Author name: Vinodhan

OBSTACLES TO YOGA CONCENTRATION

Post Views: 119 Yogi Concentration which follows immediately the “hold the mind blank” stage, is that of “holding the thought” upon the subject, object, or mental-picture, as the case may be. In this is meant more than appears on the surface, as in this is the Yoga meaning of Concrete Dhyana, in which is realized a peculiar union of subject and object. As this is important, I asked Parimal Bandhu to explain: In Dhyana, there comes to the mind the power, as it were, of the flowing in an unbroken current toward that point. In Dhyana you bring the contemplated or concentrated upon object up to your own mental plane of consciousness, and, so to speak, make it actually a form in your mind. Your “mind stuff”‘ thus assumes the actual form of the contemplated object, and has an actual (though but temporary) existence in your chitta. Thus, it becomes unified with you, for the time being, and it is possible to consider it directly, instead of indirectly through the medium of the senses. The object of Dhyana is to unify the mind with an object and to induce unification with the object. So holding the object in mind, it must be concentrated upon to unify the thing with the mind, in which process a sort of ‘click’ takes place in the mind, and an extraordinary experience is undergone. The ‘thing’ joins itself to ‘you’ by a curious internal phenomenon, and you feel ‘one’ with it. Clearly the sense of duality between you and it will have vanished, and you have this sense of unification. “What I have described is the power of mind working upon matter, and is a skill of the Masters. In the initiate it perhaps will not be pronounced, still in every case, there will be a trace of the experience just enough to let you know that it is there and in operation. Do not seek to overdevelop this power; let it develop naturally and without forcing. You can do good work in Yoga Concentration with but a trace of it, and I should add that this sense of “oneness” between thought and object disappears when the concentration is terminated. I have here given you one of the deepest secrets of creative mind magic.” In closing this chapter dealing with the power of concentration, I wish to give you what are known as “The Obstacles to Yoga Concentration” and “The Seven Little Devils Besetting the Yogi.” It is well that you know of these, as with their mastery you advance toward magician hood. The East Indian magicians are keenly aware of the wonderful power of the human mind when it is mastered, developed, and manifested in the process of concentration. They have devised methods of applying that power most effectively. In fact, the word “concentration” fully expresses the fundamental working principle of oriental magic and psychic powers. The Hindu teaching is that only by and through concentration are possible the manifestations of the Creative Mind Principle-the creation of the mental image (or ideal) being so clearly and powerfully held that the materialization thereof follows in an efficient manner and degree. The teaching is that mind-power, like any other kind of power, manifests intensively only when its field is narrowed and its energies are focused to a fine point in concentration. The magicians in their supernormal control of Nature, have mastered the science of concentration. They have done this through the careful study of Yoga, and by diligent practice have put into effect the methods of Pratyahara, Dharana, and Dhyana achieving mastery of the mind. They have also acquired the art of perfect concentration in mastering its two cardinal principles, viz., (1) the focusing or bringing to “one pointedness” the attention, and holding this upon the desired objective; and (2) the inhibiting or “shutting out” of all outside distractions that would in any way interfere with their complete concentration. Such is the mastery of the magician. The magician has also acquired the equally important skill of being able to close the doors of attention and thought upon any subject or object, after he has completed his concentrated consideration thereof. Thus, he keeps his mind free and unhampered at all times, so that he may give his full and undivided attention to each new thing that demands the use of his mind. The magician’s attention is like a great searchlight which is applied with intense power to any object upon which it is turned, but which is easily turned away from that object when the purpose of the application of its light has been accomplished. In other words, the magician is able to detach his mind from any and all subjects at will thus giving the mind relaxation and rest when such are needed, building mental strength. There is a lesson here from the East to the West, as many great occidental scholars are able to think, but are not able “not to think” at will. Both of these positive and negative aspects of thought are of equal importance, and both are achieved by the magician. I will now give you specific instruction in developing the power of your concentration in the exact manner of the East Indian magician. In this instruction, consider the basic principle as the main thing, allowing the details to be secondary, as such may possibly be varied to suit your own particular accomplishments. There is much food for thought in this phase of the instruction, and if it is your desire to learn of the presentation of the real magic of India, I suggest that you devote care, time, and attention to the mastery of magician concentration. As is well known, the crystal ball is much used by Hindu magicians. Western people often tend to regard the crystal as something mysterious, actually, as used in India, it is not mysterious in the least, it functions entirely as a scientific instrument providing a focusing point for concentration. 1 Disease. If you are

OBSTACLES TO YOGA CONCENTRATION Read More »

சுரப்பிகளின் முதன்மை சிப்பாயை பற்றி தெரிந்து கொள்வோம்

Post Views: 303   ஆண்களை விட பெண்களையே தைராய்டு பிரச்சனை அதிகம் தாக்குகிறது. நோய்க்கிருமி களால் இந்தப் பிரச்சனை உருவாவதில்லை. தைராய்டு பிரச்சனைகளால் இன்று பெண்கள் மற்றும் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.தைராய்டு என்பது நமது உடலின் கழுத்து பகுதியில் வண்ணத்துப்பூச்சி வடிவில் இருக்கும் ஒரு நாளமில்லா சுரப்பி. இதில் சுரக்கும் ஹார்மொனின் அளவு அதி கமாக இருந்தாலும் குறைவாக இருந்தாலும் இரண்டுமே உடலில் பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்கும்.                                                                                                                   தைராய்டு பணிதைராய்டு தைராக்ஸின் டி4 மற்றும் டிரியோடோதைரோனின் டி3 போன்ற ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. இந்த ஹார்மோன்கள் ரத்தத்தின் வழியாக உடலில் வளர்சிதை மாற்றத்திலும், செரிமான மண்டல உறுப்புகளிலும், இதயத்திலும், மூளை வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆரோக்கியமாக இந்த உறுப்புகளை செயல்பட வைக்க சீரான அளவில் தைராய்டு சுரப்பது அவசியமாகிறது.                                                                                                தைராய்டு சுரப்பியில் குறைபாடுஇயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி பிரச்சனை இருப்பவர்கள், தொற்றுகளால் எளிதில் பாதிக்கப்படுபவர்கள், மன அழுத்தம், பரம்பரை, ஹார்மோன் சமநிலையின்மை அனைத்துமே தைராய்டு சுரப்பியில் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கும்.                                                                                                             தைராய்டு பிரச்சனை,ஒன்று ஹைப்பர் தைராய்டு, மற்றொன்று ஹைப்போ தைராய்டு ஆகும். உடலுக்கு தேவையான அளவை விட அதிகளவு ஹார்மோன் சுரப்பது ஹைப்பர் தைராய்டு என்றும் தேவையை விட மிகக்குறைந்த அளவு உருவாவது ஹைப்போ தைராய்டு என்றும் அழைக்கப்படுகிறது.                                                                                    ஹைப்பர் தைராய்டின் அறிகுறிகள்:நாள் ஒன்றுக்கு அதிகமுறை மலம் கழிப்பது அல்லது மலம் கழிப்பது போன்ற உணர்வு உண்டாவதும், தூக்கமின்மை, படபடப்பு,யாரைக் கண்டாலும் எரிச்சல் ஆவது, எப்போதும் ஒருவித கவலையுடன் இருப்பது, நேரத்துக்கு தகுந்தாற் போன்று முடிவுகளை மாற்றிக்கொள்வது, உடல் தசைகள் பலவீனமாக இருப்பது, இரவு நேரங்களிலும் தூக்கமின்மை பிரச்சனை தொடர்வது, முடி உதிரும் பிரச்சனை தொடர்வது, எடைக் குறைவது, மனதில் ஒரு வித பயம் தொடருவது, கண்களில் அரிப்பை உண்டாக்குவது எல்லாமே ஹைப்பர் தைராய்டின் அறிகுறிகள்.                                                                                             ஹைப்போ தைராய்டுஉடல் எடை கூடுவது, முடி உதிர்வு, மலச்சிக்கல் பிரச்சனை இருப்பது, சீரற்ற மாதவிடாய், உடல் மனம் சோர்வு, நினைவுத் திறன் மங்கி இருப்பது, எப்போதும் களைப்பாக இருப்பது. சுரப்பி சரியாக செயல்படாமல் இருக்கும் போது கழுத்துபகுதி வீக்கமடைவது இவை தவிர சிலருக்கு மூட்டு வலிகளையும் உண்டாக்கும். சிலருக்கு எப்போதும் தூக்கம் வந்துகொண்டே இருக்கும். சருமத்தில் வறட்சியை உண்டாக்கும். குரல்களிலும் மாற்றம் இருக்கும். தைராய்டு அதிகமாகும் போது தொண்டை பகுதியில் வீக்கமும் எரிச்சலும் ஏற்பட்டு உணவை விழுங்குவதிலும் சிரமமாக இருக்கும். அதனால் மேற்கண்ட அறிகுறிகள். பெண்களுக்கு தீவிரமான தைராய்டு பிரச்சனை இருந்தால் சமயங்களில் கருத்தரிப்பதில் சிக்கலை உண்டாக்கிவிடும்.ஹார்மோன் சுரப்பு குறைவாக இருக்கும் பிரச்சனையாக இருந்தால் அதை சரிசெய்தபிறகு கருத்தரித்தல் குழந்தையின் ஆரோக்கியத்துக்கு நல்லது. சிறு பெண் குழந்தைகள் தைராய்டு பிரச்சனையால் பாதிக்கப்படும்போது விரைவில் பூப்படைதல் அல்லது தாமதிக்கும் பூப்படைதல் நிகழ்வு உண்டாகும். பூப்படைந்த பிறகு மாதவிடாய் பிரச்சனைகளை உண்டு செய்து சீரற்ற மாதவிடாய் பிரச்சனையை உண்டாக்கும். தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் எடுத்துகொள்ள வேண்டிய உணவுஉண்ணும் உணவில் சத்துகள் அதிகம் இருக்குமாறு பார்த்துகொள்ள வேண்டும். தைராய்டு ஹார்மோனின் உற்பத்தியை அதிகரிக்கும் உணவு வகைகளைப் பார்த்து எடுத்துகொள்வது நல்லது. அசைவம் சாப்பிடுபவர்கள் உப்பு நீரில் வளரும் கடல் உணவுகளை அதிகம் எடுத்துகொள்வதன் மூலம் தேவையான இயற்கை அயோடின் சத்து கிடைக்கிறது. தைராய்டு சுரப்பி சீராக செயல்பட உதவும் மற்றொரு பொருள் செலினியம் ஆகும். இவை காய்கறிகள், இறைச்சி, கால்சியம் நிறைந்த நாட்டு மாடுபால் போன்றவற்றில் இருக்கிறது. பச்சை காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்றவற்றையும் தொடர்ந்து எடுத்து கொள்வது நல்லது. இந்த வகை உணவுகள் டி 4 என்னும் ஹார்மோனை டி3 ஹார்மோனாக மாற்றும் இராசயனத் தனிமம் இதில் உள்ளது.                                                                                                                                                                            தவிர்க்க வேண்டிய உணவுதைராய்டு பிரச்சனை செரிமானத்தைக் கடினப்படுத்தும் பேக்கரி உணவுகள் செரிமானத்தை மட்டுமல்லாமல் தைராய்டு சுரப்பையும் பாதிக்கும். அதனால் இயன்றவரை இந்த வகையான பொருள்களைத் தவிர்ப்பது தைராய்டு சுரப்பில் பாதிப்பை உண்டாக்காது. கொழுப்பு அதிகம் நிறைந்த உணவுகளையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். பாக்கெட்டில் அடைக்கப்பட்டிருக்கும் உண வுகள், எண்ணெயில் பொறித்த உணவுகள், சாட்வகைகள், அதிக மசாலாக்கள் அனைத்தும் தைராய்டு சுரப்புக்கு இடையூறை உண்டாக்கும். ஆல்கஹால் பழக்கத்தைக் கொண்டிருக்கும் பெண்கள் தைராய்டு பிரச்சனைக்கு பிறகு அதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவை தைராய்டு சுரப்பில் ஏற்ற தாழ்வுகளை உண்டாக்கும்.                                                                                                  தவிர்க்க வேண்டியவைகள்நாம் உண்ணும் பாக்கெட் உப்பு, வெள்ளைசக்கரை,சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்த நேரமும் ஏசியில் வேலை பார்ப்பது, அதிக கொழுப்புள்ள உணவுகளை,பாக்கெட்டில் அடைக்கப்பட்ட நேரடி உணவுகளை,ஃப்ரிட்ஜ் உணவுகள்.                                                                                                      இதற்கெல்லாம் தீர்வு நீங்கள் தைராய்டு பிரச்சினையிலிருந்து சிறு வாழ்க்கையை மாற்றிக் கொண்டாலே நிரந்தரமாக நம்மள நாமே குணப்படுத்திக் கொள்ளலாம்.கடல் உப்பு,நல்ல எண்ணை குளியல், காலை 6 மணி முதல் 6:45 மணி வரை உள்ள சூரிய குளியல் மாலை 5:30 மணி முதல்6:15 சூரிய குளியல், மண் குளியல் மூலிகை பல்பொடி, மண்பானை சமையல், மண்சட்டியில் சுடுதண்ணீர் அல்லது மண்பானை தண்ணீர்                                                                                                                      யோகா தீர்வு யோகா: உசர்ட்டாசனம், சர்வாங்காசனம், புஜங்காசனம்இந்த முறைகளைப் பின்பற்றி வரும்போது உங்களது தைராய்டு கொஞ்சம்கொஞ்சமாக குணமாகி நீங்கள் குணமாகி விடுவீர்கள். என்றுமே இயற்கையுடன் ஒன்றி வாழத் தொடங்கும்போது

சுரப்பிகளின் முதன்மை சிப்பாயை பற்றி தெரிந்து கொள்வோம் Read More »

விந்து விழாமல் இருக்க 15 தந்திரங்கள்

Post Views: 4,554 ஆண்மகனோ பெண்னை அனுபவிப்பதற்கு அவளை திருப்தி படுத்துவதற்காக முயலுகிறோ இல்லையோ தன்னை திருப்திபடுத்தி விடுகிறான். பிறகு மனைவியின் நிலை என்ன ஆவது என ஆராய்ச்சியாளர்களின் ஒரு கணிப்பில் ஒரு பெண்ணை உடல் உறவில் ஈடுபட்டு ஆணுடன் உறவு மேற்கொள்ளுமாறு விட்டனர். அதில் ஒரு ஆண் உடலுறவு கொண்டு விட்ட பிறகு பெண்ணிடம் கேட்டார்களாம் உங்களுக்கு திருப்தியா அதற்கு அந்த பெண் இல்லை எனக்கு இப்போதுதான் உணர்வு தூண்டப்படுகிறது என்று கூறினாள். அப்போது ஆண் உறவு கொண்டு விட்டான் இப்படி என்றால் ஆணின் விந்தானது வெளியே வந்ததும் ஆணின் காம உணர்வு 100லிருந்து ஜீரோ வீற்க்கு வந்துவிடும் ஆனால் பெண் அப்படி இல்லை அதற்கு எல்லையே கிடையாது .பெண் ஈடிற்கு ஆண் தன்னுடைய விந்தை வெளியேற்ற முடியாத அளவிற்கு பெண்ணுடன் உறவில் ஈடுபட்டால் ஒழிய இன்பம் பொங்கிக் கொண்டே இருக்கும் என்றும் சொர்க்கம்தான் ஆணின் விந்து வெளியே வராமல் இருக்க சில தந்திரங்கள் என்னவென்று பார்ப்போம் அந்த காலத்தில் ராஜாக்கள் ராணியுடன் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் உறவில் ஈடுபட்டனர் என்று வரலாறு கூறுகிறது.ஆனால் இப்போது அதிகபட்சம் 30 நிமிடம் கூட உறவில் நம்மால் ஈடுபட முடியவில்லை இதற்குக் காரணம் கைப்பழத்தினால் விந்து வெளியேற்றம் செய்வதால் விந்து சீக்கிரம் வெளியே வருவது இதை குறித்து விழிப்புணர்வு யாருக்கும் கிடையாது. 1 நீங்கள் இத்தனை வருடமாக உடலுறவில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மனநிலையை இப்போதே மாற்றியமைக்க வேண்டும் உடலுறவு ஆரம்பித்தவுடன் நீங்கள் உங்களின் மனநிலையை கீழ் நிலைக்குக் கொண்டு செல்லக்கூடாது விந்துவை பற்றி நினைக்கக் கூடாது அதை மறந்துவிட வேண்டும் சுகத்தை எப்படி நீடிப்பது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். 2 உடலுறவின் போது மனசும் அறிவும் சமஅளவு செயல்பட்டால் விந்து விழாமல் நீண்ட நேரம் உடலுறவு கொள்ள முடியும் எப்படி என்றால் மனமானது தனது அன்பினை வைத்துக்கொண்டு அறிவானது முழுமையான சுகத்திற்காக பெண்களை திருப்தி படுத்துவதே நோக்கம் என்கிற விஷயத்தில் ஈடுபட வேண்டும். 3. உறவின் போது விந்துவானது ஆண்குறியில் இல்லை என்றும் விந்து தலையில் இருப்பதுபோன்று அந்த நேரத்தில் கற்பனை செய்து விந்து தலையில் தான் இருக்கிறது என்று மனதை நம்ப வைக்க வேண்டும் மனம் நம்பினால் விந்து வருவதற்கு நேரம் நீடிக்கும். 4. விந்து வராமல் தடுக்க மூச்சு ஓட்டத்தில் கவனம் வைக்க வேண்டும். மூச்சு ஓட்டத்தில் கவனம் இருக்கும் போது விந்து வெளிவரும் தன்மை குறைந்து கவனம் மூச்சு ஓட்டத்தில் இருக்கும்போது நம் கவனம் விந்துவில் இருக்காது. இதனால் விந்து வெளியே வராது. 5. நீங்கள் இணையதளத்தில் பார்க்கும் ஏ படம் முற்றிலும் தவறான ஒன்று அதில் வரும் உடலுறவு போல் நீங்கள் ஈடுபட்டால் உங்கள் துணைவி அந்த கனமே உங்களை விட்டு ஓடி விடுவாள் அதில் கரடுமுரடாக காட்சிகளை காண்பித்து நம் அறிவு செயல்படாத ஒன்றாக மாற்றி வைத்திருக்கிறார்கள். எனவே இணையதளத்தில் பார்ப்பதை முற்றிலுமாக தவிர்த்துவிடுங்கள் அதைப் பார்த்தால் உங்களுக்கு விந்து வெளியேறும் அதை பார்க்கிற உங்கள் மனம் அதை நம்பி அதில் வரும் காட்சிகளை போல் நீங்கள் வேகமாக கரடுமுரடாக உடலுறவு கொள்வதால் உங்கள் விந்துஉடனே வெளியேறி துணைவியும் கடுப்பாகி உங்களை விட்டு ஓடிவிடுவாள். 6. நமக்கு ஏன் விந்து வெளியே வருகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள் நாம் மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்தால் விந்து வெளியேறுகிறது.அதாவது நம்மை குறித்த தாழ்வு மனப்பான்மை பயம் பதட்டம் கவலை போன்ற துன்ப உணர்ச்சிகளால் மனித உடலானது உடலுறவு நேரத்தில் விந்துவை சீக்கிரமாக வெளியேற்றுகிறது. 7. பிறகு சமுதாயம் நமக்கு காமத்தை தவறாக கூறுவதாலும் சில தவறான மனப்பதிவுகள் நம்மிடத்தில் அதிகமாக இருக்கிறது எப்படி என்றால் உடலுறவு கொள்வதற்கு முன்பே ஒரு சில பயம் பதட்டம் போன்றாலும் நம் உடலுறவில் நமது எண்ணம் சிதைக்கப்படுவதாலும் பிறகு சமுதாயம் சிலவற்றை கூறியிருக்கும் என்னவென்றால் உடலுறவு செய்ய தெரியவில்லை நீ ஆம்பளையே இல்லை மனைவி நம்மை மதிக்க மாட்டாள் குழந்தை இல்லை என்றால் ஆண்மை இல்லாதவனாகி விடுவாய் என்றும் இது போன்ற பலவற்றை நம் மனதை பாதிக்கும் அளவிற்கு பெரும்பாலோர் கூறுகிறார்கள். இந்த மனப்பதிவுகள் தான் நமக்கு பயமும் பதட்டமும் அந்த நேரத்திலேயே ஏற்படுத்துகிறது முதலில் அப்பேர்ப்பட்ட சில மனப்பதிவுகள் ஒழித்தால் உங்களின் தாம்பத்திய நேரம் கூட வாய்ப்பு அதிகம் உள்ளது.இது முதல்தடவையாக நீங்கள் உறவு மேற்கொள்ளும் போது பதட்டம் பயம் ஏற்படுகிறதென்றால் அதனால் கவலை வேண்டாம் அந்த மாதிரி மனநிலையை உடைப்பதற்கு மனைவியின் மேல் உடலுறவு கொள்ளும்போது அதிக அன்பும் ஆசையும் வையுங்கள் பயம் பதட்டம் காணாமல் போகும் உடலுறவு பற்றிய தவறான மனப்பதிவை விட்டுவிடுங்கள். 8‌. விந்து வெளியே வருவதற்கு மூல காரணம் மனமே தவிர உடல் கிடையாது மனதை காமத்தில் மிக தெளிவாக பக்குவப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள் எனவே மன நிலை மாறினால் உடலானது அதற்கேற்றார்போல் மாற்றிக் கொள்ளும் மன தைரியம் அதிகமானல் விந்து வெளியே வராது. 9. உடலுறவு கொள்ளும்போது விந்து வெளியே வருவது போன்று உணர்வு வந்தால் அந்த உணர்வை மாற்றியமைக்க வேண்டும் எப்படி என்றால் அந்த உணர்வை உங்களுக்கு ஏதேனும் கடன்தொல்லை போன்றவற்றை நினைவுக்கு கொண்டு வந்தால் அங்கு விந்து வரும் உணர்வு மாற்றியமைக்கப்படும் அந்த நேரத்தில் உணர்வு நிலையை உங்களுக்கு மாற்றியமைக்க தெரிந்தால் நீங்கள் தான் கில்லாடி ஏனென்றால் அப்போது நேரம் நீடிக்கும். 10. இது கொஞ்சம் பரிதாபமான உண்மை நம்மில் எத்தனை பேரிடம் மனைவியின் மீது 100 சதவீத அன்பு இருக்கிறது உடலுறவின் போது உங்கள் மனைவியின் மீது அன்பு 100% இருந்தால் விந்து வெளியே வரவே வராது. உடலுறவில் நாம் திருப்தியை தானே அங்கு பார்ப்போம். நம் மனைவியை நினைத்துப் பார்க்கிறோமா என்றால் இல்லை அவர்கள் இதையெல்லாம் வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள் அவர்களின் உணர்வுகள் மூலம் தான் வெளிப்படுத்துவார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்‌.நீங்கள் 100 சதவீதம் மனைவியின் மேல் அன்பு வைத்திருந்தால் நீங்கள் தவறு செய்தாலும்கூட அவர்களுக்கு கோபமே வராது.அன்பு கொண்டு உடலுறவில் திருப்தி படுத்தவேண்டும். நடைமுறை வாழ்வில் அன்பை செலுத்த வேண்டும். வாழ்க்கை என்றும் அழகாக விளங்கும். 11. இதனை கடைபிடித்தால் ஒழிய விந்து வருவதை தடுத்து தாம்பத்தியத்தில் இருவருக்கும் முழு satisfaction கிடைக்கும்.satisfaction என்கிற ஒன்று நமக்கு தான் கிடைக்கிறதே தவிர அவர்களுக்கு இல்லை அதை புரிந்து கொள்ள வேண்டும் அறிவை செயல்படுத்தி தாம்பத்திய உறவை மன சஞ்சலங்கள் இல்லாமல் நேரத்தை நீட்டிக்க முடியும். அறிவைக் கொண்டு செயல்படுத்துவதே தந்திரம் என்பார்கள் அது வெளியேறும் போது அதில் நாம் திருப்திக் கொள்வோம் நம்முடைய துணைவி திருப்தி கொள்ள மாட்டாள் அவர்களுக்கு எல்லையே கிடையாது அதற்காகவும் முழு சுகத்திற்காகவும் நாம் நேரத்தை நீடிக்க வேண்டும் நாம் இந்த காலத்தில் 45 நிமிடமாவது உடலுறவு மேற் கொண்டால் ஒழிய திருப்தி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது அவை மனதை பக்குவப் படுத்துவதில் உள்ள தந்திரத்தில் உள்ளது. 12. சரி இதுவரை மனதின் நிலையையும் அதன் தன்மையையும் மாற்றி அமைக்கவும் அதனை பக்குவப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினோம். ஆனால் உடலில் எப்படி விந்து வராமல் வீரியமாக மாற்றுவது என்பதை பார்ப்போம். மனதிற்கு புரிதல் இருந்தால் போதும் அதனால் உடலுக்கு சில பயிற்சி வேண்டும் இதை கொடுத்தால் நாம் உடல் உறவில் முழுமை அடைய முடியும். என்ன பயிற்சி என்றால் மூலபந்தம் என்பார்கள்.அதை எப்படி செய்வது என்றால் தினமும் காலை மாலை இரவு மூன்று நேரத்தில் செய்ய வேண்டும். காலையில் எழுந்தவுடன் வஜ்ராசனத்தில் உட்கார்ந்து நம்முடைய பிறப்புஉறுப்பையும் ஆசனவாயையும் சுருக்கி விரிக்க வேண்டும் இதை பத்து தடவை செய்ய வேண்டும். ஒன்று என்று சொன்னால் ஐந்து வினாடி போதும் அதாவது ஒருதடவை சுருக்கி விரிக்கும்போது ஐந்து வினாடி அதே போன்று பத்து தடவை செய்யும் போது எத்தனை வினாடி என்று கணக்கு செய்து கொள்ளுங்கள். மாலை சாதாரணமாக நின்று வலது கையை மேலே தூக்கி சுவற்றில் வைக்க வேண்டும். அதாவது சுவற்றில் எதிரெதிரே வைக்கக்கூடாது சுவற்றில் sideடாக நின்று வலது கையை மேலே தூக்கி கால்களை ஒட்டி வைத்திருக்காமல் இடைவெளி விட்டு அதே போன்று பத்து தடவை சுருக்கி விரிக்க வேண்டும்.வினாடி 5 பிறகு இரவில் அதே வஜ்ராசனம் காலையில்செய்வது போல் இரவில் செய்ய வேண்டும். 13. அடுத்த பயிற்சி வஜ்ரோலி எப்படி செய்வது என்றால் காலை மாலையில் நமது பிறப்பு உறுப்பின் மீது தண்ணீரை 10 மக்கு ஊற்றவேண்டும் இதனை தினமும் செய்ய வேண்டும் அதாவது பிறப்பு உறுப்பில் உள்ள பென்னீஸ்மேல் ஊற்ற வேண்டும் இதனால் பிறப்புஉறுப்பு தண்ணீரை உறிஞ்சி வெளியே அனுப்பும் ஊற்றும்போது தண்ணீர் சிறுநீராக வெளியே வரும்.இதை செய்தால் உடல் அளவில் விந்து வெளியே வராமல் தடுக்கும் உடலுறவு நேரம் நீடிக்கும்.இவை யோகிகள் செய்யும் பயிற்சியாகும். 14. இந்த பயிற்சி எல்லாம் வாழ்க்கை முழுவதும் செய்து வருவதால் உடல் ஆரோக்கியம் எப்போதும் போல் கூடும் இந்த மாதிரி பயிற்சிகள் நிறைய இருக்கு நீங்கள் இதை மட்டும் செய்தால் போதும் விந்து வெளியேறுதல் போன்றவை உங்களுக்கு வரவே வராது. இதனால் பெண்களும் இந்த பயிற்சி செய்யலாம். இந்த பயிற்சிகளையும் மன நிலையும் சரியாக செயல்படும்போது விந்து வராது. 15. நீங்கள் இதனை ஒரு நூறு நாட்கள் பயிற்சி செய்து மனநிலையை மாற்றி அமைத்து உடல் உறவில் ஈடுபட்டுப் பாருங்கள் கட்டில் கலையின் மன்மதன் நீங்கதான் விந்து வெளிப்பாடு என்பது வருவதற்கு அதிக நேரம் எடுக்கும் உடலுக்கு பயிற்சியும் மனநிலையும் சரியாக இருந்தாலே போதும் சிறந்தது. பயிற்சி மட்டும் செய்து மன நிலை மாறாமல் இருந்தாலும் வீண் ஆகவே முதலில் பயிற்சி என்பது இரண்டாவது பட்சம் மன நிலையை மாற்றி அமையுங்கள் உங்கள் மனதில் சில பதிவுகளை மாற்றி அமையுங்கள் பிறகு

விந்து விழாமல் இருக்க 15 தந்திரங்கள் Read More »

இரகசியங்களை பாதுகாத்துக் கொள்ளவும்…

Post Views: 320     ரகசியம் என்றால் நாம் மறைத்து அதை மற்றவர்களுக்கு தெரியக் கூடாது ஒன்றாக வைத்திருப்பது ரகசியம் என்கிறோம்.ஏன் ரகசியத்தை நாம் பாதுகாக்க வேண்டும். என்றால் ரகசியம் என்றாலே வெளியே சொல்லக் கூடாது ஏன் என்றால் அதை நீங்கள் வெளிப்படையாக சொல்லும் போது அங்கு நமக்கு பிரச்சனைகளை விளைவிக்கிறது. சித்தர்கள் குருமார்கள் எல்லாம் சிலவற்றை மறைத்து வைத்துள்ளார்கள். அவர்கள் அதை வெளிப்படையாக சொல்லியிருக்கலாமே அங்குதான் அவர்கள் ரகசியத்தை பாதுகாக்கிறார்கள். ஏனென்றால் பூமியில் பலவிதமான விசித்திரமான மனிதர்கள் பூமியில் வசிக்கின்றன. அதனால் சிலவற்றை கூறினால் நமக்கு சில பிரச்சினைகள் வரும். எப்படி என்றால் பலவிதமான மனிதர்கள் அவர்கள் வாழும் சூழ்நிலையை கொண்டு வெவ்வேறு கண்ணோட்டத்தில் இருக்கிறது. இப்போது மனிதர்களிடம் இருக்கும் கெட்ட பழக்கம் என்னவென்றால் ஒருவரிடம் ஒன்று சொன்னால் போதும் அதை அப்படியே மற்றவரிடம் போய் சொல்லிவிடும் ஆர்வம் அதிகமாக உள்ளது. முதலில் இந்த பழக்கம் நம்மை நாளடைவில் நம்முடைய மதிப்பு குறைய ஆரம்பிக்கிறது ஏன் என்றால் சில விஷயங்கள் வெளியில் சொல்லாமல் ரகசியமாக வைக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள் என்னென்ன விஷயங்கள் என்று பார்ப்போம் தனது குடும்ப கஷ்டத்தையும் குடும்ப விஷயத்தையும் வெளியே சொல்ல கூடாது.தனது நோயினையும் வெளியே சொல்லக்கூடாது     தெய்வீக அனுபவத்தை வெளியே சொல்லக்கூடாது மனவேதனை மனக்கஷ்டங்களை வெளியே சொல்லக்கூடாது. தனது பலவீனத்தை வெளியே சொல்லக்கூடாது. வாழ்க்கையில் அனுபவித்த துன்பங்களை வெளியே சொல்லக்கூடாது.ஒருவனுக்கு செய்த உதவியையும் வெளியே சொல்லக்கூடாது ஒருவன் நமக்குச் செய்த துரோகத்தையும் வெளியே சொல்லக்கூடாது.ஒருவனின் சொத்து மதிப்பினை வெளியே சொல்லக்கூடாது. இது போன்ற நம் வாழ்க்கையில் நடந்த சிலவற்றை சில சம்பவங்களை யாரிடமும் சொல்லாமல் இருப்பது நமக்கு மிகவும் நன்றி இதையெல்லாம் வெளியில் சொல்லாத அளவுக்கு நம் மனதை சரியாக பயன்படுத்த தெரிய வேண்டும் ஏன் இதை எல்லாம் வெளியே சொல்லக் கூடாது என்றால் நம்மை கீழ்நிலையான மனிதனாக காட்டும். எனவே நாம் எப்போதும் உயர்ந்த குணத்துடன் வாழ இதையெல்லாம் யாரிடமும் வெளியே சொல்லக்கூடாது அதேபோன்று ஒருவரைப்பற்றி நல்லதாக இருந்தால் பரவாயில்லை கீழ்த்தனமாக மற்றொருவரிடம் சொல்லக்கூடாது இப்படிப்பட்ட செயல் நமக்கு தனமாக காண்பிக்கும் இன்றைக்கும் அனைவரிடமும் இருக்கும் தீய குணம் அதில் இதுவும் ஒன்று ஒருவரை குறை சொல்வது ஒருவரை மட்டம் தட்டுவது பின்னால் இழிவாக பேசுவது இதையெல்லாம் தீய குணங்கள் ஆகும்.எனவே இதனை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். ரகசியம் என்றால் இதுதான் நமக்கு இந்த விஷயங்கள் எல்லாம் மனதிற்கு சம்பந்தப்பட்ட ஒன்னு மனதால் நாம் படுகின்ற இன்பமோ துன்பமோ எதுவாக இருந்தாலும் மற்றவர்களிடம் பகிரும் மனப்பான்மை நமக்கு அதிகம் உண்டு. அந்த பழக்கத்தை இன்றிலிருந்து விட்டுவிடுங்கள். பகிருங்கள் ஒருசிலவற்றை பகிருங்கள் ஏனென்றால் மனிதன் ரொம்ப மோசமானவன் அவனுக்குள் இருக்கும் அந்த மனதிற்கு எல்லையே கிடையாது. வாழ்க்கை என்னும் நாடகத்தில் மனிதன் காட்டும் நடிப்பு அவன் நல்லவனா கெட்டவனா புரிவதில்லை நமக்கு இது முடிவில்லாத கணக்கு.      மனிதர்களிடம் பார்த்துப் பழகுங்கள் ஏனெனில் இதுதான் முறையான ஒரு பழக்கம் இது .ஏனெனில் மனம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் நாம் வெளியே சொல்லும்போது அந்த மனம் உள்வாங்கும் விஷயமானது கஷ்டப்படுவது போல் பின் அந்த மனம் நம்மை கீழ்த்தனமாக எடைப்போட்டுவிடும். ஆகவே ரகசியம் என்பது இதுதான்.இந்த புரிதல் வந்தாலே போதும் ரகசியம் என்பதை நாம் எளிமையாக கையாள முடியும் வெளியில் சொன்னால் நம் மனம் ஆறுதல் அடையும் அதே அளவிற்கு மற்றவர்கள் நம்மை குறைவாக எடை போட்டு விடுவதும் உண்டு. நீங்கள் சொல்லுகிற விஷயத்தைப் பொறுத்து மனிதர்கள் நம்மை எடை போட்டுவிடுவார்கள். அதாவது மனம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு மட்டும் உதாரணம் என்னிடம் பணம் அதிகமாக உள்ளது என்றால் உயர்வான மதிப்பும் அதுவே வறுமை என்றால் குறைவான மதிப்பு வைப்பார்கள்.ஏழை பணக்காரன் யாராக இருந்தாலும் சரி. நம்முடைய குணாதிசத்திற்கு மயங்காத யாரும் கிடையாது.நல்ல குணாதிசயம் இருக்குமேயானால் நம்முடைய மதிப்பு எப்போதும் உயர்ந்ததாக இருக்கும். அதனால் ரகசியம் என்பது முக்கியம்… மகிழ்ச்சி… Hipnotist Sivaganesh 

இரகசியங்களை பாதுகாத்துக் கொள்ளவும்… Read More »

ஆகாயத்திலுள்ள அணுவானது எப்படி? விந்துவாக மாறி பின் குழந்தையாக பிறக்கிறது?

Post Views: 321         விந்து இதைக் குறித்து பலருக்கு தெரியும் ஆனால் அது எப்படி மறுபடியும் ஜெனிப்பிக்கிறது என்கிற விஷயம் நாம் அறியாமல் இருக்கிறோம் இதை தான் வள்ளலார் மிகவும் அழகாக சொல்கிறார் அவர் சொல்லும் அந்த அற்புத கதையை பார்ப்போம்முதலில் ஒரு குழந்தை எப்படி உருவாகிறது ஆணும் பெண்ணும் சேர்ந்து உடலுறவு கொண்டு ஆணின் விந்தும் பெண்ணின் சுரோனிதமும் இணைந்து ஒரு புதிய பொருள் கிடைக்கிறது. அதுவே அழகான குழந்தையாக பிறக்கிறது இதுதான் நமக்கு தெரியும். பிறகு அவை வளர்ந்து உலக வாழ்க்கையை அனுபவித்து பிறகு இழக்கிறது. இறந்தபின் நம் முன்னோர்கள் அல்லது சமூகம் கூறுவதுபோல் அந்த உயிர் மேலே சென்று அவை செய்த பாவ புண்ணியத்தை கொண்டு கடவுள் அதற்கு அடுத்த பிறவியை கொடுக்கிறார் என்று நமக்கு தெரிந்த ஒரு கதை இவ்வளவுதான். அதாவது அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்று நமக்கு தெரியும். பஞ்சபூத சக்திகளை கொண்டு நம் உடல் செயல்படுகிறது.        வள்ளல் பெருமான் இதை மிக அற்புதமாக விளக்கியுள்ளார்.அணுவானது எப்படி விந்துவாக மாறி குழந்தையாக பிறக்கிறது என்பதை.முதலில் மனித உடலில் உள்ள உயிரானது இறந்த பிறகு அணுவாக ஆகாயத்தில் சென்றடைகிறது அதாவது space ல் பிறகு வேறு ஒரு மனித உடம்பிலே இன்னொரு தாயினுடைய கர்ப்பப் பையிலேயே தந்தையினுடைய விந்துத்துளி வழியாக போய் சேருகின்ற வரை அவை எப்படிதான் ஆகாயத்தில் அணுவாக இருக்கின்றது. சரி பூமிக்கு எப்படி வருகிறது என்றால் மழை வரும்போது அந்த உயிரானது அணு அளவாக மழைத்துளியின் வழியாக பயிர்கள் அல்லது தானியங்களில் சேருகிறது. பிறகு நாம் உண்ணுகின்ற தானியம் பயிர்கள் உணவின் மூலம் நம் உடலுக்கு உள்ளே சென்று தந்தையினுடைய வயிற்றில் இரண்டு மாத காலம் இருக்கின்றது.அம்மாவின் உடைய வயிற்றில் பத்துமாதம் இருக்கின்றோம் ஆனால் அதற்கு முன்பே தந்தையின் வயிற்றில் இரண்டு மாத காலம் அந்த உயிரானது இருக்கின்றது. பிறகு இரண்டு மாத காலத்தில் அவை வளர்ச்சி அடைகிறது. ஆனால் இரண்டு மாத காலத்தில் அவை வளர்ச்சி அடையவில்லை என்றால் குழந்தை பிறக்காது.இதன் மூலம் தான் ஆண் மலட்டுத் தன்மை ஏற்படுகிறது என்று வள்ளல் பெருமான் தெளிவாக கூறுகின்றார். பிறகு வளர்ச்சி அடைந்த உயிரானது தந்தையின் சுற்றில் கலந்து பிறகு தாயின் உடைய வயிற்றில் உள்ள கர்ப்பப் பையிலேயே சென்று பின் கரு வளர்ச்சி அடைந்து பிறகு நாம் குழந்தையாக பிறக்கின்றோம். அணுவின் மூலம் நாம் இப்படி தான் பிறக்கின்றோம்.       உயிரின் உடைய தன்மை என்னவென்றால் ஆகாய கூறு ஆகாயம் என்றால் ஆன்மா காயம் என்றால் உடம்பு ஆன்மாவின் உடைய உடம்பு எனவே அனைவரும் பெறுகிறோம் அதனால்தான் அணுவானது செல்களாக மாறி பின் உறுப்புகளாக மாறி பின் உடம்பாக மாறுகிறது. இவை நமக்குத் தெரிந்தவை ஆனால் இந்த முறையானது அதற்கும் அப்பாற்பட்ட இயற்கையின் செயல் முறையாகும். இவை எப்படி மனிதனுக்குள்ளே செல்கிறதோ அதே போல்தான் விலங்குகளுக்கும் நடக்கும் அதுவே அணுவினுடைய செயல் முறை என்னவென்றால் அணுக்கள் ஆனது ஏதாவது ஒரு இடத்தில் சென்று செட்டில் ஆக வேண்டும் என்று நினைக்கிறதாம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இந்த முறையை வள்ளல் பெருமான் மிக அழகாக கூறியுள்ளார். இதனால்தான் நாம் விந்துவினை உயிரணுக்கள் என்கிறோம் இந்த நுட்பமான விஷயத்தை மட்டும் நாம் இதில் தெரிந்துகொண்டோம்.நன்றி…மகிழ்ச்சி Hipnotist Sivaganesh,

ஆகாயத்திலுள்ள அணுவானது எப்படி? விந்துவாக மாறி பின் குழந்தையாக பிறக்கிறது? Read More »

பிரபஞ்ச சுவாசம் என்றால் என்ன?

Post Views: 359             இந்தக் கேள்விக்கு இந்த உலகில் பலர் பேர் விடை தேடிக் கொண்டிருக்கிறார்கள் இந்த வித்தையை அறிந்தவர்கள் ஒரு சிலர் மட்டும் தான் பலரும் உண்டு அதிலும் இப்பொழுது இக்காலகட்டத்தில் தேவைப்படக்கூடிய ஒருவர் இது அவருடைய அனுபவம் அவர்தான் சுவாமி ராமா இந்த விஷயத்தை அனைத்தையும் தன் வாழ்க்கையில் அனுபவித்தவர் அவர் சொல்லும் செயல்பாடுதான் இந்த கருத்து இதை சொன்னது அனைத்தும் சுவாமி ராமா.நாம் விஞ்ஞான யுகத்தில் வாழ்கிறோம்.உடலை அடிப்படையாக வைத்தே மனம் இயங்குகிறது என்று முடிவு செய்கின்றோம். உடலில் இருந்து மனம் பிறக்கிறது என்ற கோணத்திலிருந்து பார்த்தால் கர்ப்பத்திலுள்ள சிசுவுக்கு மனம் கிடையாது. அது உலகில் பிறந்த பின்னர்தான் எண்ணம், உணர்வு போன்றவை வளர்ச்சி பெறுகின்றன. இதே வகையில்தான் நாம் பிரபஞ்சத்தையும் பார்க்கிறோம்.எங்கிருந்தோ வந்து மண்ணில் விழுந்த சில மூலக்கூறுகள் பல்கிப் பெருகின. அதன் வாயிலாக உயிரினங்களின் தோற்றம் ஏற்பட்டதாக நாம் நம்புகிறோம். மில்லியன் கணக்கான வருடங்கள் அந்த உயிரினங்களுக்கு உள்ளே பல சிக்கலான விந்தைகள் நடந்தன. பிறகு மெதுவாக அந்த உயிருக்கு உணர்வுகள் தோன்றின.ஆனால் பழங்காலத்தைச் சேர்ந்த கீழ்த்திசை மக்களின் கருத்து வேறுவிதமாக இருந்தது. சொல்லப் போனால் முந்தைய கருத்துக்கு அதற்கு எதிரானதாகவே இருந்தது. மனிதனின் ஒவ்வொரு நிலையும் மேலே உள்ள நிலையிலிருந்து உருவெடுப்பதாக யோக தத்துவம் கூறுகிறது. உணர்வுகளில் இருந்து மனம் பிறக்கிறது. மனதிலிருந்து வெளிப் ஸ்தூல உடல் தோன்றுகிறது. மனம் உடலாக வடிவெடுக்க விரும்புவதால் அது அவ்விதம் தன்னை படுத்திக்கொள்கிறது என்கிறது யோக நூல். உலகைப் பார்க்கும் ஒரு வித்தியாசமான கோணம் இது! மனிதனின் மூலாதாரமானது உடல், மனம் போன்ற அம்சங்களுக்கு அப்பாற்பட்டது. புரிந்துகொள்ள முடியாத ஒரு உணர்வின் வடிவமாக நாம் பிறப்பெடுத்திருக்கிறோம் என்று இது உணர்த்துகிறது. ஸ்தூல உடலுக்கு அப்பால் இந்த உணர்வு நிலை அமைந்திருக்கிறது. இங்கிருந்துதான் நாம் வந்தோம். இறுதியில் இந்த இடத்திற்குத்தான் திரும்பிச்செல்ல இருக்கிறோம். இந்த முழுப்பிரபஞ்சமும் அந்த உணர்வு மையத்திலிருந்துதான் வெளிப்பட்டது. பின்னர் இறுதியாக அந்த மூலத்திற்கே திரும்பிப் போகவிருக்கிறது. கடல் அலைகரைக்கு வந்துவிட்டுக் கடலுக்குத் திரும்புவதை இதற்கு உதாரணம் கூறலாம்.சில வானியல் ஆராய்ச்சியாளர்களும் இதே விந்தையான கருத்தையே தெரிவிக்கிறார்கள். அவர்கள் ஆய்வு செய்யும் களமானது இதற்கு அப்பால் யோசிக்க அனுமதிக்கவில்லை. பிரபஞ்சம் பற்றிய அவர்களின் புவியியல் தீர்மானங்கள் தடுமாறிப் போகின்றன. அழியாத்தன்மை, முடிவற்ற நிலை போன்ற கோட்பாடுகள் சௌகரியமற்றுப் போகின்றன.எந்த இடத்தில் இவை எல்லாம் ஒரு முடிவுக்கு வரும்? காலம். ஆகாயம் போன்றவற்றிற்கு எல்லை இருந்தால், அது எங்கே உள்ளது? அதற்கு அப்பால் என்ன இருக்கிறது? பிரபஞ்ச உண்மைகளை அறிவதற்கு மனித அறிவு ஒரு அற்பமான கருவி என்ற முடிவுக்கு நாம் வருகிறோம். பல வானியல் ஆய்வாளர்கள் பால்வெளி மண்டலங்களும் (Galaxies) கிரகங்களும் (Planets) ஒன்றையொன்று உந்தித் தள்ளுவதாக தற்போது நம்புகிறார்கள்.அவற்றுக்கு இடையே உள்ள ஆகாயவெளி விரிவடைந்து கொண்டே போகிறது. அந்த விரிவினால் ஏற்படும் அழுத்தம் ஏதாவது ஒரு மையத்தில் குவியும்போது அண்டப் பெருவெடிப்பு நிகழும் என்கிறார்கள். இதுவே அண்டப் பெருவெடிப்புக் (Big Bang Theory) கோட்பாடாகும்.வெடிப்புக்கு பிறகு அண்டப்பெருவெளி போதுமான அளவு விரிவடைந்த பின்னர் பிரபஞ்சம் அனைத்து கிரகங்களையும் தன்பால் மீண்டும் இழுக்கும், நட்சத்திரங்களும் பால்வெளி மண்டலங்களும் இந்த ஈர்ப்பில் இடம் பெறும். மீண்டும் ஒரு அடர்வு மையம் உருவாகும்போது அடுத்த அண்டவெடிப்பு நிகழும் என்கிறார்கள்.இது விரிவும், அழிவும் தொடர்ந்து நடைபெறும் இயக்கமாகச் செயல்படுகிறது. பிரபஞ்சம் மூச்சை உள்ளிழுத்து, வெளியே விடுகிறது என்றும் இதைக் கூறலாம். மனிதர்களாகிய நாம் உயிர் வாழ்வதும் இதே போன்று அமைந்திருக்கிறது. ‘பிரபஞ்ச சுவாசத்தின்’ மூலம் நாம் வளர்கிறோம். வடிவம் பெறுகிறோம் எனலாம். ஏதோ காரணமாக நாம் மனிதர்கள் வடிவில் பிரபஞ்சத்தில் உலவவிடப்பட்டுள்ளோம். ஸ்தூல உடல் பெற்றுள்ள நாம் நமது மேலே உள்ள உணர்வு நிலைக்கு திரும்பிச் சென்றாக வேண்டும். சுவாசம் என்ற விஷயத்தினுள் மறைந்து கிடக்கும் செய்திகளை ஒருவர் ஆராய்ந்து அறிவதற்கு விரும்பினால் அவர் பல்லாண்டு காலம் அல்லது தனது வாழ்நாள் முழுவதையும் அதற்குச் செலவழிக்க வேண்டிவரலாம்.சுவாசம் பற்றிய விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ளுதல்:பிராணாசக்தியை அதிகரித்துக் கொள்ளும் காரியத்தை நமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கலாம் என்ற கருத்து மேற்கு நாட்டவர்களுக்கு வியப்பளிப்பதாக உள்ளது. சிலர் அதை ஒரு ரகசியமான கலை என்றும் கருதத்தலைப்படுகிறார்கள். கீழ்த்திசை நாட்டவர்களின் நுண்ணறிவு சார்ந்த விஷயங்களின் பக்கம் பார்வையைத் திருப்பினால், அது அவ்வாறான மாயாஜாலக்கலை அல்ல என்பது தெரியவருகிறது.யோகிகளின் கருத்துப்படி பிராணாசக்தி என்பது எளிமையான. விஞ்ஞானபூர்வமானதாகும். அறிவியல் பூர்வமான இந்த மூச்சுக்கலையைக் கற்றுக்கொள்ள கால அவகாசம் நிறையத் தேவைப்படுகிறது என்பது மட்டும் நிஜம். நமது கலாச்சாரமும்,. பழக்கவழக்கங்களும் சுயவிழிப்புணர்வை கூர்மைப்படுத்தி; கொள்வதிலிருந்து விலகிச் சென்றுவிட்டன. சுவாசம் பற்றிய விழிப்புணர்வை நாம் எளிதாக நம்மிடம் உருவாக்கித் கொள்ளலாம். நாம் வேலை செய்வது, சிந்திப்பது, உணர்வது போல சுவாச விழிப்புணர்வையும் ஒரு பழக்கமாக உருவாக்கிக் கொள்ள முடியும். உதாரணத்துக்கு உங்கள் இடது காலை எடுத்துக் கொள்வோம். அதைப் பற்றி நீங்கள் அதிகமாக அலட்டிக்கொள்வது கிடையாது. சொல்லப்போனால், அந்த காலைப் பற்றிச் சிந்திப்பதும் இல்லை.”நான் அடுத்த வைக்கவேண்டும்?”அடியைஎங்கே எடுத்து நான் தூங்கி எழுந்ததும் அதை எப்படி இயக்குவது என்று ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டும்?” என்றெல்லாம் திட்டமிடுவதும் கிடையாது.நீங்கள் நடந்து செல்லும்போது உங்கள் மனதில் ஏற்படும் சிந்தனைகளை நிறுத்திவிட்டு நடப்பது மீது கவனம் செலுத்த அவசியமில்லை.வலது காலுக்குப் பிறகு இடது கால் உயரவேண்டும். அதன் பின்னர் மறுபடியும் வலது கால் இயங்க வேண்டும். பெருவிரலை கவனமாக மேலே உயர்த்தி நிலத்தில் இழுபடாமல் பாதுகாக்க வேண்டும்” என்றெல்லாம் திட்டம் போடுவது கிடையாது. உங்கள் கால் எங்கே பதிகிறது, என்ன செய்கிறது என்று நீங்கள் யோசிப்பதே இல்லை. அதைத் தவறான இடத்தில் வைத்து விடுவோமோ என்று அஞ்சுவதும் கிடையாது. இந்தப் புத்தகத்தை உட்கார்ந்து நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் தருணத்தில் உங்களைச் சுற்றி இருக்கும் மக்களுடனும் கலந்துறவாடவே செய்கிறீர்கள். தொலைபேசி அழைப்பு வரலாம்என்று நினைக்கிறீர்கள். அதுபோலவே காலைப் பற்றியும் கவனம் உங்களிடம் இருக்கிறது.தொடர்ந்து வருடக்கணக்கில் நீங்கள் காலைப் பயன்படுத்து வதால் அது இயல்பாக இயங்குகிறது. அது எளிதாக வந்துவிடும் காரியமல்ல என்பதை நினைவில் வையுங்கள். சரியானபடி அதைப் பயன்படுத்தப் பல வருடகாலம் பிடித்திருக்கிறது. கால்களைச் சிறுவயதில் உபயோகிக்கப் பயிலும்போது வாயிலும் பாதங்களை வைத்துப் பார்த்திருக்கிறோம் அல்லவா?கால்களை அப்படியும் இப்படியுமாக அசைத்தும், பெருவிரலை பற்களால் கடித்து வலியால் சிணுங்கியும் அவதிப்பட்டிருக்கிறோம். பலவிதமான முயற்சிகளும், தவறுகளும் செய்து நாம் நடக்கக் கற்றுக்கொண்டோம். அதெல்லாம் நீண்ட காலத்துக்கு முன்பு நடந்தவை என்பதால், அதைப்பற்றி நினைக்கவேண்டிய தேவை ஏற்படுவதில்லை. இதேவகையில் சுவாசத்தையும் பயன்படுத்திப் பலன்பெற முடியும். காலால் நடப்பது போலவே சுவாசமும் ஒரு தன்னிச்சையான காரியமாக மாறிவிடும். சுவாசத்தின்மீது கவனம் செலுத்தி தொடர்ந்தவிழிப்புணர்வுடன் நம்மால் இருக்கமுடியும். அறிவியல்பூர்வமான மூச்சுக்கலை ஸ்வரோதயா (Svarodaya) என்று அழைக்கப்படுகிறது. இதில் தேர்ச்சிபெற்ற யோகிகளால் தங்களின் ஒவ்வொரு மூச்சின் மீதும் கவனத்தைச் செலுத்தி அதைக் கட்டுப்படுத்த முடியும்.யோகவிஞ்ஞானக் கலையின் முக்கியமான பகுதி பற்றி இப்போது பார்க்கலாம். சுவாசம் என்ற உடலியல் இயக்கம் மட்டும்தான் தன்னிச்சையாகவும், மனிதனின் விருப்பப்படியும் இரண்டு விதமாக இயங்கும் திறன் பெற்றிருக்கிறது. சாதகர் தனது சுவாசத்தின்மீது கவனம் வைத்து அதை அவர் விரும்பும் வகையில் வழி நடத்த முடியும். அவர் சுவாசத்தை கண்டு கொள்ளாது இருந்தால் உடல்தானே அந்த காரியத்தைச் செய்கிறது.சுவாசிப்பது இல்லாது போனால் உடல் இயக்கம் கிடையாது. சுவாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை நாம் அலட்சியப்படுத்தி விடும் சமயத்தில், மனதின் ஏதோ ஒரு பகுதி அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு மூச்சுவிடுவதற்கான இயக்கங்களை நடத்துகிறது.இப்போது சுவாசம் மூளையின் கட்டுப்பாட்டிற்குள் விடுகிறது. நமக்குள்ளே இருக்கும் 30 ஆழ்மனப்பிராந்தியம் சிக்கை தீர்க்கக் கைகொடுக்கிறது. இங்கிருந்து தான் மனக்கிளர்ச்சிகம் எண்ணங்கள், சிந்தனைகள் புறப்படுகின்றன என்று நாம் புரி கொள்வதில்லை. போதுமான விழிப்புணர்வு நம்மிடையே இல்லாது போய்விட்டதே காரணமாகும். சுவாசத்தின்மீது நமக்கு கவனம் இல்லாது போனால் அதன் ஒழுங்கும், நேர்த்தியும் கெட்டி. போய் விடுகின்றன.இதே காரியம் உங்கள் இடது காலுக்கும் நேரலாம் ஜனங்க தங்கள் பாதங்களைச் சரியாகப் பயன்படுத்தத் தவறும்போது இ நடக்கிறது. தவறாக பயன்படுத்தினாலும் இது நேரலாம். “ஐயோ எனது குதிக்காலில் கடுமையான வலி ஏற்படுகிறதே” என்று கூறுகிறார்கள். கொஞ்சம் அனுசரிப்புடன் இருந்தால், உங்களால் எப்போதும் போல நடக்க இயலும்.அக்கறை இல்லாது போகும்போது பாதம் கோணலாகி வடிவம் மாறிப்போகலாம். அதன் பிறகு நீங்கள் பாதங்களுக்கு வைத்தியம் செய்யும் மருத்துவருக்கு ஒரு பெரிய தொகையைக் கட்டணமாகச் செலுத்தி வைத்தியம் பார்ப்பீர்கள். அவர் சில பயிற்சிகள் செய்யும்படி பரிந்துரை செய்வார். இவ்வாறு செய்யும்போது மெதுவாகப் பாதத்தின்மீது உங்களுக்கு விழிப்புணர்வு தோன்றுகிறது. பிறகு அது நன்கு செயல்படத் தொடங்கிப் பிரச்சினை தீர்ந்து நோய் அகல்கிறது.இச்செயல் சுவாசத்திற்கும் பொருந்தும். கட்டுப்பாடின்றிச் சுவாசத்தை ஓடவிட்டால் அது உடலுக்கும், மனதுக்கும் கெடுதியை ஏற்படுத்துகிறது. அவ்வாறு விழிப்புணர்வுடன் சுவாசத்தைக் கட்டுப்படுத்தினால் அது நடக்க விடாமல் இருந்து இணக்கமாக நடக்கத் தலைப்படுகிறது. உங்கள் சுவாசமும், விழிப்புணர்வும் ஒன்று சேர்ந்துவிட்டால், ஏன் இதை முன்பே செய்யாமல் போனோம் என்று நினைக்கத் தோன்றுமளவு மனதுக்கு இதம் கிடைக்கும்.சிலருக்கு காயம் ஏற்பட்டு சில காலம் நடக்க முடியாது போய்விடுகிறது அல்லவா? தங்கள் உடலின் கீழ்ப்பகுதியை அவர்கள் அலட்சியம் செய்துவிடுவதே இதற்குக் காரணமாகும். இடுப்புக்கு மேலே மட்டும் அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். மேல் பகுதி உயிர்த்துடிப்புடன் இருந்திருக்கிறது. அலட்சியப்படுத்தப் பட்ட உடலின் கீழ்ப்பகுதி செத்துப்போன நிலையை அடைந்து கனத்துப் போய்விடுகிறது. தங்களுடைய செயலிழந்த பாகங்களை மீண்டும் உயிர்ப்பிக்க அவர்கள் கடுமையான முயற்சிகள் செய்ய நேரிடுகிறது. கால்களைப் பயன்படுத்தும் முறைகளை மீண்டும் ஒருமுறை கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.தங்களின் விழிப்புணர்வை பாதம்வரை அவர்கள் கொண்டு செல்கிறார்கள். அதற்கு கடுமையான முயற்சிகள் தேவைப்படு கின்றன. உடலின் கீழ்ப்பகுதியை அவர்கள் மனப்பூர்வமாகவே ஒதுக்கித் தள்ளிவிட்டார்கள் என்றுதான் கூறவேண்டும். அதை அலட்சியப்படுத்தி உடல் தொடர்பிலிருந்து துண்டித்துக் கொண்டுவிட்டனர். நாம் சுவாசக் கலையைக் கற்றுக்கொள்ளும் சமயத்திலும் இதே வகையான பிரச்சினையைத்தான் எதிர்கொள்ள நேர்கிறது. சுவாசம் என்ற விஷயத்தையே

பிரபஞ்ச சுவாசம் என்றால் என்ன? Read More »

தியானம் பற்றி சுவாமி விவேகானந்தர்

Post Views: 685        தியானத்தையும் மன ஒருமைப்பாட்டையும் பயிற்சி செய். பயிற்சி வேளையில் உன் முன் நறுமணம் கமழும் மலர்களை வை. நல்ல பத்தி கொளுத்தி வை. மனதைப் புனிதப்படுத்துவதற்கு வேண்டியவற்றை ஆரம்பத்தில் செய்.குருவின் நாமத்தையும் இஷ்டதெய்வத்தின் திருநாமத்தையும் ஜபிக்கும்போது, ‘பிரபஞ்சத்திலுள்ள எல்லா உயிர்களுக்கும் மங்கலம் உண்டாகட்டும்!’ என்று சொல்.வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, கீழே, மேலே என எல்லா திசைகளிலும் நல்லெண்ணங் களை முதலில் பரப்பு.பின்பு தியானத்தில் அமர். ஆரம்பத்தில் இவ்வாறு செய்ய வேண்டும்; பிறகு அமைதியாக இருந்து (எந்தத் திசையையாவது நோக்கி) நான் தீட்சையின் போது உனக்குக் கூறிய முறையில் தியானம் செய். ஒரு நாள்கூட விட்டுவிடாதே வேலை நெருக்கடி இருந்தாலும் கால்மணி நேரமாவது சாதனை செய்யத் தவறாதே. ஒருமுகப்பட்ட ஈடுபாட்டுடன் கூடிய முயற்சி இல்லாமல் எதை அடைய முடியும் மகனே?பின்னர் சுவாமிஜி பின்வருமாறு கூறினார்:’உங்களுக்கெல்லாம் எளிதில் ஆன்ம விழிப்பு உண்டாகும். எப்போது இங்கே வந்துவிட்டீர்களோ, அப்போது முக்தியும் பிற எல்லாமும் உங்கள் கையில்தான்.* வெளியிலோ, உள்ளேயோ மனதை ஓரிடத்தில் நிலை நிறுத்தப் பயிற்சி அளித்துவிட்டால், இடையீடற்றுப் பாய்கிற நீரோட்டம் போல் அது அந்த இடத்தை நோக்கித் தொடர்ந்து செல்லும் ஆற்றல் பெறுகிறது.          இந்த நிலைதான் தியானம்.தியானிக்கப்படும் பொருளின் புறப்பொருளை விட்டு அகப்பொருளாகிய கருத்தை மட்டும் தியானிக்கத் தக்கபடி தியான சக்தியைத் தீவிரமாக்கினால் அந்த நிலைதான் சமாதி. தியானத்திற்கு உரிய சில வழிகள் இதோ – தலைக்கு மேல் பல அங்குல உயரத்தில் ஒரு தாமரை இருப்பதாக நினையுங்கள். தர்மம் அதன் மையம், ஞானம் அதன் தண்டு, தாமரையின் எட்டு இதழ்களும் யோகியின் அஷ்டமாசித்திகள். தாமரைப் பூவின் உள்ளே இருக்கும் மகரந்த கேசரங்களும் சூல்பைகளும் தியாகம்.புறத்திலிருந்து வருகிற சித்திகளையும் தியாகம் செய்தால் யோகி முக்தி அடைவான். தாமரையின் எட்டு இதழ்களும் எட்டு சித்திகள். அதே வேளையில் உள்ளே உள்ள மகரந்த கேசரங்களும் சூல்பைகளும் உயர்நிலை தியாகம், அதாவது இந்தச் சித்திகளைத் துறத்தல்.தாமரையின் நடுவில் பொன்னொளி வீசுபவராக, சர்வ வல்லமை உள்ளவராக, அணுக அரியவராக, ஓங்காரம் எனும் பெயரை உடையவராக, விளக்க முடியாதவராக, பேரொளி யால் சூழப்பட்டவராக இறைவனை தியானம் செய்யுங்கள்.மற்றொரு தியானமும் கூறப்படுகிறது.உங்கள் இதயத்தில் ஒரு வெளி இருப்பதாக நினையுங்கள்.அதில் சுடர் ஒன்று ஒளிவிடுகிறது. அது உங்கள் ஆன்மா. அதனுள், உங்கள் ஆன்மாவிற்கு ஆன்மாவாகிய கடவுள் ஒரு பேரொளியாக இருப்பதாக எண்ணுங்கள். அதனை உங்கள் இதயத்தில் தியானம் செய்யுங்கள்.முதலில், தியானம் எதிர்மறை நிலையில் இருக்க வேண்டும். ஒவ்வொன்றையும் சிந்தித்து ஒதுக்கிவிடு| மனதில் வரும் ஒவ்வொன்றையும் சங்கல்ப சக்தியின் மூலம் பகுத்தறி.அதன் பின் உண்மையில் நாம் எதுவாக இருக்கின்றோமோ அதை, அதாவது உண்மை-அறிவு -ஆனந்த வடிவமாக, இருப்பு அறிதல் – அன்பு செய்தலாக இருப்பதை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.       தியானிப்பவரையும் தியானிக்கப்படும் பொருளையும் இணைப்பதுதான் தியானம்.மேலே உள்ளவை எல்லாம் நானே, கீழே உள்ளவை எல்லாம் நானே, இடையில் இருப்பன எல்லாம் நானே. எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன். எல்லா உயிர்களும் என்னில் இருக்கின்றன. ஓம் தத் ஸத்!அதுவே நான். மனதிற்கு அப்பாற்பட்டவன் நான்.இந்தப் பிரபஞ்ச ஆன்மாவுடன் ஒன்றுபட்டவன் நான்.நான் இன்பமும் இல்லை, துன்பமும் இல்லை.இந்த உடல் பருகுகிறது, சாப்பிடுகிறது மற்றும் இது போன்ற வேலைகளைச் செய்கிறது. இந்த உடல் நான் அல்ல; மனமும் நான் அல்ல; நானே அவன்.நானே சாட்சி, நான் விலகி நின்று பார்க்கிறேன். உடல் நலனுக்கு நான் சாட்சி, நோய்க்கும் நானே சாட்சி. உண்மை நானே, அறிவும் நானே, ஆனந்தமும் நானே.சாரம் நானே; அறிவமுதமும் நானே. நான் ஒருபோதும் மாறுதல் அடைவதில்லை. நான் அமைதியானவன், ஒளி மிக்கவன், மாறுதல் இல்லாதவன்.கேள்வி: சுவாமிஜி, தவம் என்றால் என்ன? பதில்: தவம் மூன்று வகை;உடல் தவம் -பிறருக்குச் சேவை செய்வது,வாக்குத் தவம் – உண்மையைக் கடைப்பிடிப்பது,மனத் தவம் – மனக் கட்டுப்பாடும் மன ஒருமைப்பாடும்.கேள்வி: எங்கு ஒருவன் தியானம் செய்ய வேண்டும்? உடலுக்கு உள்ளேயா, வெளியிலா? மனம் உள்ளே இழுக்கப்பட வேண்டுமா, வெளியே இருக்கலாமா?பதில்: உள்ளேயே தியானம் செய்ய வேண்டும். மனம்இழுக்கப்பட வேண்டுமா, வேண்டாமா என்ற விஷயத்தைப்பொருத்தவரை, அந்த மனத் தளத்தை அடையவே நீண்டகாலமாகும். இப்போது நமது போராட்டம் உடம்புடன்தான்.தொடர்ந்து அசைவற்று அமரும் நிலை பெற்ற பிறகு மட்டுமே மனத்துடனான போராட்டத்தைத் தொடங்க வேண்டும். ஆசனம் நிலைபெற்றுவிட்டால் உடல் அசைவற்றி ருக்கும். அப்போது விருப்பப்படி நீண்ட நேரம் உட்காரலாம்.   கேள்வி: சுவாமிஜி, சில நேரங்களில் ஜபம் சோர்வைத் தருகிறது. அப்போது ஜபத்தைத் தொடர்வதா, நல்ல நூல்களை வாசிக்கலாமா? சுவாமிஜி: ஜபத்தால் சோர்வு இரு காரணங்களால் ஏற்பட லாம் – 1,மூளை களைத்துவிடுவதால்; 2, சோம்பலால்,முதல் காரணமாயிருந்தால் ஜபத்தைத் தொடர்ந்தால் போலிக் காட்சிகளில் மயங்க நேரும், சில வேளைகளில்பைத்தியம் பிடிக்கலாம். சோம்பலினால் ஏற்பட்ட சோர்வு என்றால், அதற்குப் பரிகாரம் மனதைப் பலவந்தப்படுத்தி, ஐபத்தில் தொடர்ந்து ஈடுபடச் செய்வதே. கேள்வி: சில வேளைகளில் ஜபம் செய்யும்போது ஆனந்தம்உண்டாகிறது. இந்த ஆனந்தத்தால் ஜபத்தை மேலும் செய்யத்.தோன்றாமல் போகிறது. அப்போது மேலும் ஜபம் செய்வதா? சுவாமிஜி: ஆம், இந்த ஆனந்தம் சாதனைக்கு இடையூறானது. அதற்குப் பெயர் ரஸாஸ்வாதனம் இன்பத்தைச் சுவைப்பது), இதைத் தாண்டிச் செல்,’     கேள்வி: மனம் அலைந்து கொண்டிருந்தால், நீண்ட நேரம் ஜபம் செய்வது நல்லதா? சுவாமிஜி: ஆம், முரட்டுக் குதிரையை அடக்க அதன்முதுகில் எப்போதும் உட்கார்ந்து பழக்குவது போன்றது இது. கேள்வி: தியானத்தின் உண்மையான இயல்பு என்ன?சுவாமிஜி: தியானம் என்பது ஒரு குறிப்பிட்ட பொருளின் மீது மனதைக் குவியச் செய்வது. மனம் ஒரு பொருளின் மீது ஒருமைப்பட்டு நிலைபெறுமானால் பிறகு அதனை எந்தப் பொருளின் மீதும் குவிக்கலாம். தியானத்தால் நீங்கள் அடையக்கூடிய அனைத்தையும்யோகிகளுக்கெல்லாம் யோகியாக உள்ள ஈசுவரனைத்தியானிப்பதால் அடைய முடியும்…     ஒரு மகானைத் தியானிப்பதாலும் அந்த நிலையை நீங்கள் அடைய முடியும். அல்லது வாழ்க்கையின் இயைபைப் பற்றித் தியானிப்பதாலும் அது கிடைக்கும். இவை புறச்சார்பு தியானங்கள். அதாவது உங்களுக்கு உள்ளே அல்லது வெளியே உள்ள சில பொருட்களைத் தியானிக்கிறீர்கள்.திரும்பத் திரும்ப ஒன்றைக் கூறி மனதைக் குவிப்பதேஅது. மனம் அகமுகமாகித் தன்மீது குவிவதுதான் தியானம். அங்கே மனதின் எண்ண அலைகள் எல்லாம் ஓய்கின்றன. உலகமே மறைந்து விடும். உங்கள் உணர்வு விரிகிறது. தியானம் செய்யும் போதெல்லாம் நீங்கள் வளர்கிறீர்கள்.” இன்னும் சிறிது கடினமாக உழையுங்கள். மேலும் தீவிரமாகப் பாடுபடுங்கள். தியானம் கைகூடும். இந்த நிலை யில் உடம்பையோ மற்ற எதையுமோ நீங்கள் உணர்வதில்லை. தியானம் முடிந்து நீங்கள் எழும்போது, இதுவரை நீங்கள் பெற்றிராத ஓர் அற்புதமான ஓய்வைப் பெற்றிருப்பீர்கள்.   நம் ஆசைகள், உணர்ச்சிகள் எல்லாவற்றிற்கும் முடிவிடம் இறைவனே. உனக்குக் கோபம் வருமானால் இறைவனிடம் கோபித்துக் கொள். உன் காதலனாகிய இறைவனை, உன் தோழனான இறைவனைக் கடிந்து கொள்.பயமின்றி இப்படி வேறு யாரை நீ கண்டிக்க முடியும்? மனிதன் உன் கோபத்தைப் பொறுத்துக் கொள்ள மாட்டான்; பதிலுக்குக் கோபிப்பான். என்னிடம் நீ கோபம் கொண்டால் நானும் உடனே என் கோபத்தைக் காட்டுவேன். இது நிச்சயம். உன் கோபத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது.நீ ஏன் இன்னும் என்னிடம் வராமல் இருக்கிறாய்? என்னை ஏன் இவ்வாறு தனியாகத் தவிக்க விட்டாய்?” என்று இறைவனிடம் கேள். அவனிடம் அல்லாமல் வேறு எங்கு இன்பம் இருக்க முடியும்? வெறும் மண்ணாங்கட்டிகளில் என்ன இன்பத்தைக் காண முடியும்? பேரானந்த ரசக்கட்டி அல்லவா நாம் நாட வேண்டிய இன்பம்! அது இறைவனே. நமது ஆசாபாசங்கள் எல்லாம், உணர்ச்சிகள் எல்லாம் அவனை நோக்கிச் செல்லட்டும். அவை அவனுக்காகவே அமைந்தவை. குறி தவறி அவை கீழே செல்லுமானால் தீமை ஆகிவிடும். இலக்காகிய இறைவனை நேராக அடையுமானால், மிகக் கீழான உணர்ச்சிகள்கூட உருமாறி விடுகின்றன.உடலும் உள்ளமும் தங்கள் சக்திகளை எப்படி வெளிப்படுத்தினாலும் அவற்றின் முடிந்த முடிவாக இருப்பவன் இறைவனே (ஏகாயனன்).    மனித உள்ளத்தில் எழும் அன்பனைத்தும் ஆசையனைத் தும் இறைவனிடமே செல்ல வேண்டும். அவனே நமது அன்பிற்கும் ஆசைக்கும் உரியவன். அவனைத் தவிர வேறு யாரை நம் உள்ளம் காதலிக்க முடியும்?ஒப்பற்ற அழகுடையவன் அவன். மிக மேலானவன் அவன். அவனே அழகு. அவனே மேன்மை. இந்தப் பிரபஞ்சத்தில் அவனைவிட அழகானவர் வேறு யார்?நமக்கு அன்புக்குரியவனாக இருக்க இந்தப் பிரபஞ்சத்தில்அவனைவிடத் தகுதியுடையவர் யார்?எனவே அவனே கணவனாக இருக்கட்டும்; அவனே அன்புக்குரியவனாக இருக்கட்டும். vinodhan,

தியானம் பற்றி சுவாமி விவேகானந்தர் Read More »

முற்பியவிகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன?

Post Views: 331     முற்பிறப்பு தகவல்களை எப்படி பயன்படுத்த வேண்டும்?  மறுபிறப்பை நம்புகின்றவர்கள் தங்களின் கடந்த கால வாழ்க்கை பற்றித் தெரிந்து கொள்ளுவதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. கடந்த வாழ்க்கையில் தாம் ஒரு முக்கிய நபராக இருந்திருந்தால் குதைப் பற்றி இப்போது பெருமை பேசிக் கொள்ள முடியும். இன்னும் சிலர் முற்பிறப் பில் எப்படி இருந்தோம் என்றுதான் தெரிந்து கொள்வோமே. என்சிற ஆர்வத்திலும் முன் பிறவிகள் பற்றி அறிய விரும்பக் கூடும். இந்தப் பிறவியில் நாம் இப்படி இருப்பதற்கு முற்பிறப் புகள் தான் காரணமா என்று அறிகின்ற ஆர்வமும் சிலருக்கு ஒருவகைத் திருப்தி ஏற்படுத்துவதாகவும் இருக்கலாம். இதைப் பற்றி ஆழமாகச் சிந்திக்கின்றவர்கள், முற்பிறப்பு பற்றி கிடைத்த தகவல்களை பல விதங்களில் நாம் பயன் படுத்திக் கொள்ள முடியும். இந்தப் பிறப்பில் எப்படி பயன் படுத்திக் கொள்வது என்றும் யோசிக்கக்கூடும். முற்பிறப்புத் தகவல்களை அந்தத் தகவல்கள் நமக்கு எப்படி உதவக் கூடும் என்பதைப் பற்றியும் நாம் யோசிக்க வேண்டும். அப்படி பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் என்னஎன்பதையும் நாம் ஆராய வேண்டும். இப்போது உள்ள நம்முடைய வாழ்க்கையை மேம்படுத்து ஒரு விஷயம் தெளிவானது; அந்தத் தகவல்கள் வதற்கு உதவ வேண்டும். இறைவனின் நோக்கத்தை நிறை வேற்ற அந்தத் தகவல்களை நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். நமக்கும் மற்றவர்களுக்கும் நம்முடைய வாழ்க்கை பயனுடையதாக அமைய அவை உதவ வேண்டும். கடந்த பிறப்புகளில் நாம் வாழ்ந்த வாழ்க்கையின் பெருமைகளைச் சொல்லிக் கொண்டிருப்பது மட்டும் நம் முடைய நோக்கமாக இருந்து விடக்கூடாது. அதனால் நம் முடைய இப்போதைய வாழ்க்கைக்கு எந்தப் பயனும் இல்லை.மறுபிறப்பு தத்துவத்தில் உள்ள இன்னொரு விஷயத் தையும் நாம் கவனிக்க வேண்டும் மரணம் இறுதியானது அல்ல. மீண்டும் இந்த உலகத்தில் நாம் உடம்பும் உயிருமாக வாழப் போகிறோம். குறிப்பிட்ட ஒரு வாழ்க்கையில் நியாயம் கிடைக்கவில்லை என்கிற உணர்வு நமக்கு இருக்கலாம். மறு பிறப்பு இந்த உணர்வு சரியல்ல என் தை உணர்த்துகிறது. நமக்கு நியாயம் கிடைக்காமல் போன தற்கு ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும். முற்பிறப்பில் நாம் செய்த ஏதோ ஒரு காரியம் நான் அதற்குக் காரணம். இதை நாம் உணர்கின்றபோது இந்தப் பிறவியில் ஆக்கப்பூர்வமான நல்ல செயல்களைச் செய்து மீண்டும் நமக்கு அநீதி ஏற்படாமல் நம்மைக் காத்துக் கொள்ள முடியும். மறுபிறப்பு நம்பிக்கை, நம்முடைய வாழ்க்கைக்கு நாம் தான் பொறுப்பு என்பதையும் உணர்த்துவதாக அமைந் துள்ளது. நாம் இப்போது அனுபவிக்கின்ற அனைத்தும் நம் முடைய செயல்களின் விளைவே ஆகும். அதனால் நமக்கு நேர்ந்துவிட்ட எதையும் கண்டு நாம் கலக்கமடையவேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய துரதிஷ்டங்களுக்கும் ஓரு நோககம் இருக்கிறது. அதைப் புரிந்து கொண்டு, நடப்பதை எல்லாம் மன நிறைவுடன் நாம் ஏற்றுக் கொண்டால், இறை வனின் நோக்கத்தையும் நாம் ஈடேற்றி விடமுடியும்.நாம் இப்போது உள்ள நிலைமைக்கு நம்முடைய முற் பிறப்புச் செயல்களே காரணம் என்று ஆகிவிடுகிற போது, இப்போது உள்ள வாய்ப்புகளை நழுவ விடக்கூடாது என்கிற உறுதி நமக்குத் தோன்றுகிறது. இதை எல்லாம் சரியான கோணத்தில் புரிந்து கொள்ள, முற் பிறப்பு பற்றிய தகவல் தலே நமக்கு உறவுகின்றன. கடந்த பிறப்புகளில் நாம் செய்த எந்தத்தேர்வுகள் இந்தப் பிறப்பில் நமக்குள்ள நிலைமைக்குக் காரணம் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. தவறுகள் எலவ, நல்லவை எவை என்பதை நம்மால் அடை யாளங் கண்டு கொள்ள முடிகிறது. இதன் விளைவாக நம் முடைய எதிர் காலத்தை நாம் சுலபமாகி விடுகிறது. உருவாக்கிக் கொள்ளுவதுகீழே கொடுக்கப்பட்டுள்ள சில யோசனைகளைப் பரிசீலித்துப் பார்க்கலாம். கற்பனையாக சொல்லப்பட்டுள்ள விஷயங்களே அவை.கடந்த பிறப்புகளில் நாம் என்னவாக இருந்தோம் என்பதைவிட, என்ன செய்தோம் என்பதுதான் முக்கியமான விஷயமாகும். கடந்த பிறப்பில் நாம் என்ன பெயருடன் இருந்தோம் எங்கு வாழ்ந்தோம் என்று தெரிந்து கொள்ளு வது எல்லாம் நம்முடைய ஆர்வத்தைத் திருப்தி செய் வதற்குப் போதுமானதாக இருக்கலாம். ஆனால் நம்முடைய திறமை, மனோபாவம் குறைபாடுகள் ஆகியவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ளும் போதுதான், இந்த வாழ்க்கை அமைந்துள்ளதற்கான முடியும்.. காரணத்தைப் புரித்து கொள்ள நூற்றாண்டில் நீங்கள் இங்கிலாந்தில் ஒரு பிரபுவாக இருந்தீர்கள் என்கிற தகவல் ஆர்வத்தைத் தூண்டுவதாக இருக்கலாம். அதைவிட நீங்கள் ஒரு வியா பாரியாக இருந்து, பணத்தை சரிவர நிர்வகிக்காததால் பெரியநஷ்டத்துக்கு உள்ளானீர்கள் என்கிற தகவல் உபயோகமான தாக இருக்கும்.சில உதாரணங்களைப் பார்க்கலாம். Example No 1 வேண்டும் என்கிற இந்தப் பிறவியில் ஒருவனுக்கு ஓவியம் வரைவதைப் பொழுதுபோக்கு ஆக்கிக் துடிப்பு இருப்பதாக வைத்துக் கொள்ள கொள்வோம். மறுபிறப்பில் நம்பிக்கை உடையவனாக அவன் இருந்து, ஏற்படுகின்ற கனவுகளை அந்தக் கண்ணோட்டத்தில் பரிசீலிக்கின்ற பயிற்சியில் ஓரளவுக்குத் தேறியவனாகவும் கொள்வோம், இவன் கண்ட வைத்துக் கனவுகளைப் பரிசீலிக்கும் போது, கடந்த பிறவியில் ஓவியக் கலைஞனாக இருந்திருக்க வேண்டும் என்கிறமுடிவுக்கு வருகிறான், தியானத்திலிருந்து கிடைக்கின்ற தகவல்கள் மூலமும் அதை உணர்கிறான். எனவே கடந்த பிறவியில் தான் ஓர் ஓவியக் கலைஞன் என்கிற முடிவுக்கு வருகிறான். இந்தத் தகவலை இப்போது உள்ள வாழ்க்கைக்கு அவன் எவ்வாறு பயன் படுத்தவது? ஒன்று அவனுக்குத் தெளிவாகிறது. ஓவியம் வரைவதை பொழுதுபோக்காகக் கொள்ளவேண்டும். என்கிற துடிப்பு இப்போது அவனுக்கு ஏன் ஏற்படுகிறது என்கிற காரணம் புரிகிறது. அது ஏதோ தற்செயலாக ஏறபட்ட ஆசை அல்ல என்பதை உணர்கிறான். தனக்கு ஏற்பட்ட துடிப்பை நடை முறையாக்கி ஓவியம் வரையும் திறமையை வளர்த்துக் கொள்வது பயன்தரக் கூடியது என்கிற முடிவுக்கு அவன் வரலாம். கடந்த பிறவியைக் பற்றிய அறிவு, இந்தப் பிறவியில் பயனுள்ள ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள அவனுக்கு உதவுகிறது.Example No 2 : ஒருவன் தன்னுடையவாழ்நாள் முழுவதும் தீராத நோயினால் அவஸ்தைப்படுவதாக வைத்துக் கொள்வோம். இவனுக்கு கடந்த பிறவிகளின் நிகழ்ச்சிகளைத் தெரிந்து கொள்ள முடிவுதாக வைத்துக் கொள்வோம்.அந்தப் பிறவியில் மற்றவர்கள் செயல்பட முடியாதபடி சரியங்களை இவன் செய்திருப்பதாக அதிலிருந்து தெரிந்து கொள்வதாக வைத்துக் கொள்வோம். அந்தச் செயல்களின் விளைவுதான் இந்தப் பிறவியில் அவனுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான நோய்க்குக் காரணம் என்பதை அவன் புரிந்து கொள்ள முடியும்.இந்த அறிவு இந்தப் பிறவியில் வாழ்க்கையில் புதிய கண்ணோட்டம் பெற அவனுக்கு உதவக் கூடும். நோய் பற்றி அவனுக்கு ஏற்பட்ட கசப்பு உணர்வைப் போக்கு வகற்கு அது உதவக்கூடும். வாழ்க்கையே தனக்கு எதிராக அமைந்துவிட்டது என்கிற எண்ணத்தில் இருந்து அவன் விடுபடக் கூடும்.இப்போது உள்ள வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்துக்கும் அது உதவும். மற்றவர்களுக்கு இடையூறு உதவுகின்ற செய்யாமல் வாழ்க்கையினை வாழ வேண்டும் என்கிற எண்ணத்தினையும் தோற்றுவிக்கும்.இந்த மனிதன் தன்னுடைய கடந்த பிறப்பு அனுபவங் களை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் கர்ம வினையால் விளைந்த சூழ்நிலையை மாற்றிக் கொண்டு விட முடியாது. தன்னுடைய மனோபாவத்தை மாற்றிக் கொள் ளாமல் தன்னுடைய எதிர்கால வாழ்க்கையினை சிறப்பாக ஆக்கிக் கொள்வதும் முடியாது. Example No 3  முற்பிறப்பை மறுபிறப்பை அபரிமித செல்வத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள். ஒருத்தி தன்னுடைய இந்த வாழ்க்கையில் கடந்த பிறவியில் தன்னிடம் இருந்த செல்வத்தை எல்லாம் மற்றவர்களின் தேவைகளுக்கே பயன்படுத்தி இருப்பதை உணருகிறாள்.கடந்த வாழ்க்கையில் அவள் செய்த நல்ல காரியங்கள் இந்தப் பிறப்பில் அவளுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. ஆகவே அவள் இந்தப் பிறப்பிலும் முற்பிறப்பின் நல்ல காரியங்களைத் என்கிற முடிவுக்கு வர வேண்டும். தொடர வேண்டும் இறைவனின் நோக் கத்தைப் பூர்த்தி செய்கின்ற வகையில் செல்வத்தைச் செலவிட்டால், அது செல்வத்தைப் பெருக்கவே உதவுகிறது என்பதை அவள் தெரிந்து கொள்ளுகிறாள். அதற்கு மாதாக செல்வத்தைச் சேமிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டால், கடந்த பிறவியின் தகவல்கள் அவளுக்குப் பயன்படவில்லை என்று அர்த்தம். பிறரின் நலனுக்காக செல்வத்தைச் செலவிடுவதனால் ஏழையாகி விடுவோமோ என்கிற அச்சத்திலிருந்து விடுபட கடந்த பிறவித் தகவல்கள் அவளுக்கு உதவுகின்றன. கடந்த பிறவியில் செய்த நல்ல காரியத்தைத் தொடர வேண்டும் என்கிற நம்பிக்கையினை அவள் பெறுவதற்கு முற்பிறவித் தகவல்கள் அவளுக்கு உதவுகின்றன. Example No 4: ஒருவன் இந்தப் பிறவியில் ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் மேல வெறுப்பு கொண்டவனாக இருக்கிறான். வெளிப்படை யாக அதை அவன் காட்டாவிட்டாலும், அப்படி ஓர் எண்ணத்தை மனதில் வைத்து இருக்கிறான். கடந்த பிறப்பு பற்றி அவன் அறிகின்றபோது குறிப்பிட்ட அந்த மதத்தினர்தன்னைக் கொடுமைப்படுத்தியதையும், அவர்களுடைய வன்முறைக்குப் பலியாகிப் போனதையும் உணர்கிறான்.இந்தத் தகவலை இந்தப் பிறவியில் அவன் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கலாம். இந்தப் பிறவி யில் ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் மீது தனக்குப் புரிகிறது. அறிவு கொண்டு ஆராய்ந்தால் முற்பிறப்பில் தன்னை ஒரு குறிப்பிட்ட மதத்தினர் கொடுமைப்படுத்தினார்கள் என்பதற் காக, இந்தப் பிறப்பில் அவர்களை வெறுக்கும் மனோபாவம் சரியல்ல என்பது விளங்கும்.அவர்களை மன்னிப்பதுதான் நியாயமாக இருக்கும் என்கிற எண்ணம் அவனுக்குத் தோன்ற அந்தத் தகவல்கள் உதவவேண்டும். அந்த குறிப்பிட்ட மதத்தினரிடம் அன்பும் பாசமும் காட்டி அவன் தனது மன்னிக்கும் குணத்தை வெளிப்படுத்த வேண்டும்.மேலே சொன்ன நான்கு உதாரணங்களிலும் உள்ள பொதுத் தன்மை, கடந்த பிறப்பின் தகவல்களை இந்தப் பிறப்பினை மேலும் சிறட்பாக்கிக் கொள்ளப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான். கடந்த பிறப்பை மறுபடியும் நாம் வாழ முடியாது. இப்போது கிடைத்துள்ள பிறவியைத்தான் நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும்.கடந்த பிறப்பு பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளு வதே ஒரு லட்சியமாக தகவல்களை இருந்துவிட முடியாது. அந்தத் நம்முடைய ஆன்ம வளர்ச்சிக்குப் பயன் படுத்துவதுதான் நோக்கமாக இருக்க வேண்டும். அந்தத் தகவல்கள் நம்முடைய இந்தப் பிறப்பைப் புரிந்து கொள்ளு வதற்குப் பயன்பட வேண்டும். எப்படி நல்ல காரியங்களைச் செய்வது வேண்டும். என்பதற்கான பாடத்தை அதிலிருந்து பெறவேண்டும்.  vinodhan,

முற்பியவிகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன? Read More »

இரசமணி செய்முறை

Post Views: 2,047 ரசமணி சுத்தி முறை ரசமணி சுத்தி முறை மூணு கிலோ உப்பை 100 கிராம் புரதத்தையும் கொண்டு சுத்தி செய்ய வேண்டும் பிறகு செங்கல் தூள் நவச்சாரம் படிகார தூள் மஞ்சள் போன்ற பொருள்களைப் பயன்படுத்தி மணி சுத்தம் செய்ய வேண்டும் சுத்தி செய்யும் பொழுது ஏழுவிதமான சட்டைகள் 1. நாகம் – நாகம் எனும் சட்டை கழற்றப்படாத இரசத்தைப் பயன்படுத்தும்போது அது மூலநோயை உண்டாக்கிவிடும். 2.வங்கம்-வங்க சட்டை கழற்றாத இரசம் பெருநோய் எனும் குஷ்ட நோயை ஏற்படுத்தும். 3. அக்கினி – அக்கின சட்டை கழற்றப்படாத இரசம் உடலில் தோல்நோயை உண்டுபண்ணும். 4. மலம் – மலம் என்னும் சட்டை கழற்றப்படாத பாதரசத்தைப் பயன்படுத்துமபோத அறிவாற்றல்பாதிப்பு ஞாபகமறதி எனும் நினைவாற்றல் குறைபாடு உருவாகும். 5. விடம் – விடம் என்ற சட்டை கழற்றப் பெறாத பாதரசத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு அந்த இரசம் மரணத்தை உண்டுபண்ணிவிடுமல். 6.கிரி – கிரிசட்டை கழற்றாத ரசம் சாட்டியத்தை உண்டாக்கும். 7. சபலம் – சபலச்சட்டை கழற்றப்படாத இரசம் உடலின் வீரியத்தில் குறைபாட்டை உண்டாக்கும். இந்த குறைபாடுகளை நீக்குவது உள்ளுக்கு உண்ணக்கூடிய இரச மருந்துகளுக்கான கட்டுப்பாடு என நினைக்க வேண்டாம். உடலில் மணியாக அணிந்து பயன்பெற நினைப்பவர்களுக்கும் இதுவே கட்டுப்பாடாகும். எட்டுவிதமான தோஷங்கள் 1.உண்பீனம் – தாங்க இயலாத வயிற்றுநோயினைத் தரக்கூடிய தோஷமாகும் இது. 2. கௌடில்யம் – தலைசம்பந்தமான நோய்கள், தலைக்குத்தல், ஒற்றைத்தலைவலி, மண்டையிடி போன்ற நோய்களை இந்த தோஷம் உண்டாக்கும். 3. அனவர்த்தம்- மூளை சம்பந்தமான நோய்கள், பைத்தியம், மயக்கம், வாய்ப்பிதற்றல் போன்றவற்றை இந்த தோஷம் உருவாக்கும். 4.சண்டத்வம்-சன்னியினால் உண்டாகக்கூடிய உடற்கோளாறுகளை இந்த தோஷம் உண்டாக்கும். 5.பங்குத்வம் பெருநோய் என்றழைக்கப்படும் குஷ்டம் மற்றும் தீராத தாகம் போன்ற நோய்களை இந்த தோஷம் ஏற்படுத்தும். 6. சங்கரம் – பயம் படபடப்பு இவைகளை உண்டாக்கி மனபாதிப்புகளை உண்டாக்குதல் மற்றும் உடலிலுள்ள ஏழுவித தாதுக்களையும் பலமிழக்கச் செய்தல், வீரியத்தின் தன்மையை வீணாக்குதல் போன்றவற்றை இந்த தோஷம் செய்துவிடும். ஏழுவித தாதுக்குறைபாடுமல், வீரியத்தின் குறைபாடும் அவரது வாரிசு – வம்ச வளர்ச்சியை பாதிக்கும். அல்லது வாரிசு இல்லாத மலட்டுத்தன்மையை உருவாக்கிவிடும். இதைத்தான் பெரியோர் மறைமுகமாக சிவன் சொத்து குலநாசம் (வாரிசு நாசம்) என்று கூறினார்கள். 7. சமலத்வம் – பலவித சுரங்கள், கிறுகிறுப்பு போன்ற நோய்களை இந்த தோஷம் உண்டாக்கும்.8.சவிவிஷத்வம் – உடல் நடுக்கம், உடல் இளைத்தல், இரைப்பு நோய் போன்றவற்றை இந்த தோஷம் ஏற்படுத்தும் ரசமணி சுத்தி முறை  ஒரு எளிய அனுபவ முறை. தேவையான ரசத்தை அது மூழ்கும் அளவிற்கு எருக்கம் பால் விட்டு மண் சட்டியில் போட்டு மூடி வைக்கவும். 3 நாட்கள் கழித்து துணியில் பிழிந்து பத்திரப்படுத்தவும். தேவைக்குஉபயோகப்படுத்தி கொள்ளலாம் ஒரு பலம் ரசத்தை பீங்கான் கிண்ணியில் போட்டு 1 கிராம் வீரம் பொடித்து போட்டு உப்பு கிணற்று தண்ணீர் 200 மில்லி விட்டு 3 நிமிடம் விரலால் துழாவவும். ரசத்தில் உள்ள கழிவு வெளியாகும். பிறகு நீரை வடித்து ரசத்தை துணியில் பிழிந்து எடுக்கவும்.   ரசமணி செய்முறை     பாதரசம் – 100 கிராம் நவச்சாரம் – 50 கிராம் மயில் துத்தம் (துருசு) – 300 கிராம் எலும்பிச்சம் பழம் -8 அலுமினிய  பாத்திரம் -1 முதலில் மயில் துத்தத்தையும் நவாச்சாரத்தையும் நன்கு நுனுக்கி பவுடராக்கி கொள்ளவும். பின் அவற்றை அலுமினிய டம்ளரில் போடவும். பின் அதில் சுத்தி செய்த பாதரசத்தை விடவும். அதன் பிறகு 3 எலும்பிச்சம் பழங்களையும் கொட்டை நீக்கி சாறு எடுத்து அந்த டம்பளரில் விடவும். பின் டம்பளரை அப்படியே வெளியே மண் தரையில் வைக்கவும். சுமார் 10-15 நிமிடத்தில் டம்ளரில் உள்ள சரக்குகள் உறவாகி நுரை, நுரையாக பொங்கும். அது சமயம் டம்பளரை தொட்டால் மிகவும் சூடாக இருக்கும். எனவே சுமார் அரை மணி நேரம் கழித்து சூடு ஆறியபின் டம்பளரைஎடுத்து அதன் உள்ளே இருக்கும் சரக்கை ஒரு மண் பாத்திரத்தில் கரண்டியால் வழித்து போடவும். டம்பளரின் உள்ளே அழுக்காக ஒட்டிக்கொண்டு இருக்கும் கலவையை நான்கு சுரண்டி எடுத்து மண் பாத்திரத்தில் போடவும்.இப்போது கலவை உள்ள மண் சட்டியில் சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு அலசி, அலசி அழுக்கை எல்லாம் நீக்கிவிட்டு பார்த்தால் உள்ளே ரசம் இறுகியும் இறுகாமலும் வெண்ணெய் போல் இருக்கும். இதனை அப்படியே ஒரு துணியில் கீழே ஒரு பாத்திரம் வைத்து பிழிய வேண்டும். இறுகிய இரசம் துணியிலும், இறுகாத்த இரசம் பாத்திரத்திலும் வந்து விழும். இறுகிய இரசத்தை மேலும் தண்ணீர் விட்டு கழுவ வெள்ளி போன்று பிரகாசிக்கும். இதை எந்த வடிவம் வேண்டுமோ அப்படி செய்து கொள்ளலாம். மணியாக உருட்ட வேண்டும் என்றால் தேவையான அளவில் உருட்டி கொள்ளலாம். அந்த நிலையிலேயே ஒரு தீ குச்சியை அதில் சொறுகி (ஓட்டை போடுவதற்கு) மண் சட்டியில் அல்லது ஸ்டீல் பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு அதில் மணியை மூழ்கும்படி போட்டு வைத்து விடவும். தண்ணீரில் கிடக்கும் மணி நேரம் ஆக ஆக இறுக ஆரம்பிக்கும். எனவே அடிக்கடி சில நிமிடங்களுக்கு ஒரு முறை மணியில் சொருகப்பட்ட தீக்குச்சியை அசைத்து விட வேண்டும். இல்லாவிட்டால் தீக்குச்சியை எடுக்க முடியாது. ஓரளவு மணி இறுகியபின் தீக்குச்சியை எடுத்து விட வேண்டும். பிறகு அதில் நூல் கோர்த்து அணியலாம். சுமார் 3 முதல் 5 மணி நேரம் மணி தண்ணீரில் கிடந்தால் இறுகிவிடும். 24 மணி நேரம் கிடந்தால் நல்லது. மணியின் நிறம் பளபளப்பு போய் சிமென்ட் நிறத்தில் இருக்கும். அதனை சோப்பு போட்டு நான்கு கழுவி சுத்தப்படுத்தியபின் ஒரு சொட்டு இரசத்தில் இந்த மணியை போட்டு பிரட்ட அதை மணி இழுத்து கொள்ளும். பின் மணியை துடைத்தால் நல்ல பளபளப்பாக இருக்கும்.  இரசம் உருட்ட வராமல் திடமாக இருந்தால் சிறிது பாதரச துளிகளை சேர்க்க வேண்டும். இளகளாக இருந்தால் துணியில் பிழிந்து கொள்ள வேண்டும்.   சாரணை ஏற்றும் முறை ஒரு ஊமத்தங்காயை கொண்டு வந்து அதனை அரைத்து உருண்டை செய்து அதன் உள்ளே ரசமணியை வைத்து களிமண் தடவப்பட்ட துணியல் மேற்ப்படி உருண்டையை, பொதிந்து 3 எருவில்(வரட்டி) புடம் போடவும். அதாவது ஒன்றரை எருவை பொடித்து போட்டு அதன்மேல் மேற்ப்படி உருண்டையை வைத்து மீதமுள்ள ஒன்றரை எருவை பொடித்து போட்டு நெருப்பிட்டு விடவும். ஆறியபின் மணியை எடுத்து முன் சொன்னபடி ஊமத்தங்காயில் வைத்து முன் போல புடம் போடவும். இவ்வாறு 3 முறை செய்யவும். புடம் கூட கூட பவர் அதிகரிக்கும். ஆனால் குறைந்தது 3 புடம் போட வேண்டும். பின் மணியை எடுத்து சுத்தம் செய்து வைத்து கொள்ளவும். பளபளப்பு வேண்டுமெனில் பச்சை ரசத்தை உறிஞ்ச செய்து வைத்து கொள்ளலாம். புடம் இடுவதற்கு பதிலாக சுருக்கு கொடுப்பது எளிது. இது தான் நல்ல முறையும் கூட. சில நேரங்களில் புடம் போடும் பொது நெருப்பு அதிகமாகிவிட்டால் ரசமணி சிவப்பாக பயனற்றதாகிவிடும். தேவையான மூலிகையை கொண்டு வந்து இடித்து சாறு சுமார் 300 மில்லி எடுத்து கொள்ளவும். ஒரு சிறிய மண் சட்டியை அடுப்பில் வைத்து அதில் 3 ஸ்பூன் அளவு சாறு விட்டு அதனுள் மணியை போட்டு அடுப்பில் தீ எரிக்கவும். சாறு வற்ற வற்ற மணியின் மீது கொஞ்சம் கொஞ்சமாக சாறை விட்டு வரவும். இவ்வாறு மேற்படி சாறு முழுவதும் காலியாகும் வரை விட்டு எடுத்து கொள்வது சுருக்கு கொடுத்தல் எனப்படும். (கீழாநெல்லி சுருக்கு கொடுக்க தெய்வ வசியம் செய்யும்) உருவேற்றும் முறை சாரணை ஏற்றிய ரசமணியை எதாவது இஷ்ட தெய்வத்தின் மந்திர உரு செய்து உருவேற்ற வேண்டும். வடக்கு முகமாக உட்கார்ந்து 1018 முதல் 1008 உரு தினம் 41 நாட்கள் (1) மண்டலம்)செய்யவேண்டும். ரசமணி செய்யும் காலங்களிலும் மந்திர உரு செய்யும் காலங்களிலும் பிரம்மச்சர்ய விரதத்துடன் இருந்து செய்ய வேண்டும். அப்பொழுதுதான் பலன் தரும்.பாதரசத்தில் இறை உருவங்கள் பாதரசத்தில் இறை உருவங்கள் குறிப்பாக ரச பிள்ளையார், ரசசிவலிங்கம் போன்ற உருவங்கள் செய்து நாம் வழிபட்டோம் என்றால் நாம் வணங்கும் பொது கூறப்படும் மந்திரங்களை அது கிரகித்து அதிக பவர் உள்ளதாக இருக்கும்.நமக்கு எந்த உருவம் எந்த சைசில் தேவையோ அந்த அளவில் லேத்தில் கொடுத்து டை செய்து வைத்து கொள்ளவேண்டும். இரசம் உருட்டும் பக்குவத்தில் இருக்கும் போது அதனை டையில் வைத்து அழுத்தி அப்படியே எடுத்து கொள்ளவேண்டும். டையில் எண்ணை தடவி கொண்டால் எடுக்க எளிதாக இருக்கும் கிரக தோஷங்களுக்கான ரசமணி ஜோதிட ரீதியாக உடல்நிலை, தனம், வாக்கு, சொத்து, நோய், கடன், தைர்யம், பூர்வ புண்ணியம், கூட்டுத்தொழில், திருமணம், பூர்வீக சொத்து, ஆன்மிகம் மேற்கண்டவற்றில் பிரச்சனை இருந்தால் ஜாதக ரீதியாக எந்த கிரகம் பாதிக்கப்பட்டுள்ளதோ அந்த கிரகத்திற்கு உண்டான மந்திரத்தை ரசமணிக்கு உருவேற்றி அணிந்து கொள்ளலாம். மந்திரங்களை 21 நாட்களுக்குள் உருவேற்றி முடிக்க வேண்டும்.கிரகங்களுக்கு உண்டான மந்திரங்கள் சூரியன் (1000 தடவை ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் சஹ சூர்யாய நமஹ: சந்திரன் (2,000 தடவை): ஓம் ஷ்ராம் ஷ்ரீம் ஷ்ரூம் சஹ சந்திரமஸே நமஹ: செவ்வாய் (1000 தடவை) ஓம் க்ராம் க்ரீம் க்ரூம் சஹ பௌமாய நமஹ: புதன் 1000 தடவை) ஓம் ப்ராம் ப்ரீம் ப்ரூம் சஹ புதாய் நமஹ: குரு (11,000 தடவை. சஹ குருவே சுக்கிரன்(100 தடவை). ஓம் த்ராம் த்ரீம் த்ரௌம் சஹ சுக்ராய நமஹ: சனி ( 1000 தடவை)ஓம் ப்ராம் ப்ரீம் ப்ரௌம் சஹ சனிஸ்சராய நமஹ: ராகு(1000 தடவை) ஓம் ப்ராம் ப்ரீம் ப்ரௌம் சஹ ராகவே நமஹ; கேது(1800 தடவை) ஓம் ஸ்ராம் ஸ்ரீம் ஸ்ரௌம் சஹ கேதுவே நமஹ: எடுத்துகாட்டாக குருவின் மந்திரத்தை ரசமணிக்கு சாரணை கொடுக்கின்றோம்

இரசமணி செய்முறை Read More »

A Yogi Science of Breath!

Post Views: 170 Life is absolutely dependent upon the act of breathing. “Breath is Life.” Differ as they may upon details of theory and terminology, the Oriental and the Occidental agree upon these fundamental principles. To breathe is to live, and without breath, there is no life. Not only are the higher animals dependent upon breath for life and health, but even the lower forms of animal life must breathe to live, and plant life is likewise dependent upon the air for continued existence. The infant draws in a long, deep breath, retains it for a moment to extract from it its life-giving properties, and then exhales it in a long wail, and lo! its life upon earth has begun. The old man gives a faint gasp, ceases to breathe, and life is over. From the first faint breath of the infant to the last gasp of the dying man, it is one long story of continued breathing. Life is but a series of breaths. Breathing may be considered the most important of all of the functions of the body, for, indeed, all the other functions depend upon it. A man may exist some time without eating; a shorter time without drinking; but without breathing his existence may be measured by a few minutes. And not only is Man dependent upon Breath for life, but he is largely dependent upon correct habits of breathing for continued vitality and freedom from disease. Intelligent control of our breathing power will lengthen our days upon the earth by giving us increased vitality and powers of resistance, and, on the other hand, unintelligent and careless breathing will tend to shorten our days, by decreasing our vitality and laying us open to disease. Man in his normal state had no need of instruction in breathing. Like the lower animal and the child, he breathed naturally and properly, as nature intended him to do, but civilization has changed him in this and other respects. He has contracted improper methods and attitudes of walking, standing, and sitting, which have robbed him of his birthright of natural and correct breathing. He has paid a high price for civilization. The savage, today, breathes naturally unless he has been contaminated by the habits of civilized man. The percentage of civilized men who breathe correctly is quite small, and the result is shown in contracted chests and stooping shoulders, and the terrible increase in diseases of the respiratory organs, including that dread monster, Consumption, “the white scourge.” Eminent authorities have stated that one generation of correct breathers would regenerate the race, and disease would be so rare as to be looked upon as a curiosity. Whether looked at from the standpoint of the Oriental or Occidental, the connection between correct breathing and health is readily seen and explained. The Occidental teachings show that physical health depends very materially upon correct breathing. The Oriental teachers not only admit that their Occidental brothers are right, but say that in addition to the physical benefit derived from correct habits of breathing, Man’s mental power, happiness, self-control, clear-sightedness, morals, and even his spiritual growth may be increased by an understanding of the “Science of Breath.” Whole schools of Oriental Philosophy have been founded upon this science, and this knowledge when grasped by the Western races, and by them put to the practical use which is their strong point, will work wonders among them. The theory of the East wedded to the practice of the West, will produce worthy offspring. This work will take up the Yogi “Science of Breath,” which includes not only all that is known to the Western physiologist and hygienist but the occult side of the subject as well. It not only points out the way to physical health along the lines of what Western scientists have termed “deep breathing, etc., but also goes into the less known phases of the subject, and shows how the Hindu Yogi controls his body, increasing his mental capacity, and develops the spiritual side of his nature by the “Science of Breath.” The Yogi practices exercises by which he attains control of his body, and is enabled to send to any organ or part an increased flow of vital force or “prana,” thereby strengthening and invigorating the part or organ. He knows all that his Western scientific brother knows about the physiological effect of correct breathing, but he also knows s that the air contains more than oxygen and hydrogen and nitrogen and that something more is accomplished than the mere oxygenating of the blood. He knows something about “prana,” of which his Western brother is ignorant, and he is fully aware of the nature and manner of handling that great principle of energy and is fully informed as to its effect upon the human body and mind. He knows that by rhythmical breathing one may bring himself into harmonious vibration with nature, and aid in the unfoldment of his latent powers. He knows that by controlled breathing he may not only cure disease in himself and others but also practically do away with fear and worry and the baser emotions. To teach these things is the object of this work. We will give in a few chapters concise explanations and instructions, which might be extended into volumes. We hope to awaken the minds of the Western world to the value of the Yogi “Science of Breath. Vinodhan, Courtecy  Yogi Science

A Yogi Science of Breath! Read More »

Shopping Cart