Author name: Vinodhan

உணவைப் பற்றிய சில தவறான எண்ணங்கள்

Post Views: 364 இந்த உலகத்தில் எல்லோரும் உணவிற்காக ஒரு சில விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார்கள் அது பலருக்கு தெரியும் ஆனால் உணவைப் பொறுத்து பலருக்கு தவறான எண்ணம் இருக்கிறது இந்த எண்ணத்தை மற்றும் மாற்றிவிட்டால் உணவு பரிசுத்தமாக்கும் உணவு தான் மனிதனுக்கு மிக முக்கியமான ஒரு ஆதாரமாக இருக்கிறது அதற்காக தான் அவன் இவ்வுலகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறான் அந்த உணவை குறித்து ஒரு விழிப்புணர்வு பதிவு இது நம்முடையபெரும்பாலான மக்கள், உயர்ந்த விலை உடைய உணவு களில் அதிக சத்துக்கள் இருக்கும். எனவே சிறந்தது என நினைக் கின்றனர். அதேபோல் குறைந்த விலை உணவுப் பொருள்களில் (இயற்கையில் கிடக்கும் உணவுப் பொருள்களைப் பற்றித்தான் கூறுகிறேன்) சத்துக்கள் குறைவாக இருக்கும் என்றும், அவைகள் தரத்தில் தாழ்ந்தன என்றும் நினைக்கின்றனர். இரண்டுமே தவறு. உதாரணத்திற்குப் பழ வகைகளில் நான் குறிப்பிட்டுள்ளது போல விலை குறைந்த பப்பாளி, கொய்யா போன்றவைகள், விலை உயர்ந்த ஆப்பிளை விட உயர்ந்தது என்பது அறிஞர்களின் முடிவு. எளிதில் கிடைக்கும் உணவுகள் எளிதில் கிடைக்கும் சில இயற்கை உணவுப் பொருள்களை மட்டமாக பலர் நினைப்பது உண்டு. இதனால்தான் ‘தோட்டத்து பச்சிலைக்கு வீரியம் குறைவு’ என்ற பழமொழியே உருவானது. வெகுதூரத்திலிருந்தோ வெளிநாட்டிலிருந்தோ கஷ்டப்பட்டுப் பெறும் உணவுகளை உயர்ந்ததாக நினைப்பதும் உண்டு. இந்த இரண்டு எண்ணங்களுமே தவறு. சீசன் உணவுகள் சில உணவுப் பொருள்கள் உண்மையில் உயர்ந்த சத்துக்கள் உள்ளதாய் இருக்கும். அதனால் அதைத் தொடர்ந்து உண்ண விருப்பப்படும் சிலர், அவை அதிகம் விளையாத காலங்களில் கூட அவற்றை அதிகம் விலை கொடுத்து வாங்கி உண்பதை பெருமையாக நினைக்கிறார்கள். இதுவும் தவறு. ஒரு பொருளின் சத்துகளும், அதன் மருத்துவ குணங்களும் அது அதிகம் விளை யும் காலத்தில்தான் அதில் அதிகம் இருக்கும், மற்ற காலங்களில் அவை குறைவாக இருக்கும். பெரிய கம்பளிகள் சிலர் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் விற்பனை செய்யும் பொருள்கள் என்றால் அவை உயர்ந்த தரமாயும், மிகுந்த சத்துகள் உடையதாயும், உடலுக்கு அவை கெடுதியை உண் டாக்காது என்றும் கண்மூடித்தனமாக நம்புகின்றனர். இதுவும் தவறு. அந்நிறுவனங்களுக்குப் பணம் மட்டுமே குறி. உங்கள் ஆரோக்கியம் இல்லை. அறிவியல் முறைப்படி நிரூபித்தது (Scientifically Proved) ஒருசில உணவுகளை அறிவியல் முறைப்படி நிரூபித்தது என்று கூறி விளம்பரப்படுத்துவர். பல சமயங்களில் அது உண்மை யாகயும் இருக்கலாம். காலம் மாறும்போது, அதுவே தவறு என வேறு ஒரு சமயத்தில் நிரூபிப்பதும் இயல்பாக நடக்கிறது. இதுதவிர, அப்பொருள்களில் உள்ள வேறு விஷயங்கள் நம் உடலைக் கெடுக்கக் கூடியனவாக இருக்கும். இதுபற்றி அவர் களுக்கு தெரிந்த போதும், அவர்கள் அதுபற்றி வாயைத் திறப்ப தில்லை. ஒரு உதாரணம்: கடலை எண்ணெய் கெடுதலை செய்யும் என்றனர். இன்றோ அது உடலுக்கு நல்லது என்கின்றனர். அதே போல் தேங்காய் எண்ணெயும் சிறந்ததுதான் என சில ஆராய்ச்சி களின் முடிவுகள் உள்ளன. எனவே அனுபவத்தில் எது சிறந்த பலனைக் கொடுக்கிறதோ அல்லது நாம் மதிக்கும் நம் முன்னோர் கூறிய நல்ல விஷயங் களை பின்பற்றுவதே என்றும் சிறந்தது அல்லது கூறப்படும் விஷயம் பற்றி பல நூல்களில் நன்கு ஆராய்ந்து பின் நம்ப வேண்டும்.இன்றைய நாளில் சிலருக்கு கடை உணவுகளை வேறு வழியின்றி சாப்பிடுகின்றனர். இன்னும் பலருக்கு வாரம் ஓரிரு முறை விருப்பத்துடன் குடும்பத்துடன் ஹோட்டலுக்குச் சென்று உண்பதும் வாடிக்கையாகி விட்டது.கடை உணவு என நான் குறிப்பிடுவது நட்சத்திர ஹோட் டல்கள் முதல் சிறிய ஹோட்டல்கள், பீச் கடைகள், கையேந்தி பவன், இனிப்புக் கடைகள், போளி கடைகள் என அனைத்து வகை, அனைத்து தர கடை உணவுகளையும் சேர்த்துதான்.இவை அனைத்திலும் மேற்கூறிய உணவுப் பொருள்களில் சேர்க்கக்கூடாத பொருள்களான நிறம், மணம், சுவை ஊட்டக் கூடிய பொருள்கள் நிச்சயம் கலந்தே இருக்கும்.வாடிக்கையாளர்களைக் கவர ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தில்லுமுல்லு செய்பவர்கள்தான். இவை தவிர, சில சிறிய கடைகளில் ஏற்கனவே பயன் படுத்திய சுட்ட எண்ணெயைத்தான் பலமுறை சுடவைத்துப்பயன்படுத்துவர். இதைவிடக் கொடிய விஷம் ஏதுமில்லை நாகரீகம் என நினைத்து கடைப்பொருள்களை தின்பவர் களால், கடைக்காரர்களுக்கும், மருத்துவமனைகளுக்கு நிச்சயம் லாபம் உண்டு என்பது, தற்காலத்தில் இவைகள் வளர்கிற வேகத்தைப் பார்த்தால் தானே புரியும்.சுவைகள் என்னும் தலைப்பில், மருத்துவ குணம் அதிகம் உள்ள சுவைகளாக துவர்ப்பு, கசப்பு, சுவைகள்தான் உள்ளன என்பது தெரியும். நீங்கள் இதை நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் பெரும்பாலான ஆங்கில மருந்துகளை சிரப் தவிர சுவைத்துப் பாருங்கள். அதன் சுவை உங்களுக்குப் புரிய வைக்கும். அப்படிப்பட்ட சுவையை மக்கள் சுவைத்து சாப்பிடுவ தில்லை. மக்களுக்கு பிடிக்காத இந்த சுவையை எந்தக் கடை யிலும், ஹோட்டல்களிலும் விற்பதில்லை. அப்பொழுது எப்படி அந்தஉணவுகள் உடல்நலத்தை கொடுக்கும். அதாவது மிகுந்த சுவையுடைய பொருள்களில் குறிப்பாக எண்ணெயில் வறுத்தஅல்லது தீயில் நேரிடையாக சுட்ட பொருள்களில் நல்ல சத்துக்கள் இருப்பதில்லை. நல்ல சத்துக்கள் உடைய உணவுகளில் குறிப் பாக வேகவைத்த அல்லது பச்சைக் காய்கறிகளில் சிறந்த சுவை இருப்பதில்லை.எனவே, சத்து உடைய உணவும், சுவையுடைய உணவும் பல சமயங்களில் எதிர் எதிர் தன்மை உடையன. எனவே, நாம் நம் உணவில் சுவைக்காக சிலவற்றையும் அதன் சத்திற்காக பலவற்றையும் உண்ண பழகிக் கொள்ள வேண்டும். vinodhan 7010054619

உணவைப் பற்றிய சில தவறான எண்ணங்கள் Read More »

சித்தர்கள் சொன்ன உயிரை வளர்க்கும் உபாயம் முறை

Post Views: 739 மனிதன் உடலை வளர்க்கத் தெரிந்துள்ளான். அறிவை வளர்க்கவும் தெரிந்துள்ளான். ஆனால் உயிரை வளர்க்கத் தெரியவில்லை. உடம்பினைப் பெற்ற பயன் உயிரை வளர்ப்பதுதான் என்பது சித்தர்கள் அனுபவம். சித்தர்கள் பல்லாண்டு வாழ விரும்புவது உயிரை வளர்ப்பதற்கே என்பது புரிய வரும். முதலில் உயிர் என்பது என்ன என்பதை அறிவோம். அதற்கு முன்பாக இப் பகுதியில் வரும் செய்திகள் முழுவதும் எமது யோக அனுபவத்திலிருந்து தெளிந்ததே தவிர, மற்றபடி ஆகம நூல்களிலிருந்து பெறப்பட்டது அன்று. எனவே ஒத்துக் கொள்ள முடிந்ததை மட்டும் ஏற்றுக் கொண்டு மற்றவற்றை விட்டு விடவும் என்பது எமது அன்பான வேண்டுகோள் ஆகும். உயிர் என்பது ஒருவித வெப்பம். ஆன்மா ஒருஉடலில் தங்குவதற்கு உயிர் வெப்பம் என்பது பாதுகாப்புஉறையாகவும், உறைவிடமாகவும் செயல்படுகிறது. உயிர் வெப்பத்தை மையப்படுத்தியே ஆன்மா பிறப்பு எடுக்கிறது.உயிர் வெப்பத்தின் அடிப்படையில் அறிவும் மேம்பாடுஅடைகிறது. ஓரறிவு உயிரினத்திற்கு உயிர் வெப்பம் மிகவும் குறைவாகும். உருவத்தில் யானை பெரியதாக இருந்தாலும்மனிதனை விட உயிர் வெப்பம் யானைக்கு குறைவாகும். காரணம் இல்லாமல் இந்த ஆன்மா பிறப்பு எடுக்கவில்லை. ஆன்மாவிற்கு அறிவு உள்ளது. உடம்புக்கு அறிவு இல்லை என்ற போதிலும்; அறிவு உள்ள ஆன்மா அறிவற்ற உடலை விரும்பி அணைந்ததன் நோக்கு, இந்த அறிவற்ற உடலின் மூலமாக உயிர்வெப்பத்தை மேலும் அதிகமாக்கி, பஞ்சபூத உடலை விட்டு தூய ஒளி உடலைப் பெற்று ஆன்மா அமரத்துவம் அடைய போராடுகிறது இதற்கிடையில் மனம் புகுந்து ஆன்மாவின் நோக்கத்தை முறியடித்தும், உயிர் வெப்பத்தை உயர விடாமல் தடுத்தும், மாற்றிப் பிறக்க வகையறிய விடாமல் தடுக்கிறது. சிலர் நினைக்கலாம், புலன்கள் இறைவன் கொடுத்தவை, பொருள்கள் இறைவன் கொடுத்தவை என்ற போது புலன்கள் பொருளோடு சேர்ந்து இன்பம் துய்ப்பது இயற்கை எனக் கருதலாம். புலனின்பம் வேண்டாம் என்று ஆன்மீகம் போதிக்கவில்லை. அதிலேயே மூழ்கி மீண்டும் பிறப்பு எடுப்பது போல பந்தத்தில் சிக்க வேண்டாம் என்றே போதிக்கிறது. திருமூலர் கூறுவார், “நெறியைப் படைத்தான், நெருஞ்சிலைப் படைத்தான்” என்பார். பல தடவை நெருஞ்சில்முள் குத்திக் காயமான பிறகும் அதே காரியத்தைத் தொடர்ந்து செய்யக்கூடாது என்பதே ஞானிகள் போதனையாகும்.புலன்கள் உலக சுகத்தில் பொருந்த உயிர் வெப்பம் குறையத் தொடங்குகிறது. உயிர் வெப்பத்தைப் பாதிக்காத உலக சுகம் எதுவுமே இல்லை என்று கூறி விடலாம். உலக சுகத்தின் மூலம் உயிர் குளிர்கிறது. இந்தப் பிரபஞ்சத்தில் வெப்பமான பொருள் மட்டுமே நிலைத்திருக்கும். இந்தப் பூமியின் மையம் குளிர்ந்து விட்டால் பூமியும் வெடித்துதூசுகளாகி விடும். மனித உடலும் குளிர்வதால் மட்டுமே பிணமாக முடியும். சிவம் என்பது நெருப்பு. இதையே சிவ வாக்கியர் “நெருப்பறை திறந்த பின்பு நீயும் நானும் ஈசனே” என்றார். இந்த உயிர் உலகியலைச்சாராது சிவத்தோடு சாரும் போது சிவக்கனலால் உயிர்வளர்கிறது. ஆன்மா ஒளிர்கிறது. பல கோடி சித்தர்கள் ஒளியுடலை எடுத்து உலகில் வாழ்வதற்குக் காரணம், சிவக்கனலை உயிர் தொடர்ந்து சார்ந்திருந்து பயிலும் குருவின் பதிபுக்கும் போதே “கயிலை இறைவன் கதிர் வடிவாமே” என்று திருமூலர் கூறுவது போல, நமது உயிர் சிவமாம் தன்மை பெற்று ஒளிர்கிறது. தவம் என்றால் நெருப்பைச் சார்தல் என்பதாகும். பிராணாயாமம் என்றால் பிராண சக்தியை நெருப்போடு இணைத்தல் என்பதாகும். யோகிகளின் தவம் என்பது சிவக்கனலைச் சார்ந்து வெப்பத்தை உயர்த்தி உயிரை வளர்ப்பதேயாகும்.குழந்தைக்கு மிட்டாய் வாங்கிக் கொடுத்து ஏமாற்றி போதனை அளித்து சான்றோன் ஆக்க முனைவது போல, இறைவனிடம் “தனம் தரும் கல்வி தரும், ஒருநாளும் தளர்வறியா மனம் தரும்” என்கிற தருவிக்கிற பட்டியலை அளித்து பாமரனை ஞானிகள் இறை நெறிப் பக்கம் ஈர்த்துக் கொண்டார்கள். இறைவனும் சீக்கிரமே உலகியலில் சலிப்பு வர எல்லா சுகத்தையும் கொடுத்து உயிரை வளர்க்கும் உபாயத்தையும் கொடுக்கிறான். இதில் உயிர் வளர வாழ்பவர்கள் உலக என்று பொருள். இன்பத்தில் நிறைவு கண்டு விட்டார்கள் இன்னும் உடம்பை வளர்க்கும் உபாயத்தில் மட்டுமே உலக இன்பத்தில் நிறைவு காணாதவர்கள் காரியப்ட்டு நிற்கிறார்கள். எதிலும் முழுமை பெற்றால் மட்டுமே சலிப்பு என்பது வரும்.றைவன் இரண்டு பேரிடம் மட்டுமே முழுமையான செல்வத்தைக் கொடுப்பார். ஒருவன் யோகி. மற்றவன் போகி. யோகி பெற்ற செல்வத்தால் சீக்கிரம் சலிப்பு வந்து உயிர் லாபம் பெறச் சாதனை செய்பவர். இவர்கள் பட்டினத்தார், பத்ரகிரியார் போன்றவர்கள். அடுத்த ரகம், உலகை அலங்காரம் செய்து செப்பனிட்டு விட்டுப் போக போகியின் கையில் செல்வத்தைக் கொடுத்து காடுகளைத் திருத்தி நாடாக்குவதும், தொழிற்சாலை அமைப்பதும், இப்படி உழைப்பதற்கோ செனனம் எடுப்பது போலச் செல்வம் கொடுக்கப்படும். இடைப்பட்டவர்கள் செல்வத்திலும் நிறைவு இல்லாமல், இறை பக்தியிலும் நிறைவு இல்லாமல் புலம்புவார்கள். சிந்தையில் நிறைவு என்பது தான் செல்வம். உலக சுகமும் விட்டுப் போகக் கூடாது, உயிரும் வளர வேண்டும் என்பதுதான் பேராசை ஆகும். இது நடைபெற வாய்ப்பே இல்லை. அடியார்கள் வாழ்வை ஆய்வு செய்தால், சுந்தரமூர்த்தி நாயனார் இன்பத்துறையில் எளியராகி இன்பம் துய்த்தவர். அவருக்கு சீக்கிரமே உயிர் மீது சலிப்பு வந்து இறைவா எம்மை ஏற்றுக் கொள்’ என்று விண்ணப்பம் வைத்துவிட்டார். ஆனால் சித்தர்கள் ஆயிரம் ஆண்டுகள் உடலில் வாழந்த போதிலும் சலிப்பு வரவில்லை. காரணம், மனதையும் புலன்களையும் வென்றவர்களுக்கு உடலின் மீதும் உயிரின் மீதும் சலிப்பு வராது. வாழ்க்கை வேண்டாம் என்று மனம் மட்டுமே சொல்லும்; ஆன்மா சொல்லாது. ஆன்மா விரும்பி அணைந்த இந்த உடலில் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாலும் சலிப்பது இல்லை.இறை நெறியாளர்களில் இரண்டு வகை உண்டு. முதல் வகையினர், மனதில் இறைவனை வைத்துத் வகையைச் சார்ந்தவர்கள். இவர்கள் இறைவன் வாழும் கயிலை வெளியே இருப்பதாகச் சாதித்தவர்கள். அடுத்து சித்தர்கள் என்போர், தனது உடலையே சிவாலயமாகவும், அதில் சிதாகாசப் பெருவெளியே கயிலையாகவும், அங்கேயே சிவத்தை நிறுத்திச் சாதித்தார்கள். இவர்கள் உடம்பை உகுத்து விட நினைப்பதில்லை. மாறாக, இந்த சிவாலயம் பல்லாண்டு நிலைத்திருக்க முயன்று வெற்றியும் கண்டார்கள். உடல் என்கிற சிவாலயம் நெடுநாள் நிலைத்திருக்க உயிர் வெப்பம் உயர்வதுதான் முக்கியமானது. எந்த ஆலயம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சிதிலமடையாது நிலைத்திருக்கிறதோ அதுவே சக்தி வாய்ந்ததாகப் போற்றப்படும். இதுவே சித்தர்கள் கொள்கை. சில ஆலயம் பதினாறு ஆண்டுகளில் காணாமல் போயின. சில ஆலயம் முப்பத்தெட்டு ஆண்டுகளில் காணாமல் போயின. சிலது மட்டும் எண்பது ஆண்டுகள் இருந்தன. இவைகள் இருக்கிற காலத்தில் ஏற்றம் பெற்றது என்னவோ உண்மைதான் என்றாலும், சிவம் கூத்தாடல் நடத்திய இந்த உடல் நெடுநாள் நிலைத்திருப்பதுதான் அவசியமானதாகும். ஒரு சிவாலயம் கட்டுகிறோம். அது ஆயிரம் வேண்டும் என்று ஒரு பாமரன் கூடக் கருதுவான். அதுபோல ஆ ண்டுகளாவது இடிபாடு இல்லாது இருக்க சிவத்தின் திருவடி பதித்து திருத்தாண்டவம் புரிந்த உடல் பல்லாயிரம் வருடம் நிலைத்து நிற்க வேண்டும். சிலர் மனிதர் கண்களிலிருந்து மறைத்து வாழலாம். அது தவறில்லை! பலகோடி சித்தர்கள் அப்படியேவாழ்கிறார்கள். வள்ளலார் கூட தனது உடலை மறைத்து வாழஇடமிருக்கிறது. இறைவன் மனிதர்களுக்குக் காட்சி கொடுப்பது, தனது பிரம்மாண்டத்தைக் காட்டுவதற்காக அல்ல. ஒவ்வொரு காட்சி மூலமாக அந்த ஒளி வெள்ளத்தின் மூலம் உயிர் வளர்கிறது. ஒவ்வொரு காட்சியின் மூலம் மனம் பாதிப்பு அடைகிறது. இதில் பலரும் உன்மத்த நிலை அடைந்து பைத்தியமாகி விடுவார்கள். இதில் நாமும் முதல் காட்சியில் பைத்தியமாகி சில நாள் மருத்துவத்திற்குப் பிறகு சரியானோம். காரணம், மனதிற்குப் புலப்படாத ஒளி வெள்ளத்தைக் கண்டதும், மனம் அதிர்ச்சிக்கு உள்ளாகும். உ தகுந்த ஒருநிலைப்பாடு உள்ளவர்கள் மட்டுமே தப்பிக்க முடியும். ஆசைகளின் எச்சம் அதிகம் உள்ள மனம் இறைக்காட்சியில் பெரிதும் பாதிக்கப்படும். இதில் உன்மத்த நிலை அடைந்தவர்கள் உலகத்தின் பார்வையில் பைத்தியமாகத் தெரிந்தாலும் உயர்நிலை அடைந்தவர்களாகும். அப்புறம் வினைகள் சாம்பலாகி விடும். உடல் மட்டும் நெடுநாள் தங்காது என்பது மட்டும் உண்மையே தவிர திருவருள் காரியப்படும். இப்படி உயிர் பல இறைதரிசனத்தின் மூலம் பஞ்சபூதக் கலப்புப் பொருந்திய உடலை விடுத்து ஒளியுடலைப் பெற்று இறைவனைப் போன்ற தன் வயத்தனாதல் இயல்பை யோகிகள் பெறுகிறார்கள். ஒளியுடலைப் பெறுகிற தகுதி தேவலோகத்தில் தேவர்களுக்கும் கிட்டாத சலுகையாகும். சித்தர்கள் வேற்றுலகில் வாழ விரும்பாது இப்புவியில் பல்லாண்டுகள் தவம் செய்ய விரும்புவதற்குக் காரணம், இங்கு தான் அருள் வல்லபம் எளிதாகக் கிடைக்கும்.பொதுவாகத் தேவலோகத்தில் சுகங்கள் அதிகமாக மண்டிக் கிடக்கும் என்பார்கள். எந்த இடத்தில் சுகங்கள் அதிகமாக இருக்கிறதோ அங்கு ஞானமும் அருளும் குறைவாகவே இருக்கும். உதாரணமாக, மேலை நாடுகளில் அனுபோகசுகம் அதிகமாக உள்ளது. ஆனால் யோக ஞானம் குறைவாகவே உள்ளது. இதுபோல தேவலோகத்திலும் ஞானம் இருக்காது. மனதிற்கு அறிவு உள்ளது போலவே உயிருக்கும் அறிவு உள்ளது. உடம்பில் கனல் குறையும் போது உயிரும் சலிப்பு அடைகிறது. எனவே கனல் குறையாது பாதுகாக்க வேண்டும். கனல் குறையாமல் பாதுகாக்க ஐந்தாண்டு களுக்கு ஒரு முறையாவது உடம்பின் மொத்த எடையில் பத்தில் ஒன்றைக் குறைத்து கனலைச் சரிசெய்ய வேண்டும். “பிண்டம் சுருங்கில் பிராணன் நிலை பெறும்” என்பார் திருமூலர். பிராணன் அதிகமாக உடம்பில் தங்கினால் கனல் அதிகமாகி விடும். பிராண சக்திதான் உயிருக்கு ஆதாரமானதாகும். பிராணனைக் கூட்டுவதற்கு உடம்பு இளைத்தால் ஆகாயப் பெருவெளி அதிகமாகும். அந்த இடத்தில் பிராணன் தங்கும். இதுவே உயிர் வளரும் உபாயமாக மாறும். எனவே உயிரை வளர்க்கிற பிராண சக்தியைக் கூட்டி உய்தி பெற வேண்டும். இதுவே சித்தர்களின் சாதனையாக அமைவதால் கடைசியாக ஒளியுடலை எடுத்து வாழ பிராண சக்தி பெரிதும் துணை நிற்கிறது vinodhan 7010054619

சித்தர்கள் சொன்ன உயிரை வளர்க்கும் உபாயம் முறை Read More »

இரசமணி வித்தைகள்

Post Views: 420           சிவபெருமானின் நவந்தி என சிறப்பித்துச் சொல்லப்படும் பூமியிலுள்ள சக்தி வாய்ந்த பொருளான தொட்டால் ஓடக்கூடியதுமான பாதரசத்தை புகையாது செய்தும் மணியாகக் கட்டி நிறுத்தி இரசமணியாக்கி அநேக சித்திகள் செய்துள்ளனர் சித்தர்கள். இரசமணி எண்ணற்ற மகத்துவம் சிறப்பும் உடையது ஆகும். இரசமணி வைத்திருப்போர்களுக்கு அட்டமா சித்திகளம் கைகூடும் இரசமணியை விபூதியுடன் கலந்து அவ்விபூதியை மந்திரித்துக் கொடுக்க சகல நோய்களும் குணமாகும். இரசமணி அணிந்திருப்போரை இடி, மின்னல், எரிமலை. பூகம்பம், நிலநடுக்கம், புயல், கடல் கொந்தளிப்பு போன்ற இயற்கை அழிவுகளில் இருந்து பாதுகாக்கும் சக்தி கொண்டது. இரசமணி கட்டியிருப்பவர்களைக் காட்டு மிருகங்களின்கொடிய தாக்குதலோ, விஷ ஜந்துக்களின் கொல்லக்கூடிய ஆலகால விஷமோ ஒன்றும் செய்யாது  இரசமணியை வாயில் போட்டுக்கொண்டால் பசி தாகம் இருக்காது. இரசமணியை வாயில் அடக்க வீர்யசக்தி அதிகரித்து போக சக்தி பெருகும். இரசமணியை பசுபால் கறக்கும் சமயம் அதன் நடுமுதுகில் வைத்தால் பால் கறக்காது? இரசமணியை இரும்பு பூட்டின் மீது வைக்க பூட்டுபிளந்து விடும். இரசமணி சரீரத்தில் இருந்தால் மற்றொருவர் சரீரத்தில் புகலாம். சரீரத்தை மறைத்துக் கொண்டு நடமாடலாம். இரசமணி செம்பை தங்கமாக்கும். இரசமணி இரசத்தை குடிக்கும் இயல்புடையது. இரசமணியை வாயிலிட்டு உமிழ்நீரை விழுங்குவோரின் சரீரமும் கற்ப தேகமாகும். நரை, திரை, மூப்பு, சாக்காடு அணுகாது. இரசமணியை நெல்குதிரில் போட்டு வைத்தால் இரண்டு மூன்று தினங்களில் குதிரில் உமி மட்டுமே மிஞ்சும். இரசமணியை புருவ மத்தியில் இருக்கும்படி கட்டியிருப்போர் தியானத்தின்போது மேலெழும்புவர். ஆகாய வெளியில் பறவை யைப் போல் பறப்பர். இதைப்போன்ற அதிசக்திவாய்ந்த ரசமணிகள் உள்ளன ஆனால் போலி மனிதர்கள் வெறும் பணத்திற்காக இந்த ரசமணியை செய்து கொடுக்கிறேன் என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள் ஆனால் உண்மையாக ரசமணி அதிசக்திவாய்ந்த சக்திகள் உள்ளன அந்த சக்தி ரசமணியை நாம் உண்மையான ஒருவரிடம் வாங்கும் பொழுது அது நல்ல பலனைத் தருகிறது என்னுடைய அனுபவம் பலபேர் இடம் சென்று நான் பல ரசமணியை வாங்கியுள்ளேன் அதில் எல்லாம் வெறும் வெற்று பாதரசம் மட்டுமே உள்ளது சக்தி அல்ல காரணம் அவர்களுக்கு ஒருவருக்கும் செய்யத் தெரியாது நல்ல ஒரு குருவிடம் சென்று இந்த ரசமணி கலை வாங்கிக் கொள்ளுங்கள் vinodhan 7010054619

இரசமணி வித்தைகள் Read More »

மனதின் உயிர் ஏங்கே இருக்கிறது சித்தர்கள் கூறிய ரகசியம்?

Post Views: 699 துரியோதனின் உயிர் உல தொடையில் இருந்தது என்று கண்டுபிடித்து அவனை வீழ்த்தியது போல மனதின் உயிர் நிலையை அறிந்து சித்தர்கள் வீழ்த்தினார்கள். அது பற்றி விரிவாகக்   காண்போம். நமது மனம் நமது நாசித் துவாரத்தில் இயங்கும் டே சுவாசத்தோடு இணைந்து காரியப்படுகிறது. சுவாசத்தின் என அசைவு எந்த நிலையில் உள்ளதோ அது போலவே அ மனிதனின் இயக்கமும் உள்ளது. மனம் இயங்கத் லி | தொடங்கிவிட்டால் அணுச்சிதைவு ஏற்பட்டால் எப்படி ஒன்று இரண்டாகி, இரண்டு நான்காகி, நான்கு பதினாறாக காரியப்படுவது போலவே மனமும் காரியப்படும். எனவே சுவாசத்தைப் பிடித்து மனதின் இயக்கத்தை முதலில் கட்டுப்படுத்தினார்கள். பிறகு மனதின் வலிமை இழந்த பிறகு அதைக் கொன்றார்கள். மனதின் வலிமை குறையாத வரை அதை எதிர்த்துப் போராடி வெல்ல முடியாது. சித்தர்கள் மனதைக் கொன்ற விதத்தை அறிவோம். ஒரு மயில் சீற்றம் அடைந்த பாம்பைக் கொல்வதற்கு முதலில் பாம்பின் கொடூரத்தைக் குறைக்கும். நெடுநேரம் போராடிய பாம்பு களைப்படைந்து ஒடுங்கும்போது மயில் அதைக் கொன்று விடும். இதே முறையில் தான் மனதையும் கொல்ல வேண்டும். ஆரம்பத்தில் தவத்தில் கண்களை மூடியதுமே நமது மனம் படம் எடுத்து ஆடத் தொடங்கும். அதனுடைய ஆட்டம் குறைந்தது இரண்டு நேரமாவது நீடிக்கும். அதுவரை நாம் அதனிடம்நெருங்கவே கூடாது. பிறகு பாம்பின் சீறலைப் போன்று மனதின் சீறல் குறையும். அதாவது நமது மூக்கில் சுவாசம் உள்ளே போன பிறகு வெளியேறும் போது ஒரு சீறல் உண்டாகும். இது பனிரெண்டு அங்குலத்திற்கு மேலே போகும் போது சீறல் சத்தம் நன்றாகவே தெரியும். உதாரணமாக ஓடியாடி உடற்பயிற்சி செய்தவன் சீறல் போன்று இருக்கும். ஆடாமல் அசையாமல் மூச்சின் சிறலைக் கவனித்தால் பனிரெண்டு அங்குலமாகக் குறையும் போது சீறல் அறவே இருக்காது. பனிரெண்டு அங்குலம் என்பது புருவ மத்தியில் இருந்து ஒரு சாண் நீளமாகும். அடுத்து யோக சாதனை மூலமாக பனிரெண்டு அங்குலத்தி லிருந்து ஒரு அங்குலமாகக் குறைக்க கடினப் பயிற்சி செய்ய வேண்டும். நமது சுவாசம் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்கிற பஞ்ச பூத தொடர்பில் இயங்கும். இதனாலேயே மண்ணாசை, பொன்னாசை, பொருளாசை எல்லா ஆசைகளும் உதயமாகும். இதில் ஆகாய பூதத்தில் சுவாசம் நடக்கும் போது முற்றிலும் மாறுபட்ட அனுபவம் உருவாகும். மனதின் சுழற்சி வேகம் குறையத் தொடங்கும். இதை அறிந்த சித்தர்கள் ஐந்து பூதங்களில் ஆகாய பூதம் நடைபெறுகிற நேரத்தில் விழிப்பாக இருந்து மனதையும், சுவாசத்தையும் ஒடுக்குகிறார்கள். ஆகாயபூதம் நடைபெறாத படி மனம் கடுமையாகப் போராடும். அமைதியாக அமர்ந்தவர்கள் பெருமூச்சு விடுகிறார்களே அந்த நேரமே ஆகாய பூதம் சுவாசத்தில் நடக்கிறது என்பதாகும். அந்த நேரத்தில் [பனிரெண்டு அங்குல சுவாசத்தை நெருக்கி குறைத்து பதினொன்றாகக் குறைத்து விட்டால் மனதின் ஆற்றலும் பனிரெண்டில் இருந்து பதினொன்றாகக்குறைந்து விடும்] இதனால் யோகியின் குணாதிசயத்தில் மாறுபாடு உண்டாகும். அதாவது உலக ஆசைகளில் இருந்து விடுபட்டு நிற்கிற ஆற்றல் உண்டாகி விடும். எப்படியெனில் சாப்பிட ஆசை தோன்றும் போது சாப்பிடாமல் நிறுத்தி விடலாம். ஆனால் சாப்பிடும் இச்சை இருந்து கொண்டே இருக்கும். மாறாக பதினொன்று அங்குலமாகக் குறைந்த சுவாசம் மூலம்] சாப்பிடும் இச்சை இல்லாமல் போகும். அடுத்து இன்னும் போராடி இரண்டு அங்குலம் குறைத்து சுவாசத்தை பத்து அங்குலமாக குறைத்து விட்டால் மனதின் வேகம் குறைந்து மனம் அமைதியை விரும்பும். தவம் செய்வதை விரும்பும். தனிமையை விரும்பத் தொடங்கி விடுவார்கள். ஞானத்தின் சாயல் வெளிப்படத் தொடங்கி விடும் மேலும் போராடி ஆகாய பூதம் நடக்கிற நேரத்தில் மூன்று அங்குலம் குறைத்து விட்டால், அடுத்தவர் போதித்து உணராமலேயே தனக்குள்ளேயே ஞானம் உதயமாகி விவேகியாகி விடுவார்கள் இன்னும் பல ஆண்டுகள் தவம் இருந்து போராடி நான்கு அங்குலம் குறைத்து சுவாசத்தை எட்டு அங்குலமாகக் குறைத்து விட்டால் மனதிற்கு நாம் அடிமையாக இருந்தது மாறி நாம் இட்ட பணியைச் செய்து முடிக்கும் ஏவலாளி போலத் தூரத்தில் நடக்கும் சம்பவங்களைத் தெரிந்து வந்து மனம் உணர்த்தும். தனது சக்தியைப் பயன்படுத்தி மேலும் முயலாத வண்ணம் மனம் போராடும். அடுத்து ஐந்து அங்குலம் குறைத்து சுவாசத்தை ஏழு அங்குலமாக ஆக்கி விட்டால், மனம் தனது செயல்பாட்டை இழந்து விடும். இந்த நேரத்தில் சித்தர்கள் தரிசனம் உண்டாகும். நல்லாசிகளைத்தருவார்கள். அடுத்து சுவாசம் ஆறு அங்குலமாக வரும் போது ஆகாயத்தில் உள்ள பிரபஞ்ச இரகசியங்கள் தெரிய வரும். பிறப்பின் இரகசியமும் தெரிய வரும். வான் பற்றி நின்ற இறை தரிசனமும் உண்டாகும். அடுத்து சுவாசத்தை ஐந்து அங்குலமாகக் குறைக்கும் போது உடம்பு காய சித்தி பெற்று விடும். அதாவது உச்சந்தலை அமிர்தம் உடலில் ‘ புகுந்து கற்பதேகமாக மாற்றி விடும். பிரளய காலத்திலும் அழியாத சித்தி வல்லபம் உண்டாகும். இன்னும் போராடி சுவாசத்தை நான்கு அங்குலமாகக் குறைக்கும் போது, இது மிக மிகச் சிரமம்; என்றாலும் வெற்றி பெறும் போது மூக்கு நுனியை விட்டு சுவாசம் வெளியேறாது. மூக்கு என்பதே நான்கு அங்குல நீளம் மட்டுமே உடையது. அப்போது அணிமாதி சித்திகள் அனைத்தும் கைவரப்படும். இந்த நிலையில் அடுத்த மனிதர்கள் கண்களில் அகப்படாமல் மறைந்து வாழ தீர்மானிப்பார்கள். இன்னும் சுவாசம் மூன்று அங்குலமாகக் குறைக்கும் போது மூக்கில் நெருப்பு எறும்பு பயணிப்பது போல உணர முடியும். அப்போது இந்த சூரிய குடும்பத்தை விட்டு அடுத்தடுத்து உள்ள நவ கண்டங்களில் சஞ்சரித்து விட்டுத் திரும்பி வரும் வல்லபம் உருவாகி விடும். இதுவே ஆன்ம ஒளிப் பயண மாகும். அடுத்து சுவாசம் இரண்டு அங்குலமாகக் குறைக்கும் போது, நமது ஆன்மாவை நமது மனமே கண்டு வழிபாடு செய்யும். சிவதரிசனமும் ‘உண்டாகி இறைவனோடு நமது ஆன்மா உரையாடுவதை மூன்றாவது நபராக மனம் கண்டு களிக்கும். அடுத்து நமது சுவாசத்தை ஒரு அங்குலமாக குறைக்கும் போது புறப்பட்ட இடத்திலேயே சுழன்று வருவதால் தேகம் அழியாது. பல்லாண்டுகள் புதைந்துகிடந்தாலும், உணவு, உறக்கம், சுவாசம் இல்லாமல் வாழ முடியும். பஞ்ச பூதங்களின் தயவு இல்லாமலேயே நமது உடம்பு கல்தூண் போல ஆகி விடும். உணர்வு மட்டும் சிவ நடனத்தை கண்டு களிக்கும். அந்த உடம்பை விட்டு இறைவன் நீங்குவதே இல்லை. இப்படிப்பட்ட உடல்களை மனிதர்கள் கண்களுக்குத் தெரியாத வண்ணம் மறைத்து விடுவார்கள். நமது மனமும் விரும்பிய பறவையாகவோ, பாம்பாகவோ உடல் எடுத்து உலகைக் காண முடியும். ஆன்மா இறைவனை தொழுது நிற்கும். நமது மனம் விரும்பிய உடல் எடுத்து உலகில் மகிழும். பெரும்பாலான யோகிகள் கிளி, புறா,காகம்,பருந்து, நல்ல பாம்பு உருவத்தில் வாழவே விரும்புகிறார்கள். ஆரம்ப நிலை சாதகர்களுக்கு அறிவுரை வழங்கவும் உலகில் பஞ்சம் பட்டினி வராதபடி கோள்களை மாற்றி மழை வர வைப்பதும், உலக நடப்புகளில் கவனம் வைத்துக் கடவுள் போல தொண்டு செய்வார்கள். எனவே மனதைக் கொன்று அதைச் சீர்திருத்தி உலகில் நிரந்தர கர்மயோகியாக இருப்பதே சித்தர்களின் இலட்சியமாகும். வெல்லப்படாத மனதோடு செய்கிற கர்மயோகம் மிகவும் ஆபத்தானது. சித்தி பெற்ற பிறகு செய்வதே நிலையான விளைச்சல் ஆகும் இப்படி மனதைக் கொல்ல இரவும் பகலும் அயராது உழைக்கிறார்கள் யோகிகள். நுஞ்சபூதமாகிய ஆகாய பூதத்தைப் பயன்படுத்த தேர்ந்த பிராணாயாமம் கற்று பகற் பொழுதில் நமது சுவாசத்தை இடகலையிலும், இரவு தவம் செய்யும் போது சுவாசத்தை பிங்கலையிலும் மாற்றி சாதனை செய்யும் போது மிக விரைவில் சுவாச பந்தனம்உண்டாகிறது. இதன் மூலம் மனம் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடுகிறது. மனம் ஒடுங்கும்போது தனித்திருந்து பசித்திருந்து விழித்திருந்து தவம் செய்கிற சுவையுணர்வு வந்து விடும். அப்புறம் உலக வாழ்வு அனைத்துமே ஒரு நாடக சாலை நடிப்பாகவே தெரியத் தொடங்கி விடும். இந்த முறையில் பயின்று சித்தியானவர்கள் மட்டுமே தவ சீலராகும். மற்றபடி செத்துப் போனவர்கள் தவமுறை அனைத்தும் காசாளர் ஆக்குமே தவிர கடைத்தேற்றம் என்பது வராது. இதுபற்றி விரிவாகவே அடுத்து பதிவில் காண்போம்! vinodhan 7010054619

மனதின் உயிர் ஏங்கே இருக்கிறது சித்தர்கள் கூறிய ரகசியம்? Read More »

பிரச்சினைகள் எங்கிருந்து துவங்குவது ?

Post Views: 384                   பிரச்சினைகளை இனங்காணும்போது பலவித குழப்பங்கள் வரலாம். தனிப்பட்ட் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளானாலும் சரி அல்லது நிறுவனங்கள், சமுதாயம் என்று ஒட்டுமொத்தமாகப் பலரைப் பாதிக்கும் பிரச்சினை யானாலும் சரி, நாம் முதலில் செய்ய வேண்டியது இதுதான்: பிரச்சினையை வகைப்படுத்துவது. அன்றாடம் சந்திக்கக்கூடிய பல பிரச்சினைகள் சுலபத் தில் வகைப்படுத்தக் கூடியவை. அவற்றுக்கான தீர்வுகளும் அப்படியே. உதாரணமாக அலுவலகத்துக்குச் செல்லும் ஒருவர் தினமும் எப்படியோ தாமதமாகத்தான் போக முடிகிறது என்று வைத்துக் கொள்வோம். அதை ஒட்டி அவருக்கு மன உளைச்சல், பதற்றம், அலுவலகத்தில் எதிர் கொள்ளும் கேள்விகள் என்று பல விளைவுகள் ஏற்படும். ஆனால் அவரது பிரச்சினை இவை அல்ல. தாமதம்தான் அவர் பிரச்சினை. இதைத் தீர்மானிப்பதும் இதற்குத் தீர்வு காண முயல்வதும் சுலபம்தான். ஆனால் அதே நபருக்கு, சக மனிதர்கள், உறவினர்கள் ஆகியோரிடத்தில் பழகுவதிலோ ஏற்றுக்கொள்ளப்படுவதிலோ பிரச்சினை என்றால் அதனை எளிதில் வரையறுக்கவோ, வகைப்படுத்தவோ முடியாது. ஏனென்றால் இப்படிப்பட்ட பிரச்சினைகள் பல பரிமாணங் களும், காரணங்களும் கொண்டவை. அவர் பழகும் விதம்,தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் விதம், மற்றவர்களை அணுகும் முறை, குறைநிறைகளை சுட்டிக்காட்டும் அல்லது ஏற்றுக்கொள்ளும் முறை, தன்னைப் பற்றிய அபிப்பிராயம் மற்றவர்களைப் பற்றிய அபிப்பிராயம், அவற்றை வெளிப் படுத்தும் விதம் போன்ற பல காரணங்களால் அவருக்கு மேற்குறிப்பிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கலாம்.அதாவது இதுபோன்ற பிரச்சினைகள் பன்முகம் கொண்டவை. எனவே அதைத் தீர்ப்பதற்கான அணுகு முறையும் பன்முகத் தன்மை வாய்ந்ததாகத்தான் இருக்க வேண்டும். உணர்வுகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தனித் தன்மை வாய்ந்தவை. அதற்கான தீர்வும் அப்படித்தான் இருக்கும். அதாவது ஒருவருக்குப் பொருந்துவது இன்னொரு வருக்குப் பொருந்தாது. குறிப்பிட்ட நபர், அவரது தன்மை, சிந்தனை முறை ஆகியவற்றைச் சார்ந்துதான் அவற்றை தீர்க்க முடியும். ஆக, பிரச்சினைகளின் தன்மை வரையறைக்கு உட்பட்டதா, இல்லையா என்பதை முதலில் தெரிந்து கொள்வது, அவற்றைத் தீர்ப்பதற்கான முதல்படி என்று சொல்லலாம். எவ்வகையான பிரச்சினையாக இருந்தாலும், அதைத் தீர்ப்பதற்கு வழி தேடும் முன்னர், பொதுவாக, பிரச்சினைகளிலிருந்து விடுபட சரியான முயற்சிகள் மேற் கொள்வதற்குத் தடையாக இருக்கும் விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம். ஆரம்ப கட்டம் ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு, “When in Contradiction, go to the basic”, முரண்பட்ட சூழ்நிலையில்சிக்கும்போது துவக்கப் புள்ளிக்குச் சென்று, அங்கிருந்து வேண்டும். எந்தப் பிரச்சினையும் தீர, அதனுடைய ஆரம்பம் அல்லது தோற்றுவாய்க்குச் செல்வது முக்கியம். அதாவது அதன் வேரைத் தேட வேண்டும். இதற்கு, பின்னோக்கிச் சென்று ஆற, அமர சிந்திக்கப் பழகுதல் மிகவும் முக்கியம். பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அதை முழுவதும் புரிந்துக் கொள்ளுதல் அவசியம். நோயின் அறிகுறிகளைப் பார்த்து அவற்றுக்கு சிகிச்சை செய்யும் மருத்துவர் சிறந்த மருத்துவராகக் கருதப்பட மாட்டார். நோயின் காரணத்தை அறிந்து அதைப் போக்க சிகிச்சை அளிப்பதுதான் சிறந்த மருத்துவம். அதுபோலத்தான், வரையறுக்க முடியாத எந்த பிரச்சினையையும் அணுகும்போது முதலில் அதன் அடிப் படைக் காணரங்களைக் கண்டறிய வேண்டும். அதன்பின் தான் அதற்கான தீர்வு பற்றி சிந்திக்கத் துவங்க வேண்டும். விரிவான அணுகுமுறை பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான இரண்டாவது தடை, அதன் பரிமாணத்தையும், தாக்கத்தையும் புரிந்து கொள்ள முயற்சி செய்யாததுதான். உதாரணமாக ஒரு எழுத்தாளன் அல்லது கவிஞன் தான் படைத்தவற்றை எப்படிப் பிரசுரத் திற்குக் கொண்டு வருவது என்பது பற்றி சிந்திக்கிறான் என்று வைத்துக் கொள்வேர்ம். அவன் எதைப் பற்றி அல்லது யாரைப் பற்றியெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் ? முதலில் அவனது தேவைகளைப் பற்றி அல்லது விருப்பத்தைப் பற்றி கணக்கில் எடுக்க வேண்டும். அதன் மூலமாக எதை சாதிக்க விரும்புகிறான் ? அது எதன் மூலம் பூர்த்தி அடையும் ? அதற்கு என்ன செய்ய வேண்டும்? சமுதாயத்தில் இந்த நூலுக்கான தேவை இருக்கிறதா போன்றவற்றை சிந்திப்பது முதல்படி இரண்டாவதாக, பதிப்பாளர் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். யார் இதைப் பிரசுரிப்பார் ? யாரிடம் போனால் இதற்கான மரியாதையும், நியாயமான சன்மானமும் கிடைக்கும் ? அவரது செல்வாக்கு அல்லது நிலை என்ன ? அவர் இந்தக் கையெழுத்துப் பிரதியை மேம்படுத்த, யோசனைகள் சொல்லக் கூடியவரா ? சிறந்த முறையில் வெளியிடவும் விற்பனை செய்யவும் கூடியவரா ? இதை யெல்லாம் பார்க்க வேண்டும். மூன்றாவதாக, வாசகர்கள். எந்த மாதிரியான வாசகனுக்காக எழுதியிருக்கிறோம் ? அவர்களை அது சென்றடையுமா? அவ்வாறு அடைவதற்கு என்ன செய்யலாம் ? ஆகியவற்றை யெல்லாம் அந்த எழுத்தாளன் சிந்தித்தாக வேண்டும்.இந்த மூன்று விதமான கேள்விகளுக்கும் திருப்தி கரமான பதில் கிடைக்கும் என்றால், பிறகு அடுத்த கட்டத்திற்குச் செல்லலாம். அதாவது, திட்டத்தை செயல் படுத்துதல். இவ்வாறு செய்யத் தவறுவதுதான் இரண்டாவது முக்கியத் தடையாகும்.வழிமுறைகள், செயல்பாடுகள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சரியான வழிமுறை களும், செயல்பாடுகளும் இல்லாமல் இருப்பதுதான் மூன்றாவது முக்கியத் தடை. அது குறித்து சரியான விதத்தில் சிந்திக்காமல் அவசரமாக செயல்படுதல், நடைமுறைப் படுத்தும்போது நேரக்கூடிய மாற்றங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருத்தல் ஆகியவை பிரச்சினை களைத் தீர்க்க உதவாது. இதற்கான காரணங்கள் என்ன ? பிரச்சினையின் வீரியத்தையும், பரிமாணத்தையும், புரிந்து கொள்ளாமல்,‘வரும் போது பார்த்துக்கொள்ளலாம்’ என்று அவசரப்பட்டு செயலில் இறங்குதல்; சரியான சிந்தனைக் குவிப்பு இல்லாதது ஆகியவைதான் இதற்கான காரணங்கள். இந்த அம்சங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ள ஒரு சம்பவத்தைப் பார்ப்போம். சில வருடங்களுக்கு முன்பு பெங்களூரில், உலக அழகிப் போட்டியை பெரிய இந்திய நிறுவனங்கள் சில, நடத்த உத்தேசித்தன. அதற்கான ஏற்பாடுகளை உலகமே வியக்கும் வண்ணம் செய்தன. மிகவும் பிரம்மாண்டமானதாக அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தன. பல விளம்பர நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு களத்தில் இறங்கின. அதே சமயத்தில், உலக அழகிப்போட்டியை அங்கே நடத்தக் கூடாது என்று சில அமைப்புகள் போராட்டம் நடத்த ஆரம்பித்தன. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் இதை ஒரு பிரச்சினையாகவே மதிக்கவில்லை. எனவே இது பற்றி அவர்கள் யோசிக்கவே இல்லை. போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கங்கள், அவர்களுடைய பலம். அவர்களுக்கிருந்த செல்வாக்கு, மக்களின் அதரவு எதையும் பெரிதாக கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. பத்திரிகை நிருபர்கள் இந்தப் பிரச்சினையைக் குறித்து கேட்டபோதெல்லாம், அதைப் பொருட்படுத்தி பதில் சொல்லவில்லை. இந்த அழகிப் போட்டியை நடத்த வேண்டுமென்று விரும்பி, எழுத்தாளர்கள் மற்றும் இதன் ஆதரவாளர்கள் தங்கள் கருத்துக்களைப் பொது ஜன ஊடகங்கள் (பத்திரிகை, டி.வி.) மூலமாகப் பிரச்சார பணியில் வெளிப்படுத்தி வந்தனர். இதுபோன்ற செய்தி களுக்கும் கருத்துக்களுக்கும் ஊடகங்கள் பெருமளவில் முக்கியத்துவம் கொடுத்தன. நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த நிறுவனங்கள் இவற்றின் மூலம் பெரும் திருப்தி அடைந்தனர்.அதனால் இத்தகையோரை உற்சாகப்படுத்தியும் நிகழ்ச்சி தயாரிப்பிலும் பெரும் கவனத்தை அளித்து வந்தனர். ஆனால் அதே சமயத்தில் எதிர்ப்பாளர்கள் எப்படிப்பட்ட தயாரிப்புகளை மேற்கொண்டார்கள்? மக்கள் ஆதரவைத் திரட்ட என்ன செய்தார்கள்? ஆகியவற்றை ஊன்றி கவனிக்கத் தவறினர். உலக அழகிப் போட்டி நடந்த நாளன்று, ளர்ச்சி களும், ஆர்ப்பாட்டங்களும், அவற்றை சமாளிப்பதற்கான அரசின் நடவடிக்கைகளும் பெருமளவு நடைபெற்றன. இந்த நிகழ்வுகள் பத்திரிகைகளையும், தொலைக்காட்சிகளையும் அடைத்துக் கொண்டு மக்களின் கவனத்தை ஈர்த்தன. இதனால் உலக அழகிப் போட்டி என்ற மாபெரும் நிகழ்வு, அதன் பிரம்மாண்டம், அதன் சிறப்பு போன்றவை எதிர் பார்த்த அளவிற்குப் பேசப்படவில்லை. பார்வையாளர்களும் குறைவாகத்தான் வந்தார்கள். அதை ஏற்பாடு செய்த அத்தனை நிறுவனங்களும் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தன. பிரச்சினைகளின் முழுப் பரிமாணத்தை தெரிந்து, அதற்கு தகுந்தாற்போல தீர்வுகள், வழிமுறைகள், செயல் பாடுகள் ஆகியவற்றைத் தீர்மானித்து செயல்படுத்தும் அணுகுமுறை இல்லாது போனால் என்ன ஆகும் என்பதற் கான உதாரணம் இது. vinodhan, 7010054619

பிரச்சினைகள் எங்கிருந்து துவங்குவது ? Read More »

ஜென் வழி வாழ்க்கை

Post Views: 392                                                                                                                                                        இவ்வளவுதான் வாழ்க்கையா? இதற் காகத்தான் இத்தனை சிரமங்களா?     இதற்காகத் தான் நான் இவ்வளவு உழைத்தேனா? எனக்கு மட்டும் ஏன் இத்தனை சிக்கல்கள்? எனக்கு மட்டும் ஏன் இத்தனை சங்கடங்கள்? நம் எல்லோரையும் அவ்வப்போது குடைந்து கொண்டிருக்கும் கேள்விகள் இவை. எத்தனை சம்பாதித்தாலும் போதவில்லை. நிறைய கனவுகள். நிறைய திட்டங்கள். புத்துணர்ச்சி இல்லை. உடலும் மனமும் சோர்ந்து போயிருக்கின்றன. உடல் ஆனால், சோர்வாவது பரவாயில்லை. மனச்சோர்வை என்ன செய்ய? ஜென் நமக்கு அறிமுகம் ஆகவேண்டிய இடம் இதுதான். நம் கையைப் பிடித்து இழுத்து அருகில் அமர வைத்து தோளில் கை போட்டு,அவ்வப்போது நம் கன்னத்தைத் தடவிக் கொடுத்து, குழந்தைகளுக்கு ஏ ஃபார் ஆப்பிள் சொல்லித் தருவதுபோல் வாழ்வியல் நெறிகளை கற்றுத் தருகிறது ஜென். எளிமையாக, மிக மிக எளிமையாக. எந்த தத்துவமாவது முதல் வாசிப்பில் நமக்கு இதுவரை புரிந்திருக்கிறதா? சத்தியமாகக் கிடையாது. அதிலும் ஆன்மிக நெடி வந்துவிட்டால் அவ்வளவு தான். ஆத்மா, அந்தர்த்மா, அப்பர் ஆத்மா என்று படுத்திஎடுத்துவிடுவார்கள். ஜென் ஒரு தத்துவம். ஆனால், புரியக்கூடிய தத்துவம். வாழ்வின் இன்பங்களை, சோகங்களை, வெற்றிகளை, தோல்விகளை, உயரங்களை, சரிவுகளை புரியவைக்கும் தத்துவம். ஜென் தத்துவத்தை சாறு பிழிந்தால் இப்படி வரும். நீ யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். உன் பதவி என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உன் வேலையை செய். ஒழுங்காக. ரசனையுடன், சிறு தவறும் இல்லாமல். போதும்.இதிலென்ன இருக்கிறது? எல்லோரும் வேலைதானே செய்து கொண்டிருக்கிறோம் நினைப்பவர்களுக்கு அடுத்த பாரா. அவரவர். என்றுஅவர் ஒரு ஜென் துறவி. சுலபத்தில் வாயில் நுழையாத ஏதோ ஒரு ஜப்பானிய பெயர். சொன்னாலும் நினைவில் வைத்துக் கொள்வது சிரமம். அவருடைய வேலை என்ன தெரியுமா? மடாலயத்தின் வாசலில் இருக்கும் ஆலமரத்திலிருந்து விழும் குப்பை, சத்தைகளை தூசி தும்பு இல்லாமல் அகற்றுவது. உங்கள் வேலை என்ன என்று அவரிடம் கேட்டுப் பாருங்கள்.தவம் செய்கிறேன் தம்பி என்று சொல்வார். அட, குப்பையை பெருக்குவதுதான் தவமா என்று ஆச்சரியத்துடன் கேட்டுப் பாருங்கள். சொல்வார். தம்பி, கண்களை மூடி நிஷ்டையில் ஆழ்ந்துவிடுவதுதான் தவம் என்று நீ நினைத்துக் கொண்டிருக் கிறாய். தவறு. என்னளவில் இதுதான் தவம்.இன்னும் கொஞ்சம் நெருங்கிப் போனால் அவர் சொல்வதன் பொருள் முழுவதுமாக, பிரமாண்டமாகப் புரியவரும். உன் பணி குப்பைகளை அகற்றுவது எனில், நீதான் ஆலமரம். நீதான் வழிப்பாதை. நீதான் உதிர்ந்த இலை, நீதான் சருகு நீதான் தூசு நீதான் மணல். நீதான் துடைப்பம் நீதான் சுத்தம்,உன்னை உன் வேலையில் கரைத்துக்கொள். நீதான் வேலை. இதுதான் மந்திரம். தேவையற்றதை அகற்றுங்கள். இது முதல் வேலை. தேவையில்லாததுஎது? குப்பைகள், எதுபோன்ற குப்பைகள்?பொறாமை, தோல்வி மனப்பான்மை, பயம், விரக்தி, மனஉளைச்சல், சந்தேகம். இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். நமக்கே தெரியும். நம்மிடம் மலிந்துள்ள குப்பைகள் என்னென்ன, அவை எப்போதெல்லாம் வெளிப்படும், எப்போதெல்லாம் நம்மை பூதம்போல் கடித்து சாப்பிடும் என்று.அவற்றை ஒவ்வொன்றாகக் களையவேண்டும்.சாமர்த்தியமாக. புத்தர் அவர் வாழ்ந்த காலத்தில் பல்வேறு எதிரிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தர்க்கம் செய்ய வேண்டியிருந்தது. புத்தர் மீது அவருடைய எதிரிகள் முன்வைத்த குற்றச்சாட்டு, அவர் மானுட குலத்தைக் கெடுக்கிறார், கடவுளை எதிர்க்கிறார், இந்து மதத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார் என்பதுதான்.சம்யுத நிகாயா என்னும் நூல் புத்தர் நிகழ்த்திய ஒரு சிறு உரையாடலை இப்படி பதிவு செய்திருக் கிறது. பரத்வாஜா: கவுதமா, உன் கருத்துக்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நீ வேண்டுமென்றே கலகம் செய்கிறாய். வேண்டுமென்றே எங்களை இழிவுபடுத்துகிறாய். எங்கள் நம்பிக்கைகளை சிதைக்கிறாய்.நீ சொல்வது அனைத்தும் பொய். உன் நோக்கம்தீங்கு விளைவிக்கக்கூடியது. புத்தர்: உன்னிடம் ஒரு கேள்வி கேட்கட்டுமா? பரத்வாஜா ம், கேள். புத்தர்: உன் வீட்டுக்கு விருந்தாளிகள் வருவதுண்டா? பரத்வாஜா: உண்டு புத்தர்: நண்பர்கள்? பரத்வாஜா: வருவதுண்டு. புத்தர்: அவர்களை நீ தக்கமுறையில் மரியாதை செலுத்தி வரவேற்பதுண்டா? பரத்வாஜா: நிச்சயமாக புத்தர்: நீ அளிக்கும் ஆகாரங்களை அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தால் என்ன செய்வாய்? பரத்வாஜா: அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான் என்று அனைத்தையும் நானே வைத்துக் கொள்வேன். புத்தர்: உன் குற்றச்சாட்டுகளை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அனைத்தையும் மறுக்கிறேன். ஆகவே,எல்லாவற்றையும் நீயே ஏற்றுக்கொள்.சுலபமாக பிரச்சினை முடிந்துவிட்டது இல்லையா?யை மட்டும் நான் செய்வேன். சிரத்தையாக. என் எதிரிகள் என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் நினைத்துக் நமக்கு வேண்டியது இந்தத் தெளிவுதான். என் வேலை கொள்ளட்டும். என்னை அயோக்கியன் என்று சொல்லிக் கொள்ளட்டும். என் வேலையில் குற்றம் கண்டுபிடித் துக் கொள்ளட்டும். என்னை ஏசட்டும். நிராகரிக்கட்டும். சபிக்கட்டும்.அத்தனையும் எனக்குக் குப்பைகள். அவற்றை நான் பொருட்படுத்த மாட்டேன். குப்பையைக் கொண்டு வருபவர்கள் குப்பைக்குச் சொந்தக்காரர்கள். குப்பையை வீசுபவர்கள் குப்பையின் சொந்தக்காரர்கள். ஒருவேளை, குப்பை, என் காலருகே விழுந்துகிடந்தால், நல்லதொரு துடைப்பத்தைக் கொண்டு வந்து அதை நான் சுத்தமாக்குவேன் vinodhan, 7010054619

ஜென் வழி வாழ்க்கை Read More »

HOW TO RECOGNIZE RUDRAKSHA?

Post Views: 215                                                                                                                                                                                                                               Test points to check original Rudraksha and be kept in view while testing them. Rudraksh is a tree of medium height and is found in Nepal, Asamand Shri Lanka. Its leaves are 3 to 6 inches long. White flowers are found on this tree. Its fruit known as Rudraksh is to one inch diameter and inside it is found Rudraksh. In English this tree is named as, “Utrasum bead tree” and in Latin it is called “Elaeocarpus Ganitrus Roxb.” 1. When rudraksh is put in a glass full of water will dip and will NOT float. In case it is made of wood or is infected with insect will float on the water. 2. In case a rippend rudraksh is closed in a fist and when taken near the ear and moved will emit a pleasant slow sound. 3. If a rudraksh is placed between two Copper Coins, it will move when pressed. 4. The rudraksh is round raised at places, hard and of rough surface. Each piece has naturally carved lines, which are called FACES of rudraksh. 5. In a natural rudraksh, you will find a shine and a greasiness which appears after its continuous use by wearing and using it as rosary. 6. A few rudraksh have eyes like that of a coconut and are near arrived lines. Three eyed Rudraksh is attributed to Lord SHIVA, which helps in early attainment of Siddhi. 7. Rudraksh has alway rough surface and not thorny. Thorny surfaced Rudraksh is artificial. 8. Rudraksh of smaller size is always held in high esteem than bigger size. Smaller size is more effective. 9. The natural rudraksh has no hole in it, these are made latter on. The piece, which has hole in a natural way is most auspicious. 10. In natural rudraksh, the lines are not equidistant, but in an artificial one, these are found carved at equidistant. vinodhan,

HOW TO RECOGNIZE RUDRAKSHA? Read More »

What Is a Akashic Records?

Post Views: 421               Akashic Records It was time to pray my prayer of desperation again. This time it went something like: “God, there has to be a way to access both knowledge and power that is simple and easy. No stuff to drag around—maybe just a prayer. Please help.” And I did not doubt that help was on the way. A few weeks later, I was on a panel presenting information about shamanism. Another woman was there to talk about the Akashic Records. I wasn’t completely certain what she was talking about—it was very esoteric—but there was something alluring about it, so I decided to take her two-day Beginning Akashic Records class. In it, she taught us how to open the Records by saying a specific prayer. When I followed her directions—bam! I felt a very distinct shift. And there it was, that sense again, the sense of being known and loved. It was not as overwhelming as my original experience, but I recognized it—and I felt that at long last I was home. What was especially compelling about this new experience was that it wasn’t sensational. There were no spectacular phenomena: no talking in funny voices, no eyes rolling up into the head—none of that. There was just a simple, subtle, yet discernible shift within me that enabled me to access the dimension of consciousness I had been seeking. Over the years, this sense of love has proven to be reliably there for me. Anytime I wish to enter this wonderful state, all I have to do is say the prayer. I began doing Akashic readings for my shamanic clients, and for the next two years I worked with both systems. I did readings for myself almost daily and practiced Akashic readings on anyone who would let me. I felt like I was being “taken” by the Light and moved in a different Direction.        Whether reading for myself or someone else, I got that sense I had been striving to find. And there was more: years of study were coming together for me. I had explored the writings of Joel S. Goldsmith and Alice Bailey, among others, and as a result I was mentally prepared for the next stage of my journey. The New Thought Churches, Religious Science, and Unity—all doors that I had opened previously—helped a great deal, too. Everything I had experienced and learned supported me in my new realm. And everything continues to support me! In 1995, Lisa and I moved to the Olympic Peninsula with our young son, Michael, believing that this would be our home for the rest of our lives. We loved it—spectacular beauty surrounded us in the quaint Victorian seaport town of Port Townsend. There on the edge of the map in a town of seven thousand people, my practice expanded. It was a place where people went to heal, so my work was embraced there. But adjusting to the move and raising a toddler were stressful for me. I felt blessed that my work was appreciated, but my client list was quickly growing unmanageable. I found myself seeing so many people for consultations each week that this became stressful, too. Finally, even though I loved it, doing so much of this work took its toll, and after a while I began to feel like I was falling into a thousand pieces. Something had to give. I turned to prayer once more: “God, please help me. Show me what to do here.” Then, a revelation. I suddenly understood that many of the people who came to me for Akashic Records consultations could be doing the work for themselves; there was no obvious reason for them not to learn how to read the Records on their own. Teaching people how to do the work for themselves and others became a clear solution to my dilemma. If my clients could learn to access their own Records, they would be able to help themselves develop their own spiritual authority. They could shift from relying on me to following their own spiritual guidance, which would enable them to develop and mature. Then they could just come to me when they were stuck or in need of some outside support to move them along in their journey. My goal was and always has been to assist hers in their quest—to help them find their own way rather than finding it for them (which, in truth, I cannot do anyway). I had never sought to foster an unnecessary dependence upon me, and I was relieved to have come upon this solution. I believe that on a spiritual quest there are distances we must travel on our own, and our challenge is to learn how to do that. Then there are other times when it’s best to seek the counsel of others. Along the way, through trial and error, we learn when to go it alone and when to get assistance. And we learn that, ultimately, we are here to help one another. So that was it: my prayer had been answered, and I had my solution. Teaching my clients to read their own Akashic Records was a way to empower them to be self-supporting. I’d then be free to focus on working with others who needed assistance from someone else. At the same time, I could delight in seeing my Akashic students grow into finding their own spiritual authority. It was perfect. And  it would have to wait.

What Is a Akashic Records? Read More »

குழந்தை பெற்றேடுப்பதற்கான தகுதிகளும் மனநிலையும்

Post Views: 370                                                                                                                                                                                                                  சமூகத்தில் என்னதான் கல்வி வசதி                        இன்றைய சமூகத்தில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு காரணமாக விளங்குவது குழந்தைகளை நாளுக்குநாள் பெற்று தள்ளுவது ஆகும். அதுவும் இந்தியாவில் சொல்ல வேண்டியதே இல்லை ஜனத்தொகையின் அளவு அதிகமாக உள்ளது. ஏன் மக்கள் தொகை இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே போகிறது.ஆனால் இந்தியா எதிர்பாராதவிதமாக எவ்வித முன்னேற்ற வளர்ச்சியும் சீனாவிற்கு ஈடாகவும் அமெரிக்கா விற்கு ஈடாகவும் வரமுடியவில்லை. ஆனால் ஜனத்தொகை பெருக்கம் மட்டும் நடந்து கொண்டே இருக்கிறது. திருமணம் ஆகிறது உடனே குழந்தையைப் பெற்றெடுப்பது திருமணம் ஆகி இருவருக்குமிடையே ஒரு சரியான புரிதல்கள் வருவதற்கு முன்னாடியே குழந்தை என்கிற ஒன்றை முட்டுக்கட்டையாக மனிதன் பெற்றெடுக்கிறான். பிறகு அக்குழந்தையை வளர்ப்பும் வேலையில் ஈடுபடுகின்றனர் ஆனால் கணவன்-மனைவி தங்களின் வாழ்க்கையை முழுமையாக வாழ்கிறார்களா என்றால் 100% அவர்களின் வாழ்க்கையை வாழாமல் போகிறார்கள். இந்த சமூகத்தில் குழந்தை இல்லை என்றால் உடனே பெரியவர்கள் தம்பதிகளை தவறாக கருதுகின்றனர் அதாவது பெண்ணுக்கு மலட்டுத்தன்மை யாகவும் ஆணுக்கு ஆண்மை குறைவாகவும் சமூகம் நம்மை கூறுகிறது. ஒன்று பட பேசுவார்கள் இங்குதான் குழந்தை இல்லாதவர்களுக்கு ஒருவித கஷ்டம் ஏற்படுகிறது ஏனென்றால் நாம் சமூகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம் அல்லவா என்னதான் குழந்தை நீங்கள் இந்த சமூகத்தில் பெற்றெடுத்தாளும் சமூக சீர்கேட்டிற்கு இணையாகவே குழந்தை வளர்கிறது இதற்கான காரணம் அது ஆபாசம் மற்றும் ஆசை என்கிற ஒன்றும் பிறகு காமத்தை மிக அசிங்கமாக விவரிக்கும் இந்த சமூகம்தான் காரணம். இதனால் தேவையற்ற ஜனத்தொகை அதிகரித்து இயற்கைப் பேரழிவை சந்திக்க நேரிடுகிறது ஏனென்றால் அனைவருக்கும் ஆசை என்கிற ஒன்று உள்ளது தாய் தந்தைக்கு மிகுந்த பக்குவம் வேண்டும் அப்பேற்பட்ட பக்குவம் இருந்தால் குழந்தையைப் பெற்று வளர்க்க தெரியவேண்டும் அதே சமூகத்தில் அவ்வளவு நன்மைகளும் அதிகம் உள்ளது. ஆனால் அது எல்லாம் மக்களுக்கு தெரிவதில்லை அதை குறித்த விழிப்புணர்வும் இல்லை. ஏனென்றால் சமூகம் நம்மை அதிக தீய வழிகளிலேயே நம் மனநிலையை தயார் செய்து கொண்டிருக்கிறது அப்பேர்ப்பட்ட சமூகத்தில் நாம் குழந்தையை எப்படி வளர்க்கப் போகிறோம் நாம் படுகின்ற கஷ்டத்தை வரும் சந்ததிக்கு இன்னும் மோசமாக இருக்கும் இயற்கை பேரழிவு என்றால் பஞ்சபூதங்களினாலும் மற்றும் இயற்கைப் பேரழிவு ஆனது மனித மனநிலையை கொண்டு நடத்தப்படுகிறது.          நீங்கள் குழந்தையைப் பெற்றெடுத்தாள் உங்கள் மனப்பதிவை மற்றும் சமூகத்தில் ஈடுபடும்போது அதற்கான வழியை தேர்ந்தெடுத்து அது செயல்படுகிறது சரி ஏன் இந்தியாவில் இவ்வளவு மக்கள் தொகையை வைத்து நம் நாடு இன்னும் முன்னேறவில்லை அதேபோன்று மக்கள் தொகை மிகக் குறைவாக உள்ள வெளிநாடுகள் டாப்பாக தான் இருக்கிறது ஏனென்றால் அவர்களின் சமூகம் மிக சிறப்பாக செயல்படுகிறது அங்கு கல்வி முறை இந்த குழந்தையின் அறிவை முழுமையாக பயன்படுத்த செய்கிறது ஆனால் இங்கு அப்படியா குழந்தையைப் பெற்று அதனை ஒரு தொழிலாளியாக தான் நாம் வேலைக்கு அனுப்புகிறோம். நாம் சமூகத்தில் என்னதான் கல்வி வசதி இருந்தாலும் நம்முடைய அறிவு மற்றவரிடம் வேலை செய்யும் அளவிற்கு தான் இருக்கிறது இருக்கின்றது என்று சொல்லக்கூடாது நம்மை மாற்றி விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். நாம் ஏன் தேவையில்லாமல் குழந்தை பெற்றுக் கொள்கிறோம் என்றால் ஆசைக்காகவும் சமூகத்திற்காகவும் பிறகு நம்முடைய சுயநலத்திற்காகவும் அரைகுறை ஆபாசமாகவும் உடலுறவு போன்ற செயல்களினால் நம் குழந்தையை பெற்று எடுக்கிறோம். அப்படிப் பற்றி எடுக்கப்பட்ட குழந்தையானது பின்னால் நோயினால் அவதிப் படுகிறது இனிமேல் பிறக்கும் குழந்தை நோயுடன் பிறக்கும் அல்லது வளர்வதன் மூலம் நோயை உருவாக்கும் ஏனென்றால் உணவு கட்டுப்பாடு ஒன்று இருக்காது .அதிக ரசாயனங்கள் கலந்த உணவு அதிக புழக்கத்தில் வந்துவிட்டது.           இந்த உணவை நாம் சாப்பிடுகிறோம் உடலளவில் பெரிதாக ஒன்றும் பலன் இருக்காது அப்போது நாமே இப்படி இருக்கிறோம் நோய் உடனோ அல்லது மன பாதிப்பில் இருக்கிறோம். இந்நிலையில் குழந்தை பெற்றால் குழந்தை எப்படி ஆரோக்கியமாக பிறக்கும் பிறகு எப்படி அது நோயற்ற ஒன்றாக வே வளரும். பிறகு குழந்தை இல்லாதவர்கள் படும் பாடு இருக்கே ரொம்ப கஷ்டம் எப்படி உடலளவில் ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ பாதிப்பு இருந்தால் எப்படி குழந்தை பிறக்கும் சிந்தித்துப் பாருங்கள் குழந்தை இல்லை என்றால் பரவாயில்லை நீங்கள் உங்களின் வாழ்க்கையை முழுமையாக வாழ ஆரம்பியுங்கள் இன்பம் துன்பம் என இவற்றை அறிந்து வாழ்க்கை முழுமையாக உங்கள் விருப்பத்திற்கு ஏற்றார்போல் உங்கள் ஆசைகளை தீர்த்துக் கொள்ளுங்கள் குழந்தை இருந்தால் பெருசா எதுவும் இருக்காது கொஞ்சம் காலம் தான் நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள் அவ்வளவுதான் அந்த வாழ்க்கையை விட்டு புதுமையான வாழ்வை மேற்கொள்ளுங்கள்.       உலகிலேயே சொர்க்கத்தை அனுபவிக்கும் நாடாக நெதர்லாந்து இருக்கிறது அங்கு அவர்கள் அவர்களின் வாழ்க்கையை முழுமையாக வாழ்வார்கள் 40வயதிற்குமேல் தான் திருமணமே செய்து கொள்வார்கள் பிறகு குழந்தையை பெற்றுக் கொள்வார்கள் பிறந்த குழந்தை வளர்ந்தவுடன் அதற்கு தேவையான பணத்தை வைத்துவிட்டு அவர்கள் எப்போதும் போல் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் குழந்தை தானாகவே அதுவும் அதே போல் வளர்ந்து உலக இன்பங்களை அனுபவித்து 40 வயதிற்கு மேல் திருமணம் செய்யும் ஆகவே அவர்களின் வாழ்வை முழுமையாக சந்தோஷமாக வாழும் நாடு நெதர்லாந்து இன்றைக்கும் அந்த நாடு அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது. சமூகத்தைப் பற்றி கவலைப் படாதீர்கள் இந்த சமூகம் நம்மை கஷ்டப்படுத்தும் நம்மைக் கேலி செய்வதற்கும் தான் உதவும் சமூகத்தைப் பற்றி எண்ணாதீர்கள் ஒரு சில கோட்பாடுகளுக்கு மட்டும் நாம் சமூகத்தை பின்பற்றி அதன் மேம்பாட்டினை நாம் வளர்க்க வேண்டும்.ஆனால் நம்முடைய சொந்த விஷயங்களை பற்றி சமூகம் பேசுவதை கண்டு கொள்ளக் கூடாது. சமூகத்தை நீங்கள் மறந்து விட்டால் வாழ்க்கையில் இன்பம் கிடைக்கும் இதை மேலோட்டமாக படித்தால் தவறாக கருதுவீர்கள் சிந்தித்துப் பாருங்கள்.                                                                                                                                       குழந்தை பெற்றெப்பதற்கான தகுதிகள்….1. முதலில் குழந்தையை பெற்றெடுப்பதற்கு உங்களின் உடல் நிலையை எவ்வித நோய் நொடி இன்றி இருக்க வேண்டும் அதாவது நோய் என்றால் உடலில் மட்டுமல்லாமல் மனதளவிலும் நோய் இருக்கக்கூடாது அதாவது உடலளவில் இல்லாமல் மனதளவிலும் நோய் இருந்தால் அதுவும் நோய் தான் எனவே மனிதன் முழுமை அடைய மாட்டான் உடலாலும் உள்ளத்தாலும் நோயின்றி இருக்க வேண்டும் ஆண் பெண் இருபாலரும். 2. பொருளாதார அளவில் நீங்கள் சிறந்தவராக இருக்க வேண்டும் அதாவது தேவையை விட கொஞ்சம் அதிகமாக இருந்தால் போதும் அப்போதுதான் அவள் சிறந்ததாக இருக்கும் ஏனெனில் குழந்தையை வளர்க்கப் போகிறீர்கள் அல்லவா அதற்கு வேண்டியதை செய்ய செல்வம் தேவை.இல்லை என்றால் குழந்தை குமுறல்களை உங்களால் தாங்க முடியாது. மற்றவர்கள் போல் அதுவும் இருக்க வேண்டும் என ஆசைப்படும் பொருளாதார அளவிலும் எங்கள் சிறந்தவராக இருக்க வேண்டும். 3. நீங்கள் ஒரு சிறந்த அறிவு தெளிவு உடையவராக இருக்க வேண்டும் ஏனென்றால் ஒரு குழந்தையின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் அளவிற்கு நீங்கள் தெளிவு உடையவராக இருக்க வேண்டும். 4. நீங்கள் ஒரு தந்தையாக மட்டுமில்லாமல் ஒரு ஆசானாகவும் நண்பனாகவும் குழந்தையின் மனநிலையை புரிந்து கொள்பவராகவும் பிறகு நீங்கள் அதிக பக்குவத்தில் இருக்க வேண்டும் இப்போது உள்ள பெற்றோர்கள் சரியான முறையில் வளர்ந்து வர்களாக இருக்க மாட்டார்கள். அதிக மூடநம்பிக்கைகளையும் தவறான புரிதல்களிலும் தவறான வழிமுறைகளிலும் தீய குணங்கள் கொண்டவராகவும் இருப்பதால் அதே ரத்தம் குழந்தைக்கும் அப்படியே கடத்தப்படுகிறது அதனால்தான் நீங்கள் ஒரு சிறந்த குணம் உடையவராக இருக்க வேண்டும். 5. முக்கியமாக இன்றைய கால கட்டத்தில் நீங்கள் குழந்தைகளுக்கு நல்ல குணங்களை அவர்களுக்கு கற்பிக்க வேண்டும். பிறகு மிக முக்கியமாக காமத்தை எப்படி கையாளுவது என்கிற மிக நுண்ணிய மான நுணுக்கங்களை சொல்லித்தர வேண்டும் ஏனென்றால் இன்றைய உலகில் காமத்தால் தான் இவ்வளவு மக்கள் தொகையும் சிலர் சீரழிவுகளும் பெரும்பாலும் நடக்கிறது. அதை எடுத்துச் சொல்லும் அளவிற்கு நீங்கள் அறிவு உடையவராகவும் பக்கம் உடையவராகவும் இருக்க வேண்டும் மனநிலை…. நான் சொல்லுகிற மனநிலையை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இதை மாற்றிக் கொள்ள வேண்டும் அல்லது இந்த மனநிலைக்கு நீங்கள் வரவேண்டும். 1. முதலில் குழந்தையை ஒரு ஆசையோடு தான்

குழந்தை பெற்றேடுப்பதற்கான தகுதிகளும் மனநிலையும் Read More »

அரசு வேலை மற்றும் வேலை கிடைக்க அற்புத பரிகாரங்கள்

Post Views: 368 அரசு வேலை மற்றும் வேலை கிடைக்கு வேண்டும் என்ற ஆசை பலருக்கு உண்டு அந்த அசை நிறை வேண்டும் என்றால் முதலில் உழைக்க வேண்டும் அந்த உழைப்பின் மூலம் கிடைக்கும் அது மட்டும் அல்லாமல் இந்த தாந்திரீக முறை படி செய்தாலும் கிடைக்கும் கொஞ்சம் உழைப்பும் தேவை இதை எப்படி செய்வது என்று பார்ப்போம் (1) அனுமனை, பைரவரை வழிபடுங்கள். சுந்தர காண்ட பாராயணம் செய்யலாம். அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடலாம். பைரவருக்கு 27 மிளகுகளை கருப்பு துணியில் கட்டி நல்லெண்ணை அல்லது இலுப்பெண்ணை விட்டு விளக்கேற்றலாம். சனிக்கிழமை காலை 6-7 அல்லது இரவு 8-9 செய்வது சிறப்பு. (2) தினசரி காலை சூரியனை சூரியன் உதிக்கும் நேரம் பார்த்து வழிப்பட்டு வரவும். (3) 14 முக ருத்திராட்சம் அணியலாம். (4) சனிக்கிழமை அன்று ஊர வைத்த எள்ளை மதியம் 1-2 க்குள் எருமைக்கு வழங்கி வரவும். (5) அரச மரத்திற்க்கு தொடர்ந்து 43 நாட்கள் வேரில் நீர் விட்டு வரவும். அரச மரம் கடவுள் ரூபம். தொடக்கூடாது. மேலும் அரச மரம் அருகில் அசுததும் செய்வது, துப்புவது போன்றவை பெரும் கேடாய் கண்டிப்பாக விளைவிக்கும்.முயற்சி செய்து பாருங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவர்  Vinodhan,

அரசு வேலை மற்றும் வேலை கிடைக்க அற்புத பரிகாரங்கள் Read More »

Shopping Cart