Author name: Vinodhan

சித்தர்கள் கூறிய வாசி யோக முறை

Post Views: 4,670 “தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதம் மெய்வருத்த கூலி தரும்” திருக்குறள் சித்தர்கள் தயவின்றி வாசியை உணரமுடியாது. வேதங்களில் கூட விவரிக்காத வாசியை சித்தர்கள்தான் விளக்கி சாகாக்கல்வி என போதிக்கிறார்கள். வாசியை உணராத மாந்தர்கள் அதனை பல வழிகளிலும் வீணாக்கி பிறப்பிறப்பில் வீழ்கிறார்கள். வாசியை உணர்ந்த சித்தர்களே அதை எவ்வகையிலும் வீணாக்காது யோக ஞானத்தால் தம் உடல் உயிரை இணைத்து சோதியில் ஊடுறுவி இறவா நிலை அடைந்துள்ளார்கள். சில பேர் சொல்லுவார்கள் இந்த கலை சிலருக்கு மட்டும்தான் வரும் ஜாதக ரீதியா பிறந்தவர்களுக்கு மட்டுமே இந்த வாசியோகம் கலை சித்தியாகும் என்று ஆனால் திருவள்ளுவரின் வாக்கின்படி முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் இதை மட்டும் மனதில் நிறுத்திக் கொண்டால் போதும் கண்டிப்பாக இந்த சித்தர்களின் அரிய வகையாக பயன்படுத்துகிற சாலையில் உள்ள வாசியோகத்தை கற்றுக்கொள்ள முடியும் அதுபோலவே நாமும் சித்தர்கள் தயவைப் பெற்று இரகசியக் கலையான வாசியை அறிந்து இடைவிடா முயற்சியுடன் பயிற்சி செய்து வந்தால் இறவா நிலை அடையலாம். அல்லாது போனாலும் வாசியினால் நம் பிறவியில் புண்ணியத்தை கூட்டலாம். உயிர் காற்றிலிருந்து உடம்பு வளர்ந்தது. அப்பிராணனிலிருந்து தனஞ்செயன் என்ற காற்று பிரிந்து உடம்பில் மூலாதாரத்தில் ஒடுங்கியது. அக்காற்றை கருத்தோடிருந்து வாசியோகத்தால் இருத்தி எழுப்பி தலையில் ஏற்றி உயிரில் சேர்க்க வல்லவரான யோகி கிழவராக இருந்தாலும் இளமையோடே இருப்பர். அவர்கள் உடம்பு இதனால் சிவந்திடும். இது இறையருளால் என்னுளே தரித்து நிற்கும் சிவ சக்தி திருவடி என்பதே உண்மையாகும் என்கிறார் சிவவாக்கியர். இந்நிலை வாசியை அறிந்த உடனே கிடைத்துவிடாது. இவ்வாசிப்பயிற்சியை பொறுமையுடன் நம்பிக்கையுடன் முறையாக பழகிவர வாசி லயமாகும். தியானம கை கூடி நீடித்த பயன் கிடைக்கும். நிறைவேறும். எண்ணிய எண்ணங்கள் யாவும் இறையருளால்  வாசியை லயமாக்கவும் கைவல்யப்படுத்தவும் சித்தர்கள் இரண்டு வருடகாலங்கள் இப்பயிற்சியை இடைவிடாது செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். அதற்கு அவர்கள் வாசியோக பயிற்சிகளை ஐந்து நிலைகளாக போதிக்கின்றனர். அவைகள் குயில்கூத்து, மயில்கூத்து, ஞமலிக்கூத்து. மலைக்கூத்து, சர்ப்பக்கூத்து எனப்பெயர் பெறும். இவைகள் யாவையும் அறிந்து முறையாக பயின்று வந்தால் வாலையின் கிருபையினால்வாசி லயமாகி அவ்வாசியேகுருவாகி மெய்வழி காட்டும். வாசியை தவிர வேறு எவராலும் இறைவனைக் காட்டி வைத்து இறவாநிலை தரமுடியாது. எவ்வாறு இருப்பினும் உடம்பையும் உயிரையும் பாதுகாத்து நோய் நொடிக்கு ஆளாக்காது வைக்கும் வாசியினால் வரும் பலன்களை அடையுங்கள். அதனால் புண்ணியங்கள் உங்கள் பிறவியில் சேருமேயன்றி குறையாது. இதற்குகாலம் வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என அலட்சியப்படுத்தி இப்பிறவியையும் வீணாக்கிவிடாதீர்கள். இளமையிலேயே இதைக் கைக்கொண்டு புண்ணியக் கணக்கைபெருக்கி பலன் பெறுங்கள். இதைவிடுத்து எல்லாக்கர்மாக்களையும் முடித்து விட்டு இதைத் தேடலாம் என எண்ணினால் உங்களுக்கு வயதாகிவிடும். ஆதன்பின் வாசியோகம் செய்ய உங்கள் உடம்பு ஒத்துழைக்காது. ஆதலால்வாசியோகத்தைகாலத்தே அறிந்து பயிர் வாகியோகத்தை இல்லறவாசிகள் பயிலக்கூடாது என்றும் துறவிகளே செய்யதகுந்தவர்கள் என்று கூறுவோர் வாசியை அறியா தோசிகள். தன்னை அறிவதற்கு இல்லறம் தடையல்ல. இல்லறத்தில் இருந்து கொண்டே இவ்வாசியினால் இறவாநிலையை அடைந்து நமக்கும் வழிகாட்டுபவர்கள் சித்தர்களே. பயிற்சியின் அனுட்டானங்கள் வாசியோகப்பயிற்சியும் தியானமும் அதிகாலையில் எழுந்து செய்வதுவே உத்தமம். காலைக்கடன்களை முடித்து தந்தசுத்தி, நேத்ரசுத்தி, கபசுத்தி போன்றவைகளை செய்தபின் நீடாரடவும். இச்சுத்திகளை தச தீட்சை நூலில் விளக்கமாக தெரிவித்துள்ளோம். நீராடியபின் பூஜை அறையிலோ அல்லது தனி இடத்திலோ தரையில் ஏதேனும் விரிப்பைபோட்டு ஆசனத்தில் அமருங்கள்.பின் இறைத்துதிப் பாடல்களை மெய் பக்தியுடன் மெய்யுருகிப் பாடுங்கள். இந்நிலையில் இறைக்காதலாகி கண்ணீர் சிந்தி அழுங்கள். இதற்கு திருவாசகம் மிகவும் நன்று. குயில் கூத்து             இதுவே வாசியோகத்தின் முதல் பயிற்சி. முன் சொன்ன இயம நியமங்களை ஒழுங்கு முறையாக முடித்தபின் வாசியோகப் பயிற்சியைத் செய்வதுவே வஜ்ராசனத்தில் தொடங்குங்கள். இதற்கு ஆசனம் வஜ்ராசனம். கோவிலிலும் பெரியோர் காலிலும் விழுந்து வணங்குவதைப் போல் குனிந்து நிமிர்ந்து தொடர்ந்து செய்யும் யோகப்பயிற்சி. இதனை உணர்த்துவதற்கே நமஸ்காரம் என்பது. இப்பயிற்சியின் நுட்பம். அவர்களும் இப்பயிற்சியில் குனியும் போது ‘அல்லா’ என்றும் நிமிரும் போது ‘ஹீ’ என்பதை வாயால் சொல்லியே இவ்வணக்கத்தைச் செய்வார்கள். அல்லா ஹீ என்பதே அஉ என்ற எட்டிரண்டு மந்திரமே. அவர்கள் இந்த வாசியின் தந்திர இரகசியத்தை அறியாததால் இது வெறும் தொழுகையாக மட்டும் செய்யப்படுகிறது. ஆனால் நபிகள் நாயகமோ இக்கலையைசித்தர்களிடம்பெற்று அல்லாஹீ என்ற மந்திரத்தால் உண்ணாக்கில் ஊதி தான் அடைந்த இறை இன்பத்தை அனைவரும் அடையவேண்டியே இத்தொழுகையை இஸ்லாத்தின் கடமையாக அமைத்தார். எவ்வாறே ஆயினும் வாசியை தனக்குள்ளே உணர்ந்து இறைவனை அறிய வேண்டும் என்ற இஸ்லாத்தில் தொழுகையின் போது நமாஸ் செய்வதுவே நன்னோக்கம் கொண்டே இவ்வழி வகுத்தார். இதனை அறிந்துமெய்ப்பாடுபட்டு மெய்ப் பொருளையும் அறிந்து சும்மா இருந்து சுகம் காண்பவர்களே சூபி எனப்பட்டனர். இவ்வாசியை அறிந்து லாஹீத்து. மாஹித்து, மலஹீத்து, ஜெபஹித்து, பர்ஹித்து என ஐந்து வணங்கங்களையும் முறையாகப் பயின்றவரே கலிமா எனப்படுவர். இந்த வாசியையே அவர்கள் வாழ்வாக வந்தாலும் எந்திரமும் மந்திரமும் உண்மையென்றாலும் தந்திரம் அறியாத காரணத்தால் வாசியை அறிய முடியாது போகிறது. ஆகையால் சாதகர்கள் இவ்வுண்மையை உணர்ந்து கொண்டு அமர்ந்திருக்கும் போது இடது பாதத்தின் மீது வலதுபாதம் பொருத்தி உடலை நேராக நிமிர்த்தி இருக்க வேண்டும். ஆசனத்தில் இருந்த வண்ணமே தலையை தரையில் படும் வண்ணம் குனியும் போது அகாரத்தைச் சொல்லி மூலாதாரத்தில் காற்றை அழுத்த வேண்டும். உடனே நிமிரும் போது உகாரத்தைச் சொல்லி உண்ணாக்கில் வைத்து ஊத வேண்டும். இதுபோல் குனிந்து நிமிர்ந்து மந்திரத்தை உச்சரித்தவாறே இடைவிடாது தொடர்ச்சியாக சோர்வடையாமல் 45 நிமிட நேரம் பயிற்சி செய்ய வேண்டும். இதுவே வாசி பயிற்சியில் முதலாவதாக இருக்கும் குயில் கூத்து. இதனை இயற்கையிலேயே குயிலானதுகூவிக்கூவி உணர்த்துவதால் இது எனப்பட்டது. இதனை இரண்டு வருட அப்பியாசித்து வந்தால் வாலையின் காலம் குயில்கூத்து இடைவிடாது ஊதுகின்ற தந்திரத்தோடு ஊதுங்கள். வஜ்ராசனத்தில்             இப்பயிற்சியை செய்யும் மண்டைசளி,நெஞ்சுசளி, தொண்டை சளி என யாவும் வெளியேறிக் கொண்டே இருக்கும். அதனை விழுங்காது நேரத்தில் துப்பிவிடவேண்டும். எக்காரணம் கொண்டும் பயிற்சியிலிருந்து பயிற்சி முடியும் வரை எழுந்து விடக்கூடாது. இவ்வாறு 45 நிமிட நேரம் வாசிப்பயிற்சி முடித்த பின் பயிற்சி செய்த விரிப்பிலேயே வெளியே பத்மாசனத்தில் அமர்ந்து 45 நிமிடநேரம் தியானம் செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு முகூர்த்த நேரம் இவ்வாறு வாசிப்பயிற்சியை முடித்து தியானம் செய்வதுவே உத்தமம். மயில் கூத்து இதுவே வாசியோகத்தின் இரண்டுவுது பயிற்சி மந்திரத்தை மாற்றிப் பயிற்சிக்குமயில் கூத்து எனப்பெயர். வஜ்ராசனத்திலிருந்து குனியும் போது உகாரத்தை சொல்லி மூலாதாரத்தில் செலுத்தி உடன் நிமிரும்போது அகாரத்தை சொல்லி மேலேற்றுவதே மயில் கூத்து ஆகும். இது சற்று கடினமாயிருந்தாலும் தொடர்ந்து பயிற்சிசெய்ய இலகுவாகி அகாரம் கற்பமாக மாறும். இதனை இரண்டு வருட காலம் இடைவிடாது அப்பியாசித்து வந்தால் சிவதரிசனம் கிட்டி சிவனருள் பெறுவர். இப்பயிற்சியை குயில் கூத்து 10 நிமிடநேரம் செய்து விட்டு அப்படியே மாற்றிப்போட்டு மயில் கூத்தை 35 நிமிடம் செய்த பின்பு 45 நிமிடநேரம் தியானம் செய்ய வேண்டும். இவைகளை எந்ந நேரத்திலும் உணவு அருந்துவதற்கு முன்பும் உணவு உண்டு 45 நிமிடநேரம் கழிந்த பின்பும் செய்யலாம். எவ்வாறாவது தினசரி மறவாமல் இப்பயிற்சிகளை செய்பவர்க்கே வாசிலயமாகும். இக்கூத்தை இயற்கையிலேயே மயிலின் கூகையிலேயே இறைவன் காட்டியுள்ளான். மயிலின் சத்தம் முருகா என்று சொல்வதாவே இருக்கும். அது அகாரத்தையே நமக்கு உணர்த்துவதை உன்னிப்பாககவனித்து கேட்டுப்பாருங்கள். இந்த மயில் கூத்தின் மகிமைகளை அறிந்து கொள்ளுங்கள். இவ்வாறு செய்யும் மயில்கூத்து குயில்கூத்து பயிற்சிகளால் ஆறு ஆதாரங்களும் சுத்தியாகும். உள் உறுப்புகள் யாவும் திறம்பட இயங்கும். உடலில் சுறுசுறுப்பும், தைரியமும் நிறைந்திருக்கும். உடம்பும் உயிரும் வலுப்பெறும். உண்மைகளை உணர்ந்து உண்மையுடன் உழைத்திருங்கள். குயில்கூத்தில் உகார கற்பமும் மயில்கூத்தில் அகார கற்பமும் உள்ளுக்குள்ளேயே முடியும். ஞமலி கூத்து இதுவே வாசியோகத்தின் முன்றுவுது பயிற்சி  பத்மாசனத்தில் அமர்ந்து செய்ய வேண்டிய மூன்றாவது பயிற்சி ஞமலி கூத்து எனப்பெயராகும். ஞமலி என்பது நாய். இயற்கையிலேயே நாய் காட்டித்தரும் பயிற்சியே இதுவாகும். குணங்குடியாருக்கு நாய்தான் வாசியை காட்டிக்கொடுத்தது. அடியார்கள் யாவறும் இறைவனிடம் வேண்டும் போது தன்னை ‘நாயேன்’ என்று உவமானப்படுத்தியே பாடுகின்றனர். இப்பயிற்சி ஆசனத்தில் இப்பயிற்சியினால் சுழுமுனை திறக்கப்பட்டு வாசி முதுகுத்தண்டின் வழியாக அமர்ந்த நிலையில் மேலேறுவதை சாதகர்கள் அறிந்து ஆற்றுவது. கொள்ளலாம்.இப்பயிற்சியினால் எல்லா போகும். வினைகளும் நோய்களும் பொசுங்கிப் ஆசனத்தில் அமர்ந்த வண்ணம் நாய் ஓடி வந்து நிற்கும் போது தன் வாயைத் திறந்த வண்ணம் காற்றை உள்ளும் புறமும் வேகமாக இழுத்து இரைத்துக் கொண்டே நிற்பதைப் பார்த்திருப்பீர்கள். அதுபோலவே உடம்பு அசையா வண்ணம் காற்றை மட்டும்கண்டத்தில் வைத்து கதிகொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அதற்கு மந்திரங்களை நீங்கள் எதுவும் சொல்லி வாசியை இயக்க வேண்டாம். ஏனெனில் குயில்கூத்தாலும் மயில்கூத்தாலும் உகாரமும் அகாரமும் சித்தியாகி நாம் விடும் மூச்சே எட்டிண்டாக மாறி நடப்பதால் ஞமலி கூத்தில் மந்திரம் சொல்ல வேண்டியதில்லை. இதுவே சிவகதியாக தானாக நடந்திடும். ஆதலால் இந்த கதியை மட்டும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொடுத்து வாசியை மூலாதாரத்தில் செலுத்துங்கள். வாசி கீழிறங்கியதும் குதத்தை அகாரத்தால் இறுக்கி மூடினால் ஒன்பது வாசலும் தானே அடைப்படும். உடனே இம் என்ற ஒரெழுத்தால் உண்ணாக்கில் வைத்து மேலேற்றுங்கள். இப்போது மேலேறுவதை உணர்வீர்கள். வாசியை வாசி முதுகுத்தண்டின் வழியாக இது போல் இப்பயிற்சியை மட்டும் சித்தர் நெறியில் இருப்போரிடம் அறிந்து கொண்டு அதற்கு வெவ்வேறு பெயர்களை சூட்டி அதற்கும் கட்டணம் விதித்து இதை யோக ஞானம் என்று பல குருக்களும்கற்றுத் தருகிறார்கள். எந்திர, மந்திர, தந்திரம் சொல்லாமல் சொல்லிக் கொடுக்கும் கலை எப்படி சித்தியமாகும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசி உண்மையை மறைத்து உபதேசம் தந்து பணம் கரப்பது எப்படி உண்மையாக இருக்கும் மலை கூத்து இதுவே வாசியோகத்தின் நான்காவதுபயிற்சி இறைவனைக்காண கடுமையான மலை ஏற்றங்களில் ஏறும் போது அவரவர்க்குள்ளே வாசியாக நடக்கும்.

சித்தர்கள் கூறிய வாசி யோக முறை Read More »

கர்மாவை சுத்தப்படுத்தும் முறை!

Post Views: 521                   உலகத்தில் எல்லோருக்கும் திருஷ்டி என்ற ஒரு விஷயம் அதிகமாக இருக்கிறது அதாவது கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று கூறுவார்கள் அதே அந்தக் கண்ணடி பட்டால் அவர்கள் வாழ்க்கை மிகவும் கஷ்டமான வேதனையாக வாழ்க்கையாக மாறும் அதை சரிசெய்ய இதைப்போன்ற திருஷ்டி சுற்றிப் போடுதல்             நம்முடைய முன்னோர்கள் ஆதிகாலம் முதல் பயன்படுத்தி வந்தார்கள் இதை சரியான முறையில் செய்தாலே போதும் நம்முடைய பிரச்சினை அனைத்தும் நம்மை விட்டு விலகிச்செல்லும் இதை ஒரு சிலர் கர்ம வினை சுத்தப்படுத்த பயன் படுத்துகிறார்கள் அதாவது இந்த திருஷ்டியை ஆன்மாவின் கருமையம் என்று ஒன்று இருக்கிறது அப்படி என்றால் ஆன்மாவிற்கு உள்ளிருக்கும் ஒரு கர்மவினையின் முறை அதை நீக்குவதற்காக பல ஆயிரக்கணக்கில் பணம் வசூலிக்கிறார்கள் இது மிகப்பெரிய தவறு காரணம் கர்மவினையை யாராலும் சுத்தப்படுத்த முடியாது அப்படி ஒருவன் சுத்தப்படுத்த தயாராக இருந்தால் அது யார் என்றால் நீங்கள் மட்டும் தான் காரணம் கர்மவினை என்பது உங்களின் நம்பிக்கையின் அடிப்படையில் இயங்குகிறது அந்த இயக்கத்தை ஒருவன் உங்கள் மூலம் சம்பாதித்து கொள்கிறான் அவ்வளவுதான் அதனால் கர்மவினையை சுத்தப்படுத்த போகிறேன் என்று யோசிக்காமல் இந்த முறையில் பயன்படுத்துங்கள் இதன் அடிப்படை காரணம் வெறும் நெருப்பு மட்டுமே இந்த நெருப்பு உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து வண் கண்ணும் பொல்லாப்பும் நோய்களையும் கஷ்டங்களையும் நீக்கும் முறை இதுதான் இந்த திருஷ்டி போடுதல் உங்களுடைய கர்மவினையின் அழிக்கும் இதற்கென்று எள்ளளவும் செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை நம்முடைய ஆதிகால முன்னோர்கள் இதை பயன்படுத்தி வந்தார்கள்                 விஞ்ஞானம் என்ன சொல்கிறது என்றால் ஆரா என்று சொல்லுகிறது திருஷ்டி சுற்றிப் போடுதல் காரணமாக நம்முடைய ஆராவின் சுற்றளவு அதிகமாகிறது இந்த திருஷ்டியை வாரத்திற்கு இரண்டு முறை செய்தாலே போதும் கர்ம வினை என்றால் நம்மை சுற்றி இருக்கும் செயல்கள் நம் முன்னோர்களின் செயல்கள் அனைத்தும் நம்மை பாதிக்கிறது என்ற ஒரு நம்பிக்கை இந்த சுற்றி போடும் முறையை பயன்படுத்தும் பொழுது அந்த கர்மவினை உங்களிடம் சுத்தமாகும் அவர்கள் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யும் இது நம்முடைய முன்னோர்களின் வாக்கு.                                                                                                                    திருஷ்டி சுற்றி போடுதல் முறை 1. கற்பூரம் ஏற்றுதல்: கற்பூரத்தை ஏற்றி வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு, தரையில் ஒரு தட்டு தட்டிவிட்டு கற்பூரத்தை வாசலில் போட்டுவிடுவர். கற்பூரம் கரைய கரைய நம்மீது விழுந்த திருஷ்டியும் கரையுமாம். 2. சிகப்பு மிளகாய் சுற்றி போடுதல் சிகப்பு மிளகாயை கையில் எடுத்துக்கொண்டு வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு அதை நெருப்பில் போட திருஷ்டி கழியும் என்பதும் ஒரு நம்பிக்கை. திருஷ்டி இருந்தால் மிளகாய் வெடிக்கும் ஆனால் நமக்கு கமறாது. திருஷ்டி இல்லையெனில் நமக்கு நெடி ஏற்பட்டு கமறும். 3. உப்பு சுற்றி போடுதல்: கல் உப்பை சிறிது வலது கையில் எடுத்துக்கொண்டு வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு அதை நீரில் போட்டு கரைக்க அந்த உப்பு கரையும்போழுது நம்மீது விழுந்த திருஷ்டியும் கரையும் என்பதும் ஒரு நம்பிக்கை. 4. படிகாரம் சுற்றுதல்: மிளகாய் சுற்றி போடுவதுபோலவே படிகாரம் கொண்டும் திருஷ்டி சுற்றி போடலாம். திருஷ்டி இருந்தால் நெருப்பில் போடப்பட்ட படிகாரம் ஒரு பொம்மை மாதிரி மாறிவிடுமாம். 5. கருப்பு வளையல் பிறந்த சில நாட்களே ஆன குழந்தைகளுக்கு கருப்பு வளையலை ஆரத்தியுடன் சேர்த்து சுற்றிபோடும் வழக்கம் இன்றும் நாம் பல வீடுகளில் காண்கிறோம். 6.மண் : சிறிது மண்ணை கையிலெடுத்து திருஷ்டி சுற்றிவிட்டு அதில் எச்சிலை 3 முறை துப்பச்செய்து அதை வெளியில் எறிந்தால் திருஷ்டி போய்விடும் என்பதும் இன்றும் நம்பப்படுகிறது. 7. எலுமிச்சை குங்குமம்: சில வியாபார ஸ்தலங்களுக்கும், வண்டி வாகனம் , வீடு முதலியவற்றுக்கும் எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அவற்றின்மேல் குங்குமத்தை தடவி திருஷ்டி சுற்றி விட்டு வெளியிலோ அல்லது முச்சந்தியிலோ எறிவதையும் இன்றும் நாம் பின்பற்றுகிறோம். 8. பூசணிக்காய் உடைத்தல் பூசணிக்காயில் குங்குமத்தையும் சிறிது சில்லறைகளையும் போட்டு அதன்மீது கற்பூரம் ஏற்றி திருஷ்டி சுற்றி விட்டு வீதியிலோ அல்லது வீதிகள் சந்திக்கும் இடத்திலோ உடைத்தால் திருஷ்டி சிதறிவிடும் என்று பரவலாக நம்பப்பட்டு வருகிறது. 9. தேங்காய் உடைத்தல் ஒரு தேங்காயின்மேல் கற்பூரத்தை ஏற்றி திருஷ்டி சுற்றி விட்டு வீதியிலோ அல்லது வீதிகள் சந்திக்கும் இடத்திலோ உடைத்தால் திருஷ்டி சிதறிவிடும் என்றும் பரவலாக நம்பப்பட்டு வருகிறது. 10. ஆரத்தி கல்யாணம், பூஜை முதலியன முடிந்தவுடனும் மற்றும் சில முக்கியமான சமயத்திலும் ஆரத்தி எடுக்கும் வழக்கம் நம் நாட்டில் வெகு காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதுவும் ஒரு விதமான திருஷ்டி கழித்தலே ஆகும். 11. பட்சி திருஷ்டி குழந்தை பிறந்த வீடுகளில் மாடியில் குழந்தை துணியை உலர வைத்திருப்பார்கள். அவற்றை சூரியன் மறைவதற்குள் எடுத்துவிடுவார்கள். ஏனென்றால் சூரிய அஸ்தமன சமயத்தில்தான் பறவைகள் தமது கூட்டுக்கு திரும்புமாம். அப்பொழுது அவை இத்துணிகளைப்பார்த்து கண் வைக்குமாம். அது குழந்தைக்கு ஆகாது. ஆகவேதான் துணிகள் சூரியன் மறைவதற்குமுன் எடுக்கப்படுகின்றன. பொதுவாக திருஷ்டி சுற்றி போடும்பொழுது அனைவரும் நெற்றியில் பொட்டோ, குங்குமமோ அல்லது விபூதியோ இட்டுக்கொண்டிருக்க வேண்டும். கிழக்கு நோக்கி நிற்கச்சொல்லி திருஷ்டி சுற்றி போடவேண்டும் இப்படி சுற்றும்பொழுது திருஷ்டி மந்திரம் தெரிந்தவர்கள் அதை கூறி சுற்றுவர். பெரியவர்கள் “தன் திருஷ்டி, தாயார் திருஷ்டி, நாய் திருஷ்டி, நரி திருஷ்டி, உற்றார் திருஷ்டி …..” என்று பலவிதமான திருஷ்டிகளை கூற கேட்டிருக்கிறேன். திருஷ்டி மந்திரத்தை மனதிற்குள்தான் கூறவேண்டுமாம். அதை ஒரு குருவின்மூலம் உபதேசம் பெற்றுதான் பிரயோகிக்கவேண்டும். தான் உபதேசம் பெற்ற திருஷ்டி மந்திரத்தின் சக்தியை அதிகரிக்க அவற்றை கிரஹண சமயத்தில் நீர்நிலைகளில் நின்றுகொண்டு ஜெபிக்க அவர்களுக்கு அந்த மந்திரத்தின் சக்தி கூடும் என்பதும் ஒரு நம்பிக்கை. சீமந்த புத்திரன் அல்லது புத்திரி திருஷ்டி சுற்றி போட்டால் பலன் அதிகம் என்றும் கூறுவார்கள்.  வெளிநாட்டினர் கூட திருஷ்டி படாமலிருக்கட்டும் என்பதற்காக மரத்தை தொடுவார்களாம் “டச் வுட் ” என்று கூறிக்கொண்டு.பொதுவாக ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமை மற்றும் அமாவாசை தினங்கள் திருஷ்டி சுற்றி போடுவதற்கு ஏற்ற தினமாக கருதப்படுகிறது. அதுவும் அமாவாசையும் ஞாயிற்றுக்கிழமையும் சேர்ந்து வந்தால் அது திருஷ்டி சுற்றி போடுவதற்கு மிகவும் ஏற்ற தினமாகும். சூரிய அஸ்தமன சமயம்தான் திருஷ்டி சுற்றி போடுவதற்கு ஏற்ற தருணமாக கருதப்படுகிறது.இந்த பழக்கத்தையெல்லாம் எப்படி நம்புவது என்றும் சிலர் கேட்கிறார்கள். வந்த வியாதி குணமடையாமல், வந்த தடைகள் விலகாமல் இருந்திருந்தால் யாராவது இன்று திருஷ்டி சுற்றி கொள்ள முன்வருவார்களா? பலன் கிடைப்பதனால்தானே இந்த பழக்கம் ஆயிரக்கணக்கான வருடங்களாக விட்டுப்போகாமல் இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  இதைவிட என்ன சான்று வேண்டும் நமக்கு போதுமானது காரணம்.            இந்த திருஷ்டி சுற்றிப் போடுதல் பல காலங்களாக நம் முன்னோர்களின் வழக்கமாக இருக்கிறது நம் வீட்டுக்கு பலர் வந்து விட்டு சென்றாலும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சுற்றிப் போடுங்கள் வெளியில் சென்றுவிட்டு வந்தாலும் அதாவது மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் உங்கள் மேல் கவனம் வைத்து உங்களிடம் பேசுபவர்கள் யாரிடமும் நீங்கள் சென்று வந்தாலும் இரவு தூங்கும் முன் சுற்றி போடு தலை வழக்கமாக்கி கொள்ளுங்கள் இது நம்முடைய முன்னோர்கள் கடைபிடித்த அழகான முறை இதை செய்தாலே போதும் வாழ்க்கையில் நமக்கு எந்த திருஷ்டியும் வரவே வராது மனமும் உடலும் ஆரோக்கியமாக வாழ்நாள் முழுக்க இருக்கும் தீர்காயுள் அதிகமாகிக் கொண்டே இருக்கும் vinodhan, #vinodhan

கர்மாவை சுத்தப்படுத்தும் முறை! Read More »

உடலில் செய்யும் அதிசயங்கள்

Post Views: 368             ஓம் என்ற மந்திரம் உலகிற்கே உரித்தான மந்திரம் என்று வேதகாலத்து ரிஷிகள் கூறி இருப்பதையும் அந்த உன்னத மந்திரத்தை வேத உபநிடதங்கள் போற்றித் துதிப்பதையும் நன்கு அறிவோம். ஓம் என்ற மந்திரம் உலகிற்கே உரித்தான மந்திரம் என்று வேதகாலத்து ரிஷிகள் கூறி இருப்பதையும் அந்த உன்னத மந்திரத்தை வேத உபநிடதங்கள் போற்றித் துதிப்பதையும் நன்கு அறிவோம். இந்த நவீன யுகத்திற்கேற்ற விஞ்ஞான மந்திரம் அது என்று புதிய ஒரு ஆய்வின் முடிவில் ஆராய்ச்சியாளர்கள் சொல்லும்போது நமது வியப்பின் எல்லைக்கு அளவில்லை;          இந்த ஆராய்ச்சியில் அவர்கள் இறங்கக் காரணம் நாளுக்கு நாள் வணிகம் செய்வோர்,தொழிற்சாலை அலுவலகங்களில் பணிபுரிவோர் உள்ளிட்ட அனைவருக்கும் ஏற்படும் தாங்கமுடியாத மன அழுத்தமும் அதனால் ஏற்படும் வேதனைகளும் அவர்களைப் படுத்தும் பாடும்தான்!உளவியல் ரீதியிலான மன அழுத்தத்திற்கு மருந்து எது என்று ஆராயப்புகுந்த அவர்கள் ஓம் மந்திர உச்சரிப்புதான் அதற்கான மாமருந்து என்று சோதனை மூலமாகக் கண்டுபிடித்தனர்.         ஓம் என உச்சரிப்பதால் ஒரு புதிய உத்வேகம் உடலில் ஏற்படுவதையும் பிரக்ஞை தூண்டப்படுவதையும் மனதின் வரையறுக்கப்பட்ட தடைகள் இந்த மந்திரஒலியால் மீறப்படுவதையும் அவர்கள் உறுதிப்படுத்துகின்றனர்.இதைக் கண்டுபிடிக்க அவர்கள் வேவ்லெட் ட்ரான்ஸ்பார்ம்ஸ் மற்றும் டைம் ப்ரீகுவென்ஸி அனாலிஸிஸ்(Wavelet Transforms,Time- frequency Analaysis) ஆகிய உத்திகளைப் பயன்படுத்தினர் ஓம் என உச்சரிக்கும்போது ஈஈஜி அலைகளில் மாறுதல்கள் ஏற்படுவதையும் மூளையில் ஒலியினால் மின் செயல் மாறுபாடுகள் ஏற்படுவதையும் அவர்கள் நவீன சாதனங்கள் மூலம் குறித்துக் கொள்ள முடிந்தது.ஈஈஜி சிக்னல் மூலம் ஓம் என்பதை உச்சரிப்பதற்கு முன்னரும் பின்னரும் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் மாறுதல்களை அவர்களால் கண்காணிக்க முடிந்தது. மந்திர ஒலிகள் மனிதர்களின் நரம்பு மண்டலத்தில் அதிசயமான நல்லவிளைவுகளை ஏற்படுத்துகின்றன என்கிறார்கள். ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற முப்பெரும் தொழில்களை பிரம்மா,விஷ்ணு,ருத்ரன் ஆகியோர் செய்வதை இந்து தர்மம் கூறுவதையும் ஓம் மந்திரத்தில் உள்ள அகார,உகார,மகாரங்கள் “பிரம்மா,விஷ்ணு,ருத்ரனை”க் குறிப்பதையும் அனைவரும் அறிவர்.       ஓம் என நாம் ஒலிக்கும்போது பிரபஞ்ச ஆற்றல்கள் நேரடியாக அதிர்வுகள் மூலமாக நமது உடலில் நுழைகின்றன.வாயின் பின்புறம் உதிக்கும் “அ” சுவாசிப்பு அமைப்பில் அடிவயிற்றில் உணரப்படுகிறது. வாயின் நடுவில் பிறக்கும் “உ” மார்புப்பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.குவிந்த உதடுகளில் வழியே வரும் “ம” தொண்டை மற்றும் தலையில் உள்ள சுவாச அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. *இந்த ஒவ்வொரு ஒலியும் ஒரு குறிப்பிட்ட ஆற்றலை உடலின் சிறு திசுவிலிருந்து முழுசுவாச அமைப்பு வரை ஏற்படுத்துகிறது. ஓம் முழுதாக ஒலிக்கப்பட்டவுடன் பிராண ஆற்றல் உடல் முழுவதும் பாய்கிறது. ஏழு சக்கரங்களிலும் அதிர்வு. 20 நிமிடங்கள் ஓம் ஒலிக்கப்பட்டவுடன் மூளையிலும் நரம்புமண்டலத்திலும் ஏற்படும் மாறுதல்கள் துல்லியமாக ஆராயப்பட்டன.இந்த ஆய்வின் முடிவில். 1. ஓம் மந்திரத்தை உச்சரிப்பதால் மன அழுத்தம் குறைகிறது. 2. எதன் மீதும் செய்யப்படும் கவனக்குவிப்பு அதிகரிக்கிறது. 3. ஏழு உச்சநிலைகளைக் கொண்ட ஓம்,உடலின் ஏழு சக்கரங்களில் அதிர்வெண் மூலமாக ஒரு பெரிய குறிப்பிடத்தக்க மாறுதலை ஏற்படுத்துகிறது என்று கண்டார். ஒலியால் உடலை ஒருங்கிணைக்கும் ஓம். *ஓம் மந்திரத்தை உச்சரிக்கும்போது மிகவும் நுண்ணிய உறுப்பான காதுகள் மெடுல்லா மூலமாக உடலின் திசுக்களை இணைக்கிறது.நமது உடலின் தன்மை,சமன்பாடு,நெகிழ்வுத் தன்மை,பார்வை அனைத்தும் ஒலியால் பாதிக்கப்படுவதால் ஓம் உருவாக்கும் நல்ல ஒலி நன்மையைத் தருகிறது.இது வேகஸ் நரம்பு மூலமாக உள்காது, இதயம், நுரையீரல்,வயிறு, கல்லீரல், சிறுநீரகப்பை, சிறுநீரகங்கள், சிறுகுடல், பெருங்குடல் ஆகிய அனைத்து உறுப்புக்களையும் இணைத்து நன்மையை நல்குகிறது.  ஓம் என்ற சொல்லை உரக்கச் சொல்வோம் ஆரோக்கியமாக வாழ்வோம். இந்த வாய்ப்பை வழங்கிய மாஸ்டர் வினோத் அவர்களுக்கு நன்றி.. Hipnotist Karthik…

உடலில் செய்யும் அதிசயங்கள் Read More »

மன்மத கலையின் உச்சகட்ட பேரின்ப சுகம் கொண்ட சூட்சமங்கள்

Post Views: 977                        மன்மதக் கலையின் உச்சகட்ட பேரின்ப சுகம் கொண்ட சூட்சமங்கள்….சாதாரணமான மனிதர்கள் மன்மதன் என்றால் ஒரு ஆண் பல பெண்களை தன் வசப்படுத்தி அவர்களை உடலுறவு கொள்வது என்று கூறுவார்கள். இதனை பிளேபாய் என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.ஆனால் இவை முற்றிலுமாக தவறான ஒன்று ஏனென்றால் ஒருவனுக்கு ஒருத்தி என்கிற புனிதம் இங்கே களைகிறது. ஏன் மன்மதன் என்று கூறுகிறார்கள் என்றால் ஒரு ஆண் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தி தனது அழகின் மூலம் ஒரு பெண்ணை தன் வசப்படுத்தி அந்தப் பெண்ணுக்கு உரிய சுகங்களை கொடுத்து அவளை முழுமையாக திருப்திப் படுத்த தெரிந்தவனே உண்மையான மன்மதனே தவிர ஒரு ஆண் பல பெண்களை உடலுறவு கொள்வது அல்ல எல்லோரும் தவறாக புரிந்து இருக்கிறீர்கள். ஒவ்வொரு மனைவிக்கும் அவன் கணவன் மன்மதனாக தெரியவேண்டும். அதற்கு நாம் இயற்கையாகவே இருக்கும் காம உணர்ச்சிகளை கொண்டு நாம் அவர்களை அனுபவிக்க கூடாது.                 உடல் உறவு என்றாலே இப்போது யாருக்கும் சரியாகத் தெரியவில்லை இதோ சில ஆபாசமான திரைகளைப் பார்த்து அரையும் குறையுமாக ஏதோ ஈடுபட்டு குழந்தைகளை பெற்று தள்ளுவது முழுமையான சுகம் இருவருக்கும் அறவே கிடைக்காது. ஏனென்றால் மனிதனுக்கு அதைப்பற்றிய விழிப்புணர்வு இல்லை. ஏனென்றால் பெரும்பாலான பெண்களுக்கும் ஆண்களுக்கும் உச்சகட்டம் என்றால் என்னவென்றே தெரியவில்லை.என்று சில புள்ளி விவரங்கள் கூறுகிறது. ஒரு மனிதனுக்கு முதலில் ஏன் காம உணர்ச்சி எழுகிறது இரு உயிர்கள் காமத்தால் இணைந்து முழுமையான அன்பையும் செலுத்தி குழந்தையாக நாம் வெளியே வருகின்றோம். அதீத காம உணர்ச்சிகளை கொண்ட கலவையினால் நாம் குழந்தையாக பிறந்தோம்.அப்போ நாம் காமமா அல்லது அன்பா எது முதலில் வந்தது. அதாவது கோழியிலிருந்து முட்டை வந்ததா அல்லது முட்டையிலிருந்து கோழி வந்ததா என்ற கேள்விக்கு பெரும்பாலானோர் கோழியில் இருந்துதான் முட்டை வந்தது என்று கூறுவார்கள். அதே போல் தான் காமத்தில் இருந்துதான் அன்பு என்கிற உணர்வானது வந்தது. ஆகவே இங்கு காமம் ஆனது அன்பாக மாறியது. ஓருயிர் முதல் ஆறு அறிவு வரை அனைத்தும் காமத்தில் உருவானதே உலக உற்பத்தியே காமமே. சரி இந்தக் காமத்தை கொண்டு கடவுளை அடைய முடியும் என்று ஆன்மீகவாதிகள் அனுபவித்து கூறிவிட்டு சென்று இருக்கிறார்கள் அது ஒரு பக்கம் இருக்கட்டும் அது எல்லாம் பிஎச்டி லெவல். முதலில் நாம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும்.                  இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு ஆணும் பெண்ணும் எது இருக்கிறதோ இல்லையோ பணம் படிப்பு போன்றவை இல்லாமல் போனாலும் சரி இந்த காம உணர்ச்சியை கொண்டு உலகில் நீங்கள் பார்த்திராத பேரின்ப சுகம் இதில் உள்ளது. இதில் உள்ள முழுமையான உச்சகட்ட பேரின்ப சுகத்தை ஒவ்வொரு ஆணும் பெண்ணும் அனுபவித்தே ஆக வேண்டும். அதற்கு முதலில் இந்த உணர்வு வருகிறதா அதனை நீங்கள் வெறுக்கக் கூடாது. உதாரணமாக நீங்கள் எங்கேயோ செல்கிறீர்கள் அல்லது பெண்களை பார்க்கிறீர்கள் பெண் ஆண்களை பார்க்கிறாள் அப்போது இந்த உணர்வு வந்தால் அதனை நீங்கள் வரவேற்க வேண்டும். தனிமையில் இருக்கும் போது காம உணர்வு அடைந்தால் நீங்கள் விந்து என்கிற தாது உன்னை வெளிப்படுத்த கூடாது என்று சொன்னாலே அதனை வெளிப்படுத்துகிறோம். அதாவது விந்துவை மாதம் இரண்டு நாட்கள் வெளிப்படுத்தலாம். இது தவறில்லை உடலுக்கு அதீத ஆரோக்கியத்தை தரும். ஆனால் அனைவருக்கும் ஒருகேள்வி இந்த உணர்வு ஏன் நமக்கு வருகிறது என்று சிந்தித்துப் பார்த்தீர்களா? உடனே மக்கள் கூறியது என்னவென்றால் குழந்தை பெற்றெடுப்பதற்கு இனப்பெருக்கம் செய்வதற்கு கல்யாணம் செய்வதற்கு போன்ற பதில்கள் அவர்கள் இடத்தில் இருந்து வரும். ஏனென்றால் நமக்கு தெரிந்தது எல்லாம் இதுதான் குழந்தை கல்யாணம் இனப்பெருக்கம் ஆனால் இதில் உள்ள சூட்சமங்களை மறைத்து வைத்து உள்ளார்கள்.              நீங்கள் சிந்தித்துப் பாருங்கள் இதனை நாம் தவறாக கருதுகிறோம் வெளிப்படையாக பேச கூச்சப்படும் வெட்கப்படுகிறோம் ஆனால் பலருக்கும் தெரிந்த ஒன்று ஆலயங்களில் அழகுப் பதுமைகளின் அந்தரங்க லீலைகளை அப்படியப்படியே சிற்பங்களாக வடிவமைத்து ஆலயம் எங்கும் நிறுத்தி இருக்கும் நம் முன்னோர்கள் என்ன முட்டாள்களா அவர்களில் சந்ததியிலே வந்தவர்கள் நாம் அப்போ அவர்கள் அந்த மன்மத கலை எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் எந்தக் கலை தெரிகிறதோ இல்லையோ இந்தக் கலை தெரிந்தால் தான் நம் சொர்க்கம் என்னும் உச்சகட்ட இன்ப நிலைக்கு போக முடியும் நான் கூறுவது வேறு இன்ப உலகம். ஆனால் மனிதர்கள் இதனை இச்சையாகவும் ஏதோ தவறானதாகவும் கருதுகிறார்கள். சரி கலை என்கிறோமே இதை எங்கு கற்பது இவை எங்கும் இல்லை                           இயற்கையாகவே நம்மிடத்தில் உண்டு ஆனால் இதை நமக்கு சரியாக பயன்படுத்த தெரியாமல் நாம் இச்சையாகவும் அசிங்கமாகவும் கொண்டுவிட்டோம். இதனை முறையாக பயன்படுத்தி அதில் உள்ள பேரின்பத்தை கண்ட ஞானிகள் இதை ஒழுங்கான முறையில் வைத்திருக்கிறார்கள். ஆனால் இப்போது நாம் செய்யும் வேலைகள் முழுமையாக தவறு என்று நான் கூறுவேன். எல்லோரும் இதை தவறாக பயன்படுத்தி மோசமான நிலையில் உள்ளீர்கள் ஒழுங்கான முறையில் கற்றுக்கொண்டு களத்தில் இறங்குங்கள் மன்மதன் நீங்கள்தான் மன்மத ராஜா அல்லது மன்மத ராணி நீங்கள்தான் சிலர் இதை படித்து தவறாக புரிந்து கொள்ளக் கூடாது. வேலை செய்வதை போய் கற்றுக் கொள்ள வேண்டுமோ என்று நினைக்கலாம். தவறு இதனை முறையாக பயன்படுத்தி சொர்க்கத்தை கண்டவர்கள் ஏராளம்.                            சந்தோஷம் கொண்ட வாழ்க்கை என்று நீங்கள் எண்ணுவது ஐந்து நிமிட அற்ப சுகம் ஆனால் நான் கூறுவது ஆயுள் முழுக்க நிரந்தர சுகம்.அதாவது பேரின்பம். ஆகவே இதனை முழுமையாக கற்றுக்கொண்டு சந்தோஷமான வாழ்க்கை உங்களுக்கு காத்திருக்கிறது. ஏனென்றால் நாம் அனைவரும் சந்தோஷமாக இருக்கத்தான் இந்த உலகத்திற்கு வந்திருக்கிறோம். அந்த சந்தோஷம் நான் சொல்கிற கலையின் மூலமாக உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் அதற்கு நீங்கள் முதலில் இந்த கலையை முழுமையாக பயில வேண்டும். அதை ஆன்மீக ரீதியில் தந்த்ரா என்று கூறுவார்கள். இது உச்சகட்ட இன்ப நிலை ஆகும். இதை முழுமையாக கற்றுக் கொண்டால் நீங்கள் சந்தோஷமாக இருக்க முடியும் நீங்கள் நினைப்பதைப் போல் நான் உறவு கொள்வதை இதில் பேசவில்லை இதற்கும் ஒரு படி மேலாக இந்த காம உணர்வில் சூட்சமங்கள் இருக்கிறது. இதற்குள் தான் அனைத்தும் இருக்கிறது.அதனை முறையாக அறிந்திருக்க வேண்டும். நான் இதைக் கற்றுக் கொண்டேன் எனது குருவின் மூலன் !!!! நன்றி மகிழ்ச்சி!!!! Hipnotist Sivaganesh………..

மன்மத கலையின் உச்சகட்ட பேரின்ப சுகம் கொண்ட சூட்சமங்கள் Read More »

பித்தம் அதிகரிக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும் தெரியுமா…?

Post Views: 352 பித்தம் சேராமல் பார்த்துக் கொள்வோம்— பித்தம் அதிகரிக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும் தெரியுமா…? உடலுக்கு தேவையான தண்ணீரை எடுத்துக் கொள்ளவில்லை என்றால் உடலில் நீர் சத்து குறைந்து பித்தம் அதிகமாகும். தினமும் போதியளவு தண்ணீர் எடுத்துக்கொள்வது அவசியம். அதிக கொழுப்பு சத்துள்ள உணவுகளை உண்ணும் போது உடலில் பித்தம் அதிகமாகும். காரணம் கொழுப்பு நிறைந்த உணவுகள் செரிமானம் அடைய தாமதமாகும். இதனால் உடலில் அதிகளவு பித்தம் சுரக்கப்படும். அதிக எண்ணெய் மசாலா தன்மையுள்ள உணவுகள் உண்பதை குறைத்துக்கொள்ள வேண்டும்.மது மற்றும் புகைப்பிடித்தல் பழக்கம் அதிகமாக இருந்தால் இது உடல் உஷ்ணத்தை தூண்டி பித்தத்திற்கு வழிவகுக்கும். மது மற்றும் புகைப்பிடித்தல் பழக்கத்தை கைவிடுவது பித்தம் குணமாக மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கும் மிக சிறந்தது. அதிக புளிப்பு தன்மை உள்ள உணவுகள், அதிக நொறுக்கு தீனிகள், காரத்தன்மை உள்ள உணவுகளை அதிகம் உண்பதாலும் உடலில் பித்தம் அதிகமாக சுரக்கும். எனவே இந்த உணவுகளை குறைத்துக்கொள்வது சிறந்தது. மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் பித்தம் அதிகரிக்கும். எனவே உணவில் அதிகம் நார்ச்சத்துக்கள் உள்ள உணவுகளை சேர்த்துக்கொள்வது நல்லது. இஞ்சியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டி தேனில் இரண்டு நாட்கள் ஊறவைத்து பின் காலையில் எடுத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும். பித்தம் குறைய வேண்டுமென்றால் இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஆழ்ந்த உறக்கம் உள்ளவர்களுக்கு என்னாளும் உடலில் பித்தம் சேரவே சேராது. பித்தம் குறைய வேண்டுமென்றால் நீர் மோர், அதிக நார்ச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பித்தம் அதிகமாக உள்ளவர்கள் உடல் பருமனாக இருப்பார்கள். இவர்கள் அறவே பால் சம்பந்தப்பட்ட அனைத்து உணவுகளையும் தவிர்த்தாலே பாதிப்பும் வராது. உடற்பயிற்சி யோகா மூலமாக பித்தத்தை குறைத்து கொள்ள முடியும்.நமது ஆரோக்கியம் ஒன்றே குறிக்கோள். இந்த வாய்ப்பை அளித்த வினோத் மாஸ்டர் அவர்களுக்கு நன்றி- Hypnotist Karthik #vinodhan

பித்தம் அதிகரிக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும் தெரியுமா…? Read More »

சித்தர்களின் பரியங்க யோகப் பயிற்சி முறை!

Post Views: 8,836 உயிர்களின் தோற்றத்திற்கும் உடல் இயக்கம் மற்றும் உயிர்களின் இயக்கத்திற்கும் விந்து தான் மூல காரணமாக இருக்கின்றது. சுக்கிலத்தின் மகிமைகளை பின்வரும் சித்தர்களின் பாடல்களின் மூலம் அறியலாம். “விந்தை விட்டவன் நொந்து கெட்டான்” “சுக்கிலம் விட சுவர் கெடும்”  திருமுலர்_வாக்கு “இந்தரியம் தீர்ந்துவிட்டால் சுந்தரியும் பேய்போல” விந்து இருந்தால் அறுபது வயதிலும் இளமையாக வாழலாம்… விந்து இல்லாவிட்டால் முப்பது வயதிலேயே முதுமை வரலாம்  இது நிஜம்……… போகியாய் வாழ்வதற்கும் விந்து வேண்டும்…………  யோகியாய் வாழ்வதற்கும் விந்து வேண்டும்………… ஏனெனில் உயிர்களின் தோற்றத்திற்கும் உடல் இயக்கம் மற்றும் உயிர்களின் இயக்கத்திற்கும் விந்து தான் மூல காரணமாக இருக்கின்றது சரி விந்து இழப்புக்கும் உடலுறவு கொள்ள முடியாமல் போவதுக்கும் என்ன தொடர்பு  அதிகமான விந்தை இழந்துவிட்ட ஒருவனது செயல்பாடுகள் அனைத்து செயல்களிலும் நிறைவனதகாவே இருக்காது. அது போல தான் உடலுறவிலும். உடல் சக்திஇன்மை தான் காரணம் அனைத்துக்கும் வேறு ஒன்றும் இல்லை.எனவே விந்தை விணடிக்காமல், உடலுறவு என்பது ஏதோ கழிவை கழித்தல் போல வைத்து கொண்டால் உடல் நன்றாக இருக்கும், அதை விடுத்தது, ஏதோ இன்பம் கிடைகிறது என்று அதை நோண்டி கொண்டே இருந்தால் உடல் பலம் கெட்டு  உடல் நோய்களின் இருப்பிடம் ஆகிவிடும். தந்த்ரா அல்லது பரியங்க யோகம்‌ என்பது காமமா? காமத்தில் பயன்படுத்தபடும் யுத்திகளா? என்றால் இல்லை .தியானம் என்றால் மக்கள் உடனே கவனத்தை‌ (concentration ) ஏற்படுத்துவது என்று புரிந்து கொள்வார்கள்‌. ஆனால் அது‌ எதன் மீதும்‌ உள்ள கவனத்தை இழப்பதாகும் (de concentration ). தியானம் என்பது அதன் தழைகீழ் நிலை . அதாவது (Reverse Engineering ). ஒரு பொருள் எவ்வாறு கோர்க்கபடுகிறது என்று அறிய அதை ஒன்றொன்றாக உள்நோக்கி பிரிக்க வேண்டும். அவ்வாறு பிரிக்கும் போது அது மூலத்தை அடைந்துவிடும் .அது போலத்தான் காமத்தை அது எவ்வாறு வெளிபடுகிறதோ அவ்வாறே யோக முறைகள் மூலம் தக்க குரு மூலம் உள்நோக்கி ஒடுங்க செய்யும் போது அதன் படைப்பின் ஆதி தன்மையை இறை தன்மையை உணர முடிகிறது. (சிந்தியுங்கள், காமம்தானே ஒரு உயிரை உலகிற்கு படைத்தளிக்கிறது?) இதுவே தந்த்ராவின் சூட்சுமமும் பரியங்க யோகமும் ஆகும்.எளிமையாக கூறினால்,காதலில் இருந்து காமத்திற்கு செல்வதை காமத்திலிருந்து காதலுக்கு செல்ல வைக்கும் யோக முறை தான் கிருஷ்ண பைரவ தந்த்ரா.உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், சக்கர வியூகத்தின் உள்ளே செல்வது காமம் என்றால் வெளியே வருவது தந்த்ரா சாதனா. இரண்டையும் தெரிந்தவன் ஜெயிக்கிறான். அதை அறியாதவன் காமம் என்ற வியூகத்தில் மாட்டி அழிகிறான்.                  சித்தர்களில் ஓரிருவர் தவிர ஏனையோர் இல்லறம் நடத்தியே வாழ்ந்துள்ளனர். யோகமார்க்கத்தில் மெய்யறிவு பெற்று இறைநிலை அடைவதை மட்டுமல்ல, இல்லறத்தில் வாழ்வோர்களும் எல்லா விஷயங்களையும் இறையுணர்வோடு செய்து இறைநிலை அடைய முடியும் என்று வாழ்ந்து காட்டி அதற்கான வழிகளையும் சொல்லியிருக்கிறார்கள். சிற்றின்பமாகட்டும், பேரின்பமாகட்டும் அதாவது யோகமானாலும், போகமானாலும் இரண்டிலும் உபயோகப் பொருள் விந்துதான். நாம் உண்ணும் உணவிலிருந்து ஏழு தாதுக்கள் பெறப்பட்டு உருவாவது இந்த தேகம். சாரம், செந்நீர், ஊன், கொழுப்பு, எலும்பு, மூளை, வெண்ணீர் என்ற ஏழாகும். அதாவது இரசம், இரத்தம், மாமிசம், மேதசு, அத்தி, மச்சை, சுக்கிலம் என்றும் சொல்வார்கள். சாரம், செந்நீர், வெண்ணீர் இம்மூன்றும் ஒருநாள் ஒரு புல்லின் நுனியில் நிற்கும் பனித்துளி போல் திரண்டு நிற்கும் என்றும். அத்திரட்சியே விந்து என்றும் இது 21 நாட்கள் வரை உடம்பில் வளரும் என்றும் திருமூலர் சொல்கிறார்(திருமந்திரம் -1934) மனித உடலை உருவாக்குவது நாதபிந்துக்கள். இந்த நாதபிந்துக்களை உருவாக்குவது அன்னம். எனவேதான் இது அன்னத்தாலாகிய உடம்பாகிய அன்னமய கோசம் எனப்படுகிறது. ஆண்களுக்கு பிந்து நாதமும், பெண்களுக்கு சுரோணித நாதமும் உருவாகிறது. இந்த விந்தானது மூன்று நாட்கள் உடல் விந்தாகவும், பிறகு மன விந்தாகவும் மாற்றமடையும் என்றும், அதை கலையாகிய அறிவு விந்தாக அமைத்து புருவ மத்தியில் தியானித்து இருப்பவர்களுக்கு உடலை விட்டு நீங்காது என்றும், உலக இல்வாழ்வில் பற்று கொண்டோர்களுக்கு மனதுடன் அழியும் அல்லது கழிவாகி வெளியேறும் என்றும் சொல்லப்பட்டுள்ளது இவ்வாறு வீணே கழியும் விந்தின் பெருமையை உணராதவர்கள் அதை வீணாக்கி உடலையும் மனதையும் நாசம் செய்கின்றனர். ஒரு துளி விந்தில் 80 துளி வெண்ணீர் துளிகள் உள்ளன. ஒரு வெண்ணீர் துளி 80 துளி இரத்தத்தின் சாறு ஆகும். ஆக ஒரு துளி விந்து அழிந்தால் 6400 துளி இரத்தம் வீணாகிறது என்பது யாருக்கும் தெரிவதில்லை. இதனால் உடலும் தளரும் என்பதை யாரும் உணர்வதுமில்லை. ஆனால் காமசக்தியான விந்து சக்தியையும், காம உணர்ச்சியையும், புணர வேண்டும் என்கிற ஆசையையும் மனிதன் ஓரளவுக்கு மேல் அடக்க முடியாது, அடக்கவும் கூடாது. அவ்வாறு அடக்கும் போது விளைவுகள் மோசமாகும். மனநோய் உருவாகலாம். சரி அதிகமாகப் புணர்ந்தாலோ உடல் நலம் கெடும். என்னதான் செய்யலாம் என்று சிந்தித்த சித்தர்கள் அதற்கென சில வழிமுறைகளைக் கண்டு பிடித்தனர்.. வஜ்ரோலி முத்திரை, பரியங்க யோகம் போன்ற சில யோகங்களே அவைகள். உலகியல் வாழ்வின்படி மணம் செய்து கொண்ட யோகியர் பெண்ணிடம் சேர்ந்தாலும் உடல்கள் சங்கமிக்குமே அல்லாது உள்ளம் சிவனிடத்து இருக்குமாகையால் விந்து கழியாது. இதற்கு இருபாலினருக்கும் பயிற்சியும், ஒருங்கிணைந்த மனப் போக்கும் அவசியம். இதுவே நற்போகமென்றும், இதனால் விரைவில் குண்டலினி மகாசக்தி மகிழ்ந்து மேலேறுவாள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இத்தகைய யோகியர் மக்கட்பேறு வேண்டி விந்துவினை விடுவார்களே அன்றி, காதல் வயப்பட்டு அதிகம் விடமாட்டார்கள். விந்துவினை மூலதாரத்தில் அனலால் செம்மையுறச் செய்து, அங்கிருந்து தொப்புள் முதல் நெஞ்சம் வரையுள்ள சூரிய மண்டலத்துக்கு வலது நாடி வழியாக ஏற்றி, அங்கிருந்து நெற்றி வரை இடப்பால் நாடி வழியாக ஏற்றி சந்திர மண்டலம் சேர்ந்து அமுதம் உண்ணலாம். இந்த வேளையில் மேலேறும் விந்துவைக் கட்டும் வழி உள்ளது. திருவருட் சக்தியின் துணை கொண்டு மூலத்திடை விளங்கும் அனலை எங்கும் போகமாட்டாமல் சிவசிவ என்னும் நான்மறையால் கைவரச் செய்து யோகியானவர் தன் வாழ்க்கைத் துணைவியாம் பெண்ணின் செந்நீராம் நாதத்துடன் தன் நடுநாடி வழியாக விந்துவாம் வெண்ணீரைச் செலுத்தினால் அவ்விந்து கட்டுப்படும். இதை ஒவ்வொரு ஆதாரமாக மேலேற்றுவார்களாம். இதற்கு நெற்றி வழியாக அருந்தும் சந்திர அமிர்தமும் துணை நிற்கும். ஆரம்ப நிலையில் குண்டலினி யோகம் செய்கிறவர்களுக்கு ஏற்படும் அதிகபட்சமான வீரியத்தை சமநிலைக்கு கொண்டுவர பெண் சம்போகம் தேவையாகும். பிறகு அவர்கள் வஜ்ரோலி முத்திரை மூலமாக விந்து விரையமாகாமல் போகம் செய்து, அதையும் சிவயோகமாகச் செய்து இருவரும் மேன்மை அடைவர். வெறும் விந்தை ஸ்தம்பனம் செய்து வைப்பதற்க்கும் வஜ்ரோலி தந்த்ரா விற்க்கும் வித்தியாசம் உள்ளது .தக்க குருவின் அருளால் செய்யபடும் வஜ்ரோலியில் விந்து ஓஜஸ் சக்தியாக மாறுகிறது இந்த ஓஜஸ் சக்திதான் செல் அளவில் நடக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வது (cellular immunity) . மேலும் தேஜஸ் சக்தியாக மாறும் போது செல் அளவில் நடக்கும் வளர்சிதை மாற்றத்தை ஆரோக்கியமாக வைக்கிறது (cellular metabolism) இவை இரண்டும் சரிசெய்யும்போது செல் அளவில் நடக்கும் சுவாசம் (cellular respiration) அதிகப்பட்டு உடலை கற்ப நிலைக்கு கொண்டு செல்ல ஆயத்தமாகிறது  வஜ்ரோலி முத்திரை தேர்ந்த குரு மூலம் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்.இதில் பயிற்சியாளர் முதலில் தண்ணீரை ஆண்குறி மூலமாக உள்ளிழுக்க பயிற்றுவிக்கப்படுவார். பிறகு பாலை உள்ளிழுக்க பயில வேண்டும். பிறகு தேன். இந்த மூன்றிலும் நன்கு தேர்ச்சி பெற்றவர்களை பாதரசத்தை உள்ளிழுக்கப் பயிற்றுவிப்பார்கள். இதனால் என்ன பயன் என்றால் சம்போகம் செய்யும் போது விந்து வெளியேறினாலும், அடுத்த நொடியே மூச்சுப் பயிற்சியினாலும், வயிற்றுத் தசைகளைச் செயல் படுத்தியும் அடிவயிற்றில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கி, வெளியைறிய விந்துவை உள்ளே இழுத்து விடுவார்கள். எனவே மனதின் இச்சையையும் தீர்த்துக் கொண்டு, விந்துவையும் விரையமாகாமல் காத்து தேகத்தை வலுவாக்கிக் கொள்ளலாம். இது மிகவும் கடுமையான பயிற்சியாகும். விளையாட்டாக எதுவும் செய்தால் விபரீதமாகிவிடும். குரு அவசியம். இதில் தேர்ச்சி பெற்ற குருவெல்லாம் அவ்வளவு எளிதில் வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் இன்றைய காலகட்டங்கள் இதற்கு ஏற்புடையதாக இல்லை. இதைப் பயன்படுத்தி தவறு செய்பவர்களே அதிகம் காணப்படுவார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. மாதம் இருமுறை சம்போகம் செய்பவர்களுக்கு இதெல்லாம் தேவையில்லை என்பதே சித்தர்கள் வாக்கு. யோக மார்க்கத்தில் மேன்மையடைய சம்போகத்தையே பயன்படுத்தும் தாந்திரீக யோகமும் உண்டு. அதாவது மன உணர்வினை உடலில் அனுபவித்து, விந்தை வெளிவிடாது மனதை ஒரு நிலைப்படுத்துவர். கடும் பயிற்சிக்குப் பின் இருவருடைய ஒத்துழைப்பின் அடிப்படையில் இந்தக் கலை சிறக்கும். இந்த நிலையில் யோகியானவர் யோகாசனம் தெரிந்த பெண்ணோடு உடல் அதிக உஷ்ணமடையாத வண்ணமும், சுவாசம் தறிகெட்டு ஓடாத வண்ணமும் சுவாச முறைகளைக் கையாண்டு நீண்ட நேரம் சம்போகம் செய்வார். இந்த நேரத்தில் காம உணர்வோடு கூடாமல், சிந்தையை புருவ மத்தியில் திரட்டி, விந்தை வெளியே விடாமல் நீண்ட நேரம் கூடி உள்ள உணர்வுகளை ஒருங்கிணைத்து தெய்வநிலை அடைவர். உடல் புணர்ச்சி நிலையில் திளைத்திருந்தாலும் மனம் மட்டும் புருவ மத்தியிலேயே நிலைத்திருக்கும். இதனால் குண்டலினியானது வெளியே கிளம்பும். போகத்தால் குண்டலினியைக் கிளப்புவர். இதில் பெண்ணும் ஒத்துழைத்து மனதை புருவ மத்தியில் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் மனதை ஏதாவது ஒரு ஆதாரத்தில் நிறுத்தலாம். இந்த நிலையில் சுவாசத்தைக் கட்டுப்படுத்தி இருவரும் கூடும் போது இந்திரிய சக்தி விரையமாகது என்பதோடு ஆன்மிக சக்தியான குண்டலினியும் கிளப்பி விடப்படும். இருவரும் அதை ஒவ்வொரு ஆதாரமாக ஒருமித்த கருத்துடனும், முனைப்புடனும் மேலேற்றுவர். விந்துவும் நாதமும் அருளாகப் பொருந்தி உடன் கூடி சந்திர மண்டலத்தை எட்டுமாயின் ஆயிரம் இதழ் தாமரை பரவெளியிலிருந்து அமிழ்தம் வெள்ளம் போல் பெருகுமாம் இது விந்துவிடா பெண் போகத்துடன் சம்பந்தம் உடைத்து  இது பற்றிப் பேசினாலோ அ எழுதினாலோ உடன் எல்லாரும் “த்ந்திரா” என்ற வார்த்தை பிரயோகம் செய்வர் என்னமோ நம் சித்தர் இலக்கியத்தில்

சித்தர்களின் பரியங்க யோகப் பயிற்சி முறை! Read More »

பெண்கள் ஆரோக்கியம் ஓர் தீர்வு

Post Views: 359 மகளிர் பகுதி —-ஒவ்வொரு ஆண்களும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் பெண்களைப் பற்றி. ஒவ்வொரு மகளிரும் யுவதிகள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள விஷயமாக இருக்கும். பெண்களாகிய உங்களுக்கு மாதவிடாய்க்கும் உங்களது மனதுக்கும் நெருங்கிய தொடர்புடையது. உங்களது மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலும் பெண்கள் அவர்களுக்கு நடந்ததுபோல் நமக்கும் துன்பமாக இருக்குமோ என்ற பயத்திலேயே மாதவிடாய் நெருங்கும் காலத்தில் சிரமப்படுகிறார்கள். இங்கு ஒவ்வொருவரும் உடல்திறன் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு மாதிரியாக இருக்கும் நமக்கும் அதே போல சிரமம் கொடுக்குமா என்று அவசியமில்லை. மாதவிடாயின் போது பெண்களுக்கு கொஞ்சம் வயிற்று வலி இருக்கும்,சிலறுக்கு வலி கொஞ்சம் அதிகமா இருக்கும்.சிலர் உஷ்ணத்தால் வலியால் ரொம்ப கஷ்ட படுவாங்க. சிலருக்கு உரிய காலத்தில் மாத விடாய் ஆகாது, இரண்டு மாதங்களு க்கு ஒரு முறை என்று ஆவதால் ரொம்ப கஷ்டப்படுவாங்க. மாத விலக்கின் போது அந்த மூன்று நாட்களுக்கு பெரும் துன்பமா இருக்கும். சிலருக்கு 20 நாட்களுக்கு ஒருமுறை வெளியாகும், பின்னர் திடீரென மரு மாதம் மாதவிடாய் வெளியாகாமல் நின்றும் விடும், இப்படி ஆகும் போது வலி ரொம்ப அதிகமாகி கஷ்டம் கொடுக்கும், சில சமயங்களில் அதிக அளவில் வெளியாகியும் கஷ்டம் கொடுக்கும், சாதாரணமாக வெளியே ராமல் கட்டி,கட்டியா வெளிவரும். சிலருக்கு சரியான நாட்களில் மாத விலக்கு ஆனாலும் கூட அது சரிவர வெளியாவதில்லை,சிலருக்கு அதிக அளவில் வெளியாகி அடி வயிற்றில் வலியை உண்டாக்கி களைப்பாக்கி விடும். பொதுவாகவே மாதவிடாய் பிரச்சி னைகளுக்கு , அதிகவிதையுள்ள எந்தப் பழமாக இருந்தாலும் ,அதுவே மாமருந்து,பழங்கள் அத்திப்பழம் கொட்டை உள்ள திராட்சை மாதுளை பழம். மாதவிடாயின் போது அதிக உதிரப் போக்கு ஏற்பட்டால். எந்தவொறு வலி,வேதனை, தொந்தர வுகள்,இன்றி மாதவிலக்காக வேண்டு மானால். பெண்கள் ரத்தத்தின் அடர்த்தி கொஞ்சம் குறைவு. அதில் ஹிமோக்ளோபின் குறைவு. நாடித்துடிப்பு ஆண்களை விட அதிகம். படக்கென்று வெட்கப்பட்டு கன்னம் சிவப்பாள். அவள் உடலில் கால்சியம் ஸ்திரமாக அமைவதில்லை. மாதவிலக்கின் போதும், கர்ப்ப காலத்திலும் அவள் நிறைய கால்சியம் இழக்கிறாள். அதனால் தைராய்ட்ட சுரப்பி பாதிக்கப்பட்டு எண்டாக்ரின்களால் நரம்புகள் பாதிக்கப்பட்டு அவள் ஆணை விடக் கொஞ்சம் அதிகமாக உணர்ச்சி வசப்படுகிறாள். அதிகம் அழுகிறாள். அதிகம் சிரிக்கிறாள். அதிகம் கவலையும் கொள்கிறாள். *மாதவிடாய் பிரச்சினைகள்:Napkin pad ,கர்ப்பப்பை கட்டிகள் PCOD,கருப்பை வாய் தோற்று,Urinary infection, குழந்தைப் பேறு தள்ளிப் போகுதல்…. *உணவுகளைத் தவிர்த்தல்:குளிர்சாதன உணவு, குளிரூட்டப்பட்ட காய்கறிகள், பழங்கள் ,கீரைகள், சட்னி மாவு செயற்கை குளிரூட்டி தண்ணி கூல் ட்ரிங்ஸ். மாதவிடாய் தள்ளி போவதற்கு மாத்திரை உட்கொள்ள வேண்டாம், வலிக்கும் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டாம். உங்கள் உடல் மேலும் பலவீனமாகும். *தீர்வு நமது பாட்டியின் காலத்தில் மாதவிடாயை மிக மகிழ்ச்சி தரும் தருணமாக ஓய்வாக எடுத்துக்கொண்டார்கள். அந்த காலத்தில் அமைதியாகவும், ஓய்வாகவும்,திரவ உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். பெண்கள் அனைவரும் 70 வயது கொண்ட பாட்டியிடம் கேளுங்கள் .இதற்கு மிகப் பெரிய மருத்துவர்கள் அவர்கள் தான். மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து மாதவிடாய் பிரச்சினைகளுக்கும் மகப்பேறு தள்ளிப்போகும்,மாதவிடாய் முடியும் தருவாயில் இருப்பவர்களுக்கும் பாட்டியிடம் கேளுங்கள் அவர்களிடம் இதற்கு முழுமையான தீர்வு நிறைய உள்ளது,பிறகு இச்செய்தியை உங்கள் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லுங்கள். இயற்கையான செய்யலை வரவேற்போம் மகிழ்ச்சியாக இருப்போம். நமது நோக்கம் என்றுமே ஆரோக்கியம் மட்டுமே. *இந்த வாய்ப்பை வழங்கிய மாஸ்டர் அவர்களுக்கு நன்றி Hipnotist Karthik

பெண்கள் ஆரோக்கியம் ஓர் தீர்வு Read More »

Question & Answer To Find Real Tantra?

Post Views: 265            In today’s spiritual scene, it seems like tantra is everywhere. You can’t go five feet without bumping into something labeled as a tantra course, tantric yoga or tantric ecstatic dance, or tantric shamanic ceremony… but how much of it is authentic tantra? It can be hard to tell if you don’t already have some experience in tantric practice. So before you invest your time and money in the next trendy tantra retreat, ask these questions to see if what you’re being offered is a genuine, meaningful spiritual path. Sex must not remain sex; that is the tantra teaching. It must be transformed into love. And love also must not remain love. It must be transformed into light, intomeditative experience, into the last, ultimate mystic peak. How to transform love? Be the act and forget the actor. While loving, be love — simply love. Then it is not your loveor my love or anybody else’s — it is simply LOVE.bWhen you are not there, when you are in the hands of the ultimate source current when you are in love,it is not you who is in love. When the love has engulfed you, you have disappeared; you have just become flowing energy.’  ~ OshoTantra is a Sanskrit word for the power of the original state of being. Its cosmic name is love, but only in the infinitesimal moment of separation from the unity of Supreme Being. As love enters existence, the tantric principle consumes the past and restores the gap of time back to nothing. However, in this momentary split in the continuity of existence emerges the divine formless lover. This genderless spiritual presence is the Lord in existence. The task of the Lord is to bring the errant lovers of the world back to the source of reality.The purpose of existence is for man and woman to be this exalted tantric presence as the personification of love in the flesh. The difficulty is the accumulation of past which has accrued within the human psyche as a blockage to the simplicity of love.This manifests most noticeably as demand, frustration, manipulation, accusation, self-doubt and the impulse for sexual release from the pressure of unconscious living. In other words, all the negativity on earth arises from the conflict in relationships that now exists between the male and female principles. Although the tantric potential is within each being and is unmistakeable in those moments when the breakthrough happens, the full realisation as a state of uninterrupted knowledge is very rare indeed. This is due primarily to the demands and personal sacrifice which must be encountered in the transformation of the sexual self. The depersonalising process is so intense and protracted that only someone who has realised God at a particular level of higher mind will be able to withstand the unconscious forces as the process deepens. But this is bestowed through grace and seldom realised through the more common, but still relatively rare, realisation of God out of existence.The realisation of God within the body, and not through physical union in love, is of the truth behind the sensory realm. This arises from the devotion of self to the transcendental being and does not necessarily permit access to the exalted state of love.It’s not uncommon for the individual to abstain from physical love afterwards, so as not to agitate the equilibrium of the inner state. This is encouraged by certain religious traditions and teachings as an adherence to celibacy, which as a consequence has forged a division of confusion and ignorance within the human psyche. In man, the tantric principle is his authority to love woman in such a way so as to bring her to a greater appreciation and love of God. For such a man, the privilege and delight in the fulfilment of this divine function is his benediction. He has been divested of the personal taint of sex, and wants nothing apart from the sheer pleasure of loving his opposite principle in the flesh. His body, regardless of appearance, is beautiful since all that is inside is love of the mystery of existence as an inner and outer union of consciousness and sensory perception. The mind as any movement is utterly still, with only the bodies making love in a unity of being, no longer separated by distance and time.Woman is closer to the pure idea of tantra than man, since it is ‘She’, the principle of love that embodies the earth’s spiritual fragrance within the womb of life. The tantric presence of woman is a passive state of immense power and beauty. She exists as a body and may appear quite ordinary in the eyes of the world, but she will radiate a quality recognisable to a consciousness of similar resonance. In the East it is referred to as the power of ‘Shakti’. The function of such a woman is to simply be what she is as the personification of love in existence. For someone inspired to love with purpose is indeed an honourable and holy undertaking. All that’s necessary is to be willing to love when the opportunity is there. Nothing can be done with intent to bring about the tantric awakening, apart from living one’s life just as it is. Although there can be a greater realisation of beauty and a deeper threshold of pleasure, the catalyst for self-change is pain. People rarely change, however, in a way that radically alters the life because they are unconscious of the purpose of suffering. The greater the love of anyone or anything, the more intense the suffering that will follow. To love someone so deeply as to enter their mystery in physical love will create circumstances to shatter the attachment to that person. Only in the final dissolution of the emotional band of pain can the tantric power enter existence in its full potency from the unconscious.  1. Does it go to the Absolute?  Tantra is a spiritual path. Full stop. As a path

Question & Answer To Find Real Tantra? Read More »

Does meditation activate sexual desires?

Post Views: 210     Yes, sometimes, it is natural to experience awakening of sexual desires in the process of meditation. It is because our mooladhara chakra which is the centre of our sex energy, and our aagya chakra, which is the center of our awareness, come into connection with each other when we meditate. These two chakras are internally connected to each other. They are two polars. So when you meditate then your aagya chakra gets awake and with it mooladhara chakra also begins to awake and because of it you begin to experience strong urges of sexual awakening.      If you meditate on aagya chakra, you will experience subtle vibrations on mooladhara chakra as well, it happens because of this interconnection. Another reason sexual desires awakened in meditation is that mooladhara chakra and kundalini shakti are located very near to each other, so when because of meditation kundalini energy awakens, it also touches the mooladhara chakra which becomes the reason for sexual arousing. Actually it is a signal of good progress in meditation to feel sexually activated.      You only need to be watchful during this period of time and need to be alert to not to follow your increased sexuality, just be observer and soon this awakened energy will find its way upwards and all the energy will transformed from mooladhara to higher chakra and you will become free from extra pressure. But remember not to go into sexual activity, otherwise which energy was meant to be transformed to higher chakras, will go waste. vinodhan,

Does meditation activate sexual desires? Read More »

Female Masturbation: 5 Things You May Not Know

Post Views: 192 Men may talk about it more often, but women do it, too.More than half of women 18-49 masturbate at least once every 3 months that’s true for single women and those who are coupled up. Self-pleasure doesn’t have the stigma it once did but myths still affect the way that some women feel about it — and how they do (or don’t) touch themselves.Here are five things you should know about masturbation 1. It’s good for you.Masturbating increases blood flow throughout your body and releases feel-good brain chemicals called endorphins. “That may explain why there’s a clear mood benefit, even if you don’t orgasm, And while men are more likely to talk about blowing off steam by masturbating, it’s a stress-reliever for both sexes. “It takes your mind [off your worries] while activating areas of the brain associated with pleasure. 2. It improves your sex life.Masturbation can make you sexually comfortable and confident. “It puts you in touch with your desires and gives you the chance to get to know your own body, Experimenting with what feels good and makes you respond positively can lead to better sexual experiences, both alone and with a partner.”If you have trouble reaching orgasm, it’s a private, stress-free way to try different types of touch and pressure to see what helps you climax, 3. It can ease postmenopause sex problems.Many women see changes during menopause. Masturbation can help, The vagina can actually narrow, which can make intercourse and vaginal exams more painful.” But masturbation, especially with a water-based lubricant, can help prevent narrowing, boost blood flow, relieve some tissue and moisture problems, and increase sexual desire. 4. It doesn’t have to be quick (or end with an orgasm).The masturbation isn’t just a “quickie” experience. That’s OK. “Rushing can make it less enjoyable, and so can focusing too much on orgasm,Give yourself time to touch all parts of your body or try different positions, and don’t feel pressure to climax.” 5. Toys can help.Nearly half of women between the ages of 18 and 60 have used a sex toy like a dildo or vibrator, f you’ve had trouble reaching orgasm and want to climax, a vibrator (which stimulates the nerve endings in the clitoris) may be helpful.Don’t worry whether it will lead to sex problems later down the line, if it feels good, go for it.vinodhan,

Female Masturbation: 5 Things You May Not Know Read More »

Shopping Cart