Author name: Vinodhan

யார் உன்னைப் புறக்கணித்தால் என்ன?

Post Views: 427                  இந்தப் பிரபஞ்சம் எப்போதும் உன்னைத் தன் அன்பால், கருணையால் அர வணைத்துக் கொண்டுள்ளது சூரியனோ, சந்திரனோ என்றாவது உன்னைப் புறக்கணித்துத் தன் ஒளியை உனக்குத்தர மறுத்ததுண்டா..??? இயற்கை உன்னை ஒருபோதும் புறக்கணிப்பதில்லை உன் மீது எல்லையில்லா கருணை கொண்டிருக்கும் இயற்கையை மறந்து நீ மனிதர்களின் புறக்கணிப்பு குறித்து கவலை கொள்கிறாய் உண்மையில் புறக்கணிப்பு குறித்துச் சற்று ஆராய்ந்து பாரேன் அது மனதின் வேலை உண்மையில் எத்தனையோ மனிதர்கள் உன்னைப் புறக்கணிப்பதுண்டு நீயும் எத்தனையோ மனிதர்களைப் புறக்கணிப்பதுண்டு எல்லாப் புறக்கணிப்புகளும் உனக்கு வலியைத் தருவதில்லை சில மனிதர்களை மனம் கூழாங்கற்களாக நினைக்கிறது. சில மனிதர்களை மனம் விலையுயர்ந்த வைரம் போல் மிக உயர்வாக நினைக்கிறது அவர்களின் அன்பிற்கும், அங்கீகாரத்திற்குமாய் ஏங்குகிறது கூழாங்கற்களின் புறக்கணிப்பு வலியைத் தருவதில்லை வைரத்தின் புறக்கணிப்பு வலியைத் தருகிறது இது மனதின் “உயர்வுதாழ்வு மனப்பான்மை” என்ற குணத்தினால் விளை வது அந்த மனப்பான்மையினால் பிறரை உயர்வாகக் கருதும்போது உன்னை நீயே தாழ்வாகக் கருதுகிறாய் பிறரைத் தாழ்வாகக் கருதும்போது உன்னை நீயே உயர்வாகக் கருதிக் கொள்கிறாய் உன்னை நீ தாழ்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பு வலியைத் தருகிறது உன்னை உயர்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பை வலியில்லாமல் உன்னால் கடந்து செல்ல முடிகிறது இவையனைத்தும் உன் மனதின் கற்பனையான நிலைப்பாடுகளே யன்றி உண்மையில் இயற்கையில் அத்தகைய உயர்வுதாழ்வு ஏதுமில்லை சிறு புல்லும், பெருஞ்சூரியனும் இயற்கையில் சமமாகவே உள்ளன ஆக இப்போது உனக்குத் தேவை சமநோக்குப் பார்வை தியானம் செய் இயற்கையை நேசி வலிகள் மறையும் பாராட்டுக்காக ஏங்கும் நேரத்தில் நீ எத்தனை பேரை பாராட்ட மறந்திருக்கிறாய் என்று எண்ணி பார் இது இயல்பே என எண்ணு வேகமாக சென்று கொண்டு இருக்கும் போது பார்க்கும் இயற்கை அழகை நின்று பார்க்க நேரம் இருப்பதில்லை அதற்காக இயற்கை தம் அழகை குறைத்து கொள்வதில்லை அது இயல்பாய் இருக்கிறது அது போல் இயல்பாய் கடமையைச் செய்- ஓஷோ Vinodhan,

யார் உன்னைப் புறக்கணித்தால் என்ன? Read More »

அரோஹரா என்ற வார்த்தை தோன்றிய வரலாறு !

Post Views: 448          அரோஹரா’ அல்லது ‘அரோகரா’ என்பது ‘அர ஹரோ ஹரா’ என்ற சொற்களின் கருக்கம். இதற்கான பொருள், ‘இறைவனே, துன்பங்களை நீக்கி எங்களுக்கு நற்கதியை அருள்வாயாக’ என்பதாகும். முன்பு, சைவ சமயத்தினர் இதனைச் சொல்வது வழக்கமாக இருந்தது. திருஞானசம்பந்தர் ஒருமுறை அமர்ந்து பயணம் செய்தபோது, பல்லக்கில் அவரைச் சுமந்துகொண்டு வந்தவர்கள் ‘ஏலே லோ ஏலே லோ’ என்று களைப்பைக் குறைப்பதற்காக பாடிக்கொண்டு வந்தனர். இதைச் செவிமடுத்த திருஞானசம்பந்தர், பொருளற்ற ஒன்றைச் சொல்வதைவிட பொருளோடு ஒன்றைச் சொன்னால் நல்லது என்று, அர ஹரோ ஹரா’ என்பதைக் கற்றுக்கொடுத்தார். அதன் பிறகு ‘அர ஹரோ ஹரா’ என்று சொல்வது வழக்கமாயிற்று. இன்னும் சொல்லப் போனால் அரோகரா என்பதை, அர+ஓ+ஹரா என பிரிக்கலாம். அதாவது அரண், ஹரண் இரண்டுமே சிவனின் பெயரை குறிப்பதாகும் இருந்தாலும் அவர் புதல்வர் மீது கொண்டுள்ள பற்றற்ற ஆசையினால் முருகனடியார்கள், முருகனை வணக்கும்போது அரோகரா என்கின்றனர். காலப்போக்கில் சைவர்கள் இதனைச் சொல்லும் பழக்கம் குறைந்தது. ஆனால், கௌமாரர்கள் (முருகனடியார்கள்) ‘வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா’ என்றுச் சொல்லி வந்ததால் இச்சொற்கள் முருகனோடு இணைந்துவிட்டன! பக்தர்கள் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்றுச் சொல்வது’ வெற்றி வேலைக் கொண்ட முருகனே, எங்கள் வாழ்க்கையில் இருக்கும் துன்பங்களைப் போக்கி, நற்கதியை அருள்வாயாக’ என்று உரிமையோடு முறையிடுவதாகும். Vinodhan,  

அரோஹரா என்ற வார்த்தை தோன்றிய வரலாறு ! Read More »

கோமதி சக்கரத்தின் இவ்வளவு நன்மைகளா?

Post Views: 1,346                                      கோமதி சக்கரம் உள்ள இடத்தில் கூடுதல் சக்தி பெறுகிறது. அதனால் வாஸ்து குறைகள் யாவும் பாதிப்பதில்லை . தொழில் செய்யும் இடத்தில் ஒரு சிவப்பு துணியில் கோமதி சக்கரம் 13ஐ கட்டி ஈசான்ய பாகத்தில் வைத்தால் அல்லது கல்லா பெட்டியில் வைத்தால் தொழில் பணம் பெருகும்.கோமதி சக்கரத்தை, நாக சக்கர மோதிரமாக செய்து, சர்ப்ப தோஷம் விலக பயன்படுத்துகிறார்கள். அதாவது அதன் சுழியானது பாம்பு தனது உடலை சுற்றி வைத்திருப்பது போன்ற தோற்றத்தில் இருப்பது கவனிக்கத்தக்கது. ராகு தசையால் பாதிக்கப்பட்டவர்கள் கோமதி சக்கரத்துடன் கோமேதக கல்லையும் சேர்த்து வைத்து வீட்டில் வழிபட்டு வரலாம். ஒரு மனிதருடைய சுழி என்பது, அவருடைய தலை விதியை குறிப்பதற்காக சொல்லப்படுவதாகும். அத்தகைய சுழியானது பல உயிர்களிலும் இறைவனால்  அருளப்பட்டதாக அமைந்திருக்கிறது கோமதி சக்கரத்தின் நன்மைகள்  சூரியனுக்கு கீழுள்ள பூமியில் எவ்வள வோ அதிசயங்கள் நமக்கு எட்டாமல் இன்று வரையில் இருக்கின்றனஎன்பதை, நமது அன்றாட வாழ்விலும் அறிவியல் ஆய்வுகளிலும் பார்த்து வருகிறோம். ‘காரணமின்றி எவ்விதமான துன்பங்களையும் மனித குலம் அடைய வேண்டாம்’ என்றுதான் அனைத்து மகான்களும் விரும்பினார்கள். அதற்கேற்ப பல்வேறு வழி பாடுகளையும், இறையருளை பெற்று தரக்கூடிய சாதனங்களையும் அடையாளம் காட்டியதோடு, அவற்றை எவ்வாறு தக்க வழிகளில் பயன்படுத்துவது என்பதையும் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். அத்தகைய பொருட்களில் கோமதி சக்கரம் என்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது. தற்காலத்தில் பல துறைகளை சார்ந்த பிரபலங்களும் ‘டாலிஸ்மன்’ எனப்படும் ‘டாலர்’ வடிவத்தில் கோமதி சக்கரத்தை அணிந்து பயன் பெற்று வருகிறார்கள். இந்த அற்புத கோமதி சக்கரம் பற்றி நமது  வாசகர்களுக்கு விரிவாக தொகுத்துள்ளோம். ஆன்மிக வளங்களை தாங்கி நிற்கக்கூடிய பொருட்களில், நம்மால் அதிகம் அறியப்படாத பொருளாக ‘கோமதி சக்கரம்’ இருக்கிறது. இது சங்கு போன்ற ஒரு வகை சிறிய கல் ஆகும். குஜராத் மாநிலம் துவாரகாவில் உள்ள கோமதி நதியில் அதிகமாக கிடைப்பதால், அந்தப் பெயர் வந்து விட்டது. வட மாநிலங்களில் பிரபலமாக உள்ள ஸ்ரீமகாலட்சுமி அம்சம் பொருந்திய இந்த வகைக் கல், தென் மாநிலங்களில் அதிகம் அறியப்படாமல் இருப்பதற்கு காரணம், அதனை ரகசியமாக பலரும் பயன்படுத்தி வந்ததுதான். பூஜை அறையில் வைப்பதோடு, மோதிர வடிவத்திலும், கழுத்தில் அணியும் சங்கிலி வடிவிலும் இந்த கோமதி ராமபிரான், ஆஞ்சநே சக்கரத்தைப் பயன்படுத்தலாம். திருமகளின் அருளைஎளிதாக பெற்றுத்தரும் பொருட் களில் ஒன்றாக இருக்கும் கோமதி சக்கரம் பற்றிய பல்வேறு தகவல்களை இங்கே காணலாம். ராமர் கணையாழியர் மூலம் சீதாதேவிக்குதன்னை அடையாளம் காட்ட கொடுத்ததுரகுவம்ச கணையாழி ஆகும்.அதில் கோமதி சக்கரம் பதிக்கப்பட் டிருந் ததாக புராணங்கள் கூறுகின்றன. மேலும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குவது லக்னோவில் உள்ள நைமிசாரண்யம். இங்கு பெருமாளின் சக்ராயுதம்உருண்டு www.vinodhan.com ஓடி, தவம் செய்ய சிறந்த இடத்தை முனிவர்களுக்கு காட்டியது. அவ்வாறு சக்ராயுதம் உருண்டு ஓடியபோது, அங்கிருந்த ஆற்றில் சக்ராயுதம் பட்டு தெறித்த நீர்த்துளிகள் தான், கோமதி சக்கரமாக மாறியதாக ஐதீகம். கோமதி சக்கர கல்லின் வேறு பெயர்கள் துவாரகா கல், விஷ்ணு சக்கர கல், நாராயண கல், திருவலஞ்சுழி கல் ஆகியனவாகும் அதில் கோமதி சக்கரம் பதிக்கப்பட் டிருந் ததாக புராணங்கள் கூறுகின்றன. மேலும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குவது லக்னோவில் உள்ள நைமிசாரண்யம். இங்கு பெருமாளின் சக்ராயுதம்உருண்டு  ஓடி, தவம் செய்ய சிறந்த இடத்தை முனிவர்களுக்கு காட்டியது. அவ்வாறு சக்ராயுதம் உருண்டு ஓடியபோது, அங்கிருந்த ஆற்றில் சக்ராயுதம் பட்டு தெறித்த நீர்த்துளிகள் தான், கோமதி சக்கரமாக மாறியதாக ஐதீகம். கோமதி சக்கர கல்லின் வேறு பெயர்கள் துவாரகா கல், விஷ்ணு சக்கர கல், நாராயண கல், திருவலஞ்சுழி கல் ஆகியனவாகும் அவரவருக்கு உரிய நட்சத்திரத்திற்குரிய பாகத்தைஅறிந்து அந்தப் பகுதியை தொட்டோ அல்லது மனதில் நினைத்தோ தெய்வத்தை வழி படுவதன் மூலமாக, பூரண அருளை பெற இயலும் என்பது ரகசிய பூஜை வழிமுறையாக இருந்து வருகிறது. மேலும் அவ்வாறு வழிபடும் போது, கோமதி சக்கரமானது நம்முடன் இருக்கும் பட்சத்தில் லட்சுமி கடாட்சம் நன்றாக கிடைக்கும் என்பது நம்பிக்கை. நட்சத்திரங்களுக்குரிய பாகங்களை கீழே காணலாம்.                   அசுவினி, பரணி, கிருத்திகை நெற்றி. ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை முகப்பகுதி. புனர்பூசம், பூசம் இரு தோள்கள். ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், அஸ்தம்மார்பு பகுதி.சித்திரை வயிற்று பகுதி.சுவாதி, விசாகம் புஜங்கள். அனுசம் உடலின் மைய பகுதி.கேட்டை, மூலம் இரண்டு கைகள். பூராடம், உத்திராடம் இரண்டு தொடைகள்.திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி கால் பாதங்கள்.     கோமதி சக்கரத்தை வணங்குவதன் வாயி லாக அயோத்தி, மதுரா, ஹரித்துவார், காசி, காஞ்சீபுரம், அவந்திகா எனும் உஜ்ஜையினி, துவாரகை ஆகிய முக்தி தரும் 7 தலங்களை வணங்கிய பலன் கிடைக்கும். ஸ்ரீகிருஷ்ணர், கோமதி சக்கரத்தின் மீது அமைந்த தர்ம சபையில் வீற்றிருந்து ஆட்சி செய்து வந்தார் என்கிறது புராணம். சொர்க்க துவாரம், மோட்ச துவாரம் என்ற இடத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இந்த கல்லை விஷ்வகர்மா மூலமாக உருவாக்கி துவாரகை மக்களின் சங்கடங்களை தீர்க்க அருளியிருக்கிறார். பிள்ளையார் சுழி கோமதி ஆறு, சரயு நதி ஆகிய இரு நதி களும் சேரும் இடத்தை, இரு பாம்புகள் கூடும் இடம் என்று கூறுகிறார்கள். லக்னோவில் கோமதி நதியும், அயோத்தியில் சரயு நதியும் உருவாகிறது. இவ்விரு நதிகளிலும் அபூர்வமான கோமதி சக்கரங்கள் கிடைக்கின்றன. ஸ்ரீவிநாயக பெருமானோடும், நாக தேவதையோடும் தொடர்புள்ளதாக கோமதி சக்கரம் கருதப்படுகிறது. அதாவது எந்தச் செயலையும் தொடங்குவதற்கு முன்னர் பிள்ளையார் சுழி போடுவது வழக்கம். பிள்ளையார் சுழியின் இன்னொரு பெயர் வலப்புற சுழி அமையப் பெற்ற கோமதி சக்க ‘கோமதி திருவலஞ்சுழி’ எனப்படும். இதன் நாம் எந்த தெய்வத்தை வணங்கினாலும், நமது நட்சத்திரத்திற்குரிய பாகத்தை மனதில் கொண்டு, அந்த பாகம் எதுவோ அப்பகுதியை மனதால் நினைத்தோ அல்லது தொட்டோ வணங்க வேண்டும். அதன் வாயிலாக நமது வேண்டுதல்கள் அதிசயிக்க தக்க விதத்தில் நிறைவேறும் என்பது நம்பிக்கை. கோமதி சக்கரத்தின் சிறப்பு ரத்தை அனைவரும், எவ்வித பாகுபாடும் இல்லாமல் வழிபாடு செய்யலாம். கோமதி சக்கரமானது பூஜையில் வைக் கப்படும்போது. நிமிர்ந்த நிலையில் வைக் கப்படவேண்டும். அதிலுள்ள சுழியானது மேல் நோக்கியவாறு இருக்க வேண்டும். முக்கியமாக சிவப்பு பட்டுத்துணியில் வைத்து அதை ஒரு வெள்ளி அல்லது செம்பு தட்டில் வைக்கவேண்டும்.வில்வ இலையானது காய்ந்துவிட்டாலும், ஆறுமாதங்கள் வரையில் பலன்தரும். ஆனால் கோமதி சக்கரம் எவ்வளவுநாட்கள் ஆனாலும், தவறாது பலன் அளிக்கக்கூடி யது. இன்றைக்கும் வட மாநிலங்களில்உள்ள பெரியவர்கள், ஒருவரை ஆசீர்வதிக்கும்போது அவர்களது தலைப்பகுதியில் கோமதி சக்க ரத்தை வைத்து ஆசீர்வதிப்பது வழக்கம். கோமதி சக்கரத்தை விலைக்கு வாங்குவதை காட்டிலும், பெரியோர்களிடமிருந்தோ அல்லது உறவினர்களிடமிருந்தோ அன்பளிப்பாக பெறுவதே சிறப்பானது. விலைக்கு வாங்குவதாக இருந்தாலும் நல்ல நாளாக  பார்த்து வாங்குவது சிறப் பைத் தரும். மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் கொள் ளும் தொடர்புகள் மூலம், அவரவருக்கு தக்கவாறு உயர்வையோ அல்லது தாழ் வையோ அடைகிறார்கள். எழுதிச் செல்லும் விதியின் கைகள், யாரை யாரோடு சந்திக்க வைக்கிறது என்பதை மனிதர்களால் நிர்ணயம் செய்ய முடிவதில்லை. விதியின் தொடர்பு இல்லாமல் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள முடிவதில்லை. ஒருவ ரோடு கொள்ளும் தொடர்பின் வாயிலாக வாழ்வை சிறப்பாக அமைத்து கொள்ள வலஞ்சுழி அமைப்பு கொண்ட கோமதி சக்கரம் உதவுகிறது. ஒரு மனிதருடைய சுழி என்பது, அவருடைய தலை விதியை குறிப்பதற்காக சொல்லப் படுவதாகும். அத்தகைய சுழியா னது பல உயிர்களிலும் இறைவனால் அருளப்பட்டதாக அமைந்திருக்கிறது.மனித உடலில் அவை, கைகள், கால்கள், தலை உச்சிப்பகுதி, முன் நெற்றி, ஆகிய வற்றில் அமைந்திருக்கும். நம் முடைய காதுகளின் அமைப்பும் வலஞ் சுழியாக அமைந்திருப்பதை காணலாம். எந்த ஒரு தெய்வத்தையும் மூன்றுமுறை சுற்றி வலம் வருவது ‘கோமதி சுற்று’ எனப்படும். இப்படி உலக இயக்கத்தோடு இணைந்து செயல் படுவதால், கோமதி சக்கரம் மனதின் எண்ணங்களை வலிமை பெறச் செய் கின்றன. கோமாதா என்று போற்றப்படும் காமதேனு வின் அம்சம், கோமதி சக்கரத்தில் உள்ளது. எனவே நமது விருப்பங்கள் நிறைவேறக்கூடிய வாய்ப்புகள் தாமாகவே உருவாகும். வலமாக அமைந்த சுழிகள், பசுவின் கண்கள், முதுகு, கால் குளம் புகள், வாலின் மேல் பகுதி, நெற்றி, கழுத்து, அடிவயிறு ஆகிய பகுதிகளில் இருக்கும். காமதேனு என அழைக்கப்படும் பசுவின் சகல சுழிகளும், ஸ்ரீஹரியால் உருவாக்கப்பட்டதால் விசேஷமான அர்த் தம் பெற்றவையாக இருக்கின்றன. கோமதி சக்கரத்தை, நாக சக்கர மோதிர மாக செய்து, சர்ப்ப தோஷம் விலக பயன்படுத்துகிறார்கள். அதாவது அதன் சுழியானது பாம்பு தனது உடலை சுற்றி வைத்திருப்பது போன்ற தோற்றத்தில் இருப்பது கவனிக்கத்தக்கது. ராகு தசை யால் பாதிக்கப்பட்டவர்கள் கோமதி சக்கரத் துடன் கோமேதக கல்லையும் சேர்த்து வைத்து வீட்டில் வழிபட்டு வரலாம். கேதுவின் தசையானது ஜாதக ரீதியாக பாதிப்பை தரும் அமைப்பில் இருந்தால், அந்த நபர் கோமதி சக்கரத்துடன், வைடூ ரிய கல்லை வைத்து வீட்டில் வழிபட்டு வரலாம். தங்களது ஜாதகங்களில் கால சர்ப்ப தோஷம் மற்றும் சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் கோமதி சக்கர வழிபாட்டை செய்து வருவது நல்லது. தற்போது மோதிரமாகவும், கழுத்தில் அணியும் செயின் வடிவிலும் கிடைக்கிறது. விலை குறைந்த ஆனால் லட்சுமி அம்சமுள்ள நோய்கள் தீர்க்கவல்ல சிறிய சங்கு போன்ற கல். தொழில் முன்னேற்றம், கண் திருஷ்டி, பில்லி,சூனியம், வியாபார விருத்தி போன்றவற்றிற்கும் மிக சிறந்த தீர்வே இந்த கோமதி சக்கரம்.கோமதி சக்கரத்தை குழந்தைகளின் இரு புருவத்திற்கும் மத்தியில், பொட்டு வைக்கும் இடத்தில் அரை மணிநேரம் வைத்துவிட வேண்டும். ஒரு வயதிற்கு மேல் இருக்கும் குழந்தைகளுக்கு இந்த முறையை செயல்படுத்தி பார்க்கலாம். … தூங்கும் சமயத்தில் அரை மணி நேரம் நெற்றிப்பொட்டில் நடுவில் இந்த சக்கரத்தை வைத்து விடுங்கள்.

கோமதி சக்கரத்தின் இவ்வளவு நன்மைகளா? Read More »

உலகம் முழுவதும் போலி சித்தர்கள் உருவாகி விட்டனர்

Post Views: 402           இந்தப் போலி சித்தர்கள் தன்னைத்தானே விளம்பரப்படுத்திக் கொண்டு தான் ஞானி என்றும் தான் மனோ சக்தி உடையவன் என்றும் மக்களை ஏமாற்றிக் கொண்டும் திரிந்து கொண்டிருக்கிறார்கள் மனோ சக்தியே இல்லாமல் சித்திகள் செய்பவராகக் காட்டிக் கொண்டு பெரிய யோகி மாபெரும் துறவி, மடாதிபதி பீடாதிபதி எனப் பலர் இக்காலத்தில் தோன்றித்திரிகின்றனர். சாதாரண வேத சாத்திர, தத்துவ அறிவும் புலனடக்க ஒழுக்கமும் கூட இல்லாத போலிகள் அவர்கள். ஆகமப்படி அமையாத நடைபாதைக் கோயில்கள் போல அவர்களாலும் புண்ணியமில்லை இதெல்லாம் ஆன்மிக வளர்ச்சியும் இல்லை. ஆகமப்படி கட்டப்பட்ட கோயில் போல, மனோசக்தியுள்ளமகான்களே பயன்படுவது. சில சர்க்கஸ் வித்தைகளைப் போன்றவற்றைப் பழகி, ஹதயோக முறை நுணுக்கங்களைக் சுற்று, அவற்றையும் தந்திரங்களால் சிலவற்றையும், மனோசக்தியால் விளையாடும் சித்திகளைப் போலக் காட்டித் தங்களைப் பெரிய யோக சித்தர்களாகப் பெருமை பேசச் செய்து விளம்பரப்படுத்திக் கொண்டு ஓர் அமைப்பை உண்டாக்கிக் கிளைகளை வேறு தொடங்கி ஒரு தொழிலாகச் செய்து பணம் பண்ணும் போலிகளே இப்போது அதிகம், ஆசனங்களையும் சில பிராணாயாமங்களையும் மட்டும் தெரிந்து கொண்டு தியானத்திலிருப்பது போல கண்களை மூடி அமர மட்டும் அறிந்து ஏதோ பூஜை செய்யும் பக்தராகவும் காட்டிக்கொண்டு, புரோகிதர்களைக் கொண்டு யாகம் செய்து ஹோமம் செய்து பரம ஆன்மிகவாதிகளாகத் தோற்றம் ஏற்படுத்திப் பிழைப்போரே அதிகம் உளர். இவர்களுக்கு வசூலே முக்கியம். ஆசனமும், சித்த வைத்தியமும் அறிந்து சித்தர் என்று மருந்துகளைச் செய்து கொள்ளை விலைக்கு விற்று ஆயிரம் கோடி ரூபாய் கணக்கில் சொத்து சேர்த்து அறக்கட்டளைகளில் பதுக்கி வாழ்வோர் மக்களுக்காகப் போராடுவதாக அரசியலும் செய்ய வந்து விட்டனர். இவர்களுக்குப் பிரபலமும் புகழுமே தேவை. பணமும் பாதுகாப்பாக இருந்தாக வேண்டும். இன்னும் சிலர் எதுவுமே தெரியாவிட்டாலும், ‘நான்தான் கடவுள்’ என்று அவதாரமாக ஆகிவிடுகிறார்கள். ‘வீட்டிற்கு வந்து வாழ்த்தினால் பத்து லட்சம், இருக்குமிடத்திற்கு வந்து வாழ்த்துப் பெற்றால் ஒரு லட்சம்’ என்று வாங்குகிறார்கள். இவர்கள் தொடங்கிய அமைப்பு பல நாடுகளில் கிளைகளுடன் இருக்கும் குறுகிய காலத்தில் நூறு, ஆயிரம் கோடிக் கணக்கில் சொத்துக்கள் குவிந்துவிடும். இவர்கள் பித்தலாட்டம் வெளியே அம்பலம் ஆனாலும், போலீஸ் பிடித்தாலும் பணபலத்தால் மீண்டும் மக்களை இம்சிக்க வந்துவிடுவர்.உண்மையில் பொருளை வரவழைத்துத் தரும் சித்தி உடையவரானால் லிங்கம், வாட்ச், மோதிரம் போன்றவற்றை வாயிலிருந்து எடுத்து எச்சில் பொருளாகத்தான் தர வேண்டுமா? அல்லது கல்லுரலை, கடப்பாரையை வரவழைத்துத் தரலாகாதா? ஒரு துறவி, (காவி தந்த குருயாரோ?) பின்னால் சிறைக்கும் சென்று இப்படிச் செய்து வயிறு கெட்டுப் போனது’ என்று கூறிச் செத்தும் போனார். பின்னால் கருந்திரை இருக்க, அதன் பின்னிருந்து வீசி மேலே போட்ட செயின் அது போன்ற பொருளை லாகவமாகப் பிடித்து சித்தியால் வரவழைத்துத் தருவது போலக் கொடுப்பார். லிங்கம், வாட்ச், மோதிரம் போன்றவற்றை வாயிலிருந்தும் எடுத்துத் தருவார். பூ வரச் செய்து தருவது விபூதியை வெறுங் கையால் தருவது செய்து கொண்டிருந்தார். இவற்றையெல்லாம் மேஜிக் செய்யக் கூடியவரும் தந்திரங்களால் செய்துகாட்டி விட்டனர். இவர் பற்றிய பலர் கூறிய பற்பல சித்திகளை அடக்கிய நூல்களும் உண்டு. இவர் இறந்ததும் இவரது அறையில் கிலோ கணக்கில் தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதும் செய்தியாயிற்று. பிறரைக் குறை கூறுவது நம் நோக்கமில்லை. மக்களைப் போலிகள் பற்றிக் கூறி எச்சரிப்பதே நம் நோக்கம். நாம் கூறியவை செய்தியாக வெளிப்பட்டவையே. இவர்களை உடனுக்குடன் நேரே யாரும் கேள்வி கேட்காமைக்கும் வாதிட்டு மடக்காமைக்கும் அவர்களுக்குப் பின்பலமாக இருந்த பணமே, புகழே தடை, அறியாமையும் அச்சமும் கொண்ட மக்கள் போலிகளைத் தோலுரிக்க முடியாமல் தோற்றுப் போகிறார்கள். கண்டுபிடிக்கப்பட்ட ஓரிரு சமயங்களிலும் பணமும் அதிகார வர்க்கமும் அவர்களுக்குத் துணை செய்கின்றன. ஓரிருவர் மாட்டிக் கொண்டு கம்பி எண்ணுகின்றனர். ஆனாலும் இப்படிப்பட்டவர் புதிது புதிதாக இன்னும் தோன்றிக் கொண்டுதானுள்ளனர். ஒருவர் நெருப்பில் இறங்கி எழுந்து வருகிறாராம். இன்னொருவர் மக்களைப் பறக்க வைப்பதாகச் சவால் விட்டு எதுவும் முடியாமல் திட்டு வாங்கினார். இவர்களுக்குஉண்மையாகவே இப்படிப்பட்ட சித்திகள் விளையாட முடிந்தாலும் கூட அதை வெளிக்காட்டிப் பயன் என்ன? முடியாதவர்தானே ‘முடியும்’ என்று வெறும் தம்பட்டம் அடித்துக்கொள்ளுவர்! நெருப்பில் இறங்குபவர் எங்காவது தீவிபத்து ஏற்பட்டால் உள்சென்று உயிர்களைக் காப்பாற்றப் பயன்படுத்தினால் அப்போது மக்களறிந்து கொள்வதோடு மெச்சவும் செய்வர். சித்திகளைக் காட்டிப் பாமர மக்கள் தம்மைப் பாராட்ட விரும்புகிறவர், பாமர மக்களின் கைதட்டலை வேண்டுபவர், அவர்களை விடச் சின்னவர்தானே? மேலும் அந்த சித்திகளை ஆத்மா செய்யவில்லை. பிரக்ருதி தான் செய்கிறது என்ற அறிவற்றவர்தானே ‘நான் பறப்பேன்’, ‘நான் உங்களைப் பறக்க வைப்பேன்!” என்று கூறுவர்? செய்வது இறைவன்தான். உடலில்லை. ஆத்மன்’ என்ற அறிவற்றவர் எப்படி மேலானவர் ஆவார்?இதனால் உண்மையான சித்தர்களை பார்க்க முடிவதில்லை காரணம் பார்க்க முன்பே இந்த போலி சித்தர்களிடம மாட்டி கொண்டு விடுகிறோம் நானும் இதற்கு சான்று இதை போன்ற ஒரு போலி சித்த னிடம் மாட்டிக்கொண்டு பாடத பாடு பட்டு விட்டேன் ஜாக்கிரதையாக செல்லுங்கள் நம் முன்பு குரு என்று போலித்தனம் வேஷம் போட்டு திரிந்து கொண்டு வர கூட்டம் மிக அதிகம் ஆதலால் ஆன்மீகம் என்பது வெளியே அல்ல உங்களுக்குள்ளே இருக்கிறது என்பது அல்ல யாராவது உங்களுக்கு தீட்சை தந்தால் மட்டும் தான் நீங்கள் உயர முடியும் என்பது இல்லை எல்லோரும் ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள் மக்களை ஆதலால் நீங்கள் உங்கள் உள்ளே செல்ல முயற்சி செய்யுங்கள் அது மட்டும்தான் சித்தனை அடையும் வழி சித்தர்கள் நம்மோடு கூட என்றென்றும் அவர்களின் ஆசீர்வாதங்கள் இருக்கிறது நாம் தான் தவறான பாதையில் மாட்டிக் கொள்கிறோம் ஒரு நல்ல சிந்தனைகள் கண்டு விட்டால் நீங்கள் சிறந்த ஞானியாகவும் சிறந்த சுத்தமாகவும் மாற்றப்படுவார்கள் ஆனால் நாம் போலி சித்தர்கள் இடம்தான் சிக்கிக் கொண்டிருக்கிறோம் ஜாக்கிரதை மீண்டும் வெளியேறுங்கள் உங்களுக்கான வாழ்க்கை உங்கள் மனதில்தான் இருக்கிறது உங்களுக்கான சிறந்த சித்தர் யார் என்றால் உங்கள் மனம் தான் உங்களுக்கான சிறந்த குரு யார் என்றால் உங்கள் மனம்தான் இதைத் தவிர வேறு யாரும் உங்களுக்கு நல்ல விஷயத்தையும் அற்புதமான விஷயங்க ளையும் சொல்லித்தர முடியாது அந்த சித்தர்கள் சித்த புருஷர்கள் உங்கள் மனதில் வாழ்கிறார் கொண்டு எழுச்சி நநடையோடு நடந்து செல்லுங்கள் சித்தர்களை நீங்கள் கண்டிப்பாக சந்திப்பீர்கள் உங்கள் மன திடம் நம்பிக்கை கொள்ளுங்கள் நன்றி vinodhan,

உலகம் முழுவதும் போலி சித்தர்கள் உருவாகி விட்டனர் Read More »

What Is a Chromotherapy?

Post Views: 250                  Light and heat are important media of treatment in Naturo pathy. Sunlight gives us both. This is an inexpensive but powerful natural agent and it plays a great part in keeping us in health, as it provides us with two important necessities of life. It is for this reason that the Sun is worshipped as God-the Protector. Nature has provided a number of expensive methods for the preservation and also for restoration of health when it is disturbed. If it is not convenient or possible for any particular person to use mud-packs or take sun-bath, he can carry with him and take some pills having the effect of the spectral colour of Sun-rays. Sunlight consists of several visible and invisible rays. It is safe to use visible rays for treating human diseases. The spect rum of visible rays consists of seven colours, namely: Violet. Indigo, Blue, Green, Yellow, Orange and Red. Of these, Blue. Green and Red are primary colours and the rest are mixtures thereof. The main combinations can give us over 200 hues and shades otherwise the seven colours can be multiplied into an unlimited number. These colours can replace hundreds of medicines in use these days. We lose ourselves in wonder at the majesty of the perfectly ordered colours and must realize that beauty in the world is not by chance Travlling in a plane we get only a glimpse of the cosmic vastness and the role of the Sun in the cosmic whole. The different vegetables, fruits. flowers. nuts, grains. etc,. derive their different colours from their paramount source the Sun, which is the Supreme Power House. It has been ascertained by the Scientists that every substance has a colour spectrum of its own. This means that every drug also has its own colour spectrum. It is, therefore, logical and has also been proved by experience that spectral colours can be used directly in place of drugs for medical effects. Thuschromotherapy uses spectral colours directly in place of conven tional drugs with the result that there is no drug after-effect. Of the 7 colours mentioned above, blue is cooling and soothing, red is warming and stimulating and green is harmonising in between the two and Nature’s best blood purifier. Just as there are 3 Doshas in Ayurveda, namely: Vat, Pitta and Kaph, there are these 3 primary colours in chromotherapy. So long as the three colours are in a balanced state, a man remains in health but when this balance is upset, a state of disease is noticed. As every medicine has some colour, every organ of the body also has some colour. For treatment in chromotherapy. the colour of the diseased organ and the temperament of the patient are ascertained and the harmonising colours are used which correct the ailments. We have specific medicines which act directly on certain. organs; similarly there are certain colours for which different organs have affinity. Describing the affinity of every colour or every organ for a particular colour becomes a matter of detailed study which is out of the scope of this Chapter. Hence the details about the affinity are not given here.. The main medium for administration of colour effect is water but oil, sugar, candy, fruit juices and sugar milk, etc. can also be similarly charged with the colours and these things can be used for longer periods.                                                             Method of Preparation of Solar Medicines The healing effects of the spectral colours can by two ways: obtained (i) by external application to the body by passing Sunlight through various coloured glass sheets, or cellophane paper, and (ii) by preparing solar medicines for internal and external use.The latter is done by exposing to sunlight, water, milk, powder.or oil, etc., stored in coloured bottles for a number of days. The medicinal effect of the colours is absorbed the medium stored in the coloured bottles. The colour rays pass easily through water medium, so we get a medicinal charge on the water quickly-say, within eight hours of exposure to sunlight. Oils and solids have, however, to be exposed for a month or so to obtain an effective medicinal colour charge. We have seen that, in chromotherapy, the power of the Sun is utilised through the colours of Sun-rays. In magnetotherapy, the power of magnets is made use of to cure diseases, magnets are believed to have solar power as they give heat to the body. when applied to it and the magnetic waves spread out like the rays of the Sun. Hence it is evident that both the systems of treatment draw their power from the same source i.e. the Sun and are, therefore, alike to some extent. Moreover, just as water is charged with colours in chromotherapy, water is also charged with magnetism and magnetised water works as a good medicine in the diseases of abdomen, stomach and in urinary troubles including stones in kidneys. Vinodhan,

What Is a Chromotherapy? Read More »

Magnetotherapy helps in Meditation power!

Post Views: 206                       Naturopathy brings about a balance of the mind adding to the power of concentration. The same can be achieved through Magnet therapy also. Experiments have shown that the use of magnets helps in meditation by creating an equilibrium in the mental nerves: In this regard, the following facts are men (1) Magnetic energy provides substance and strength to the net-work of nervous system thereby giving initiative and depth to the power of concentration and medita tion. Application of magnets has helped in Transcen dental Meditation also. (2) Magnetism regulates the rocess of blood circulation and energises the digestive system. It provides the body with necessary heat. Thus magnetism preserves complete health of the Sadhak and provides him with requisite physical and mental environment for meditation. (3) Magnetism dispenses the accumulation in the body of foreign elements like Calcium, Cholesterol, etc., and thus releases the tension in nerves. It renders the body flexible an essential condition for practising Yoga. (4) Magnetism gives strength and normalcy to the functions of mind, heart and lungs and has direct effect on respi ratory system. Thus it heips in Pranayam and Yogic practices relating to breathing. (5) Magnetism is very helpful in purging human physical mechanism of all unwanted elements through excertions thereby giving to whole system a balanced activity devoid of excitement. It will be observed from the above that Magnetism is prone to exercise a deep effect on all inner and outer workings of the body. Magnetotherapy can thus prove a valuable aid to the family men and Yogis alike. As Magnetism releases strain and tension in nerves and provides them with requisite energy, therefore, intellectuals like Judges, Advocates. Vakils, Professors, Writers, Secretaries, Business Executives and Mental Workers also are sure to bebenefitted by the regular use of magnets. Even 5 minutes magnet-touch in the morning means a natural exercise and will keep them physically fit, active and energetic as well as mentally alert. Hence everyone should take this exercise in his/her home regularly. It is beneficial for these who cannot get out for morning walks or do any other exercise. It works as a preventive too against many ailments which may otherwise come. vinodhan,

Magnetotherapy helps in Meditation power! Read More »

நிலக்கடலை சாப்பிட்டால் 100 வயதுக்கு மேல் வாழ முடியுமா?

Post Views: 454                    இதுநாள் வரை நிலக்கடலை கெட்ட கொழுப்பு என்று நமக்கு பதிய வைத்தார்கள். நிலக்கடலை நல்ல ஆரோக்கியமான கொழுப்பு நம் கடலை எண்ணெய் உள்ளே செல்லும்போது நமது நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றலை துரிதப்படுத்துகிறது.* இதே கடலை எண்ணெய் நம்முடைய செரிமான சக்தியை அதிகப்படுத்துகிறது.* கடலை எண்ணெயில் சமைத்து சாப்பிடும் உணவு மிக நன்றாகவும் அருமையாகவும் இருக்கும் மணமும் சுவையும் ஆரோக்கியமும் கடலை எண்ணெயில் எக்கச்சக்கமாக இருக்கிறது. *அதுவும் மரச்செக்கு எண்ணெய் மிக மிகச் சிறப்பு. *நிலக்கடலை நாம் தொடர்ச்சியாக உண்ணும்போதுஆண் மலட்டுத்தன்மைபெண் மலட்டுத்தன்மை சரியாகிறது. *நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம். *நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும். ★ நீரழிவு நோயை தடுக்கும்: நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். ★ பித்தப் பை கல்லைக் கரைக்கும்: நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். *இதயம் காக்கும்: *நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது. ★ இளமையை பராமரிக்கும் இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது. ★ ஞாபக சக்தி அதிகரிக்கும்: நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. ★ கொழுப்பை குறைக்கும்:தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது. நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது. இந்த ரிப்போர்ட் கூகுள் எடுக்கப்பட்டது. *அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை: உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலை எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள். கடந்த பல வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது. ★ கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி: பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது. *நிறைந்துள்ள சத்துக்கள்:100 கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.கார்போ ஹைட்ரேட்- 21 மி.கி.நார்சத்து- 9 மி.கி.கரையும் கொழுப்பு – 40 மி.கி.புரதம்- 25 மி.கி.ட்ரிப்டோபான்- 0.24 கி.திரியோனின் – 0.85 கிஐசோலூசின் – 0.85 மி.கி.லூசின் – 1.625 மி.கி.லைசின் – 0.901 கிகுலுட்டாமிக் ஆசிட்- 5 கிகிளைசின்- 1.512 கிவிட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சிகால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.காப்பர் – 11.44 மி.கி.இரும்புச்சத்து – 4.58 மி.கி.மெக்னீசியம் – 168.00 மி.கி.மேங்கனீஸ் – 1.934 மி.கி.பாஸ்பரஸ் – 376.00 மி.கி.பொட்டாசியம் – 705.00 மி.கி.சோடியம் – 18.00 மி.கி.துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.*இந்த சாட் கூகுள் எடுக்கப்பட்டது. * பாதாம், பிஸ்தாவை விட நிலக்கடலை சிறந்தது: *நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு. *கடலை அதிக கொலஸ்ட்ராலை உண்டுபண்ணும் என்ற வதந்தியை பரப்பிவிட்டு, தந்திரமாக நம் சத்தான நாட்டு நிலக்கடலையை வெளிநாட்டினர் அனைத்து உணவிலும் பயன்படுத்தி நலமோடு வாழுகின்றனர்… *எளிதாக கிடைக்கும் கடலையை உண்டு ஆரோக்கியமாக இளமையாகவும் வாழ்வோம். தினமும் சிற்றுண்டி உணவாக 100 கிராம் கடலையே உண்ணுவோம். *இந்த வாய்ப்பை வழங்கிய மாஸ்டர் வினோத் அவர்களுக்கு நன்றி… Hipnotist Karthik

நிலக்கடலை சாப்பிட்டால் 100 வயதுக்கு மேல் வாழ முடியுமா? Read More »

இதை ஒரு தடவை தானமாக கொடுத்து பாருங்கள் !

Post Views: 357                    இக்கட்டுரை முழுக்க முழுக்க தண்ணீரைப் பற்றியது தண்ணீரின் அவசியத்தை நம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். இக்கட்டுரையை முடிக்கும் தருவாயில் தண்ணீரை தானமாக பெற வேண்டும் என்று எண்ணுவீர்கள்.                     வெயில் காலத்தில் மண்பானை ஒன்று வாங்குங்கள். சளி பிடிக்கும் என சொல்லாதீர்கள்: சளி என்கிற கழிவைத் தான் மண்பானை வெளியேற்றும்! உங்கள் வீட்டு RO வாட்டர் வெளியேற்றாது!மண்பானை நீர்- 7- 8 pH அளவு”இரத்தத்தில் pH அளவும்எலும்பு,மூட்டு வலியும்…!மூட்டு எலும்பு வலிக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மருத்துவர்கள் சொல்வது மூட்டு தேய்ந்து விட்டது, கால்சியம் குறைந்து விட்டது, எலும்பு அடர்த்தி குறைந்து விட்டது என்பதுதான்.இயல்பாக இரத்தத்தின் pH அளவு 7.4 ஆகும். (pH என்பது “potential of Hydrogen”). ஒரு பொருள் 7 இற்கு கீழ் pH அளவு இருந்தால் அந்த பொருள் அமில தன்மை உடையது. ( Acid ). ஒரு பொருள் 7 இற்கு மேல் pH அளவு இருந்தால் அந்த பொருள் காரத்தன்மை உடையது. (Alkaline):நமது இரத்தம் இயல்பாகவே காரத்தன்மை உடைய 7.4 pH அளவு உடையது…!ஆனால் நாம் அருந்தும் பெரும்பாலான குளிர்பானங்கள் அமிலத்தன்மை உடையவை.அதாவது pH அளவு என்பது பெரும்பாலும் 5 விட கீழாக இருக்கும்.இந்த குளிர்பானங்களை அருந்தும் போது நமது இரத்தமானது அதன் இயல்பான காரத்தன்மையை இழந்து அமிலத்தன்மையாக மாறும்.இது தொடர்ந்து நடக்கும் போது இரத்தம் அமிலத்தமையை அடையும். இது பல்வேறு உடல்நல கேடுகளுக்கு வழிவகுக்கும். எனவே இதை தடுக்கும் பொருட்டு உடலானது இரத்தத்தை காரத்தன்மையாக மற்ற முயலும். இரத்தத்தை காரத்தன்மை உடையதாக மாற்ற கூடிய பொருள் கால்சியம். எனவே இந்த எலும்பு மற்றும் மூட்டுகளில் உள்ள கால்சியம் ஆனது ionized கால்சியம் ஆக மாற்ற பட்டு நமது இரத்தத்தில் கலக்கிறது . இப்போது இரத்தம் இயல்பான காரத்தன்மை அடைகிறது. இவ்வாறு எப்போதெல்லாம் இரத்தம் அமிலத்தன்மை உடையதாக மாறுகிறதோ அப்போதெல்லாம் கால்சியம் எலும்பு மூட்டுகளில் இருந்து பிரிந்து இரத்தத்தில் கலந்து அதை காரத்தன்மை உடையதாக மாற்றுகிறது.*எனவே எலும்பு, மூட்டுகள் வலுவிழக்  எனவே எலும்பு, மூட்டுகள் வலுவிழக்கிறது. கடுமையான வலி உண்டாகிறது. இப்போது எந்த அளவு pH ஆனது கீழ்கண்ட பொருட்களில் இருக்கிறது என்று கூகுளில் தேடி பார்த்தபோது கீழ்கண்ட அளவீடுகள் கிடைத்தன. குளிர்பானங்கள் – 2.3 – 3.5 pH அளவு.R.O.WATER – 5 – 6 pH அளவு.காபி -4.5 -5.5 pH அளவு. மண்பானை நீர் – 7- 8 pH அளவு. R.O. WATER – என்பது நாம் வீடுகளில் பெருமையாக நினைத்து பயன்படுத்தும் தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி. தற்காலங்களில் பெரும்பாலான வீடுகளில் இந்த கருவிகள் பொருத்தப்பட்டு தண்ணீரை சுத்திகரிப்பதாய் நினைத்து மூட்டுவலியை விலை கொடுத்து வாங்குகிறோம். நாம் குடிக்கும் அத்தனை குளிர்பானங்களும் மூட்டுவலிக்கு ஒரு காரணமாய் அமைகிறது. இப்போது மண்பானை நீர் எவ்வளவு பாதுகாப்பானது என்று உங்களுக்கு தெரிய வரும். *ஏன் என்றால் மண்பானை நீர் pH அளவு 7- 8 ஆகும். *தண்ணீருக்கு என்று மிகப்பெரிய ஆற்றல் உண்டு. அதனால்தான் அனைத்து மதத்தவரும் தண்ணீரை புனித நீராக கூறுகிறார்கள். தண்ணீரில் அற்புதமும் செய்தார்கள். *தண்ணீர் அருந்தக்கூடாத நேரம் காலை 9 மணி முதல் 11 மணி வரை, இந்த விஷயம் நிறைய பேருக்கு தெரியாது, தெரிந்திருந்தாலும் கடைபிடிப்பதில்லை ,இந்த நேரத்தில் தண்ணி குடிக்காமல் இருந்தால், நமது மண்ணீரல் தன்னைத்தானே குணப்படுத்திக் ஆற்றல் உடையதாக மாறுகிறது.! வெயில் காலத்தில் மண்பானை தண்ணீர் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் வெண்கல பானை உடலுக்குத் தேவையான இளம் சூடு தண்ணீராகவும் பயன்படுகிறது. *கேரளாவில் எந்த ரோட்டுக்கடையாக இருந்தாலும், மதிய உணவு ஓட்டல், நட்சத்திர ஓட்டல் என்று எங்கு போனாலும் குடிப்பதற்கு ஒரு வாசனை வெந்நீரை கொடுக்கிறார்கள். வெளியூரிலிருந்து வந்து நாசுக்கு பார்க்கும் வாடிக்கையாளரைக் கூட நம்பிக்கையுடன் குடிக்க சொல்கிறார்கள். வாட்டர் பாட்டிலை நீட்டுவதில்லை . (இதுவே நமது ஊராக இருந்தால் normal or cold water வேண்டுமா என்று கேட்பார்கள்). எந்த கடைகள்தான் என்றால் கோயில் அன்னதானத்திலும் இதுதான். வீடுகளிலும்….. எங்கும் எதிலும்கொஞ்சம் விசாரித்ததில் எவருக்கும் ஏன் செய்கிறோம் என்று தெரியவில்லை. அந்தளவு பல காலமாக நடைமுறையில் பழகிவிட்டது. குடிதண்ணீர் என்றாலே அவர்களுக்கு மூலிகை தண்ணீர்தான். பருவம் மாறும்போது தண்ணீரினால் நோய்வராமல் இருக்க என்று ஒரு ஒட்டல்காரர் சொன்னார்.. என்ன மூலிகை சேர்ப்பார்கள் என்று பார்ப்போம். அ) பதிமுகம் பட்டை (அதுதான் சிவப்பு வண்ணத்தை கொடுக்கிறது). (சிறுநீரக தொல்லை நீங்கும்) ஆ) சொர்க்க மரம் (சைமரூபா கிளாக்கா). கான்சர் வராதாம். இ) கங்களிஇன்ன பிற மூலிகைகள். *பழக்கத்தில் (ஜீரோ பாக்டீரியா) மினரல் வாட்டர் பாட்டிலை கேட்டாலும் அவர்கள் அதை நமக்கு விற்காமல் இதை இலவசமாக குடிக்க சொல்கிறார்கள். *எங்கேயோ பூமிக்கு பின்புறத்தில் இருக்கும் அமெரிக்காவை காப்பியடிக்கும் நமக்கு பக்கத்து ஊரில் இருக்கும் மலையாளத்தானை நல்ல விஷயத்துக்கு அட்டை காப்பி அடிப்பது தவறா ? அடிப்போம் ?. இனி எங்கு சென்றாலும் ஒரு பாட்டில் எடுத்துச் செல்வோம். தண்ணீரை தானம் அளிப்போம்,தானமாக பெறுவோம். *இந்த வாய்ப்பை அளித்து மாஸ்டர் அவர்களுக்கு தலை வணங்குகிறேன் நன்றி!!! நன்றி!!! Hipnotist Karthik 

இதை ஒரு தடவை தானமாக கொடுத்து பாருங்கள் ! Read More »

மனதை ஒருநிலை படுத்துவதால் ஏற்படும் அதீத நன்மை கொண்ட பேரின்பநிலை !

Post Views: 600                       மனதை ஒருநிலைப்படுத்துவது ஏற்படும் அதிக நன்மை கொண்ட பேரின்ப நிலை.. முதலில் மனம் என்பது குரங்கு நிலை கொண்ட தன்மையை தான் மனம் என்று கூறுவார்கள் ஏனென்றால் அவை குரங்கு போன்று அவை அங்கும் இங்கும் தாவி கொண்டே இருக்கும் மனிதன் பிறப்பிலிருந்து இறப்பு வரைக்கும் மணம் தான் ஒரு இடத்தில் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கும் இதனை எண்ணம் என்று கூறலாம் சரி இதை நாம் ஒரு நிலை கொண்டு வரவேண்டும் மனதை அடக்கும் வித்தையை அறிந்தவன் இவ்வுலகில் எவரையும் நம்மால் அடக்க முடியும் நாம் யார் என்ற கேள்விக்கு பதில் யாருக்காவது தெரியுமா. மனதை ஒரு நிலைக்கு கொண்டுவரும் போது மனமானது அடுத்த கட்டத்திற்கு நம்மை எடுத்துச் சென்று அந்த கேள்விக்கான பதில் நமக்கு கிடைக்கும் .மனதை அடக்க தெரிந்தவனே வித்தைக்காரன் என்று சில ஆன்மிகவாதிகள் கூறுவது மன ஒருமைப்பாட்டு நிலைத்தான் மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் இதற்கு அர்த்தம் இவைதான் இதற்கான விழிப்புணர்வு நம்மிடத்தில் இல்லை ஏன் பிறந்தோம் என்று தெரியாமல் சமுதாயத்தை பின்பற்றியே வாழ்வதினால் இதற்கான விழிப்புணர்வு நம்மிடத்தில் சற்று குறைவு தான் இந்த மனநிலையைத்தான் இப்போது உள்ள ஆன்மீகவாதிகள் நம்மிடம் மறைமுகமாக ஏதேதோ சொல்லிக் கொடுத்து வருகிறார்கள் இதனை புரிந்து கொண்டு இதை ஒருநிலை படுத்த முயற்சி செய்யவேண்டும் மனதை ஒருநிலைப்படுத்துவதனால்தெளிந்த நீரோடை போல் பளிச்சென்று தெளிவாக இருப்போம்‌‌. ஒரு நிலைப்பட்ட மனமானது அனைவரையும் ஈர்க்கும் அளவுக்கு சக்திகள் நம்மிடத்தில் இருக்கும் சக்திகள் என்பது வேறொன்றுமில்லை மனம் ஒருநிலை போது ஒருவித ஆற்றல் வெளியாவதைநாம் சக்தி என்கிறோம் மனம் ஒரு நிலை ஆனால் என்ன ஆகும் என்றால் ஆரோக்கியம் கூடும் பிறகு இரண்டு ஆள் பலம் கிடைத்தது போல் ஒரு உணர்வு இருக்கும் இதன் மூலம் நாம் அனைவரையும் நம்மால் வசீகரிக்க முடியும் மனதை உணர்வுகளில் சிதற விடாமல் பார்த்துக் கொண்டால் மனம் ஒருநிலைப்படும்.மக்களுக்கு இது போன்ற விழிப்புணர்வு வேண்டும் ஏனென்றால் சமுதாயத்தில் நடக்கும் நன்மையை விட தீமையையே அதிகம் மக்களுக்கு வெளியிடப்படுகிறது மனமானது அதைத் தொடர்ந்து தீமைகளையே அதிகம் சேகரிப்பதால் மனம் அதிகமாக எதிர்மறைக் கொண்ட எண்ணங்களையே உள்வாங்குகிறது எண்ணம் போன்றவை மனதில் இருந்துதான் தோன்றியது ஆகவே மனதை அடக்கினால் எண்ணங்கள் தோன்றுவது சற்று குறையுமே தவிர எண்ண அலைகள் நிற்காது அதை நாம் கண்டுக்காமல் இருக்கவேண்டும் மனமானது தெளிந்த நீர் போன்று இருந்தால் என்ன அலைகள் வராது எண்ணங்களை நிறுத்துவது எப்படி என்று கேட்டால் எண்ணங்களை எல்லாம் நிறுத்த முடியாது ஏனென்றால் இந்த உலகம் முழுவதுமாக எண்ண அலைகளையே பரிமாற்றம் செய்யப்படுகிறது ஆகவே பிரபஞ்சம் முழுவதும் எண்ண அலைகளே. எனவே மனதை செம்மை படுத்த முயற்சி செய்து அதனை அடக்கினால் அனைத்துமே நம்மிடம் வரும். எப்படி ஒரு நிலை கொண்டு வருவது என்றால் நீங்கள் எந்த வேலை செய்தாலும் உதாரணமாக ஓட்டுனராக இருந்தாலும் சரி நவீன டெக்னாலஜியை பற்றி வேலையாக இருந்தாலும் சரி ஒரு நிலையோடு அதாவது அதில் மட்டும் அதிக கவனம் கொண்டு வேலை செய்யும் போது அதில் உள்ள சூட்சுமம் நமக்குத் தெரியும் எந்த வேலையாக இருந்தாலும் சரி கவனம் கொண்டு செய்யும் போது அந்த வேலையில் நீங்கள் expert ஆக முடியும் இதை விட முக்கியமான ஒரு உண்மையான எதார்த்தமான விஷயம் என்னவென்றால் சந்தோஷமாக இருக்க முடியும் யாருமே இல்லாமல் நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள் மனஅமைதி இதில் கிடைக்கும் மக்கள் அனைவரும் ஏதேதோ கற்றுக்கொள்ள எங்கெங்கேயோ யாரையோ தேடி போய் கற்றுக் கொள்கிறார்கள் ஆனால் அந்த விஷயத்தை நீங்கள் முழுமையாக கற்றுக் கொண்டிருக்க மாட்டீர்கள் ஒரு சிலரே அதை கற்றுக் கொண்டு இருப்பார் அவர்கள் இயல்பாகவே மன ஒருநிலைப்பாடு இருக்கும் என்னதான் ஆர்வம் கொண்டு கற்றுக்கொள்ள போனால் ஒரு சிலரே அதை நடத்தி முடித்து காட்டுகிறார்கள் அதற்கு மிகப்பெரிய சிக்ரெட் என்னவென்றால் இந்த மன ஒருநிலை பாடுதான். சரி மனதை ஒருநிலை படுத்த என்ன செய்ய வேண்டும். இதற்கு சில பயிற்சிகள் இருக்கின்றது நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. நீங்களே நான் சொன்ன மனநிலைப்படி பயிற்சிக்கு சென்ற மனம் என்கிற நினைவலைகளை கட்டுப்படுத்தி உள்ளுணர்வு என்ற நமக்குள் இருக்கும் கடவுளை வெளியே கொண்டு வாழ்க்கையை வளமாக்கி உலக இன்பங்களை அனுபவித்து உலகத்திற்கு நன்றி சொல்லி வாழ்க்கையை முடித்து விட்டு சென்று விடுங்கள். நன்றி‌. இதில் மன ஒருமைப்பாட்டினை மட்டுமே நான் எழுதியுள்ளேன் வேற எதுவுமே இல்லை எல்லாம் புகழும் என் குருவிற்கு குருவே சரணம் நன்றி….. Hipnotist SivaGanesh

மனதை ஒருநிலை படுத்துவதால் ஏற்படும் அதீத நன்மை கொண்ட பேரின்பநிலை ! Read More »

யின் மற்றும் யாங் என்றால் என்ன?

Post Views: 477 சீனா நாட்டு மருத்துவத்தின் ஆரம்பமூலம் தாவோயிஸம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் உருவாயிற்று. 600 BC வருடங்களில் லாவோட் கு இதனை வடிவமைப்பு செய்தார். மனிதகுலம் இயற்கையின் பகுதியாக அமைந்திருக்கிறது என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தத்துவம் அமைந்துள்ளது. நம்மில் பெரும்பாலானவர்கள் நம் வாழ்க்கையிலும் நம்மைச் சுற்றியிருக்கும் பொருள்களிலும் ஸ்திரத்தன்மையை உண்டாக்க  முயற்சி செய்கிறார்கள். ஆனால், நடைமுறை என்பது மாறும் தன்மை கொண்டதாக இருப்பதால், இந்தத் தொடர் மாற்றங்களிலிருந்து நம்மைச் சமநிலைப்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இதுதான் நம்முடைய நல்ல சிந்தனைகளுக்கும் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கிறது. யின் மற்றும் யாங் என்ற சொற்கள், பொருள்களின் குணத்தையும், அவை ஒன்றோடொன்று இயற்கையோடு தொடர்பு கொண்டுள்ளதையும் குறிப்பிடுகிறது. எல்லாப் பொருள்களிலும் யின் மற்றும் யாங் சக்திகள் இருக்கின்றன. யின்னும் யாங்கும் நேர்மாறான குணம் கொண்டவை. ஒன்றை ஒன்று சமன்படுத்தக் கூடியவை. யின் ச்சீயும் யாங் ச்சீயும், நம் “உடலில் சமநிலையில் இருந்தால்தான், உடலில் ஆரோக்கியம் இருக்கும். பொதுவாக, யின்- யாங் சமநிலை நான்கு மாறுபாடுகளைக் கொண்டிருக்கிறது. 1 சரியான சமநிலையில் அமைத்திருக்கும் யின் மற்றும் யாங் ஆரோக்கியமான உடல்நிலைக்கு வழிவகுக்கும். 2. சரியான அளவு யின் ச்சீ, ஆனால் அதிக யாங் ச்சீ, வெப்பத்தை உருவாக்கி, அளவுக்கு அதிகமான உடல் இயக்கத்தை ஏற்படுத்தும். 3. சரியான அளவு யாங் ச்சி. ஆனால் குறைவான யின் ச்சீ, வெப்பத்தை உருவாக்குவதோடு (குறிப்பாக இரவில்) ஜீவாதார சக்தியையும் குறைக்கிறது. 4. சரியான அளவு யின் ச்சீ, ஆனால் குறைவான யாங் ச்சீ மந்தநிலையையும், சீதளத்தையும், குறைவான சுற்றோட்டத்தையும் உண்டாக்குகின்றன. அடுத்த பக்கத்தில் காட்டப்பட்டிருக்கும் வரைபடத்தில், யின் மற்றும் யாங் சமநிலைக் குறைபாடுகள், உங்கள் உடல்நிலையை எப்படிப் பாதிக்கிறது என்பதை எடுத்துக் காட்டும். அமைதிப்படுத்துவது, அதிகப்படுத்துவது மற்றும் கலைப்பது போன்ற அக்குபிரஷர் முறைகள் பக்கம் 29இல் விளக்கப்பட்டிருக்கின்றன. யாங் குறைபாடுகள் யின் தொடர்பான நோய்களை உருவாக்குகின்றன. யின் குறைபாடு கள் யாங் தொடர்பான நோய்களை உருவாக்குகின்றன. எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணமாக, யின் மற்றும் யாங் சேர்ந்தே அமைகின்றன. யின் மற்றும் யாங்கின் குணங்கள் எப்போதுமே ஒன்றுக்கொன்று தொடர்பானவை. உதாரணமாக வெந்நீர், ஐஸ்கட்டியை விட அதிக யாங் கொண்டது; ஆனால் ஆவியைவிட அதிகமான யின்னைக் கொண்டது. இவற்றின் சில குணங்கள் அடுத்த பக்கத்தில் உள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளது. அதிக யாங் (சரியான யின்) உடல் முழுவதும் ச்சீ அதிகமாக இருக்கிறது. இது உடல் வெப்பத்தையும், அதிக உடல் இயக்கத்தையும், இரத்தச் சிவப்பான வீங்கிய முகத்தையும், எப்போதும் தாங்க முடியாத உடல் பாரத்தையும் ஏற்படுத்தும். இதற்கு, கலைத்தோ, அமைதிப்படுத்தியோ சிகிச்சை செய்ய வேண்டும். ஏனெனில், ச்சீ அதிகமாகவும், ஒரு வேளை முடக்கப்பட்டும், அல்லது அதிக உத்வேகத்துடன் இருக்கலாம். குறைவான யாங் (சரியான யின்) ஒட்டுமொத்த ச்சீ குறைவதால், சீதளம் உண்டாகும். காரணம், யாங்கின் வெம்மைப்படுத்தும் குணம் இல்லை. சோர்வும் குறைந்த சுற்றோட்டமும் இதன் அறிகுறிகள். இதனால், அடிக்கடி அதிகமான வியர்வையும், சளியும் உடலில் உண்டாகும். இதன் காரணமாக, மூக்கு ஒழுகுதல் மற்றும் கட்டிகள் உண்டாகும். அழுத்த மையங்களும் நாடிகளும் பலப்படுத்தப்பட வேண்டும். ஏனெனில், ஒட்டுமொத்த ச்சீ குறைவாக உள்ளது. மேலும், யாங் குறைவினால், வெப்பமாக உள்ளது. குறிப்பு: அதிக யின் ச்சீக்கும், சரியான யாங் ச்சீக்கும் உள்ள பாதிப்புகள், அதிக யாங் ச்சீக்கும் பொருந்தும், ஆனால் இந்த நிலை எப்போதாவதுதான் நேரும். குறைவான யாங் (சரியான யின்) ஒட்டுமொத்த ச்சீ குறைவதால், சீதளம் உண்டாகும். காரணம், யாங்கின் வெம்மைப்படுத்தும் குணம் இல்லை. சோர்வும் குறைந்த சுற்றோட்டமும் இதன் அறிகுறிகள். இதனால், அடிக்கடி அதிகமான வியர்வையும், சளியும் உடலில் உண்டாகும். இதன் காரணமாக, மூக்கு ஒழுகுதல் மற்றும் கட்டிகள் உண்டாகும். அழுத்த மையங்களும் நாடிகளும் பலப்படுத்தப்பட வேண்டும். ஏனெனில், ஒட்டுமொத்த ச்சீ குறைவாக உள்ளது. மேலும், யாங் குறைவினால், வெப்பமாக உள்ளது. குறிப்பு: அதிக யின் ச்சீக்கும், சரியான யாங் ச்சீக்கும் உள்ள பாதிப்புகள், அதிக யாங் ச்சீக்கும் பொருந்தும், ஆனால் இந்த நிலை எப்போதாவதுதான் யின் மற்றும் யாங்கின் குணங்கள் யின் நிழல் பெண்மை நிலா ஓய்வு மூலப் பொருள் சுருக்கம் மென்மை யாங் வெளிச்சம் ஆண்மை சூரியன் இயக்கம் மூலப்பொருள் இன்மை விரிவு கடினம் யின்னும் யாங்கும் உடலில் அமைந்துள்ள பாங்கு யின் முன்பக்கம் யாங் பின்பக்கம் உறுப்பின் சக்திவழங்கும் உறுப்புகள் சாரம் வெளிப்புறத் உறுப்புகள் தோல், தசைகள் உட்புற இரத்தம், உடல் திரவம் ஈரம் மிதம் குளிர்ச்சி மூழ்குதல் ச்சீ வறட்சி வேகம் வெப்பம் எழுதல் யின் மற்றும் யாங்கின் அறிகுறிகள் யின் யாங் நீண்டகால நோய் மெதுவாக வரும் நோய் வெளிர் முகம் தாகமின்மை வயிற்றுப் போக்கு சீதளம் தூக்கம் குறுகியகால நோய் வேகமாக வரும் நோய் சிவந்த முகம் தாகம் மலச்சிக்கல் அமைதியின்மை, தூக்கமின்மை இந்த பதிவில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் சிகிச்சை முறைகள், யின் மற்றும் யாங்கைச் சமப்படுத்தும் நோக்கத்திலேயே சொல்லப்பட்டிருக்கின்றன. கீழ்க்கண்ட 4 முறைகளில் ஒன்றைக் கையாளவும். 1. யாங் ச்சீயை அதிகப்படுத்துங்கள். 2. யின் ச்சீயை அதிகப்படுத்துங்கள். 3. அதிகமான யாங் ச்சீயைக் கலையுங்கள்; அமைதிப்படுத்துங்கள் அல்லது அப்புறப்படுத்துங்கள். 4. அதிகமான யின் ச்சீயைக் கலையுங்கள்; அமைதிப்படுத்துங்கள் அல்லது அப்புறப்படுத்துங்கள். vinodhan,  

யின் மற்றும் யாங் என்றால் என்ன? Read More »

Shopping Cart