72,000 நாடிகளுக்கு வேலை கொடுக்கும்  தோப்புக் கரணம் கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி நின்று கொள்ளவும். வலது காலை இடது காலுக்கு முன்னோ அல்லது இடது காலை வலது காலுக்கு முன்னோ வைத்துக் கொள்ளலாம். இரண்டு கைகளால் இரண்டு காதுகளைப் பிடித்துக் கொள்ள வும்.

இந்நிலையில் மெதுவாக நன்றாக அமர்ந்து, எழுந்து தோப்புக் கரணம் இடவும். கால்கள் முழுவதுமாக மடங்கும் அளவிற்கு அமர வேண்டியது முக்கியம்.

குறைந்தது மூன்று தோப்புக் கரணம் இடவும். முடிந்தால் 12, 24, 36 என 108 தோப்புக் கரணங் களோ அதற்கு மேலும் இடலாம். உடல், மனம், உள்ளத்தை

அற்புத நிலையில் வைத்திருக்க உதவும் ஓர் ஒப்பற்ற வழிபாட்டு முறை. ஒவ்வொரு தோப்புக் கரணத்திற்கும் ஒரு இறை நாமத் தையோ, 108 அஷ்டோத்திர சத நாமாவளிகளில் ஒன்றையோ அல்லது தங்கள் பெயரையோ கூற வும். இது மிக முக்கியமான விதி முறையாகும். இறை நாமத்துடன் கூடி வராத எந்த ஆசனமும் வழிபாடாக அமையாது.

வெறும் உடல் பயிற்சியில் கிட்டும் ஆரோக்யம் ஆடு, மாடு களைப் போல் நம்மை நீண்ட நாள் உயிருடன் வைத்திருக்கும். அவ்வளவே. உடம்பை இறை நினைவுடன் வளர்த்தலே உண்மை யான யோகாசனப் பயிற்சி ஆகும். உடலுடன் உயிரையும் வளர்ப்பதே இறைவனின் திருநாமம். இதை நன்றாக நினைவில் கொள்ளுங்கள். தோப்புக் கரணம் இட்ட பின் மூச்சுக் காற்று சகஜ நிலை அடையும் வரை சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளவும். சாதாரணமாக, கால்கள் இரண்டையும்

ஒன்றொக்கொன்று இணையாக வைத்தே தோப்புக் கரணம் இடுவார்கள். ஆனால், இங்கு குறிப்பிட்டதுபோல் ஒரு காலுக்கு முன் அடுத்த காலை வைத்து தோப்புக் கரணம் இடுதல் குசா முறையில் அமைந்த தோப்புக் கரணம் ஆகும். சாதாரண தோப்புக் காணத்தைப் போல் குறைந்தது 100 படங்கு பலன் தரக் கூடியதே சித்தர் கள் அருளிய இந்தக் குசா தோப்புக் கரணம் ஆகும்.

வலது காலை முன் வைத்தோ அல்லது இடது காலை முன் வைத்தோ இந்தப் தோப்புக் கரணத்தைப் போடலாம். பெண்கள் ஆண்கள் இருபாலரும் இந்தத் தோப்புக் கரணத்தால் அற்புத பெறலாம். பலன்

கர்ப்பமுற்று இருக்கும் பெண்களுக்கு இந்தத் தோப்புக் காணம் ஒரு வரப் பிரசாதமாகும். பிரசவம் சிரமமின்றி ஆவதுடன் பிறக்கும் குழந்தகளுடம் பூரண உடல் ஆரோக்கியத்தையும் சிறந்த மள வளத்தையும் பெற்றிருக்கும் என்பது உறுதி.

அவ்வாறு பிரவத்திற்கு முன் இந்தத் தோப்புக் கரணம் போடாதவர்களும் பிரசவத்திற்குப் பின் இந்தத் தோப்புக் கரணத்தை போட்டு வந்தால் வயிறு, முதுகு தசைகள் இறுகி அறுவை சிகிச்சையின் போது அளித்த மயக்க மருந்துகளால் ஏற்பட்ட வேதனைகள் குறையும்.

vinodhan,

Shopping Cart