என்ன செய்ய வேண்டும்? பல்வேறு காரணங்களால் திருமணத்தின் தொடக்கத்தி லிருந்த காதலும், இன்பமும் பின்பு நீடிப்பதில்லை. நீடித்து இருக்கும் திருமணங்களிலும் காதலும், இன்பமும் இருக்கும் என்பதில்லை.புதுமைப்பித்தனின் ஒரு சிறுகதையில் வருவது போன்று கணவனும், மனைவியும் தேய்ந்துபோன சக்கரங்கள்போல் பழகிப் போவதும், அதுவே அவர்களுக்கு வசதியாகவும் இருப்பதால் திருமணங்கள் நீடிக்கின்றன.திருமணமான தம்பதியினர் அதே நிலையில் நீடிப்பது கிடையாது. ஆண் மகன் வெளியே சென்று சம்பாதிப்பதால் ஆதிக்கம் செலுத்துபவனாகவும், வீட்டில் இருக்கும் பெண் அடங்கிப்போகிறவளாகவும் மாறுகின்றனர்.உடல் நலம், பணச் சிக்கல்கள், தினசரி மன இறுக்கங்கள் இவை எல்லாமே கணவன்-மனைவியின் நெருங்கிய அன்பை பாதிக்கின்றன. இருவரும் ஒன்றாகச் செலவிடும் நேரத்தையும் குறைக்கின்றன.வாழ்நாள் முழுவதும் அன்பு நிலைத்திருப்பதற்கு, தம்பதி களுக்குச் சில யோசனைகள்:

அன்பு மற்றும் காதல் தானாக நிலைப்பதில்லை

நாம் எதை எதிர்பார்க்கிறோமோ அதை நாம் முதலில் வழங்க வேண்டும் என்றொரு பழமொழி இருக்கிறது. காதலும்,அன்பும் தொடர நீங்கள்தான் தொடர்ந்து முயற்சி எடுக்க வேண்டும். நேரம் ஒதுக்க வேண்டும். நீங்கள் அன்பு செலுத்தாவிட்டால் உங்களுக்குப் பலனாக அன்பு கிடைப் பது இல்லை. இதனை உணர்ந்து காதலையும் அன்பையும் பலப்படுத்த தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். மனைவிக்கு/கணவருக்கு மதிப்பு கொடுங்கள்மனைவிதானே? இதையெல்லாம் சொல்லவேண்டிய தில்லை அல்லது சொன்னபடி இன்று திரைப்படத்துக்குப் போகாமல் நாளை போய்க்கொள்ளலாம் என எண்ணுவீர்கள். ‘மனைவிதானே’ என நீங்கள் எடுத்துக்கொள்வதை ‘மதிக்க வில்லை’ என அவர்கள் எடுத்துக்கொள்வார்கள்.

குறைகளைப் பெரிதுபடுத்தாதீர்கள்

காதலி/காதலன் ஒரு மனிதர்தான். யாராக இருந்தாலும் குறைகள் இருக்கும். எனவே, குறையற்ற, பிழையற்ற மனிதரைத்தான் ஏற்றுக்கொள்வேன் என எண்ண வேண்டாம்.

ஊக்கம் கொடுங்கள்

உங்கள் காதலி/காதலன் உங்களையே நூறு சதவீதம் சார்ந்து வாழ வேண்டுமென எண்ணாதீர்கள். அவர் தனக்கௌ வேலை,நண்பர்கள், பொழுதுபோக்குகள் வைத்திருப்பதை உற்சாகப்படுத்துங்கள். தனியாக வளர ஊக்கம் கொடுங்கள். தனிப்பட்ட வளர்ச்சியடைந்த இருவரிடையே உறவு நீடித் துள்ளது எனவும் அவர்கள் மனம் ஒத்தவர்களாக வாழ்வை. நடத்துகிறார்கள் எனவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

வற்புறுத்தாதீர்கள்

உங்கள் துணை பாலுறவை விரும்பவில்லை என்றால் விட்டுக்கொடுங்கள். வற்புறுத்தாதீர்கள். காலம் இருக்கிறது. பாலுறவு மட்டுமின்றி, அவருக்கு விருப்பமில்லாத எதிலும் உங்கள் வற்புறுத்தல் தேவையற்றது என்பதைப் புரிந்து நடந்துகொள்ளுங்கள்.

காதலைத் தொடருங்கள்

உங்களுடைய ரொமாண்டிக் காதலை விட்டு விடாதீர்கள். திருமணத்துடன் எல்லாம் முடிந்துவிடவில்லை. காதல்கவிதைகள் எழுதுவது, பரிசுப் பொருள்களைக் கொடுப்பது, காதல் கடிதங்கள் கொடுப்பது, கடற்கரைக்கு அழைத்துச் செல்வது என எல்லாவற்றையும் தொடருங்கள்.மேலே சொன்ன ஆலோசனைகளைத் தீவிரமாகக் கடைப்பிடித்தாலே தம்பதியரின் இல்லற வாழ்க்கை, நல்லறமாக செழிக்கும்.

Vinodhan,

Shopping Cart