உலகத்தில் எல்லோருக்கும் திருஷ்டி என்ற ஒரு விஷயம் அதிகமாக இருக்கிறது அதாவது கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று கூறுவார்கள் அதே அந்தக் கண்ணடி பட்டால் அவர்கள் வாழ்க்கை மிகவும் கஷ்டமான வேதனையாக வாழ்க்கையாக மாறும் அதை சரிசெய்ய இதைப்போன்ற திருஷ்டி சுற்றிப் போடுதல்
நம்முடைய முன்னோர்கள் ஆதிகாலம் முதல் பயன்படுத்தி வந்தார்கள் இதை சரியான முறையில் செய்தாலே போதும் நம்முடைய பிரச்சினை அனைத்தும் நம்மை விட்டு விலகிச்செல்லும் இதை ஒரு சிலர் கர்ம வினை சுத்தப்படுத்த பயன் படுத்துகிறார்கள் அதாவது இந்த திருஷ்டியை ஆன்மாவின் கருமையம் என்று ஒன்று இருக்கிறது அப்படி என்றால் ஆன்மாவிற்கு உள்ளிருக்கும் ஒரு கர்மவினையின் முறை அதை நீக்குவதற்காக பல ஆயிரக்கணக்கில் பணம் வசூலிக்கிறார்கள் இது மிகப்பெரிய தவறு காரணம் கர்மவினையை யாராலும் சுத்தப்படுத்த முடியாது அப்படி ஒருவன் சுத்தப்படுத்த தயாராக இருந்தால் அது யார் என்றால் நீங்கள் மட்டும் தான் காரணம் கர்மவினை என்பது உங்களின் நம்பிக்கையின் அடிப்படையில் இயங்குகிறது அந்த இயக்கத்தை ஒருவன் உங்கள் மூலம் சம்பாதித்து கொள்கிறான் அவ்வளவுதான் அதனால் கர்மவினையை சுத்தப்படுத்த போகிறேன் என்று யோசிக்காமல் இந்த முறையில் பயன்படுத்துங்கள் இதன் அடிப்படை காரணம் வெறும் நெருப்பு மட்டுமே இந்த நெருப்பு உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து வண் கண்ணும் பொல்லாப்பும் நோய்களையும் கஷ்டங்களையும் நீக்கும் முறை இதுதான் இந்த திருஷ்டி போடுதல் உங்களுடைய கர்மவினையின் அழிக்கும் இதற்கென்று எள்ளளவும் செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை நம்முடைய ஆதிகால முன்னோர்கள் இதை பயன்படுத்தி வந்தார்கள்
விஞ்ஞானம் என்ன சொல்கிறது என்றால் ஆரா என்று சொல்லுகிறது திருஷ்டி சுற்றிப் போடுதல் காரணமாக நம்முடைய ஆராவின் சுற்றளவு அதிகமாகிறது இந்த திருஷ்டியை வாரத்திற்கு இரண்டு முறை செய்தாலே போதும் கர்ம வினை என்றால் நம்மை சுற்றி இருக்கும் செயல்கள் நம் முன்னோர்களின் செயல்கள் அனைத்தும் நம்மை பாதிக்கிறது என்ற ஒரு நம்பிக்கை இந்த சுற்றி போடும் முறையை பயன்படுத்தும் பொழுது அந்த கர்மவினை உங்களிடம் சுத்தமாகும் அவர்கள் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யும் இது நம்முடைய முன்னோர்களின் வாக்கு.
திருஷ்டி சுற்றி போடுதல் முறை
1. கற்பூரம் ஏற்றுதல்:
கற்பூரத்தை ஏற்றி வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு, தரையில் ஒரு தட்டு தட்டிவிட்டு கற்பூரத்தை வாசலில் போட்டுவிடுவர். கற்பூரம் கரைய கரைய நம்மீது விழுந்த திருஷ்டியும் கரையுமாம்.
2. சிகப்பு மிளகாய் சுற்றி போடுதல்
சிகப்பு மிளகாயை கையில் எடுத்துக்கொண்டு வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு அதை நெருப்பில் போட திருஷ்டி கழியும் என்பதும் ஒரு நம்பிக்கை. திருஷ்டி இருந்தால் மிளகாய் வெடிக்கும் ஆனால் நமக்கு கமறாது. திருஷ்டி இல்லையெனில் நமக்கு நெடி ஏற்பட்டு கமறும்.
3. உப்பு சுற்றி போடுதல்:
கல் உப்பை சிறிது வலது கையில் எடுத்துக்கொண்டு வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு அதை நீரில் போட்டு கரைக்க அந்த உப்பு கரையும்போழுது நம்மீது விழுந்த திருஷ்டியும் கரையும் என்பதும் ஒரு நம்பிக்கை.
4. படிகாரம் சுற்றுதல்:
மிளகாய் சுற்றி போடுவதுபோலவே படிகாரம் கொண்டும் திருஷ்டி சுற்றி போடலாம். திருஷ்டி இருந்தால் நெருப்பில் போடப்பட்ட படிகாரம் ஒரு பொம்மை மாதிரி மாறிவிடுமாம்.
5. கருப்பு வளையல்
பிறந்த சில நாட்களே ஆன குழந்தைகளுக்கு கருப்பு வளையலை ஆரத்தியுடன் சேர்த்து சுற்றிபோடும் வழக்கம் இன்றும் நாம் பல வீடுகளில் காண்கிறோம்.
6.மண் :
சிறிது மண்ணை கையிலெடுத்து திருஷ்டி சுற்றிவிட்டு அதில் எச்சிலை 3 முறை துப்பச்செய்து அதை வெளியில் எறிந்தால் திருஷ்டி போய்விடும் என்பதும் இன்றும் நம்பப்படுகிறது.
7. எலுமிச்சை குங்குமம்:
சில வியாபார ஸ்தலங்களுக்கும், வண்டி வாகனம் , வீடு முதலியவற்றுக்கும் எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அவற்றின்மேல் குங்குமத்தை தடவி திருஷ்டி சுற்றி விட்டு வெளியிலோ அல்லது முச்சந்தியிலோ எறிவதையும் இன்றும் நாம் பின்பற்றுகிறோம்.
8. பூசணிக்காய் உடைத்தல்
பூசணிக்காயில் குங்குமத்தையும் சிறிது சில்லறைகளையும் போட்டு அதன்மீது கற்பூரம் ஏற்றி திருஷ்டி சுற்றி விட்டு வீதியிலோ அல்லது வீதிகள் சந்திக்கும் இடத்திலோ உடைத்தால் திருஷ்டி சிதறிவிடும் என்று பரவலாக நம்பப்பட்டு வருகிறது.
9. தேங்காய் உடைத்தல்
ஒரு தேங்காயின்மேல் கற்பூரத்தை ஏற்றி திருஷ்டி சுற்றி விட்டு வீதியிலோ அல்லது வீதிகள் சந்திக்கும் இடத்திலோ உடைத்தால் திருஷ்டி சிதறிவிடும் என்றும் பரவலாக நம்பப்பட்டு வருகிறது.
10. ஆரத்தி
கல்யாணம், பூஜை முதலியன முடிந்தவுடனும் மற்றும் சில முக்கியமான சமயத்திலும் ஆரத்தி எடுக்கும் வழக்கம் நம் நாட்டில் வெகு காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதுவும் ஒரு விதமான திருஷ்டி கழித்தலே ஆகும்.
11. பட்சி திருஷ்டி
குழந்தை பிறந்த வீடுகளில் மாடியில் குழந்தை துணியை உலர வைத்திருப்பார்கள். அவற்றை சூரியன் மறைவதற்குள் எடுத்துவிடுவார்கள். ஏனென்றால் சூரிய அஸ்தமன சமயத்தில்தான் பறவைகள் தமது கூட்டுக்கு திரும்புமாம். அப்பொழுது அவை இத்துணிகளைப்பார்த்து கண் வைக்குமாம். அது குழந்தைக்கு ஆகாது. ஆகவேதான் துணிகள் சூரியன் மறைவதற்குமுன் எடுக்கப்படுகின்றன. பொதுவாக திருஷ்டி சுற்றி போடும்பொழுது அனைவரும் நெற்றியில் பொட்டோ, குங்குமமோ அல்லது விபூதியோ இட்டுக்கொண்டிருக்க வேண்டும். கிழக்கு நோக்கி நிற்கச்சொல்லி திருஷ்டி சுற்றி போடவேண்டும் இப்படி சுற்றும்பொழுது திருஷ்டி மந்திரம் தெரிந்தவர்கள் அதை கூறி சுற்றுவர். பெரியவர்கள் “தன் திருஷ்டி, தாயார் திருஷ்டி, நாய் திருஷ்டி, நரி திருஷ்டி, உற்றார் திருஷ்டி …..” என்று பலவிதமான திருஷ்டிகளை கூற கேட்டிருக்கிறேன். திருஷ்டி மந்திரத்தை மனதிற்குள்தான் கூறவேண்டுமாம். அதை ஒரு குருவின்மூலம் உபதேசம் பெற்றுதான் பிரயோகிக்கவேண்டும். தான் உபதேசம் பெற்ற திருஷ்டி மந்திரத்தின் சக்தியை அதிகரிக்க அவற்றை கிரஹண சமயத்தில் நீர்நிலைகளில் நின்றுகொண்டு ஜெபிக்க அவர்களுக்கு அந்த மந்திரத்தின் சக்தி கூடும் என்பதும் ஒரு நம்பிக்கை. சீமந்த புத்திரன் அல்லது புத்திரி திருஷ்டி சுற்றி போட்டால் பலன் அதிகம் என்றும் கூறுவார்கள். வெளிநாட்டினர் கூட திருஷ்டி படாமலிருக்கட்டும் என்பதற்காக மரத்தை தொடுவார்களாம் “டச் வுட் ” என்று கூறிக்கொண்டு.பொதுவாக ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமை மற்றும் அமாவாசை தினங்கள் திருஷ்டி சுற்றி போடுவதற்கு ஏற்ற தினமாக கருதப்படுகிறது. அதுவும் அமாவாசையும் ஞாயிற்றுக்கிழமையும் சேர்ந்து வந்தால் அது திருஷ்டி சுற்றி போடுவதற்கு மிகவும் ஏற்ற தினமாகும். சூரிய அஸ்தமன சமயம்தான் திருஷ்டி சுற்றி போடுவதற்கு ஏற்ற தருணமாக கருதப்படுகிறது.இந்த பழக்கத்தையெல்லாம் எப்படி நம்புவது என்றும் சிலர் கேட்கிறார்கள். வந்த வியாதி குணமடையாமல், வந்த தடைகள் விலகாமல் இருந்திருந்தால் யாராவது இன்று திருஷ்டி சுற்றி கொள்ள முன்வருவார்களா? பலன் கிடைப்பதனால்தானே இந்த பழக்கம் ஆயிரக்கணக்கான வருடங்களாக விட்டுப்போகாமல் இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதைவிட என்ன சான்று வேண்டும் நமக்கு போதுமானது காரணம்.
இந்த திருஷ்டி சுற்றிப் போடுதல் பல காலங்களாக நம் முன்னோர்களின் வழக்கமாக இருக்கிறது நம் வீட்டுக்கு பலர் வந்து விட்டு சென்றாலும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சுற்றிப் போடுங்கள் வெளியில் சென்றுவிட்டு வந்தாலும் அதாவது மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் உங்கள் மேல் கவனம் வைத்து உங்களிடம் பேசுபவர்கள் யாரிடமும் நீங்கள் சென்று வந்தாலும் இரவு தூங்கும் முன் சுற்றி போடு தலை வழக்கமாக்கி கொள்ளுங்கள் இது நம்முடைய முன்னோர்கள் கடைபிடித்த அழகான முறை இதை செய்தாலே போதும் வாழ்க்கையில் நமக்கு எந்த திருஷ்டியும் வரவே வராது மனமும் உடலும் ஆரோக்கியமாக வாழ்நாள் முழுக்க இருக்கும் தீர்காயுள் அதிகமாகிக் கொண்டே இருக்கும்
vinodhan,
#vinodhan