Post Views: 379
“பாரப்பா அதிமேகச் சித்துச் சொன்னேன்
பரதவிக்க விதனம் வரும் சித்துகேளு
ஆரப்பா அறிவார்கள் கீரிப்பூண்டு
அன்பாக தனைப்பறித்து மைந்தாகேளு
வீராப்பா செய்த உடன் கட்டையேர
விரும்பிமன விருப்பாகி வயிராக்கியம் செய்வாள்
சேரப்பா தனைப்பிடுங்கி தேய்த்தாயானால்
சேர்ந்துமிக அழுத்துடுவாள் பாருபாரே…!”
இது பாம்பு கொல்லிப் பூண்டு என்றழைக்கப்படுகிறது கீரி பாம்பைக் கொல்லும் அதாவது பாம்பைக் கொன்ற கீரிப்பிள்ளை தற்காப்புக்காக, நச்சுப் போக்கும் ஒரு பூண்டின்மேல் புரளும் அது தான் கீரிப்பூண்டு, பாம்பு கொல்லிப்பூண்டு என்று கூறுவார்கள் அல்லது பாம்பைக் கடித்த கீரி அதன் நஞ்சு தன்னை வருத்தாதிருக்கச் சார்ந்து புரளும் ஒரு வகை விஷபோக்கிபூண்டு .இந்த மூலிகை செடியை பற்றி பல குறிப்புகள் மருத்துவத்தில் காணப்பட்டாலும், ஆன்மீகம் மற்றும் மாந்திரீகத்தில் இதன் பங்கு சற்று குறைவாகதான் காணப்படுகின்றது. சித்தர் இந்த மூலிகையைக்கொண்டு பாம்பும், கீரியுமாய் இருக்கும் சில கணவன்/மனைவி உறவுகளை எப்படி ஒன்று சேர்ப்பது என்பதை பற்றி ஒரு பாடலில் சில சூட்சமத்தோடு கூறியுள்ளார் வெளிப்படையாக இந்த மூலிகையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த பாடலில் கொடுக்கவில்லைகாரணம் இன்றைய சூழலில் பல ஆர்வ கோளாறுகள் சமூகத்தில் நடமாட்டிக்கொண்டு இருக்கிறது ஏதாவது செய்து குண்டங் குதிரையா போச்சுஎன்றால் நாடு தாங்காது என்ற நல்ல நோக்கத்தில்சில வற்றை இங்கே மறைக்கிறேன்.
நீங்கள் கேட்களாம் சூசமத்தை மறைப்பதற்கு ஏன் இந்த பதிவை இங்கே பதிவு செய்தீர்கலென்று. ஒரு சில விஷயத்தை தெரிந்திகொல்லாம் ஆனால் ஒரு சரியான குரு உதவி இல்லாமல் அதை தொட்டு சோதனை செய்ய கூடாது, சில நேரங்களில் பல பல பிரச்சனைக்கு வழிவகுத்துவிடும் என்பதால் சிலவற்றை மறைத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில்நாங்கள் இருக்கிறோம் அதனால் யாரும் கோபம் கொள்ள வேண்டாம் சரியா…..?
வாங்க இப்போ அந்த பாடலைபார்க்கலாம்.
“பாரப்பா அதிமேகச் சித்துச் சொன்னேன்
பரதவிக்க விதனம் வரும் சித்துகேளு
ஆரப்பா அறிவார்கள் கீரிப்பூண்டு
அன்பாக தனைப்பறித்து மைந்தாகேளு
வீராப்பா செய்த உடன் கட்டையேர
விரும்பிமன விருப்பாகி வயிராக்கியம் செய்வாள்
சேரப்பா தனைப்பிடுங்கி தேய்த்தாயானால்
சேர்ந்துமிக அழுத்துடுவாள் பாருபாரே…!”
ஏதோ சூட்சமம் இருக்கு என்று சொன்னிங்கஆனால் இந்த பாட்டில் ஒரு சூட்சமத்தையும் மறைக்காமல் அப்படியே கீரிப்பூண்டை பறித்து வைராக்கியத்தோடு இருக்கும் பெண்ணுக்கு தேய்த்தால் அவள் பிரிய மனம் இல்லாமல் அல்லது பிரிந்துருக்க மனம் இல்லாமல் அழுது அன்பாக அரவனைத்துகொள்வாள் என்று சொல்லிட்டிங்க அப்புறம் என்ன சூட்சமம் இருக்க போகுது நான் இப்பவே அந்த இலையை பறிச்சி எனக்கு பிடிச்ச பொண்ணு மேல தடவ போறேன் ன்னு சிலர் தயாராக கூட இருப்பிங்க இதைத்தான் ஆரம்பத்திலே சொன்னேன் ஆர்வ கோளாறு என்று. மூலிகை இலையை சொல்லிட்டேன், அதை பெண்கள் மேல் தடவ வேண்டும் என்று சொல்லிட்டேன் ஒரு விசயத்தை கவனிக்க வேண்டும் இந்த மூலிகையை எப்போ எடுக்கணும்..?எப்படி எடுக்கணும்…..? எடுத்த மூலிகையை என்ன செய்யணும்….? அப்படி செய்த அந்த மூலிகையை எப்படி பெண்கள் மேல் தடவ வேண்டும் என்ற சூட்சமங்கள் தெரிந்திருக்க வேண்டும் நீங்க வெறும் மூலிகை இலையை பறித்துக்கொண்டு போய் ஏதாவது பொண்ணு மேல தேய்ச்சீங்கன்னு’வை அந்த பொண்ணு ஐயோ… அம்மா…. அப்பா யாரவது வாங்களேன் ன்னு சத்தம் போட அப்புறம் என்ன செம அடி உதை தான். ஆகவே முந்திரிக்கொட்டை போல எதிலும் முந்தாமல் சிந்தனையை சிந்தாமல் தகுந்த குருமார்களிடம் ஆலோசனை பெற்றுஎந்த காரியத்தையும் செய்யுங்கள்எல்லாம் சிறப்பாக நடக்கும்
vinodhan