நாங்கள் இந்த வார்த்தையை கேள்விப்பட்டதே இல்லையே ஆமா நீங்கள் திருடுவது நல்லது தான் எவ்வளவு முடியுமோ அவ்வளவு திருடி கொள்ளுங்கள் ஏன் இப்படி சொல்கிறீர்கள் நீங்களும் திருடரா என்று திருடர்கள் என் குருநாதரை கேட்டனர் இல்லை நான் திருடன் அல்ல என்று குருநாதர் சொன்னார் அப்போது ஏன் நாங்கள் திருடு வது நல்லது என்று சொல்கிறீர்கள் காரணம் இதுதான் உங்கள் கடைசி திருட்டு இன்னொரு பத்து நிமிடத்தில் நீயும் சரி நானும் சரி இந்த ரயில் பயணம் முடியப்போகிறது என்று சொன்னார் அப்படி என்றால் என்ன நாங்கள் சாகப் போகிறோமா நீங்களும் சாகப் போகிறீர்களா என்று கேட்டனர் அவர் சொன்னார் இல்லை ஆனால் நீ மட்டும் சாவாய் என்று சொன்னால் இதை பார்த்த நொடிப் பொழுது ஒருவன் அங்கே மயக்கம் அடித்து விழுந்தான் அவன் மயக்கம் அடைந்து விழுந்தவுடன் குருநாதர் அவனை தலையில் தட்டி முதுகு தடைவி பின் பின்பு தட்டி அவனை அவனுக்கு தண்ணீர் கொடுத்து அவனை ஓரமாக திருடனை படுக்க வைத்தார் அந்த திருடன் சொன்னான் ஐயா நீங்கள் யார் என் பெயர் சமணன்                  நீங்கள் அவனை என்ன செய்தீர்கள் என்று சொல்லுங்கள் என்று சொன்னார் அவர் சொன்னார் நான் ஒன்றும் செய்யவில்லை நீ திருடின பணத்தை அவரிடம் கொடுத்து மன்னிப்பு கேட்டால் நீயும் தப்பிப்பாய் என்று சொன்னார் அவர்கள் தப்பி ஓட முயற்சி செய்யும்போது அங்கு இருந்த அனைவரும்  8 திருடர்கள் மயக்கம் அடித்து விழுந்தார்கள் பயந்து போனார்கள் திருடர்கள் இருந்த மக்கள் அனைவருக்கும் ஒடி வந்து அவர்களிடம் இருந்த பொருட்களை எல்லாம் மறுபடியும் வாங்கிக் கொண்டார்கள் சிறிது நேரம் கழித்து அவர்களை எழுப்பி உட்கார வைத்து குருதேவர் கேட்டார் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று அவர்கள் எழுந்து ஓட முயற்சி செய்தும் அவர்களால் ஓட முடியவில்லை அவர்கள் உடல் முழுவதும் கட்டி போட்டது போல் இருந்தது பிறகு ரயில் பயணம் முடிவு வரும் பொழுது காவலர்கள் அங்கே இருந்தன காவல் துறை அந்த எட்டு திருடர்களையும் பிடித்தனர் சாமிக்கண்ணு அய்யாவை பார்த்து மரியாதை உடன் காவல்துறையினர் நன்றியை தெரிவித்தனர் அவர்கள் கேட்டனர் எப்படி இதை செய்தீர்கள் என்று அவர் சொன்னார் இறைவன் சொன்னார் நான் செய்தேன் என்று சொன்னார். அவர் நோக்குவர்மதால் அவர்களை மயக்க அடிக்க வைத்து கீழே விழச் செய்தார் அங்கிருந்த மக்கள் அனைவரும் அவருக்கு நன்றியை தெரிவித்தனர் இவருக்கு (நோக்கு வர்மமும் தெரியும்) அனைத்து கலையையும் அறிவர் தொடரும் சமணணுடன்……………….  உங்கள் வினோதன் #vinodhan #nookuvarmam #நோக்கு வர்மம் #வர்மம் #varmakalai #varmam #guru #samykannu #samanan #theif #train #siddhar 

சாமிக்கண்ணு ஐயா நோக்குவர்மதால் செய்த ரயில் பயண அற்புதம் Read More »

Shopping Cart